Jump to content
  • 0

நான், செய்தது... சரியா... பிழையா?


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chefsessel gif

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 
இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும்  என்று, தெரிந்து...
நீங்கள் சொல்வது  சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.
அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.   

ஆனால்... எனக்கு,  குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.
இவ்வளவிற்கும்...  நான், கடந்த வருடங்களில்  சேமித்த விடுமுறை நாட்கள்  நாற்பதுக்கு மேல்.
இரண்டு நாள்... லீவு  கேட்க, இவ்வளவு நடப்பு  அடிக்கும்  இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....

இன்று...  எனது  மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...
ஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து... 
அதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.

இரண்டு நாள்...  விடுமுறை கேட்ட எனக்கு, 
இப்போ... மருத்துவர் மூலம்  ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...
எனது  விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.

எந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும்  மதிக்கப் பழக வேண்டும்  என்ற படிப்பினையை.. அவருக்கு  கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • Answers 54
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 5:38 AM, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

பிள்ளைகளின் பட்டமளிப்புக்குப் போகாமல் வேலைக்குப் போகுமளவிற்கு ஒரு வாழ்வு தேவையில்லை. என்றாலும் சுகவீன லீவை விட முன்கூட்டியே சொல்லியிருந்தால் மேலாளர் வேறு ஏற்பாடுகள் செய்திருப்பார்.

மொழிப்பிரச்சினை காரணமாக பெற்றோரின் உதவிகூட வீட்டுப்பாடம் செய்ய கிடைக்காத புலம்பெயர்ந்து வாழும் இரண்டாம் தலைமுறை பல்கலைப் பட்டம் பெறுவது இலகுவான விடயம் அல்ல.

தமிழ் சிறி அண்ணாவின் பிள்ளைகள் இருவர் பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பை முடித்தது எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. அவர்கள் மென்மேலும் சிகரங்களைத் தொட மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு கட்டாயம் தேவை...... கேடடால், கிடைக்காது என்றால்.... நீங்கள் டாக்குத்தர் தந்த கடிதத்தினை மட்டுமே அனுப்பி இருக்கலாம். அல்லது.... ஐந்து.... ஆறாம் திகதிகளில்..... இருமி நடித்து..... உண்மையில் வருத்தம் தான் என நம்பிற அளவுக்கு buildup கொடுத்து இருக்கலாமே.

இப்போது.... உங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்திருக்கும்.... இதன் விளைவு..... நீண்ட காலமாக அதே உத்தியோக நிலையில் இருக்க நேரிடும்.

உத்தியோக உயர்வு என்பது... உடனடி முகாமையாளர் சிபாரிசில் தான்.... அவருக்கு பதவி உயர்வு கிடைத்தால்....நீங்கள் அவரின் இடத்துக்கு வருவதாயின்.... அவரது சிபாரிசு கருத்தில் எடுக்கப்படும் என்பதால், நீங்கள் செய்தது, தவறு மட்டுமில்ல.... முட்டாள் தனமானது.

முன்னர் ஒரு பதிவில்.... கண்டெடுத்த பேனாவினை... வீட்டில் காட்டிய போது.... உங்கள் தந்தையார்... எடுத்த இடத்தில போட்டு வருமாறு அனுப்பியதாக சொல்லி இருந்தீர்கள்.... தயவு செய்து... இந்த சிக் லீவு அடித்த விசயத்தினை உங்கள் பிள்ளைகளுக்கு பெருமையாக சொல்லி விடாதீர்கள்... தவறான முன்னுதாரணம் ஆகி விடும்.

பேசாமல் திங்கள் அன்று.... இருமிக்கொண்டே வேலை போய்..... உண்மையிலேயே வருத்தம்..... ஆனாலும் வந்தேன்....என்று காட்டிக் கொண்டே....நாலு மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் ... (வாங்கி பார்க்க மாட்டார் )அவராக....நீ போய் ...ஓய்வெடு என்று சொல்ல வையுங்கோ...  

முக்கியமான ஒரு விசயம்.... யேர்மன் சட்டம், இவ்விசயத்தில் பிரித்தானிய சட்டம் போலவே இருக்கும்..... சிக் லீவ் என்பது உங்களுக்கு உரிமை  அல்ல..... மனிதாபிமான சலுகை.... கம்பெனி உங்களுக்கு அந்த நாளிலும் பணம் தருவதால்..... நீங்கள் உண்மையிலேயே சுகவீனமாக  இருக்கிறீர்களா என முகாமையாளர் செக் பண்ண வீட்டுக்கு வரலாம்.

வீட்டில் இருந்தால் நடிக்கலாம். இல்லாமல் இருந்தால் சிக்கல்.....

வேலை விடயத்தில்.... நேர்முகத்தில் தோல்வி அடைபவர்களுக்கு சொல்வது.... 'இந்த மடம்.... இல்லையெண்டா சந்தை மடம்..... இவனை நம்பியா, நான் பிளேன் ஏறினேன்' என்று அடுத்த நேர்முகத்துக்கு தயாராகுங்கள் என்று...

இது வேலை தரும் முதலாளிக்கும் பொருந்தும்..... 'சிறியரை நம்பி அவன் கொம்பனி நடத்தவில்லை'. 

**************

அதை விடுங்கோ.... யாழ்ப்பாணத்து பகிடி ஒன்று.....

மானிப்பாய் ரோடு.... ஸ்டான்லி ரோடு சந்தியில் ஒரு அச்சகம்......

ஒருவர், நல்ல வேலையாள்.... பின்னேரம் எண்டால்.... தண்ணிக்காரர்.....

இரண்டு கிழமையா சம்பளம் வரேல்ல..... அடுத்த கிழமை சேர்த்து தரலாம்...... கதை.... மூன்றாம் கிழமை...... 'உன்ர வேலை அவ்வளவு சரியில்ல...... அதுதான் விட்டுப் பிடிச்சனான்..... ஒரு மாத்தமும்.... இல்லை.... உதுக்குள காசு வேற கேட்க்கிறாய்'..... கதை விட்டார்... 'முனா'...

நம்மாளு வேகமா வெளிய போனார்..... கப்பு..... கப்பென்று ஏத்திப் போட்டு வந்தார்...

'காலைப் ***யில் இருந்து மாலை **** வரை, வேலைப் *****
சம்பளப் ****யைக் கேடடால், நடப்புப் *****' என்றார் சத்தமாக.....

அதிர்ந்து போன 'முனா'.... பாக்கெட்டினுள் கையை விட்டார்... 

சம்பளம் கிடைத்தது.  ( உண்மை சம்பவம் )

குறிப்பு: உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை * இக்கு பதிலா போட்டு சொல்லிப் பாருங்கோ...

*****

நீங்களும் சிரிச்சு சமாளிச்சு வந்திராம..... கப்புக்... கப்பென்று ஏத்திப்போட்டு...போய்..... நாலு கத்துக்.... கத்தி வெண்டிருக்கலாம்.... பிழை விட்டுப் போட்டியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பேசாமல் திங்கள் அன்று.... இருமிக்கொண்டே வேலை போய்..... உண்மையிலேயே வருத்தம்..... ஆனாலும் வந்தேன்....என்று காட்டிக் கொண்டே....நாலு மருந்து பாக்கெட்டுகளை எடுத்துக் ... (வாங்கி பார்க்க மாட்டார் )அவராக....நீ போய் ...ஓய்வெடு என்று சொல்ல வையுங்கோ...  

சேவ் எடுக்காமல் நரைத்த தாடியுடன் போய் நின்றால் காணும் வேறு எதுவும் தேவையில்லை.

Link to comment
Share on other sites

நான், செய்தது... சரியா... பிழையா?

சகோ சில பெரியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

* பாதை வகுத்த பின்னே பயந்தென்ன        லாபம் பயணம் நடத்திவிடு                       மறைந்திடும் பாவம்.

*எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

*காலம் போடும் வேலிகளைக் கால்கள் தாண்டிப் போவதில்லை.

*கடந்துபோகும் பாதையிலே நமது கையில் ஏதுமில்லை.

*இதுவும் கடந்துபோகும்.

*எதுவும் இங்கு சரியுமில்லை,தப்புமில்லை.

  முடிவாக முதலாளி அனுபவசாலியாக இருப்பவர் உங்களை நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டிருப்பார்.ஒரு சொக்லேட் பெட்டியை வாங்கிக்கொண்டுபோய் ஹப்பி கிருஸ்மஸ் சொல்லி நீட்டுங்கள்.இப்போது என்யோய் யுவ விடுமுறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

 நீங்கள் செய்தது, தவறு மட்டுமில்ல.... முட்டாள் தனமானது.

 

ஒரு வளர்ந்த/முதிர்ச்சியடந்த மனிதன் இப்ப‌டியான ஒரு காரியம் செய்து போட்டு, இதற்கு ஒரு திரியும் திறந்து அதற்கு வாசகர்களில் அபிப்பிராயமும் கேட்கப்படுகின்றது. என்னத்தை சொல்ல?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நிழலி....   நீங்கள் என்னை... எவ்வளவு மட்டமாக நினைத் திருந்திருந்தாலும்,
அதனை... வெளிப்படையாக சொல்லுங்கள். சத்தியமாக நான்.. கோவிக்க  மாட்டேன். 
சொல்லா.. விட்டால்... என் மண்டை வெடித்து விடும் போல்.. உள்ளது ஐயா. :grin:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

என்னத்தை  செய்திருப்பியள் ...

புரட்டாதி மாசத்து விரதம் எல்லாம் இருந்து..... எதாவது புது முயற்சி பண்ணி இருப்பியல்...

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

அது சரி.... மேனேஜர் என்னவாம் சொல்லுறார்.
கணக்க கதைத்தால் சொல்ல்லுங்கோ...... வந்து நாலு தட்டு போடுறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

என்னத்தை  செய்திருப்பியள் ...

புரட்டாதி மாசத்து விரதம் எல்லாம் இருந்து..... எதாவது புது முயற்சி பண்ணி இருப்பியல்...

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

நிச்சயமாக... நான் இல்லை.  முனி அண்ணை.... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

இப்போ கருத்தோ திரியோ மூன்று மணி நேர அவகாசம் தான்.அதுக்குள்ள வெட்டி கொத்தி முடிச்சுடணும்.
இல்லாட்டி கதை கந்தல்.
கொஞ்ச நாட்களுக்கு முன் சுமே பட்ட பாட்டைப் பார்க்கலையோ?
சுடுதண்ணீ ஊத்தின நாய் மாதிரி ஓடித் திரிந்தா.

18 minutes ago, Nathamuni said:

ஒரு பத்து மாதத்தில்..... தெரிஞ்சுடும் ....:grin:

உண்மையாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(சிற்று வேஷன் சாங்...   ஓகேயா... பாஸ்...)  👆 👆 :grin:      😜  🤑  :grin:

எமனாக... இருந்தாலும்,  கதற... விட வேண்டும்.  
-தமிழ் சிறி.-💎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா ஆகா
நான் சொன்னது தான் சரி.

வாழ்த்துக்கள் சிறி.பிள்ளைகளின் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவென்று வரும் போதும் அதிஉச்ச சந்தோசமாக இருக்கிறோம்.
டாக்ரர் பொறியியலாளர் இதைவிட வேறு என்ன வேண்டும்.பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.

வாழ்த்துக்களுக்கு, நன்றி ஈழப்பிரியன். regular.png

13 hours ago, நிழலி said:

வேலை போனாலும் பரவாயில்லை என்று கட்டாயம் நானும் இதைத்தான் செய்து இருப்பேன். இதை விட சந்தோசம் ஒரு அப்பாவுக்கு வேறில்லை. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பாராட்டுக்களுக்கு,  நன்றி நிழலி. regular.png

10 hours ago, Nathamuni said:

மிக்க மகிழ்ச்சி. கல்வியை தவிர வேறு எந்த நிரந்தரமான, பறிக்க முடியாத, கொள்ளை போகாத, வரி விதிக்க முடியாத தேட்டமும், ஒரு தந்தையால் பிள்ளைகளுக்கு வழங்க முடியாது. பாராட்டுக்கள்.

இதுக்கு லீவு தர முடியாத பண்ணாடையா  இருக்காரே (னே) உங்கட மேனேஜர். 

எரிச்சல் போல கிடக்குது, அது சரி, உங்களுக்கு தேதிகள் முன்னமே தெரிந்திருக்குமே.... ஏன்  கடைசி வரை விட்டீர்கள்?
 

நான் வேலை செய்யும் பகுதியில்.... நானும், இன்னொருவர் மட்டுமே இருக்கின்றோம்.
மற்றவர் மிக நீண்ட நாட்களாக..  மருத்துவ விடுப்பில் இருப்பதால், நான் தனியத்தான் வேலைகளை செய்து வந்தேன். அந்த நிலையில்... என்னால் முற் கூட்டியே லீவுக்கு விண்ணப்பிக்க ஒரு மாதிரி இருந்ததால்... அவர் வந்த பின்பு, எனது விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இருந்த போது... நாள் நெருங்கி விட்டது.

அத்துடன்...  நானும், கடைசிநாள் லீவுக்கு விண்ணப்பிக்கும் போது...
சரியான  காரணத்தை சொல்லாமல், தனிப்பட்ட விடயம் என்று  எழுதி விட்டேன்.
உண்மையான காரணத்தை... சொல்லியிருந்தால், லீவு கிடைத்திருக்கும் என்றே நம்புகின்றேன். என்னிலும்... பிழை உள்ளது.
பாராட்டுக்களுக்கு,  நன்றி  நாதமுனி.  regular.png

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு உங்களுக்கும்

வாழ்த்துக்களுக்கு, நன்றி  ராஜா.regular.png

8 hours ago, suvy said:

வாழ்த்துக்கள் பெற்றோரின் பொறுப்பான முயற்சிக்கும், பிள்ளைகளின் அக்கறையான படிப்புக்கும்......! 🌼

வாழ்த்துக்களுக்கு, நன்றி  சுவி.regular.png

7 hours ago, ரதி said:

உங்கள் பிள்ளைகளுக்கு எனது வாழ்த்தினையும் சொல்லி விடுங்கள்...உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 

வாழ்த்துக்களுக்கும்,   பாராட்டுக்களுக்கும்...  நன்றி  ரதி.regular.png

Link to comment
Share on other sites

தமிழ்சிறி ஒரு அனுபவ பழம் என்று பார்த்தால் இப்படி  வேலையிலே சொதப்பி இருக்கிறீர்கள். 

வெள்ளிக்கிழமை லீவு என்ற உடனேயே  மேலதிகாரிக்கு டக்கென்று  கிளிக் பண்ணி இருக்கும்.:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

சரி சரி ... இப்படி நாங்களும் பிழைகளை சரி என்டு நினச்சு செய்து இருக்கிறம் தானே.
தமிழ் சிறி ஒரு கடின உழைப்பாளி ..இந்த ஒரு சம்பவம் பெரிதாக எந்த கெடுதலையும் தொழில் இடத்தில 
ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறன்.
ஒரு மேலதிகாரியாக இருப்பவரும் யோசிக்க வேணும்... அடேய் நான் என்னுடைய நல்ல ஒரு தொழிலாளியை அனாவசியமாக பொய் பேச வைத்து அலைக்கழித்து விட்டேனே என்று.
இதுவும் கடந்து போகும் ... இவரை நம்பி அவங்களும் இல்லை... 
அவங்களை நம்பி நம்மவரும் இல்லை. 
ஒரு டீம் லீடாக இருக்கும் நான், நான் மேட்பார்வை பார்க்கும் சக தொழிலாளர்களின் இது போன்ற இக்கட்டான சம்பவங்களை கையாளும் முறையே வேறு.
- விட்டுப்பிடிப்பது 
- அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முக்கியத்தையும் , பெறுமதியையும் அடிக்கடி மெச்சுவது , நன்றியை தெரிவிப்பது .
- தேவை ஏற்பட்டால் அவர்களின் கடமைகளை சற்றேனும் பகிர்ந்து கொள்வது.
- திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடுவது. (அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும்)
- இவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அல்லது அவர்களையே நல்ல முடியை நோக்கி நகர்த்துவது.
** வின் வின் சிட்டுவேஷன் *** 😉

கொழும்பான் நீங்கள் திறந்து விடும் பல திரிகளை நான் இப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா பாருங்களேன். 😲

புதிய வருடம் வருகின்றது. மன்னிப்போம், மறப்போம், மாறுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட ஆட்கள் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் என பழமொழி மட்டும் ரைமுக்கு ரைமிங்கா சொல்லுவாங்கள் ஏதும் பிழையொன்றை செய்து விட்டு சமாளித்து விடுவார்கள் அதையே இன்னொருத்தர் செய்தால் பிழையென்று வாதாடுவார்கள் இதில் தமிழர்கள் சளைத்தவர்கள்  அல்ல 

  ஒரு முதலாளி ஒரு தொழிலாளியின் விருப்பத்தை சரி செய்பவராக இருந்தால் மேலதிக விடுமுறை எத்தனை இருக்கு? எத்தனை இதுவரை காலம் எடுத்து இருக்கிறியள் என விசாரித்து விட்டு விடுமுறை வழங்கியிருக்க வேண்டும் அவர் தன் பக்க நியாயங்களை முன் வைத்தாலும் எதிரில் நிற்பவரும் ஓர் தொழிலாளியே  அவரின் நியாமான விருப்பங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் நியாயமான தீர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும் 

 

இஞ்ச பொய் சொல்லி (சிக்) லீவு எடுக்காத ஆட்கள் எத்தனை பேரோ ?

தமிழ் சிறி அண்ண செய்தது சரிதான் அந்த முதலாளி விசாரித்து விடுமுறை வழங்கியிருக்க வேண்டும் 

இந்த கிறிஸ்மஸ் பண்டிகைக்கு எத்தனை பேர் லீவு எடுக்கபோறாங்கள் போனவர்கள் ட்திரும்பி வர எத்தனை நாள் எடுக்கும் அவர்கள் வேலை யார் மீது கொடுக்கப்பட இருக்கிறதோ  :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..!

http://oi65.tinypic.com/1zoe0w5.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு எடுத்து ஒரு கல்யாண வீட்டுக்கு சென்றது குற்றமாடா லீவு எடுத்தால் முதாலாளி அவன் கோவிச்சுக்கிறான் கல்யாணத்துக்கு போகாட்டி சொந்தகாரர்கள் கோவித்து கொள்கிறார்கள் இது தெரியாமல் இந்த திரிய எழுதிப்போட்டுத்து யாழ் வாசிகளிடம் நான் படும் பாடு இருக்கே அப்பப்பப்பா :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2018 at 10:04 PM, ஈழப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் பிள்ளைகளின் அலுவலாக இருக்கலாம்.

சிறி ஏன் லீவு எடுத்திருப்பார் என்பதை சரியாக கணித்தவருக்கு பரிசில்கள் ஒன்றும் இல்லையோ?
ம் கேட்டுப் பெறவேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் பிள்ளைகளூக்கு. எல்லோரும் கேட்டது போல் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவுக்கு ஓய்வு தராத முகாமையாளர்  உலகம் தெரியாதவர் போல  அல்லது பொறாமையோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 3:10 PM, தமிழ் சிறி said:

அட... இவங்களின்,  "லொள்ளு"  தாங்க முடியவில்லை.
ஜேர்மனியில் இருந்து... என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.. ஈழப்பிரியன்.
உடனே...  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்   "ஆப்கானிஸ்தான் எக்ஸ்பிரஸில்"   அனுப்பி வைக்கின்றோம். :grin:

உங்கள் அன்பளிப்பு கிடைத்தது .
மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..!

http://oi65.tinypic.com/1zoe0w5.jpg

ராஜ வன்னியன், உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. regular.png
நீங்கள்... இணைத்த, இணைப்பு.. எனக்கு தெரியவில்லை.
அதனை..  ஒருக்கால், மீண்டும் சரி பாருங்களேன்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி ஏன் லீவு எடுத்திருப்பார் என்பதை சரியாக கணித்தவருக்கு பரிசில்கள் ஒன்றும் இல்லையோ?
ம் கேட்டுப் பெறவேண்டி இருக்கு.

அட... இவங்களின்,  "லொள்ளு"  தாங்க முடியவில்லை.
ஜேர்மனியில் இருந்து... என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்.. ஈழப்பிரியன்.
உடனே...  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்   "ஆப்கானிஸ்தான் எக்ஸ்பிரஸில்"   அனுப்பி வைக்கின்றோம். :grin:

3 hours ago, nunavilan said:

வாழ்த்துக்கள் பிள்ளைகளூக்கு. எல்லோரும் கேட்டது போல் பிள்ளைகளின் பட்டமளிப்பு விழாவுக்கு ஓய்வு தராத முகாமையாளர்  உலகம் தெரியாதவர் போல  அல்லது பொறாமையோ தெரியவில்லை.

எனது முதலாளி... பொறாமைக்காரர் அல்ல நுணாவிலான். மிக நல்ல மனிதர். 
பிள்ளைகளின்,  பட்டமளிப்பு விழாவுக்கு,  விடுமுறை தேவை என்று... கேட்டு இருந்தால்....
ஏதாவது... ஒரு ↪️மாற்று வழியை↩️, கண்டு பிடித்து.. லீவு தந்திருப்பார். 
நான்... செய்ததுதான்.... முட்டாள்  வேலை.. என்று, உணர்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ்சிறி..!

http://oi65.tinypic.com/1zoe0w5.jpg

1zoe0w5.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 6:38 AM, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

அடப்பாவி மனுசா! இதை முதலே சொல்லியிருந்தால் நானும் அந்த முதலாளியை வாய்க்கு வந்தபடி திட்டியிருப்பனெல்லே?
சரி விடுவம்....:grin:

பிள்ளையளுக்கும்.....அவர்களை பெற்ற தாய் தந்தையருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாய்தகப்பன் செய்தபுண்ணியம் தான் பிள்ளைகளை வாழவைக்கும். 
வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி. பிள்ளைகளின் திறமைகள் உயர்வுகள் மகிழ்வுகளைத்தவிர வாழ்க்கையில் மிகச்சிறந்த சந்தோசம் வேறில்லை.  எங்களது மிகச் சிறந்த சொத்துக்களே எமது பிள்ளைகள்தான். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி தமிழ்சிறி அண்ணா. உங்கள் குடும்பத்தவர்களுக்கும்,  பிள்ளைகளின் படிப்புக்கு ஊக்கம் அளித்தவர்களுக்கும்  - உங்கள் கனவுகளை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கும் மனம்மார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

1zoe0w5.jpg

நன்றி...   குமாரசாமி அண்ணா  &  ராஜ வன்னியன்  அண்ணா.   bjr2.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.