Jump to content

இணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா

December 9, 2018

IMG_2973.jpg?resize=800%2C600

மழை காலம் முடிந்து குளிர் தொடங்கும் மார்கழி மாதமிது.மாதங்களில் மார்கழியை உன்னதமானதெனப் போற்றுகின்றனர். மார்கழி பள்ளி செல்ல முனைகின்ற சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம் எனலாம். புதிய வகுப்புக்குச் செல்லுகின்ற நிகழ்வு பெரும்பாலும் மார்கழியிலேயே நடைபெறுகிறது. குழந்தையாய் வீட்டோடு இருந்தவர்கள் கல்வி உலகத்தைக் காண விழைகின்றதற்குத் திறவுகோலாக முன்பள்ளிகள்  காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை முன்பள்ளியை நான் நாற்றுமேடை என்பேன்.விதைகளைக் கன்றுகள் என்ற  நிலைக்குத் தயாராக்குகின்ற  செயற்பாடுகளே முன்பள்ளிகளின் பணியாகக் காணப்படுகின்றது.

சமூகத்தில் ஆழமாகச் சென்று மனித வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் தன்னை பிரதிபலிக்கச் செய்த ஊடகங்களின்  வலிமையோ என்னவோ! சிறார்கள் கூச்சமின்றி இயல்பாக மேடைகளை அலங்கரிக்கப் பழகிவிட்டனர். எமது சிறு வயது வாழ்வியலோடு ஒரு ஒப்பீட்டைச் செய்ததன் விளைவே மேற்சொன்ன விடயம் எனது கருத்தாக அமைகிறது.

சொல்லிக் கொடுப்பதை அதன் சுவை மாறாது ஒப்புவிப்பதில் அவர்கள் திறமையுள்ளவர்கள் என்றதை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருந்தனர் அந்தச் சிறுவர்கள். 09.12.2018 அன்று நடைபெற்ற இணுவில் பொது நூலகத்தினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற முன்பள்ளிக் கலைவிழாவிலேயே அந் நிகழ்வை நான்  கண்டேன்.

அந்தச் சிறுவர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கேற்றவாறு உடைகளைத் தயாரித்து நிகழ்வினை ஒருங்கமைத்த ஆசிரியைகள் பாராட்டுக்குரியவர்கள். எல்லோரும் இளவயதினர். ஆனாலும் குழந்தைகளை எப்படி ஆட்சி செய்வதென்ற கலையை அவர்கள் நன்கறிந்திருக்கின்றனர். நேரத்தைக் கடைப்பிடிப்பதொரு நேர்த்தியான செயற்பாடு என்றதற்கமைய குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது. அதிதிகள் அதற்கு ஒத்தாசை வழங்கியிருந்தனர்.

எங்கு சென்றாலும் குழந்தை மனமும் இயல்பும் என்றும் மாறாதவை. இருந்தும் சூழலுக்கும், வசதி வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் போக்கு மாறுபடும். அபிவிருத்தியை நோக்கி நின்றாலும், இணுவில் இன்னும் கிராமத்தின் களையை முற்றாக இழக்கவில்லை. கலை, கலாசாரம், பண்பாடு.மரபு என்று எல்லாமே அங்கு அப்படியே உண்டு. அத்தகைய சூழலில் இருந்து கொண்டு அவர்கள் தமிழ் மொழியோடு பிறமொமிகளையும் கற்றுக் கொள்வதென்பது விசேடமானது. அதற்குச் சான்றாகப் பல கலை நிகழ்வுகள் ஆங்கிலத்திலும் நடைபெற்றது. இயல்போடு அவற்றை செய்தளித்தது சிறப்பாக இருந்தது. முன்பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அடுத்த வருடம் பள்ளிக் கூடங்களுக்குச் செல்பவர்களுக்கென பட்டமளிப்பு விழா போன்றதொரு நிகழ்வினை நடத்தியிருந்தனர்.  அந்த முன்பள்ளி நிர்வாகமும், ஆசிரியைகளும், சிறுவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

IMG_2942.jpg?resize=800%2C600IMG_2958.jpg?resize=619%2C464IMG_2967.jpg?resize=773%2C580

http://globaltamilnews.net/2018/106149/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.