Jump to content

ஆஸ்துமா - வெயில் காலமும் பனிகாலமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கேள்வி- எனக்கு வயது 30.  ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே  ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?
ஆர். குமார் கொழும்பு
 
Asthma-2.jpg


பதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.

ஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். ஆத்துடன் ஒவ்வாமை, எக்ஸிமா போன்ற நோயுள்ளவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும் சிகரட் புகை, விறகெரிக்கும் புகை, நுளம்புத்திரிப் புகை போன்ற எல்லாப் புகைகளும் ஆஸ்த்மாவைத் தூண்டக் கூடும்.
 


தூசு, கடுமையான மணங்கள், சுவாத்திய மாற்றங்கள், சுவாசத் தொற்றுநோய்கள் போன்றவற்றால் தூண்டப்படுவதுண்டு.

உங்களுக்கு வெயில் காலத்திலேயே அதிகம் வருவதுண்டு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே குளிர் அதிகமாயுள்ள மேலைநாட்டவர்கள் பலருக்கு வசந்த காலத்திலேயே ஆஸ்த்தா அதிகம் வருவதுண்டு. அதற்குக் காரணம் அங்கு வசந்த காலத்தில் ஏராளமான பூக்கள் மலரும். அவற்றின் மகரந்தம் உதிர்ந்து காற்றோடு கலந்து சுவாசத்தோடு உட்செல்வதால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பபட்டு ஆஸ்த்மா வருகிறது.

எமது நாட்டில் அவ்வாறில்லை. சகல காலங்களிலும் பூக்கள் மலர்கின்றன. மகரந்தம் காற்றோடு கலந்துநோயை ஏற்படுத்துவதானால் அது எப்பொழுமே நிகழும். வெயில் காலத்தில் மட்டுமல்ல.

இங்கு குளிர் காலத்தி;லேயே ஆஸ்த்மா அதிகம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் குளிர் காற்றானது உடலில் ஹிஸ்டமின் என்ற இரசாயனத்தை எமது உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதுவே எல்லாவித ஒவ்வாமைகளின் போதும் அதிகம் சுரக்கிறது. அது ஆஸ்த்மாவை தூண்டுகிறது.

ஆனால் உங்களுக்கு ஆஸ்த்மா வெயில் காலங்களிலேயே அதிகம் வருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் இங்கு அவ்வாறு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம் வெக்கையான காலத்தில் தூசி, புழுதி, பூஞ்சணம், மகரந்தம் மணங்கள் யாவும் வெக்கையில் காய்ந்து உலர்ந்து காற்றோடு கலந்து விரைவில் எங்கும் பரவுகின்றன.

உங்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருள் வெயில் காலத்தில் உங்களைத் தாக்குவதாலேயே அக்காலத்தில் ஆஸ்த்மா வருகிறது என நம்புகிறேன்.

ஆஸ்த்மா என்பது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும்.
 
1296x728_Girls-Guide-to-Asthma.jpg


ஆனால் இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. இன்ஹேலர்களை உபயோகிக்கிறீர்கள் என நம்புகிறேன் அவற்றை சரியாகப் பயன்படுத்தி, நோயை நன்கு கட்டுப்படுத்தி, ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.

டொக்டர். ஏம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
 
எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.