Jump to content

கடவுள் உண்டா?


Recommended Posts

On 12/19/2018 at 1:26 AM, குமாரசாமி said:

கடவுள் பற்றிய எனது நிலை மிகவும் சிறியது.
அது ஒரு புறமிருக்க.... எல்லோரையும் போல் இருக்கும் இந்த மனிதனுக்கு  இவ்வளவு  சிறப்புகளும் மரியாதைகளும் ஏன் என்பதை உங்களால் சொல்ல முடியுமா?

 

 

எல்லா மனிதர்களை போலவும் இருக்கும் பிராமணர்களுக்கு  இந்துகளின் புனித நூல் மனு தர்மத்தில் ஏன் இவ்வளவு மரியாதையும் கெளரவும் என்று உங்களால் கூற முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

கடவுள் பற்றி ஆலபேட் ஐன்ஸ்ரைனின் கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பாருங்கள். 

The word God is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honourable, but still primitive legends which are nevertheless pretty childish.

- Albert Einstein

ஐன்ஸ்ரைன் கூறியது பைபிளை பற்றி மட்டும் ஆனால் நமது புராணங்களும் இதிகாசங்களும் அதை விடபெரிய புரட்டுக்களும் முட்டாள்த்தனங்களும் நிறைந்தவை. 

 

 மேற்கத்தையவர்கள் புராணங்களிலிருந்து பல விடயங்களை திருடியவர்கள். இன்றும் அவர்களே புராதன சிலைகளை திருடுகின்றார்கள். ஏன்??????????
விளங்கியவர்களுக்கு பல விளக்கங்களை கொடுக்கலாம்.
விளங்க மறுப்பவர்களுக்கு பாலும் நஞ்சாகத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ??  

கடவுள் ஆணா? எப்படி கண்டு பிடித்தீர்கள்? உங்களுக்கு மட்டும் தெரியப்படுத்தினாரா? 

 

அல்லாவை அவன் இவன் என்றுதான் அழைப்பார்கள்.
முருகனையும் அவன் இவன் என்றுதான் அழைப்போம்.
பெண் தெய்வங்களையும் அவள் இவள் என்றுதான் அழைப்போம்.
இவையெல்லாம் மனிதனால் வகுக்கப்பட்டது.
ஏன்? தங்கள் உண்மையான பெயர் கூட இன்னொருவரால் தான் சூடப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயமே கோவிலாகி....கடி,மனம்  அடிமையாகி....,

வாய்மையே தூய்மையாகி...,

மனம் மணி...இலிங்கமாகி...!

 

என்று எமது முன்னோர் கூறிச் சென்றனர்!

எல்லா உண்மைகளும் மேலுள்ள வார்த்தைகளுக்குள் புதைந்து கிடக்கின்றன!

நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்!

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

அல்லாவை அவன் இவன் என்றுதான் அழைப்பார்கள்.
முருகனையும் அவன் இவன் என்றுதான் அழைப்போம்.
பெண் தெய்வங்களையும் அவள் இவள் என்றுதான் அழைப்போம்.
இவையெல்லாம் மனிதனால் வகுக்கப்பட்டது.

நானும் நீங்களும் இவற்றில் உடன்படுகிறோம். 

நாம் ( மனிதர்கள்) ஏன் இந்த கடவுள்களை அவன் இவன் என்று மரியாதை இல்லாத வகையில் பயன்படுத்தும் ஒருமையில் அழைக்கிறோம் என்பது தான் எனது கேள்வி. அதற்கு பதிலாக நான் நினைப்பது, கடவுளை சண்டியனாக நாம் பார்க்கிறோம் என்பது தான். ஒரு கொடூரமான சர்வ வல்லமை கொண்ட ஒரு சண்டியனை நாம் அவன் இவன் என்று அழைப்போம். ஆனால் அவனுக்கு மிகவும் அஞ்சி அவனை அமைதிப்படுத்தி அவனின் கருணையை பெற முயற்சி செய்வோம் இல்லையா? இதை தானே நாம் கடவுளுக்கும் செய்து கொண்டு கடவுளை அவன் இவன் என்று அழைக்கிறோம்?

Link to comment
Share on other sites

கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் முடிவின்றி பல நூற்றாண்டுகளாக தொடர்கின்றது. 

இந்த விவாத்திற்கு சில ஒப்பீடுகள் ஒரு நிலைப்பாட்டினை எடுப்பதற்கு உதவக் கூடும்.

கடவுள் உண்டு என்று நம்மி அதை பன்பற்றும் சமூகத்தின் தற்போதைய வளர்ச்சியையும் 

கடவுள் இல்லை அல்லது அதைப்பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றுள்ள சமூகத்தின் இன்றைய வளர்ச்சியைபும் 

ஒப்பிட்டுப் பார்ப்பின் 

இவ் இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான பாெருளாதார,  தொழில்நுட்ப, மனித நாகரீக பண்பாட்டு வளர்ச்சியில் பாரியளவு ஏற்றந் தாழ்வுகள் உள்ளதை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும். 
 

Link to comment
Share on other sites

14 hours ago, குமாரசாமி said:

 மேற்கத்தையவர்கள் புராணங்களிலிருந்து பல விடயங்களை திருடியவர்கள். இன்றும் அவர்களே புராதன சிலைகளை திருடுகின்றார்கள். ஏன்??????????
விளங்கியவர்களுக்கு பல விளக்கங்களை கொடுக்கலாம்.
விளங்க மறுப்பவர்களுக்கு பாலும் நஞ்சாகத்தான் தெரியும்.

நான் மேற்கோள் காட்டியது ஐன்ஸ்ரைன் என்ற அறிவியல் மேதையின. கூற்றை மட்டுமே. அதற்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை. 

மேலும் எம்மை முட்டாள்களாக்கிய புராண இதுகாசங்கள்களை மேற்கத்தயவர்கள் திருடினார்களா? உதவாக்கரை புராண இதிகாசங்களை திருடி அவர்களுக்கு என்ன பிரயோசனம்?

சிலைத்திருட்டு புராதன கலைப்பொருட்கள் திருட்டு உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்செயல்.நீம்அதுபற்றி இங்கு விவாதிக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக்கட்டத்தில் இருக்கு என்று பார்த்திட்டு போக வந்தன் தலைப்பும் கருத்துக்களும் :unsure:

Link to comment
Share on other sites

கடவுள் இருக்கின்றார் அல்லது இல்லை அல்லது எங்கயாவது போய்விட்டார் என்பதுக்கு அப்பால் சமயம் அது சார்ந்து மொழி பண்பாடு கட்டிடக்கலை வரலாறு சித்தர்கள் இயற்க்கை மருத்துவம் அறநெறிகள் போன்ற பல விசயங்கள் கடவுள் என்ற கருவைச் சுற்றி பின்னப்பட்டுள்ளது. அதே நேரம் சாதியம் ஏற்றதாழ்வுகள் மூட நம்பிக்கைகள் போன்ற பல எதிர்மறை விசயங்களும் பின்னப்பட்டுள்ளது. கடவுள் உண்டா இல்லையா அவரை நேசிப்பதா வெறுப்பதா என்ற அணுகுமுறை பொருந்தாது. மாறாக இக்கேள்விகளுடன்  கடவுள் என்ற ஒரு விசயத்தை நன்மைக்காக பயன்படுத்துவது ஆரோக்கியமானது. 

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஏவினை நேர்விழி ... அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய

மாதரை மேவிய ஏதனை ... மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை,

மூடனை நெறி பேணா ஈனனை ... மூடனை, ஒழுக்கம் இல்லாத
இழிந்தோனை,

ஏடெழு தாமுழு ஏழையை ... படிப்பே இல்லாத முழு ஏழையை,

மோழையை ... மடையனை,

அகலா நீள் மாவினை மூடிய ... என்னைவிட்டு நீங்கா தீவினை
மூடியுள்ள

நோய்பிணி யாளனை ... நோயும் பிணியும் கொண்டவனை,

வாய்மை யிலாதனை ... உண்மை இல்லாதவானை,

இகழாதே ... இகழ்ந்து ஒதுக்காமல்

மாமணி நூபுர சேதள தாள் ... சிறந்த மணிகளாலான சிலம்புள்ள
உன் பாதங்களை,

தனி வாழ்வுற ... ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற

ஈவதும் ஒருநாளே ... தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் ... புலவர்கள் பாடிய
நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்

புகல் குற மாதை ... முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை

நாடியெ கானிடை கூடிய சேவக ... விரும்பிச் சென்று காட்டிலே
கூடிய வீரனே

நாயக மாமயில் உடையோனே ... தலைவனே சிறந்த மயில்
வாகனனே

தேவி மநோமணி ஆயிப ராபரை ... தேவி, மனோன்மணி,
அன்னை, பராபரை,

தேன்மொழி யாள்தரு சிறியோனே ... தேன் மொழியாள் உமையின்
சிறுமகனே

சேணுயர் சோலையின் ... விண்வரை உயர்ந்த சோலைகளின்

நீழலி லேதிகழ் ... நிழலினிலே வளங்கும்

சீரலை வாய் வரு பெருமாளே. ... திருச்செந்தூரில் அமர்ந்த
பெருமாளே.
(மூலம்: http://www.kaumaram.com/thiru/nnt0036_u.html)

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 3:42 AM, சண்டமாருதன் said:

 Stephen Hawking | Brief Answers to the Big Questions

 

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

 

 

ஒரு அசுரன் பூமியை பாயாய் சுருட்டி கடலுக்கு அடியில் கொண்டு போய் வைக்க விஷ்ணு வராக அவதரம் எடுத்து பூமியை மீட்டு வந்தார்”’ என்பது போன்ற அடி முட்டாள் கதைகளை கூறி மக்களை ஏமாற்றி மக்களை கல்வி கற்க விடாமல்  செய்த ஒரு கூட்டம் இப்போது  மக்கள் எதிர்க்கேள்வி  கேட்க  தொடங்கியவுடன் மற்றவர்கள் கண்டுபிடித்த அறிவியல் விடயங்களை தமது உதவாக்கரை புராணங்கள் கண்டு பிடித்ததாக எந்த ஆதாரங்களும் இன்றி பிதற்ற தொடங்கி உள்ளார்கள்.அதன்வெளிப்படே இந்த பைத்தியக்கார காணொளி. 

வாரத்தைக்கு வாரத்தை தமிழரின் கடவுள் . எற்று கூறும் இந்த காணொளியை உருவாக்கிய தமிழரை ஏமாற்றும் பேர்வளி   இவ்வுலகின் பெரும்பான்மையான மற்றய மனிதர்களை கிண்டல் அடிக்கிறார். மற்றைய மதங்கள் எல்லாத்தையும் விட தமிழரின் கடவுள்தான்  உயர்ந்தவர் உண்மையானவர் என்ற பொருள்பட பிதற்றும் இவரால் கிண்டல் அடிக்கப்படும் அவர்கள்  அறிவியல் பொருளாதார அரசியல் முன்னேற்றத்துடன் வாழும் அதேவேளை தமிழரின் கடவுள் மட்டும் ஏன் தமிழரை இன்னமும் அடிமைகளாக வைத்திருக்கிறார் . என்பதை மட்டும் கூறவில்லை. அதைக்கேட்டால்  இதைப்போலவே ஒரு அடிமுட்டாள் கதையை கூறி தமிழரை ஏமாற்றுவார். என்று நினைக்கிறேன். 

க‍டவுள் பற்றி கூறும்  தமிழருக்கு பாடம் எடுக்கும் இந்த ஏமாற்று ஆன்மீகவாதி, அதேவேளை ராமசாமி நாயக்கர் என்றும் தெலுங்கன் என்றும் ஒருவரை சாதி சொல்லி திட்டுகிறார். மற்றய இன மக்களை திட்டுகிறார்.  இவர் திட்டும் மற்றய இன மக்களை தமிழரின் கடவுள் மனிதர்களாக பார்க்கவில்லையா?  தமிழர் கண்டு பிடித்ததை நியூட்டன் திருடினார் என்று புலுடா வேறு.  விஷ்ணு ஒரு சிறந்த விஞ்ஞானி என்று பைத்தியகார பிதற்றல் ஒரு பக்கம். புவியீர்ப்பை விசையை கடந்து தமிழரின் கடவுள் இந்திரன் பறந்தான் என்று பிதற்றும் இவர் அந்த இந்திரன் அப்படி பறந்து  மனித குலத்திற்கு என்ன செய்து கிழித்தான் என்பதை கூறவில்லை. இனித்தான் கற்பனை செய்ய வேண்டும் போல் இருக்கிறது.  தமிழர் பழம்பெருமை, கடவுள், புராணம் என்று எதை பிதற்றினாலும்  முட்டாள் தமிழர்கள் அதை கேள்வி கேட்காமல் எற்றுக்கொள்வார்கள் என்ற தைரியத்தில் இவ்வாறு பிதற்றி உள்ளார்.

 

Link to comment
Share on other sites

On 12/22/2018 at 7:04 AM, குமாரசாமி said:

வென்றவர்கள் சரித்திரம் என்றால்.....நான் இணைத்த காணொலியில் வந்தவரும் சரித்திரத்தில்  இணைந்து விடுவார். எனவே கேள்விகள் நூறு வருடங்கள்  சென்ற பின்னரும் கேட்கப்படும்.

நான் குறிப்பிட்டது இவர்கள் முன்னோர்கள் வென்றவர்கள், ஆதலால் அவர்களுக்கு அமெரிக்கா என்ற நிலபரப்பு கிடைத்திருக்கிறது என்றேன்...

ஐம்பது வருடம் கழிந்து எப்படி எலும்பு கூடு ஃப்ளைட்டில் கை அசைத்து கொண்டு இறங்குமா...

On 12/22/2018 at 2:24 PM, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

நான் வள்ளுவன், பிரபாகரனை போன்றவர்களை அவன் இவனென்று தான் குறிப்பிடுவதுண்டு...

இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என கூற முடியுமா...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் தேவை !
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் )
...........................................................
புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் 
ஒரு மதத்திற்கு 
நல்ல கடவுள் 
தேவைப்படுகின்றார்

விண்ணப்பிப்பவர் ....

மூட நம்பிக்கைகளை 
மக்களிடம் 
விதைக்காதவராக 
இருக்க வேண்டும்

அர்ச்சனை என்ற 
பெயரில் 
பணம் வசூலிக்காதவராக 
இருக்கவேண்டும்

நேர்த்திக்கடன் 
வாங்காமலேயே 
வேண்டுதலை 
நிறைவேற்றுபவராக 
இருக்க வேண்டும்

பாதுகாப்பு என்ற 
பெயரிலேயே 
பெண்களை 
பேய்களைப்போல 
ஒட்டுமொத்தமாக 
மூடிக்கொண்டு திரியவேண்டும் 
என்று அறிவுரை 
வழங்குவதைவிட்டு 
பெண்களை சக 
மனுஷியாக மதிக்கும் 
ஆண்களைப் படைக்க
வேண்டும்

ஆட்டு மந்தைக் 
கூட்டம்போல 
ஒருவன் பல பெண்களைக் 
கட்டலாம் என்று 
சொல்லாமல் 
ஒருவனுக்கு ஒருத்தி 
என்று நல்ல 
மனதுடைய 
ஆண்களை படைப்பவாராக 
இருக்க வேண்டும் 
(உபரி - ஆண்கள் பெண்களைவிட 
குறைவாகத்தானே
உள்ளார்கள் என்று 
நொண்டிச்சாட்டு 
சொல்லாமல் 
ஆண்களையும் 
பெண்களையும் 
சம அளவில் படைக்கும் 
வல்லமை பெற்றவராக 
இருக்க வேண்டும்)

ரஜனிக்காந்த் அரசியலுக்கு 
வருவதைப்போல 
அப்போ வருகின்றார் 
இப்போ வருகின்றார் 
என்று பூச்சாண்டி 
காட்டாமல் சொன்னால் 
சொன்னபடி வந்து 
இரட்ச்சிப்பவராக 
இருக்க வேண்டும்

பாவ மன்னிப்பு 
கொடுப்பதைவிட்டு
பாவங்களைத் தடுப்பவராக
இருக்க வேண்டும்

தன் துறவிகள்
மற்ற மத 
வழிபாட்டுத் தளங்களை
உடைக்கும் போதும் 
மற்ற மதத்தவரைத் 
தாக்கும் போதும்
புதினம் பார்த்துக் 
கொண்டிருப்பவராய்
இருக்கக் கூடாது

எந்தக் கடவுள்
சிறந்தவர் 
என்ற போட்டியில் 
தன் பக்தர்களைத் 
தூண்டி விடாமல் 
தேவை எற்பட்டால் 
தானே மற்ற கடவுள்களோடு 
போட்டிபோடும் 
வீரம் நிரம்பியவராய் 
இருக்க வேண்டும்

சம்பளமாக
அபிஷேகம் 
நோன்பிருத்தல் 
பிரித் ஓதுதல் 
தேவாலய வழிபாடுகள் 
என்பவற்றில் 
விரும்பியவை 
கொடுக்கப்படும்

தகுதிவாய்ந்த
கடவுள்கள் 
விண்ணப்பிக்கலாம்

நன்றி முகனூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/22/2018 at 2:54 AM, Jude said:

 

தமிழில் ஒருவரை மரியாதையாக 'அவர்', 'அவரை', 'என்பவரை', 'இருக்கிறார்' என்று எழுதுவோம்.

பெண்ணானாலும் ஆணானாலும் மரியாதையாக இவ்வாறே எழுதுவோம். அதிக மரியாதை கொடுக்க விரும்பினால் பன்மையில் 'அவர்கள்', 'இருக்கிறார்கள்' என்று எழுதுவோம்.

சண்டியர்கள், காடையர்கள் மற்றும் கொலைகார்களை பற்றி எழுதும் போது, ஆணாக இருந்தால், 'அவன்', 'என்பவனை', 'இருக்கிறான்' என்று எழுதுவோம். 

இந்த கடவுள் இப்படியான ஒரு மோசமான சண்டியன், கொலைகாரன், காடையன் என்பதில் குமாரசாமி அவர்களும் கொழும்பான் அவர்களும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களின் எழுத்தில் இருந்து தெளிவாகிறது. இந்த அளவு மோசமான சண்டியனுக்கு இவர்கள் மட்டுமல்ல உலகமே அஞ்சுவதை காணக்கூடியதாக இருக்கிறது. 

 

 

ஒரு மூன்றாம் ஆளுக்கும் 
உருத்துடையவனுக்கும் இடையிலும் இப்படித்தான் பேசுவோம்.

அறிமுக நாட்களில் காதலர்கள் 
வாங்கோ போங்கோ என்றுதான் பழுகுவார்கள்.

அதுவே எனதானவன் உரித்து உடையவன் என்று வந்துவிட்டால் 
வாடா போடா என்றுதான் பேசுவோம் 

இது ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கிறது. 

கந்தன் வருவான் 
கண்ணன் வருவான் போன்ற சொற்பதங்கள் இப்படியான ஒரு உரிமையை பாராட்டி வருவது.

அதுவே அவர்களை தொழுத பாடிய நாணயனர்கள் என்றால் 
திருநாவுக்கு அரசு பாடினான் 
சம்மந்தன் பாடினான் என்று பேசுவதில்லை ... அவர்கள் மூன்றாம் நபர்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, Maruthankerny said:

ஒரு மூன்றாம் ஆளுக்கும் 
உருத்துடையவனுக்கும் இடையிலும் இப்படித்தான் பேசுவோம்.

அறிமுக நாட்களில் காதலர்கள் 
வாங்கோ போங்கோ என்றுதான் பழுகுவார்கள்.

அதுவே எனதானவன் உரித்து உடையவன் என்று வந்துவிட்டால் 
வாடா போடா என்றுதான் பேசுவோம் 

இது ஒரு நெருக்கத்தையும் உரிமையையும் கொடுக்கிறது. 

கந்தன் வருவான் 
கண்ணன் வருவான் போன்ற சொற்பதங்கள் இப்படியான ஒரு உரிமையை பாராட்டி வருவது.

அதுவே அவர்களை தொழுத பாடிய நாணயனர்கள் என்றால் 
திருநாவுக்கு அரசு பாடினான் 
சம்மந்தன் பாடினான் என்று பேசுவதில்லை ... அவர்கள் மூன்றாம் நபர்கள் 

விளக்கத்துக்கு நன்றி. முக்கியமாக முஸ்லிம்கள், நபிகள் நாயகத்தை அவர்கள் என்றும், அல்லாஹ்வை அவன் என்றும் விழிப்பது எனக்கு ஏன் என்று புரியவில்லை. உங்கள் விளக்கம் தான் அதை புரிய வைத்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.