Jump to content

மண்வீழந்த எங்கள் மறத்திகளுக்காக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….

தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன்


அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே 
இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் 
பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட 
மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் 
உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது 
செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது

நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த 
அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே!

எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் 
இம்மியளவும் இதயம் பயமறியா

வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து 
ஆரத்தழுவிய எம் அக்காமார் தங்கையர்கள் 
வாழ்ந்தார்கள் என்ற வரலாறெமக்குண்டு 
தாழ்ந்தாலும் அன்று தமிழீழத் தாய்மண்ணில் 
வெற்றிக் கொடிநாட்டி விரட்டிப் பகைதன்னை 
கொற்றவைகளாகக் குலங்காத்தார் எம் பெண்கள் 
என்று பெருமிதத்தோ டியம்புதற்குச் செய்திட்ட 
நன்றி மறக்காது நமக்கும் எம் சந்ததிக்கும்.

இந்த உலகினிலே ஈழத் தமிழ் பெண்கள் 
சொந்த மண் மீட்க தூக்கினர் தம் ஆயுதத்தை 
அந்த மறம் போல அகிலம் முழுவதிலும் 
எந்த இனப் பெண்ணிடமும் 
இருக்கவில்லை நெஞ்சிலுரம் 
என்றடித்துக் கூற எமக்குண்டு யோக்கியதை

தங்கை தமிழினியே தாருஜாச் சோதரியே 
உங்கள் இறப்பெமது உள்ளத்தைத் தாக்கிடினும் 
பெண்மைக்குதாரணமாய் பெருவீரம் காட்டிய உம் 
வன்மையும் நெஞ்சுரமும் வரலாற்றில் நிலை நிற்கும் 
ஆதலினால் எங்கள் அகம் நிறைந்து வாழ்ந்திடுவீர் 
சாதலுக்கு அஞ்சா உம் சரித்திரத்தை நாம் மறவோம்.

தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் 
நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு 
ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு 
காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை

எங்கள் தாய் மண்ணை ஈழத்தமிழகத்தை 
பொங்கி யெழுந்து புதுப்பித்துப் போரழித்த 
நாட்டை நமதாக்கி நமதுயிராம் தாயகத்தை 
ஆட்டிப்படைக்கும் அயலார்கள் வாய்மூட 
வெற்றிக் கொடி நாட்டும் வேளை வந்தே தீரும்

எவன் என்ன சொன்னாலும் ஈழத்தாய் மண்ணதனை 
மீட்கும் வரை தமிழன் விழி மூடப்போவதில்லை 
இன்றில்லா விட்டாலும் என்றோ ஒரு நாளில் 
எங்கள் தமிழீழம் இனிதே உருவாகும்

அந்த நாள் தன்னில் தம் ஆருயிரை ஈந்திட்ட 
சொந்தங்காள் உம்மைக்கை தூக்கி வணங்குதற்காய் 
ஆலயங்கள் கட்டி அதிலும்மைப் பூஜித்து 
தெய்வங்களாக்கி சிரம் தாழ்த்தி நாம்பணிவோம்


இன்றுமது கல்லறைகள் இடித்துடைக்கப் பட்டாலும் 
என்றும் எம் நெஞ்சில் இருப்பீர் எம் தேவதைகாள் 
என்றுரைத்திவ் அஞ்சலியை இனிதே முடிக்கின்றேன் 
நன்றே நடக்கும் நமக்கு.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, karu said:

மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக….

தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன்

---

தோற்று மனஞ்சோர்ந்து துயரடைந்து வீழ்ந்ததெல்லாம் 
நேற்று, இனியும் நெடுங்காலம் நமக்குண்டு 
ஆற்றலுண்டு மேலும் அறிவுண்டு வளமுண்டு 
காற்றிலொன்றும் இன்னும் கரைந்தழிந்து போகவில்லை.

உண்மையான வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான், தமிழ்சிறீ.  - ஏன் இக்கவிதையை முகப்பிலுள்ள பொருளடக்கத்தில் போடவில்லையென்று புரியவில்லையே.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.