Jump to content

கரிகாலன் என்னும் கடவுளுக்கு அவன் பக்தன் சொல்லும் கதையிதுவே....


Shanthan_S

Recommended Posts

என் நேசத்துக்குரிய கரிகாலனே... உன்னிடம் சொல்வதற்கு சில சேதிகள் உண்டு. உன் மீதான எங்களின் ப்ரியம் உனக்கே ஆச்சரியமாய் இருக்கலாம். தேசங்கள் கடந்தும் தமிழால் ஒன்றானஉறவுகளின் இதயங்களில் உனக்கிருக்கும் தனித்துவமான இடம் குறித்து நீ புருவங்களை உயர்த்தலாம்.

கேள்...

இங்கே ஒரு இனக்குழுவினர் தமக்கென்று உண்டாக்கிய தலைவர் மூன்று நாட்களில் நான்கு கட்சி மாறுகிறார்...

இன்னொரு இனக்குழுவினரின் தலைவர்கள் தெற்கும் , கிழக்கும் , வடக்கும் என்று அடிபடுகிறார்கள்.

இன்னொரு குழுவின் தலைவர்கள் அவர்கள் மக்களின் ஊதியத்தைப் எற்றுக்கொடுக்க கூட குரல் கொடுக்க பின்நிற்கிறார்கள்.

பெரும்பான்மை குழுவொன்று தமக்காய் உண்டாக்கிய தலைமைகள், இல்லாத பகடிகளும் சில்லறை வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆதலால் தான் கரிகாலா, அவர்கள் மட்டில் நீ காழ்ப்புணர்வின் சாரமாய் இருக்கிறாய். அவர்கள் பொதுவில் ஒப்புக்கொள்ள விரும்பாத இயலாமை அது. தலைமைகளுக்கான வெற்றிடத்தின் அசூசை.

அதே காரணத்தினால் தான் கரிகாலா நீ எங்களால் ஆராதிக்கப்படுகிறாய். அளவில்லாமல் அன்பு செய்யப்படுகிறாய்.

நீ எங்களைக் காதலித்தாய். எங்களுக்காகவே வாழ்ந்தாய். தணியாத தாகத்துடன் தீயிடை வெந்த ஆயுரமாயிரமாம் பிள்ளைகளுடன் உன் மூத்தவனையும் பலிகொடுத்தாய். பேரன்பின் வெளிப்பாடல்லவா அது ? இங்கே தழைத்தோங்கி கோலோச்சும் ஒரு சமயத்தின் அடிப்படைக் கொள்கையே அல்லவா அது. அவர்களின் படி நீ அங்கேயே கடவுளாகிறாய் கரிகாலா.

நீ இருக்கும் வரையில் நாம் தலைநிமிர்ந்து நடந்தோம். எங்களுக்கான ஒருமித்த குரலாய் நீ இருந்தாய். சிதறிப்போய்விடாதபடிக்கு பத்திரமாய் பாதுகாக்கும் ஒரு ஆயனின் கண்காணிப்பில் இருந்த மந்தைகள் போல எதிர்காலம் குறித்த நிம்மதியோடு உறங்கப்போனோம். எமக்கு சுவராகவும் , கூரையாகவும் நீ இருந்தாய். உன் பிள்கைகள் இருந்தார்கள்.

கடவுள் கோட்பாட்டின் தோற்றம் தெரியுமா கரிகாலா?

மனிதன் தான் பார்த்து பிரம்மித்த, தன் ஆளுகைக்கு உட்படுத்த முடியாதவைகள் குறித்து அச்சப்பட்டான். மானசீகமாக நேசித்தான். அவற்றை அல்லது அவர்களை கடவுள்கள் ஆக்கினார்கள். தொல்தமிழர் மரபே முன்னோர் வழிபாடு தான். காலத்தில் நின்று அவர்கள் தேவைகளுக்காகவும் , உரிமைகளுக்காகவும் போராடியவர்களை , வீரம் செறிய வாழ்ந்தவர்களை , மாண்போடு நின்றவர்களை என் முப்பாட்டன்களும் , பாட்டிகளும் நடுகல் இட்டு கடவுளாய் வணங்கினார்கள். பின்னர் பெரும் சமயங்களில் கடவுளானார்கள். என் பிரான் சிவனும் அப்படி ஆன ஒரு கடவுள் தான்.

கரிகாலா... எமக்கு காலத்தால் விதிக்கப்பட்ட தேவையை நீ தான் கையிலெடுத்தாய். கடைசிவரை அதன் ஒழுங்கில் நின்றாய். நாம் சோரம் போகாதபடிக்கு நீ யாரிடமும் சோரம்போகமலிருந்தாய். தழல் வீரம் செறிந்தாய். எப்போதும் எங்களை நேசித்தாய்.

ஆதலாலே கரிகாலா நீ கடவுளாகிறாய். கடவுளுக்கு பிறப்புண்டு , வாழ்வுண்டு காலம் ஆகும் இயல்புண்டு. கடவுளாகிய கரிகாலனே , நீ எந்த தூணிலோ துரும்பிலோ இருந்தபடி எம்மை நோக்கி உன் அந்த மந்திரப்புன்னகையை திருப்பு. நீ எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பே பவித்திரமானதும் பாதுகாப்பானதும் ஆகும்.

இங்கே கடவுள் நம்பிக்கை அத்தனையும் அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் இறைவனே !

Source: FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/26/2018 at 2:34 AM, Shanthan_S said:

ஆதலாலே கரிகாலா நீ கடவுளாகிறாய். கடவுளுக்கு பிறப்புண்டு , வாழ்வுண்டு காலம் ஆகும் இயல்புண்டு. கடவுளாகிய கரிகாலனே , நீ எந்த தூணிலோ துரும்பிலோ இருந்தபடி எம்மை நோக்கி உன் அந்த மந்திரப்புன்னகையை திருப்பு. நீ எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்ற நினைப்பே பவித்திரமானதும் பாதுகாப்பானதும் ஆகும்

உண்மை தான்.இன்று நாம் வணங்கும் தெய்வங்ளெல்லாமே ஒரு காலத்தில் வீர புருசர்களாக வலம் வந்தவர்கள் தான்.இப்போது தொழில் நுட்பம் வாய்ந்த காலத்தில் இருப்பதால் தேசியத் தலைவர் தலைவராகவே இருந்திடுவார்.

இல்லாவிட்டால் சிறிது காலத்தின் பின் பலராலும் இப்படி ஒரு கடவுள் இருந்தாராமே என்று ஏதோ ஒரு உருவமும் தந்து வணங்கியிருப்பர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு காலத்தால் விதிக்கப்பட்ட தேவையை நீ தான் கையிலெடுத்தாய்.

கடைசிவரை அதன் ஒழுங்கில் நின்றாய்.

நாம் சோரம் போகாதபடிக்கு நீ யாரிடமும் சோரம்போகமலிருந்தாய்

. தழல் வீரம் செறிந்தாய். எப்போதும் எங்களை நேசித்தாய்.

ஆதலாலே கரிகாலா நீ கடவுளாகிறாய்

 

 நிதர்சனமான உண்மை பாராட்டுக்கள் உங்கள்  வரிகளுக்கு 

Link to comment
Share on other sites

நன்றி உறவுகளே. உங்களது வாழ்த்துக்கள் எல்லாம் இதை எழுதிய அந்த எழுத்தாளருகே போய் சேரட்டும். நான் FB ல வாசித்ததை இங்கை இணைத்தேன் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.