Jump to content

வேடமில்ல நட்பின் வேந்தன் புதுவைக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இந்த நடுநிசியில் ஒலமிடும் ஆந்தைகளின்

சாபங்கள் செவி மடுத்தேன்.

உங்கள் கவியையுமா

கோத்தா சிறையெடுத்தான்?

நானும் சபிக்கின்றேன்

எங்கள்  கவியை சிறையிட்ட பாதகன்மேல்

இடியாய் நரகம் இறங்க அறம்பாடுகிறேன்.


 

ஆசை மச்சான் புதுவை, . ”விமர்சிக்கிறாய் சகிக்கிறோம்

எனெனில் நீ தேசபக்தன்”

என்ற உன் தோழமையை


 

எண்ணிக் கரைகின்றேன்

தோழமையே உனது மொழி

தோழமையே உனது வழி

தோழமையே உன் கவிதை

தோழமையே தத்துவமாய்

எனக்கு தோழ்கொடுத்த பெருவாழ்வே

வேடமில்ல நட்ப்பின் வேந்தனே

ஊதுகிறேன் சங்கு

உனைத் தின்ற கோழைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நினைவுகளையும்...காலம் தின்று ஜீரணித்து விடுகின்றது!

அந்த நினைவுகளுடன்...புதுவையின் நினைவுகளும்...கலந்து விடாதிருக்க...உங்கள் கவிதைகள்...நிச்சயம் துணை புரியும் என்பது எனது நம்பிக்கை!

 

அறம் பாடும் கவிஞனுக்கு....நன்றிகள்!

Link to comment
Share on other sites

எனக்கும் அவனுக்கும் சின்ன வயசுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதி எதிர்ப்பு  போராடங்களில் துளித்த நட்பும் விருட்சமாய் நிழல்பரப்பிய தோழமையும் 

நன்றி புங்கையூரான்.

 

என் முகநூலில் இருந்து

வல்வை சகாறா பொயட் உங்களை அறியக்கூடிய ஆரம்ப கட்டங்களில் உங்கள் மீது எனக்கு அதிக சினம் இருந்தது. காரணம் நீங்கள் எழுதிய கவிப்பாக்களில் பெண்கள் தொடர்பான வர்ணனைகள் என்றும் சொல்லலாம் அதனால் உங்களைப்பற்றி தோழமைக்கவிஞர்(தேசிய கவிஞர்) என்னுடன் உரையாடும்போது எனக்கு அதீத கோபம் வரும். கோபித்துக்கொள்வேன் அவரோ வாய்விட்டுச்சிரிப்பார். என்னை பேசவிட்டு வேடிக்கை செய்துவிட்டு விடயத்திற்கு வருவார். அடீ... அவன் என் நண்பனடி நாங்கள் எல்லாம் ஒரே ரகம் (கவிஞர்) இந்தப் போராட்டத்தின் வெற்றிகள் உருவாக்கப்பட்ட பிற்பாடு நானும் கூட அப்படித்தான் கவிதை எழுதுவேன். அப்போது நீ என்ன என்னையும் திட்டுவாயா? என்று கேட்டு வாயடைக்க வைத்ததுடன் உங்களுடனான ஒரு நட்பு வெளியை நான் பேண வேண்டும் என்று தொடர்ந்தும் உங்கள் கவிதைகளை உன்னிப்பாக கவனிக்கும்படி ஆர்வப்படுத்தியவரும் அவர்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை நினைவு கூருவதற்கு உரிய அருமையான கவிதை. அதில் உங்களின் தோழமை தெறிக்கின்றது, ஆயினும் இனிமேல் தயவுசெய்து அறம் பாடாதீர்கள்.அது பூமராங் மாதிரி  இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவரிடமே வந்து நிக்கும். நன்றி ஐயா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.