Jump to content

தீவிரவாதிகளின் தாக்குதலில் 47 அமெரிக்க ஆதரவு படையினர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரவாதிகளின் தாக்குதலில் 47  அமெரிக்க ஆதரவு படையினர் பலி

 

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட  தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

siriya.jpg

சிரியாவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சீரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்திலிருந்து ஐஎஸ் தீவிரவாதிகளை அகற்றுவதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் மேற்கொண்டு தீவிரவாதிகளை கொன்று வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்கின்றனர். 

அந்த வகையில், ஆல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சீரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்ணெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் மேற்கொண்டர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

 

http://www.virakesari.lk/article/45214

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.