Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, உடையார் said:

 

இவர் இஞ்சி சேர்த்து செய்கின்றார் நஞ்சில்லையா? 

நஞ்சு ...நீங்கள் போடாதீங்கோ 

On ‎26‎-‎04‎-‎2020 at 07:49, உடையார் said:

 

படமெடுக்க மறந்துவிட்டேன்,  செய்து சாப்பிட்டோம், நல்ல சுவை

இதை நான் முந்தி ஒருக்கால் செய்து பிழைத்து போட்டது....நான் நினைக்கிறேன் எதையோ கூட்டி ,குறைத்து விட்டேன் 

  • Like 1
Link to comment
Share on other sites

ஆலு குல்ச்சா | Aloo Kulchain 

தேவையான பொருட்கள்

வெண்ணெய்
கலோஞ்சி விதைகள்
வெந்தய இலை
தண்ணீர்

மாவு தயாரிக்க

மைதா - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தயிர் - 3 மேசைக்கரண்டி
தண்ணீர்

ஆலு மசாலா செய்ய

உருளைக்கிழங்கு - 4
தண்ணீர்
வெங்காயம்
இஞ்சி
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி தழை
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லி விதை - 1 தேக்கரண்டி
ஆம்சுர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

நஞ்சு ...நீங்கள் போடாதீங்கோ 

இதை நான் முந்தி ஒருக்கால் செய்து பிழைத்து போட்டது....நான் நினைக்கிறேன் எதையோ கூட்டி ,குறைத்து விட்டேன் 

இல்லை போடவில்லை, அவர் எப்படியான் இஞ்சி போட்டு சமைத்தாரோ.

 

மீண்டும் செய்து பருங்கள் ரதி , வறுத்த சம்பலுடன் நன்றாக இருக்கும் 

https://www.youtube.com/watch?v=PcZmTOyFImw

முகலாய முட்டை பரோட்டா ஒரு முறை செஞ்சா அடிக்கடி செய்விங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரகு அரிசி வெங்காய பெசரெட்

பெரரெட் தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சத்து நிறைந்த வரகு அரிசி சேர்த்து பெசரெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வரகு அரிசி வெங்காய பெசரெட்
வரகு அரிசி வெங்காய பெசரெட்
 
தேவையான பொருட்கள்

சிறுபயறு - 1 கப்
வரகு - அரை கப்
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சை மிளகாய் - 3.
 
அலங்கரிக்க :
 
பெரிய வெங்காயம்,
கொத்தமல்லித் தழை
 
வரகு அரிசி வெங்காய பெசரெட்

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பயறு, வரகு அரிசி இரண்டையும் நன்றாக கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு சிறிது உப்பு சேர்த்து கலந்து தோசைக்கல்லில் மெல்லியதாக வார்த்து அதனை சுற்றி வெங்காயம், கொத்த மல்லித் தழை தூவவும். ஒருபுறம் வெந்ததும் மெதுவாக திருப்பி போட்டு வேகவைக்கவும்.
 
இதோ சுவையான, ஆரோக்கியம் நிறைந்த வரகு அரிசி வெங்காய பெசரெட் தயாராகிவிட்டது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சான் விசுகொத்து..

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தர்பூஸ் சீவும் வேகம் அற்புதம்..👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான.. முறையாய் இருக்கு. 
முட்டை... மச்சம்,  என்றபடியால்...
இட்டலி   சட்டியில், அவிக்க, மனிசி விட மாட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சரக்கு கறி .......(சரக்கு என்று இருப்பதால் இது சரக்குக்கு சைட்டிஷ்ஷாக தோதுப்படாது).  கொரோனா லாக்டவுன் முடிந்ததும் அநேகமான குடும்பங்களுக்கு இது மிக உபயோகமாய் இருக்கும்.....!   😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

அருமையான சரக்கு கறி .......(சரக்கு என்று இருப்பதால் இது சரக்குக்கு சைட்டிஷ்ஷாக தோதுப்படாது).  கொரோனா லாக்டவுன் முடிந்ததும் அநேகமான குடும்பங்களுக்கு இது மிக உபயோகமாய் இருக்கும்.....!   😁

அதெல்லாம் பாதுகாப்பாகதான் இருந்திருப்பார்கள், இருக்கின்ற சனத்தொகையே காணும், நன்றி பகிர்வுக்கு, ஊரில் இப்படி சரக்கு அரைத்து அம்மா வைத்த மீன் கறி சாப்பிட்ட சுவை இறக்கும் வரை மறக்காது. அது எங்கு சாப்பிட்டாலும் ஈடாகாது

On 26/4/2020 at 10:17, உடையார் said:

விருந்துக்கேற்றதும் சுலபமாக செய்யக்கூடியதும் ஆன இந்த வித்தியாசமான போண்டாவை செய்து பாருங்கள்!!!

158076c1a1fbdcd7d49f5c871faddb80-480.jpg

 

தேவையானவை:

ஜவ்வரிசி - 1 கப்,

நன்கு புளித்த தயிர் - 1 கப்,

கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,

அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்,

துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

பொரித்த கடுகு - 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - மல்லித்தழை - சிறிதளவு,

உப்பு - ருசிக்கேற்ப,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும்.

பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.

 

https://detail.chr.cyfeeds.com/content/2a2458d5adf4ad1fdf41090b19d7605b?&actfrom=3

 

ஆகா என்ன ஒரு சுவை கொஞ்சம் தான் செய்தேன், சுடும் போது சப்பிட்டது மட்டும்தான், பிள்ளைகளை வந்து எடுத்து சப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, யாழில் படம் போடுவமென்று வந்தால், பச்சை பட்டானி வடை மட்டும்தான் எனக்கு மிதியிருந்திச்சு போய் பார்க்கும் போது, நல்ல வித்தியாசமான சுவை. விரும்பி சாப்பிட்டார்கள், மனம் நிறைந்தது

20200508-193910.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 19:24, உடையார் said:

 

இன்று இது செய்து பார்த்தேன், சுவையாக இருந்தது. மிகவும் இலகுவானது. மிதமான சூட்டில் நிறைய நேரம் பொரிக்கவேண்டி  இருந்தது. இல்லாவிட்டால் உள்ளுக்குள் அவ்வளவு வேகாது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

36 minutes ago, நீர்வேலியான் said:

இன்று இது செய்து பார்த்தேன், சுவையாக இருந்தது. மிகவும் இலகுவானது. மிதமான சூட்டில் நிறைய நேரம் பொரிக்கவேண்டி  இருந்தது. இல்லாவிட்டால் உள்ளுக்குள் அவ்வளவு வேகாது. 

ஓ அப்படியா, செய்து பார்க்கவில்லை இன்னும், நன்றி சுவையைப்பற்றி அறிய தந்ததிற்கு, செய்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20200511-211021-1.jpg

ஒரு பிட்ஸா செய்திருந்தார்கள் வீட்டில்......சிலசமயம் இப்படி எதிர்பாராமல் விருந்துகள் கிடைப்பதுண்டு....!   😁

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுவரை இப்படி யோசிக்கவில்லை , மஞ்சள் கருவை பிரிதெடுக்க, இலகுவான முறை

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கப் அரிசி போதும், இட்லி தோசை இல்லாத காலை உணவுக்கு ஏற்ற ஒரு டிபன்

https://www.youtube.com/watch?v=hYr-MSrduW8

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் ஹண்டி ஹோட்டல் சுவையில் வீட்டில் செஞ்சு பாருங்க

https://www.youtube.com/watch?v=zBDPrq6dqKQ

 

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.