Jump to content

தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு:- வி.இ.குகநாதன்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் பங்களிப்பு:- வி.இ.குகநாதன்…

November 26, 2018

kan-1.png?resize=647%2C485

பொதுவாக தமிழ்மொழி வரலாற்றில் மொழி வளர்ச்சிக்கான பங்களிப்புப் பற்றிப் பேசப்படும் போதெல்லாம் தமிழகத்தை மட்டுமே கவனத்திற்கொண்டு பேசப்படும் ஒரு நடைமுறையே  காணப்படுகின்றது. உண்மையில் ஈழமும் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்களவு பங்கினை வகித்துள்ளது.  அத்தகைய அதிகம் பேசப்படாத ஈழத்தின் பங்களிப்பு பற்றிய ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது.

சங்க காலத்தில் ஈழத்தின் தமிழ்ப் பங்களிப்பு:

சங்க இலக்கியங்களிற்கே ஈழத்தைச் சேர்ந்த சங்ககாலப் புலவரான  `ஈழத்துப் பூதன்தேவனார்`  என்பவர் பங்களிப்புச் செய்துள்ளார். அகநானூறு 88, 231, 307, குறுந்தொகை 189, 343, 360, நற்றிணை 366 ஆகிய ஏழு பாடல்களை இவர் பாடியுள்ளார்.  இவரது பாடல்கள்  மன்னர்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாக அல்லாமல்;  பாலை, குறிஞ்சி போன்ற திணைகளையும் , வானியலையும் , விலங்கினங்களையும் குறித்து இருப்பது ;  இவரது பாடல்களின் சிறப்பியல்பாகவும் இவரது ஈழத்து இருப்பிடத்தையும் சான்றுபடுத்துவதாகவுள்ளது. அகநானூற்றுச் செய்யுளில் இவர் பசும்பூண் பாண்டியனை பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“செல்சமங்கடந்த செல்லா நல்லிசை

விசும்புஇவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்

பாடுபெறு சிறப்பிற் கூடல்”  – (அகம்.231: 10-13).

இப் பாடலைக்கொண்டு ஈழத்துப் பூதன்தேவனாரின் காலத்தை பொது ஆண்டு 2ம் நூற்றாண்டு (CE 2nd cent) எனக் கணிக்கலாம் (பசும்பூண் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனுக்கு முன்பு இருந்த அரசன்).  மேலும்  பொது ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலேயே `தமிழி`  எழுத்துக்கள் ஈழத்தில் கிடைத்துள்ளன.  இலங்கை திசமகாராமையில் அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்பு-சிகப்பு  மட்பாண்ட த்தில்  காணப்பட்ட எழுத்துக்கள் (BCE 2nd cent)  காலத்தைச் சேர்ந்ததாக செருமனிய அறிவியலாளர் குறிப்பிடுகின்றார்{1}.  மேலும் இலங்கை அறிஞர்கள் பரனவிதான,கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். “ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்…”  எனப் பட்டினப்பாலை பாடுகின்றது  {2}.  இலங்குவதால் `இலங்கை` என்ற பெயரும், தமிழ்நாட்டிலிருந்து கீழே இறங்கியிருப்பதால் `ஈழம்` (இழிவு < > ஈழ் < ஈழம்) என்ற பெயரும் ஏற்பட்டதாகவும் ,  இலங்கை, ஈழம் ஆகிய சொற்கள் சங்கத் தமிழ்ச் சொற்களாகக் காணப்படுவதாகவும் அறிஞர்கள் கூறுவதும் கவனத்திற்கொள்ளத் தக்கது. மேலே கூறப்பட்ட சங்க கால ஈழத் தொடர்புகள் சங்ககாலத்திலிருந்தே ஈழம் தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகளிற்குச் சான்றாக அமைந்துள்ளன. இன்று தமிழகத்தில் கூடப் பெருமளவிற்குப் பயன்பாட்டில் இல்லாத பல சங்ககால  தமிழ்ச்சொற்கள் (கமம் ,வெளிக்கிடு, வளவு, திகதி(திகழ்தி),உவன்…. ) இன்றும் ஈழத்தில் பொதுப் பயன்பாட்டிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிமேகலையில் ஈழம்:

இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாகவும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மணிமேகலை ஈழத்திலுள்ள சில ஊர்களைக் குறிப்பிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. மணிமேகலை ஈழத்தில் பாதை தெரியாமல் அலைந்த இடம் அனலைத் தீவு எனவும்,  பீடீகை கண்டு பிறப்புணர்ந்த இடம் தற்போதைய நயினாத் தீவு (மணிபல்லவத் தீவு) எனவும், அட்சயபாத்திரம் பெற்ற  இடம் தற்போதைய கந்தரோடை (தீவதிலகை) எனவும் அறிஞர்களால் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அகரமுதலி- நிகண்டு பங்களிப்பு:

ஒரு மொழியின் வளர்ச்சியில் அகரமுதலி/ அகராதி என்பது சிறப்பிடம் பெறும். இந்த வகையில் தமிழ் அகரமுதலிகளிற்கு முற்பட்டவை நிகண்டுகள். இங்கு நிகண்டு என்பது ஒரு சொல்லின் ஒத்த சொல்லைத் தருவதாகக் காணப்பட, அகரமுதலி என்பது ஒரு சொல்லிற்கான விளக்கத்தைத் தருவதாக அமையும்.  பல்வேறு நிகண்டுகளில்` நீரரர் நிகண்டு` என்பது ஈழத்தமிழரான க. தா. செல்வராசகோபால் (ஈழத்துப் பூராடனார்) என்பவரால் எழுதப்பட்டது.  இந்த ஈழத்துப் பூராடனார் தமிழ்மொழி, கலை தொடர்பாக 250 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நீரரர் நிகண்டு ஒப்பீட்டுரீதியில் குறைந்தளவு வடமொழிச்சொற்களையும், பெருமளவிற்கு தமிழ்ச்சொற்களையும் கொண்டுள்ள மிகச்சில நிகண்டுகளில் ஒன்றாகும். அகரமுதலிகளைப் பொறுத்தவரையில்  `பெயரகராதி` – யாழ்ப்பாண நூற் கழகம் (1842),  `மானிப்பாய் அகராதி` – யாழ்ப்பாணம் அ. சந்திரசேகர பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை (1842),  `ஆங்கில தமிழ் அகராதி` – அமெரிக்கன் மிசன், யாழ்ப்பாணம்(1852),  `தமிழ்ப் பேரகராதி`  – யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை(1899) என்பவை ஈழத்தமிழர்களின் ஆக்கங்களாகும்{3}. இவற்றுக்கிடையே கதிரவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி பல்வேறு படிமலர்ச்சிகளைக் கண்டு தமிழ்மொழியில் முதன்மையானதாக விளங்குகின்றது.

cy.jpg?zoom=3&resize=289%2C174

தமிழ்ப்பதிப்புலகில் ஈழத்து முன்னோடிகள்:

பழந்தமிழ் நூல்களை ஒலைச் சுவடிகளிலிருந்து அச்சுப்பதிப்பில் கொண்டுவந்து காலகாலத்திற்கும் கிடைக்கச்செய்தமை அரும்பெரும் தமிழ்த் தொண்டாகும்.  இச் சேவையினைக்  குறிக்கும் போதெல்லாம் பெருமளவிற்குப் பேசப்படுபவர் தமிழகத்தைச்சேர்ந்த தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சா ஆவார்.  இவரைப் போன்றே ஈழத்திலிருந்தும் சி.வை.தா,  நாவலர் ஆகிய இருவரும் ஒலைச்சுவடிகளை தமிழ் அச்சுப்பதிப்பில் நூல்களாகக் கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியுள்ளார்கள்.  தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடியான சி.வை.தா (சி. வை. தாமோதரம்பிள்ளை) 1853 ஆம் ஆண்டு நீதிநெறி விளக்கம் என்னும் ஒழுக்க நெறி சார்ந்த தமிழ் நூலொன்றைப் பதிப்பித்ததன் மூலம் நூல் வெளியீட்டுத் துறையில் காலடி எடுத்துவைத்தார். இவரது அரும்பணி என்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்தை கடும் உழைப்பிற்கு மத்தியில் தேடி எடுத்துப் பதிப்பித்தமையாகும். பாண்டிய மன்னன் கைகளுக்கே அகப்படாததாக அன்று இழக்கப்பட்டதாய் கருதப்பட்டு வந்த தொல்காப்பியப் பொருளதிகாரத்தை பதிப்பித்தமை ஒரு பெருஞ்செயலேயாகும் {4}.   இவரது உழைப்பு இல்லாதிருக்குமாயின் தொல்காப்பிய பொருளதிகாரம் எமக்குக் கிடைக்காமலே போயிருக்கக்கூடும். பின்னரான காலப்பகுதியில் தொல்காப்பிய வல்லுநரான  தமிழறிஞர் முதுமுனைவர் புலவர்.இரா.இளங்குமாரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்தை தமிழகத்தில் எங்கும் தேடிக்கிடைக்காமல், ஈழத்திற்கு வந்து சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்திலேயே பெற்றுப் பின் தமிழகம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார். மேலும் சி.வை.தா  சூளாமணி, வீரசோழியம்,  இறையனார் அகப்பொருள், தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், திருத்தணிகைப் புராணம் ஆகிய தொன்மையான தமிழ் இலக்கியங்களையும் பதிப்பித்திருந்தார். அத்துடன் சொந்தமாகவும் பல நூல்களை (கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, ஆறாம் வாசகப் புத்தகம், ஏழாம் வாசகப் புத்தகம்…) எழுதியும் தமிழிற்குத் தொண்டாற்றியிருந்தார்.

ஈழத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் என்பவரும் தமிழ்ப் பதிப்புலக முன்னோடிகளில் ஒருவர். இவர் தமிழகம், ஈழம் ஆகிய இரு தமிழ் நிலங்களிலுமே பதிப்பகப் பணியினை மேற்கொண்டிருந்தார். இவர் பல தமிழ் நூல்களைப் பதிப்பிருந்தபோதும் அவற்றினுள் திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை, திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் ,  திருவாசகம்போன்ற மத நூல்களும் முதன்மையானவை (இவை பிழையின்றிப் பதிப்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது).  பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த முன்னோடிகள் மூவரில் இருவர் ஈழத்தைச் சேர்ந்தவர்களாகவிருப்பது ஈழத்தின் பதிப்புலகப் பங்களிப்பினை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.

thaninayagmadigalar.jpg?zoom=3&resize=33

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு :

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை தொடக்கி அதன் முதல் நான்கு மாநாடுகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்தவர் தனிநாயகம் அடிகள் (Rev. Xavier S. Thani Nayagam) என்ற ஈழத்தமிழராவார்.  முதல் மாநாடு கோலாலம்பூரிலும், இரண்டாவதனை சென்னையிலும், மூன்றாவதனை பாரிசிலும் (பிரான்சிலும்) மிகச் சிறப்பாக நடாத்திமுடித்திருந்தார். நான்காவது மாநாட்டினை யாழ்ப்பாணத்தில் நடாத்த பெருமளவில் ஏற்பாடு செய்து முடித்திருந்தார். மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், தை 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு பாராட்டு நிகழ்வுகளும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் சிங்கள காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த இன்னலினை மனதிற் சுமந்திருந்த அடிகளார் சிறிது காலத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தார். அதற்குப் பின் 5 உலகத் தமிழர் மாநாடுகள் நடைபெற்றபோதும், அவை எதுவுமே முதல் நான்கு மாநாடுகள் அளவிற்குச் சிறப்பாக அமையவில்லை. இதிலிருந்து முதல் நான்கு மாநாடுகளை நடாத்துவதில் அடிகளார் காட்டிய அளப்பெரிய உழைப்பினையும், அவரது ஆளுமைத் திறனையும் அறிந்து கொள்ளலாம். பத்தாவது மாநாடு அடுத்த ஆண்டு (2019)அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடாத்தப்படவிருக்கின்றது.  அடிகளார்  `தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்` (Academy of Tamil Culture), `உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்` (International Association for Tamil Research, IATR) என்பவற்றையும் தோற்றுவித்திருந்தார்.  மேலும் பல்வேறு இதழ்கள்,புத்தகங்கள் மூலம் தமிழ்மொழியின் சிறப்புக்களை முதன்முதலில் ஐரோப்பியர்களிடம் ஐரோப்பாவிற்கே கொண்டுபோய்ச் சேர்ந்த பெருமை அடிகளாரையே சேரும்.

மேற்கூறியவகைகளில் ஈழமும் சங்ககாலம் முதல் இன்றுவரை தமிழிற்கு அரிய பங்களிப்பினை வழங்கியே வந்துள்ளது.  இன்றைய நிலையில் தமிழகம்,ஈழம் என்பவற்றையும் தாண்டி, தமிழ்மொழிக்கான பங்களிப்பு உலகளாவியரீதியில் காணப்படுகின்றமை நாம்  எல்லாம் பெருமைப்படவேண்டிய ஒரு விடயமாகவேயுள்ளது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”.

..

{1} : Mahathevan, Iravatham (24 June 2010). “An epigraphic perspective on the antiquity of Tamil”. The Hindu. The Hindu Group. Retrieved 31 October 2010.

{2}: பட்டினப்பாலை 191

{3}: தமிழ் அகராதிகளின் பட்டியல்கள் – http://tech.neechalkaran.com/2010/06/tamil-dictionary.html

{4} ↑ செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழத் தாமோதரனார், மா. க. ஈழவேந்தன், நூலகம் திட்டம்

 

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.