Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 12:08, suvy said:

முறுக்கு உரல் இல்லாமல் ஓர் அசத்தலான முறுக்கு......இந்த முறையில் நீங்கள் யாராவது முறுக்கு பிழிந்திருக்கிறீர்களா.......டெல்  மீ .....!   👍

அப்பாடியோ இப்படியும் முறுக்கா.
முடியாதுப்பா விரலுகள் சிக்குப்பட்டுப்போம்.
இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tutti-frutti-cake.jpg

வீணே தூக்கி போடும் தர்பூஸ் பழ தோலில் யுற்றி புரூற்றி..👌

டிஸ்கி:

பப்பாளி பழத்தோல் இன்னும் சுவை.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி

வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி

 

தேவையான பொருட்கள்

பால் -     2 கப்

கிரீம் -     1 கப்
கண்டென்ஸ்டு மில்க் -     1 கப்
ஏலக்காய் -     1/2 தேக்கரண்டி
ட்ரை ஃப்ரூட்ஸ் -     1/4 கப்

குங்குமப்பூ -     10-15
 
மட்கா மலாய் குல்ஃபி


செய்முறை

பாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.

கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.

சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
 

பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 10:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

சுவி,
நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 18:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும்.

அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று.

இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.

'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை.

நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄

Edited by Nathamuni
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Today's recipe is Homemade Choco bar Ice cream - eggless, without cream and without ice cream maker. chocolate icecream recipe by tiffin box. Ingredients: Powdered milk - 1 cup Water - 3/4 cup Condensed milk - 1/3 cup Cornflower - 2 tablespoons Water - 2-3 tblsp vanilla essence - 1/2 tsp Milk chocolate - 200 g Roasted peanut - 1 tblsp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 19:34, suvy said:

நம்ம ஊர் ஆட்டிறைச்சி குழம்பு, அதுவல்ல விடயம்..... இதன் செய்முறையின்  அழகைப் பாருங்கள்.....முடிவில் அந்தக் கறியின் உறைப்பும் வாசமும்  மூக்கில் வந்து மோதுவதை உணர்வீர்கள்......!   👍

சுவி, அந்த ஆட்டிறைச்சி... அடுப்பில் வேகும் போது, அந்த அழகிய சிவப்பு நிறம் வரவில்லை.
கடைசி நிமிடத்தில்... நிறம் மாறிய, அதிசயம்  வியக்க வைத்தது.  😍

 

8 hours ago, நீர்வேலியான் said:

சுவி,
நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி 

Kokosnussmilch - 4311501387832 | CODECHECK.INFO

நீர்வேலியான்.... இந்த முறையில் செய்யும் ஆட்டு இறைச்சி  கறியை,
உடனேயே... செய்து பார்த்து, நன்றாக வந்தது என்று சொல்லிய பின்பு....
அடுத்த முறை... இதே முறையில் செய்து பார்க்க வேண்டும். 👍

நீர்வேலியான்... நீங்கள், தேங்காயை திருவி, பிழிந்து... வந்த பாலை  பாவித்தீர்களா?
அல்லது... கடையில் "ரின்களில்" விற்கும் தேங்காய்ப் பாலை  பாவித்தீர்களா?
என அறியத் தாருங்கள்.  :)

6 hours ago, Nathamuni said:

இவரது சமையல் சட்டியை பாருங்கள். இது சீனச்சட்டி என்று சொல்லப்படும்.

அம்மா சொல்லுவா. மண்சட்டிக்கு அடுத்ததாக, கறி இந்த சட்டியில் தான் சுவையாக வரும் என்று.

இது இலங்கையில் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.

'இயத்து' என்று ஊரில் சொல்வார்கள். அடுப்பில இயத்தினை எடுத்து வை, என்பார்கள்... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ் சொல்லோ தெரியவில்லை.

நம்ம, புரட்சி, என்னப்பா, இந்த ஊர்ல, தேங்காய்ப்பால், அதுவும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பால் என்று ரொம்ப அலம்பறை பண்ணுதே என்று தலையினை சொறிந்து கொள்வார்.. 😄

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட ...

நாதமுனி,  எங்கள் வீட்டிலும்....  "இயத்து" என்ற சொல்லை பாவிப்பார்கள்.
சீனச்  சட்டியில்...  பலவகை இருக்கும்.

எண்ணை விட்டு பொரிக்க... சிறிய சட்டியும்,
மா வறுக்க... அதே அமைப்பில்... பெரிய தாச்சியும்,
அரிசி களைய... (அரிசியில் இருந்து, கல்லை பிரித்து எடுக்க) அரிக்கன் சட்டி என்று  பலவகை இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுவி, அந்த ஆட்டிறைச்சி... அடுப்பில் வேகும் போது, அந்த அழகிய சிவப்பு நிறம் வரவில்லை.
கடைசி நிமிடத்தில்... நிறம் மாறிய, அதிசயம்  வியக்க வைத்தது.  😍

 

Kokosnussmilch - 4311501387832 | CODECHECK.INFO

நீர்வேலியான்.... இந்த முறையில் செய்யும் ஆட்டு இறைச்சி  கறியை,
உடனேயே... செய்து பார்த்து, நன்றாக வந்தது என்று சொல்லிய பின்பு....
அடுத்த முறை... இதே முறையில் செய்து பார்க்க வேண்டும். 👍

நீர்வேலியான்... நீங்கள், தேங்காயை திருவி, பிழிந்து... வந்த பாலை  பாவித்தீர்களா?
அல்லது... கடையில் "ரின்களில்" விற்கும் தேங்காய்ப் பாலை  பாவித்தீர்களா?
என அறியத் தாருங்கள்.  :)

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட ...

நாதமுனி,  எங்கள் வீட்டிலும்....  "இயத்து" என்ற சொல்லை பாவிப்பார்கள்.
சீனச்  சட்டியில்...  பலவகை இருக்கும்.

எண்ணை விட்டு பொரிக்க... சிறிய சட்டியும்,
மா வறுக்க... அதே அமைப்பில்... பெரிய தாச்சியும்,
அரிசி களைய... (அரிசியில் இருந்து, கல்லை பிரித்து எடுக்க) அரிக்கன் சட்டி என்று  பலவகை இருக்கும். :)

சிறி,
வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன்.

நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

சிறி,
வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன்.

நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

நீர்வேலியான்...  "டின்னில்"  உள்ள தேங்காய்ப் பால் விடுவது என்றால், 
சமையல் நேரத்தில்... பெரும் பகுதி நேரம், சேமிக்க முடியும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்...  "டின்னில்"  உள்ள தேங்காய்ப் பால் விடுவது என்றால், 
சமையல் நேரத்தில்... பெரும் பகுதி நேரம், சேமிக்க முடியும். :)

டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

டின்பாலிலும் பார்க்க, பவுடர் மில்க் நல்லது என்கிறா, கூட வேலை செய்யும் சிங்கள அம்மணி.

Online NESPRAY EVERYDAY MILK POW - 1 KG Online price in Sri Lanka ...

"நெஸ்பிரே" பவுடர் போட்டால்,  கறி இனிக்குமே.... 😮
எங்கடை ஆட்டிறைச்சி  கறிக்கு, சிங்கள அம்மணி.. ஆப்படிக்கிற பிளான் போலை இருக்கு. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Online NESPRAY EVERYDAY MILK POW - 1 KG Online price in Sri Lanka ...

"நெஸ்பிரே" பவுடர் போட்டால்,  கறி இனிக்குமே.... 😮
எங்கடை ஆட்டிறைச்சி  கறிக்கு, சிங்கள அம்மணி.. ஆப்படிக்கிற பிளான் போலை இருக்கு. 😄

நீங்கள் போட்டது, முழு ஆடை பசுப்பால் மா.

நான் சொன்னது இது...

Jay Brand Coconut Milk Powder 300g online shopping in the UK ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர்ல என்னடா செய்யுரீங்க.. 😄

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு ஏதேதோ செய்கிறார்கள் தோழர்......!   🤔

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.