Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண தோசை + சிவத்த சம்பல் 😊

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோசைக்கல்லு பெரும்பாலும் வெண்கலத்தில் இருக்கும். இவர்கள் மண் சட்டியில் சுடுகிறார்கள். தொட்டு கொள்வவதற்கு  மேலால் அள்ளினால் சம்பலாகவும், கீழால் அள்ளினால் சட்னியாகவும் இருக்கிறது......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

தோசைக்கல்லு பெரும்பாலும் வெண்கலத்தில் இருக்கும். இவர்கள் மண் சட்டியில் சுடுகிறார்கள். தொட்டு கொள்வவதற்கு  மேலால் அள்ளினால் சம்பலாகவும், கீழால் அள்ளினால் சட்னியாகவும் இருக்கிறது......!  😁

சட்னிக்கு , சாம்பாருக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் தோசையிலும் சேர்க்கிறார்கள் தோழர் .. தனியே சட்னி வேறு செய்கிறார்கள் .. செலவு அதிகமாகாது.. ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சட்னிக்கு , சாம்பாருக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் தோசையிலும் சேர்க்கிறார்கள் தோழர் .. தனியே சட்னி வேறு செய்கிறார்கள் .. செலவு அதிகமாகாது.. ? 🤔

தோசை மாவுக்கு கடைசியில் தாளித்து கொட்டுவது முக்கியம் தோழர். இல்லையென்றால் தோசையின் டேஸ்ட்  வேஸ்ட் ஆகிடும். ஆனால் பருத்தித்துறை பக்கம் தோசைக்கு மஞ்சளும் ,தாளித்தும் போடுவதில்லை என நினைக்கின்றேன்.....!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாண தோசை + சிவத்த சம்பல் 😊

 

Bildergebnis für யாழà¯à®ªà¯à®ªà®¾à®£ தà¯à®à¯

புரட்சி.... யாழ்ப்பாண தோசை பதிவை போட்டு... சும்மா கிடந்த வாயில், எச்சில்   ஊற வைத்து விட்டீர்கள்.
வின்ரருக்கு... மாவும் புளிக்காது. இப்ப என்ன செய்யுறது எண்டு தெரியவில்லை.
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für யாழà¯à®ªà¯à®ªà®¾à®£ தà¯à®à¯

புரட்சி.... யாழ்ப்பாண தோசை பதிவை போட்டு... சும்மா கிடந்த வாயில், எச்சில்   ஊற வைத்து விட்டீர்கள்.
வின்ரருக்கு... மாவும் புளிக்காது. இப்ப என்ன செய்யுறது எண்டு தெரியவில்லை.
 

சிறியர், Radiator ற்கு கிட்ட வையுங்கள், 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா சொன்னது போலவும் செய்யலாம், ஓவன் ஐ (oven) சூடாக்கி பின் அணைத்து விட்டு ஒரு அளவான வெக்கையிலும் வைத்து எடுக்கலாம்.....!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீழகரை தோத்தல் அல்வா .😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவசரம் அவசரமாக வேலைக்கு ஓடுபவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் சூப்பரான சத்துள்ள உணவு. இதை செய்து போத்தலில் அடைத்து வைத்து விட்டால் போதும், கொஞ்சம் எடுத்து பையில் போட்டுக்கொண்டு ஒரு தண்ணிப் போத்தலுடன் (பச்சைத் தண்ணி) ஓடி பஸ்ஸையோ ரயிலையோ பிடித்துக் கொண்டு போகலாம். எனர்ஜி கரண்டி......!  😛

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜமுந்திரி றோஸ் மில்க் ☺️

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதை செய்வதற்கு முக்கியமாக அரிசி கழுவிய தண்ணீர் தேவை..... உங்களிடம் ஏற்கனவே சோறு இருந்தால் பாதகமில்லை, அரிசியை கழுவி தண்ணீரை எடுத்து கொண்டு கழுவிய அரிசியை கோழிக்கு போட்டு விடவும்.இதுக்காக புரட்சியை  கழுவி ஊத்தக்கூடாது......!  😊

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்பட்டி கடலைமிட்டாய் 😋

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

 

உந்த வீடியோ மட்டக்களப்பு உன்னிச்சை குளத்து கட்டுக்கு பக்கத்திலை எடுத்திருக்கு... ஆகா அழகான பிரதேசம்.
 நெஞ்சினிலே நினைவலைகள்......அவை வசந்தகால நினைவலைகள்.
இணைப்பிற்கு நன்றி சுவியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உந்த வீடியோ மட்டக்களப்பு உன்னிச்சை குளத்து கட்டுக்கு பக்கத்திலை எடுத்திருக்கு... ஆகா அழகான பிரதேசம்.
 நெஞ்சினிலே நினைவலைகள்......அவை வசந்தகால நினைவலைகள்.
இணைப்பிற்கு நன்றி சுவியர்.

 

13 hours ago, suvy said:

 

இணைப்பிற்கு நன்றி தோழர் ..! ☺️ நான் கூட தமிழ்நாட்டிலே எந்த ஊரு இப்படி பச்சை பசேல் என்று .. போதா குறைக்கு பின்னால் தண்ணி எல்லாம் ஊற்றுது எண்டு பயந்தே போய்விட்டேன் ..😇

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

இணைப்பிற்கு நன்றி தோழர் ..! ☺️ நான் கூட தமிழ்நாட்டிலே எந்த ஊரு இப்படி பச்சை பசேல் என்று .. போதா குறைக்கு பின்னால் தண்ணி எல்லாம் ஊற்றுது எண்டு பயந்தே போய்விட்டேன் ..😇

இதுக்கே பயந்தால் எப்படி தோழர்...... எமது நாட்டில் பத்து கிலோ மீட்டருக்கு உள்ளேயே அகண்ட பெரிய சமுத்திரம், முகிலொடு முத்தமிடும் உயர்ந்த மலைகள், அந்த சிகரத்தை தொட எம்பிக் குதிக்கும் அருவிகள், கும்மாளமிடும் யானைகள்,கிளை தாவும்  மந்திகள்,ஆடும் மயில்கள் துள்ளி ஓடும் மான்கள் பெயரோடும் பெயரில்லாமலும் பறந்து திரியும் பறவைகள் ..... சரி...சரி.... இவற்றை விடுங்கள். பார்த்தால் மாரடைப்பும், குதித்தால்  உயிரே போய்விடும் சூசைட் பெயிண்ட் கூட  இருக்குதெண்டால்  பார்த்து கொள்ளுங்கள்.....!  😂

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.