Jump to content

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி

December 10, 2018

india.jpg?zoom=3&resize=335%2C191

அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 250 ஓட்டங்களும் அவுஸ்திரேலியா 235 ஓட்டங்களும் பெற்றிருந்த நிலையில் 15 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா, 307 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் 323 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று கடைசி நாள் போட்டி நடைபெற்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி 291 ஓட்டங்கள் பெற்றநிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தநிலையில் 31 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி  4 போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி 14-ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/2018/106192/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி வென்றதுபற்றி நான் சந்தோஷப்பட எதுவுமேயில்லை. அதுவும் குறிப்பாக கோலி எனும் தலைக்கணம் பிடித்த ஒரு அணிர்த்தலைவரின் வழிநடத்துதலில் பெறப்பட்ட வெற்றியென்பது என்னைப்பொறுத்தவரையில் கவலைக்குரியது.

அணியிலிருக்கும் தமிழக வீரர்களுக்கான தனிப்பட்ட வெற்றியாக மட்டுமே என்னால் இதனைப் பார்க்க முடிகிறது. முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

அவுஸ்த்திரேலிய அணியின் ஆரம்ப மற்றும் இடைநிலை துடுப்பாட்ட நட்சத்திரங்களான வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரில்லாத அணி மிகவும் பலவீனமானது என்பதற்கு இந்தத் தோல்வியும் ஒரு சாட்சி. ஆனாலும், அகம்பாவமும், தலைக்கனமும் கொண்ட வோர்னர் போன்ற வீரர்களுடன் வெல்வதைக் காட்டிலும், அவரில்லாமல் தோற்பது எவ்வளவோ மேல்.

இறுதிவரை சளைக்காது போராடித் தோற்ற அவுஸ்த்திரேலியப் பந்துவீச்சாளர்களான கம்மின்ஸ், நேதன் லயன், மற்றும் மிச்செல் ஸ்டார்க் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.

இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 31 ஒட்டங்கள் மட்டும்தான். அடுத்த போட்டியில் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ragunathan said:

இரு அணிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 31 ஒட்டங்கள் மட்டும்தான். அடுத்த போட்டியில் பார்க்கலாம். 

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்கிறீர்கள்.
நல்லது நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.