Jump to content

எனது பார்வையில் '96 என்கிற திரைக்காவியம் 


Recommended Posts

'96 திரைப்படத்தைப்  பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிட்டியது. அக்டோபர் 04ல் இத்திரைப்படம் வெளியானதில் இருந்து முகநூல் மற்றும் நண்பர்கள் வாயிலாக இத்திரைப்படத்தின் கதை ஏற்கெனவே ஓரளவு தெரிந்திருந்தாலும், படம் பார்க்கும் போது கிடைத்த அனுபவம் புதுவிதம். 

கடந்த ஓரிரு வருடங்களாக காதல் / நட்பு சார்ந்த, ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான திரைப்படங்கள் தற்போது வெளிவருவதில்லையே என்றெல்லாம் சலித்துக்கொண்டு, விறுவிறுப்பான, மர்மக் கதையம்சம்  (Thriller / Crime / Mystery) அல்லது அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட தமிழ் சினிமாவைத் தேடித் தேடிப் பார்த்த எனக்கு '96 திரைப்படம் ஓர் புத்துணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்தது. 2000ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' திரைப்படம் போல ஓர் அழகான காதல் கதையம்சம், மனமொன்றி ரசிக்க வைத்த திரைக்கதை, நிறைவான நடிப்பு இவை கொண்ட திரைப்படம் என்று அடித்துச் சொல்லக்கூடிய ஓர் காவியமே '96 ஆகும்.

'ஆட்டோகிராஃப்', 'நினைத்தாலே இனிக்கும்' (2009), 'பள்ளிக்கூடம்' போன்ற திரைப்படங்களை சற்று ஞாபகப்படுத்தினாலும், '96 திரைப்படத்தின் தனித்துவமானது ரசிகனுக்கு ஓர் அழகிய கவிதை  படிக்கும் உணர்வைக் கொடுப்பதாகும். Wildlife photographerஆம் கதாநாயகனை (விஜய் சேதுபதி) அறிமுகப்படுத்திய அந்த ஆரம்பப்பாடல் காட்சி (The Life of Ram)  புகைப்படக்கலை, ஒளிப்படக்கலை, கவித்துவமான வரிகள் எனக் கலைகளின் சங்கமம். ராம்-ஜானுவின் கல்லூரிக் காதல் காட்சிகள் மொட்டு அவிழா ரோஜாக்களின் அழகென்றால், Reunionன் போதும், அதன் பின்னருமான காட்சிகள் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களோ! சலனமற்றுப் பாயும் நதி போன்ற '96ன் திரைக்கதையில், விஜய் சேதுபதி - திரிஷா, சிறுவயது ராம்-ஜானு ஜோடிகள்  அழகு வண்ண ஓடங்களோ! 

சிறிது பிசகினாலும் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடிய ஓர் கதையை, வரம்புகள் மீறா  வெள்ளமாய்  இயல்புடன் நமக்கெல்லாம் திரைப்படமாய் இயக்குனர் பிரேம்  வழங்கிய வண்ணம் அழகு. கார்த்திக்கின் எளிமையான வரிகள் கொண்ட 'காதலே காதலே' பாடலும்,  கோவிந்த் மேனனின் பின்னணி இசைக்கோர்ப்பும் , சின்மயியின் குரலும் இனிமையும் சேர்ந்து இதமூட்டும் தென்றலாய் உள்ளத்தை வருடும். 

96ம் ஆண்டினரை  மட்டுமல்ல 86ம், 76ம், 66ம்,  கூடவே 2006ம் ஆண்டினரையும் சிலாகித்துப் பேச வைத்த திரைப்படம் நிச்சயமாக தமிழ் சினிமா தந்த உன்னதமான காவியமாகும். காதலை கௌரவிக்கும் திரைப்படமாகப் பலராலும் பார்க்கப்பட்டாலும், இத்திரைப்படம் என்னைப் பொறுத்தவரையில் கல்லூரி நட்பையும் போற்றுவதாகும். ஆர்ப்பாட்டமில்லாமல் ஆங்காங்கே வரும் சில காட்சிகள் இதனை உணர்த்தும். ❤️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இப்போதைக்குப் பார்க்கும் உத்தேசமும் இல்லை.  ஆனாலும் எழுதவேண்டும் போலத் தோன்றியது.

நான் எழுதுவதற்கும் இப்படத்திற்கும் எந்தவித தொடர்போ அல்லது, உங்களின் இப்படத்தின் மீதான விமர்சனத்தின் மீதான என்னுடைய விமர்சனமாகக் கூட இதைக் கருத வேண்டாம்.

இப்படத்தைப் பார்த்த நான் அறிந்த சிலரின் கருத்துக்களைக் கேட்டிருந்தேன். காதலில் உரிகி, கட்டாயம் எல்லோரும் பார்க்கவேண்டிய காதல் கவிதை என்றே கூறினார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இனம்தெரியாத வெறுப்பு இப்படத்திமீது ஏற்படுத்தியிருக்கிறது.

சரியான காரணம் என்று எனக்கு எதுவுமில்லை. ஆனால், காதலை முன்னிலைப்படுத்தி சொல்லப்படும் ஒரு கதையென்பதாலோ என்னவோ எனக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். 96 அல்லாமல் எந்தவொரு காதல்க் கதையுடனான படமாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வெறுப்புகளும் , வேதனைகளும், ஏமாற்றங்களும், விரக்திகளும், காயங்களும், களிவிரக்கங்களும் பற்றி இவை பேசுவதில்லை. வெறுமனே நாயகனும் நாயகியும் காண்பது, கண்களால்ப் பேசுவதும், முடிந்தால் கவிதைகள் எழுதுவதும், கூடவே பூச்செடிகளைச் சுற்றி ஓடித்திரிவதும்தான் காதல் என்று காட்டப்படுகிறது. காதலைச் சுற்றி மனித வாழ்க்கையில் கூடவே நடைபெறும் ஏனைய உணர்வுகள் பற்றிப் பேசாமல், பார்ப்போரை கனவுலகில் வைத்திருக்கப் பண்ணும் இப்படங்களை வெறுக்கிறேன்.

காதல் எனும் உணர்வு ஒரு ரசாயனச் சேர்க்கையின் விளைவுதான் என்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூறினேன். அவர் உடன்படவில்லை, கோபித்தும் கொண்டார். ஆனால், அதுதான் உண்மை. உடலில் சுரக்கும் ஹோர்மோன்களான டெஸ்டெஸ்டொரோன், ஈஸ்ட்ரொஜின், ஒக்ஸிடொஸின், வஸோப்ரெஸின், அட்ரெனெலின், டொபோமின், செரோடொனின் என்று ஒரு சிறிய கூட்டம் ஹோர்மோன்கள்தான் காதலையும், கவர்ச்சியையும் தூண்டுகின்றன. நாம் காதல் என்றும், காவியம் என்றும், தெய்வீகம் என்றும் கற்பிதம் கூறும் இந்தக் காதல் வெறும் ரசாயன மாற்றம்தான் என்றான பிறகு இக்காதல்பற்றி அதிசயப்பட எதுவுமில்லையென்றாகி விட்டது எனக்கு.

அதேபோல , காதல்த் தோல்வியென்றும், காதலினால் பொறாமை என்றும், நாம் உளறுவதும் கூட ஹோர்மோன்களின் செயற்பாட்டினால்த்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை? ...ஒரு வேளை காதல் என்னும் இளகிய மனம் என்னிடம் இல்லையோ😄
 

Link to comment
Share on other sites

7 hours ago, ragunathan said:

 

வெறுப்புகளும் , வேதனைகளும், ஏமாற்றங்களும், விரக்திகளும், காயங்களும், களிவிரக்கங்களும் பற்றி இவை பேசுவதில்லை. வெறுமனே நாயகனும் நாயகியும் காண்பது, கண்களால்ப் பேசுவதும், முடிந்தால் கவிதைகள் எழுதுவதும், கூடவே பூச்செடிகளைச் சுற்றி ஓடித்திரிவதும்தான் காதல் என்று காட்டப்படுகிறது. காதலைச் சுற்றி மனித வாழ்க்கையில் கூடவே நடைபெறும் ஏனைய உணர்வுகள் பற்றிப் பேசாமல், பார்ப்போரை கனவுலகில் வைத்திருக்கப் பண்ணும் இப்படங்களை வெறுக்கிறேன்.

காதல் எனும் உணர்வு ஒரு ரசாயனச் சேர்க்கையின் விளைவுதான் என்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூறினேன். அவர் உடன்படவில்லை, கோபித்தும் கொண்டார். ஆனால், அதுதான் உண்மை. உடலில் சுரக்கும் ஹோர்மோன்களான டெஸ்டெஸ்டொரோன், ஈஸ்ட்ரொஜின், ஒக்ஸிடொஸின், வஸோப்ரெஸின், அட்ரெனெலின், டொபோமின், செரோடொனின் என்று ஒரு சிறிய கூட்டம் ஹோர்மோன்கள்தான் காதலையும், கவர்ச்சியையும் தூண்டுகின்றன. நாம் காதல் என்றும், காவியம் என்றும், தெய்வீகம் என்றும் கற்பிதம் கூறும் இந்தக் காதல் வெறும் ரசாயன மாற்றம்தான் என்றான பிறகு இக்காதல்பற்றி அதிசயப்பட எதுவுமில்லையென்றாகி விட்டது எனக்கு.

அதேபோல , காதல்த் தோல்வியென்றும், காதலினால் பொறாமை என்றும், நாம் உளறுவதும் கூட ஹோர்மோன்களின் செயற்பாட்டினால்த்தான். 

96 படமும் அதே வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த அழகி படமும் எனக்கு நன்கு பிடித்துப் போனதுக்கு காரணங்களுக்குள் ஒன்று இப்படியான மரத்தை சுற்றி பாடுவது போன்ற அபத்தங்கள் இல்லாமல் காதலுடன் சேர்ந்து ஏமாற்றங்களும்,காயங்களும், தனிமையையும் பற்றி பேசுவதால். தமிழ் சினிமாவில் காதலை காட்டுகின்றோம் என்று காட்டும் வழக்கமான பல அபத்தக் காட்சிகள் இதில் இல்லை. அத்துடன் பதின்ம வயதில் ஏற்படும் காதலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி செல்வதாலும், படம் முழுக்க பயணிக்கும் இளையராஜாவின் 90 களில் வந்த பாட்டுக்களாலும் இப் படம் எனக்கு பிடித்துப் போகின்றது
 

Quote

 


காதல் எனும் உணர்வு ஒரு ரசாயனச் சேர்க்கையின் விளைவுதான் என்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூறினேன். அவர் உடன்படவில்லை, கோபித்தும் கொண்டார். ஆனால், அதுதான் உண்மை. உடலில் சுரக்கும் ஹோர்மோன்களான டெஸ்டெஸ்டொரோன், ஈஸ்ட்ரொஜின், ஒக்ஸிடொஸின், வஸோப்ரெஸின், அட்ரெனெலின், டொபோமின், செரோடொனின் என்று ஒரு சிறிய கூட்டம் ஹோர்மோன்கள்தான் காதலையும், கவர்ச்சியையும் தூண்டுகின்றன. நாம் காதல் என்றும், காவியம் என்றும், தெய்வீகம் என்றும் கற்பிதம் கூறும் இந்தக் காதல் வெறும் ரசாயன மாற்றம்தான் என்றான பிறகு இக்காதல்பற்றி அதிசயப்பட எதுவுமில்லையென்றாகி விட்டது எனக்கு.

 

இப்படி எல்லாவற்றையும் காரணங்களுடன் பார்த்தால் வாழ்வில் எஞ்சுவது வெறும் தட்டையான விரக்கி மட்டும் தான் ரகு. தாய் பாசத்தில் இருந்து எமக்கு ஏற்படும் கோப உணர்ச்சி வரைக்கும் ஹோர்மோன்களால் தான் நிகழ்த்தப்படுகின்றன. காதலை வைத்து உருவான அத்தனை காவியங்களையும், சினிமாக்களையும், சரிந்த எழுந்த சாம்ராஜ்ஜியங்களையும் வெறுமனே ஹோர்மன்களின் குழப்படியால் நிகழ்ந்தன என்று விட்டு போய்விட முடியும் நீங்கள் சொல்லும் முறையில் அணுகினால்.
adrenaline னும் noradrenaline இல்லாவிடின் கோப உணர்ச்சியும் அதன் காரணமாக எழுகின்ற நியாயமான ஆத்திரமும் இல்லாமல் போய்விடும். testosterone னும் estrogen னும் இல்லாவிடின் காமமும் இல்லை, இவ் உலகில் மனிதர்களும் இல்லை, நானும் நீங்களும் கூட இல்லை.

ஒருவர் சுயநலமாக இருப்பதற்கும், தாயக பற்று இல்லாமல் வெறுமனே இருப்பதற்கும் கூட அவர்களின் ஹோர்மான்களும் டி.என்.ஏ யும் தான் பொறுப்பு என்று விட்டு எளிதில் கடந்து விடுவீர்களா?

 

Link to comment
Share on other sites

8 hours ago, ragunathan said:

ஆனால், என்னைப்பொறுத்தவரை இனம்தெரியாத வெறுப்பு இப்படத்திமீது ஏற்படுத்தியிருக்கிறது.

சரியான காரணம் என்று எனக்கு எதுவுமில்லை. ஆனால், காதலை முன்னிலைப்படுத்தி சொல்லப்படும் ஒரு கதையென்பதாலோ என்னவோ எனக்கு இந்த வெறுப்பு ஏற்பட்டிருக்கலாம். 96 அல்லாமல் எந்தவொரு காதல்க் கதையுடனான படமாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

 

நீங்கள் சொன்னது போல எனக்கும் தமிழ் சினிமா காதல் படங்கள் மீது ஒரு வெறுப்புணர்வு இருந்தது / இன்னும் உண்டு. பல தசாப்தங்களாக காதலை மையப்படுத்திய கதைகளையே திரைப்படங்களாகப் பார்க்க வேண்டிய சாபக்கேடு. ஒரே மதிரியான கதை, அதைக் கூடநேர்த்தியாக / வித்தியாசமாகப் படமாக்கப்பட்டிருக்காமை போன்ற காரணங்களால் காதற் படங்களை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்துவந்தேன். அத்துடன் புதுமுக இயக்குனர்கள்,நடிகர்களின் குறைந்த பட்ஜெட்டில் அமைந்த புதுவிதமான கதைக்களங்கள் கொண்ட தரமான பல திரைப்படங்களுக்கும் அண்மைக்காலமாக வாழ்வு கிடைத்து பரவலாகக் கொண்டாடப்படும் சூழலில் அவ்வாறான திரைப்படங்களையே நானும் விரும்பிப் பார்த்துவந்தேன். உதாரணத்துக்கு, 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இன்னும் நான் பதிவில் சொன்னது போல, பரபரப்பான, மர்மம் நிறைந்த, குற்றவியல் சார்ந்த திரைப்படங்களும் ஒரு மாறுதலாக இருந்தன.

இதனால் காதற் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் இல்லை என என் மீது என் வீட்டினருக்கு ஒரு குற்றச்சாட்டு உண்டு! இந்த நிலையில் ஒரு மாறுதலுக்காகவும், விஜய் சேதுபதி என்ற அற்புதமான கலைஞனுக்காகவும் '96 திரைப்படத்தைப் பார்த்ததன் பிரதிபலிப்பே மேலுள்ள எனது பதிவாகும். இளவயதில் ஆகக் குறைந்தது ஒரு தலையாகவேனும் காதலித்தோர் அல்லது தமது நண்பர்களின் / உறவுகளின் அந்த அனுபவத்தை நன்றாக உணர்தோருக்கு இத்திரைப்படம் நிச்சயமாக ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும். 

Link to comment
Share on other sites

9 hours ago, ragunathan said:

காதல் எனும் உணர்வு ஒரு ரசாயனச் சேர்க்கையின் விளைவுதான் என்று ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கூறினேன். அவர் உடன்படவில்லை, கோபித்தும் கொண்டார். ஆனால், அதுதான் உண்மை. உடலில் சுரக்கும் ஹோர்மோன்களான டெஸ்டெஸ்டொரோன், ஈஸ்ட்ரொஜின், ஒக்ஸிடொஸின், வஸோப்ரெஸின், அட்ரெனெலின், டொபோமின், செரோடொனின் என்று ஒரு சிறிய கூட்டம் ஹோர்மோன்கள்தான் காதலையும், கவர்ச்சியையும் தூண்டுகின்றன. நாம் காதல் என்றும், காவியம் என்றும், தெய்வீகம் என்றும் கற்பிதம் கூறும் இந்தக் காதல் வெறும் ரசாயன மாற்றம்தான் என்றான பிறகு இக்காதல்பற்றி அதிசயப்பட எதுவுமில்லையென்றாகி விட்டது எனக்கு.

அதேபோல , காதல்த் தோல்வியென்றும், காதலினால் பொறாமை என்றும், நாம் உளறுவதும் கூட ஹோர்மோன்களின் செயற்பாட்டினால்த்தான். 

 

இக்கருத்துக்கு நிழலி அவர்கள் எழுதிய பதிலையே நானும் எழுத நினைத்தேன். இது காதல் பற்றிய உரையாடல்களில் வழமையாக வைக்கப்படும் ஓர் விமர்சனமாகும். நிழலி அவர்கள் குறிப்பிட்டது போல மனித வாழ்வில் நாம் உணரும் எந்தவிதமான உணர்வுகளும் இரசாயணச் செயற்பாடுகளின் விழைவுகள் தான் எனக்கூறலாம். அப்படிப் பார்த்தால் சாம்பல் தான் எஞ்சும். தெய்வம் என்ற ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் பொய்யென சித்தர்கள் உணர்ந்ததை நாமே உணர்வோம். 

இயல்பாக உங்கள் கருத்தினைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, ரகுநாதன். :)

3 hours ago, ரதி said:

எனக்கும் இந்தப் படத்தில் அப்படி என்ன இருக்குது என்று புரியவில்லை? ...ஒரு வேளை காதல் என்னும் இளகிய மனம் என்னிடம் இல்லையோ😄
 

ரதி, இத்திரைப்படம் ஓர் அனுபவ பூர்வமானது. ஒவ்வொருவரின் கண்ணோட்டம், அப்போதைய சூழல், மனோநிலை பொறுத்து இத்திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவம் மாறுபடலாம். 'நீ தானே என் பொன் வசந்தம்', 'விண்ணைத்தாண்டி வருவாயா' போன்ற திரைப்படங்களும் அவ்வாறானதே; மாறுபட்ட கருத்துக்கள் இவற்றுக்கும் உண்டு. தவிர, கால மாற்றத்தில் பிடித்த படங்கள் பிடிக்காமலும், வெறுத்து ஒதுக்கப்பட்ட திரைப்படங்கள் கொண்டாடப்படுவதும் உண்டு. :)

Link to comment
Share on other sites

2 hours ago, நிழலி said:

96 படமும் அதே வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த அழகி படமும் எனக்கு நன்கு பிடித்துப் போனதுக்கு காரணங்களுக்குள் ஒன்று இப்படியான மரத்தை சுற்றி பாடுவது போன்ற அபத்தங்கள் இல்லாமல் காதலுடன் சேர்ந்து ஏமாற்றங்களும்,காயங்களும், தனிமையையும் பற்றி பேசுவதால். தமிழ் சினிமாவில் காதலை காட்டுகின்றோம் என்று காட்டும் வழக்கமான பல அபத்தக் காட்சிகள் இதில் இல்லை. அத்துடன் பதின்ம வயதில் ஏற்படும் காதலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி செல்வதாலும், படம் முழுக்க பயணிக்கும் இளையராஜாவின் 90 களில் வந்த பாட்டுக்களாலும் இப் படம் எனக்கு பிடித்துப் போகின்றது

இப்படி எல்லாவற்றையும் காரணங்களுடன் பார்த்தால் வாழ்வில் எஞ்சுவது வெறும் தட்டையான விரக்கி மட்டும் தான் ரகு. தாய் பாசத்தில் இருந்து எமக்கு ஏற்படும் கோப உணர்ச்சி வரைக்கும் ஹோர்மோன்களால் தான் நிகழ்த்தப்படுகின்றன.

 

மிக்க நன்றி நிழலி. எனது அபிப்பிராயத்தை பிரதிபலிப்பதான கருத்தைச் சொன்னீர்கள். 😊

அத்துடன் அந்த இளையராஜாவின் பாடல்கள் பாடப்படும் காட்சிகள் அழகானவை! 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் இது எல்லோர் வாழ்விலும் எதாவது ஒரு வகையில் தடம் பதித்து சென்றிருக்கும் அல்லது மிதித்து விட்டு சென்றிருக்கும்.அதனால்தான் திரைப்படங்களிலோ பொது வெளிகளிலோ காதலை தரிசிக்கும் பொழுது நாமே நம்மை அதற்குள் பொருத்திப் பார்த்து எமது ஈகோவை திருப்திப் படுத்திக் கொள்ளுகிறோம்.சொல்லி வெற்றியடைந்த காதல்களை விட சொல்லாமல் கரைந்துபோன காதல்கள் அதிகம்.அப்படியானவர்களை இந்தப்படம் வெகுவாக கவர்ந்திருக்கும்......!  🌼 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

96 படமும் அதே வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்த அழகி படமும் எனக்கு நன்கு பிடித்துப் போனதுக்கு காரணங்களுக்குள் ஒன்று இப்படியான மரத்தை சுற்றி பாடுவது போன்ற அபத்தங்கள் இல்லாமல் காதலுடன் சேர்ந்து ஏமாற்றங்களும்,காயங்களும், தனிமையையும் பற்றி பேசுவதால். தமிழ் சினிமாவில் காதலை காட்டுகின்றோம் என்று காட்டும் வழக்கமான பல அபத்தக் காட்சிகள் இதில் இல்லை. அத்துடன் பதின்ம வயதில் ஏற்படும் காதலை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டி செல்வதாலும், படம் முழுக்க பயணிக்கும் இளையராஜாவின் 90 களில் வந்த பாட்டுக்களாலும் இப் படம் எனக்கு பிடித்துப் போகின்றது
 

இப்படி எல்லாவற்றையும் காரணங்களுடன் பார்த்தால் வாழ்வில் எஞ்சுவது வெறும் தட்டையான விரக்கி மட்டும் தான் ரகு. தாய் பாசத்தில் இருந்து எமக்கு ஏற்படும் கோப உணர்ச்சி வரைக்கும் ஹோர்மோன்களால் தான் நிகழ்த்தப்படுகின்றன. காதலை வைத்து உருவான அத்தனை காவியங்களையும், சினிமாக்களையும், சரிந்த எழுந்த சாம்ராஜ்ஜியங்களையும் வெறுமனே ஹோர்மன்களின் குழப்படியால் நிகழ்ந்தன என்று விட்டு போய்விட முடியும் நீங்கள் சொல்லும் முறையில் அணுகினால்.
adrenaline னும் noradrenaline இல்லாவிடின் கோப உணர்ச்சியும் அதன் காரணமாக எழுகின்ற நியாயமான ஆத்திரமும் இல்லாமல் போய்விடும். testosterone னும் estrogen னும் இல்லாவிடின் காமமும் இல்லை, இவ் உலகில் மனிதர்களும் இல்லை, நானும் நீங்களும் கூட இல்லை.

ஒருவர் சுயநலமாக இருப்பதற்கும், தாயக பற்று இல்லாமல் வெறுமனே இருப்பதற்கும் கூட அவர்களின் ஹோர்மான்களும் டி.என்.ஏ யும் தான் பொறுப்பு என்று விட்டு எளிதில் கடந்து விடுவீர்களா?

 

நிழலி,

காதலெனும் உணர்வை ஹார்மோன்களின் கூட்டுச் சதி என்று வெறுமையாகச் சொல்லிவிட்டுச் செல்ல நான் நினைத்திருக்கவில்லை. அப்படியிருந்தால் நன்றாக இருக்கும் என்கிற ஆதங்கம்தான் என்னை எழுதத் தூண்டியது. காதலும், அதனால் வரும் ஆசைகளும் இன்பங்களும், கூடவே இடைச்செருகல்களாய் சேர்ந்து வரும் ஏக்கங்கள், ஆற்றாமைகள், வெறுமைகள், விரக்திகள், ஏமாற்றங்கள்  என்று எல்லாமுமே ஹார்மோன்களினால்த்தான் என்று பழியைப் போட்டுவிட்டு போகத்தான் விரும்புகிறேன்.

ஆனால், அது அப்படியில்லை என்பது நான் இங்கு எழுதும்போதே எனக்கு நன்கு தெரியும். எப்படிக் கல்சியமும், புரோட்டினும், கொழுப்போடு இரத்தமும்தான்  தான் மனிதனின் உருவமே அன்றி எதுவுமில்லை என்று எம்மால் சொல்லிவிட்டுப் போகமுடியாமல் இருக்கிறதோ, அதேமாதிரித்தான் உணர்வுகளுக்கு, காதல் உற்பட்ட, ஹார்மோன்களில் பழியைப் போட்டுவிட்டுச் செல்லமுடியாது.

நீங்கள் கேட்டதால்ச் சொல்கிறேன், தாயக்ம் மீதான பற்றும், என்னினம் அடைந்த அழிவும், அதனோடு இருக்கும் கோபமும் எப்படி ஹார்மோன்களாலினால் ஏற்பட்ட ஒரு ரசாயனத் தக்கம் என்று என்னால் சொல்லமுடியாதோ, அதுபோலத்தான் எல்லா உணர்வும்.

காதல் வெறுப்பதற்கும் காதலித்துப் பார்த்திருக்க வேண்டும். எனக்கு அது நன்கே இருக்கிறது. அதனால் சிறு வெறுப்பு. ஆற்றாமையும், கோபமும், விரக்தியும் சேர்ந்து என்னை அலைக்கழித்தது. இன்னும் சொல்லப்போனால், செரொடொனின் எனும் ரசாயனம் தரமிழந்துபோய் நான் துன்பப்படுகிறேன் என்று சொல்லலாமா? ( அதுதான் ஆற்றமையும், விரக்தியும் உருவாகக் காரணமாம் !!!)

உணர்வுகளைக் கொச்சைப்படுத்தவில்லை, அந்த உணர்வுகள் இப்போதைக்கு எனக்கு வெறுக்கிறது, அவ்வளவுதான். மற்றும்படி ரசாயனம் எல்லாம் சும்மா, ஒரு பேச்சுக்கு இழுத்துக் கொண்டு வந்தது !

அதுசரி, படம் எப்படி, யாருக்குத் தெரியும்? பார்த்தால்த்தானே??? 

Link to comment
Share on other sites

19 minutes ago, ragunathan said:

அதுசரி, படம் எப்படி, யாருக்குத் தெரியும்? பார்த்தால்த்தானே??? 

பார்த்தவர்கள் ஓகே என்டு சொல்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Rajesh said:

பார்த்தவர்கள் ஓகே என்டு சொல்றார்கள்!

பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். பார்க்கலாம் , இந்த வார விடுமுறையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன். அநியாயத்துக்கும் மிக நல்லவனாக இருப்பதும் தூய காதலாகக் காட்டுவதும் கொஞ்சம் ஓவராகப் பட்டது. இளவயதுக் கதாநாயகி சின்ன வயதில் தெரிந்த ஒருவரை வேறு ஞாபகப்படுத்தினார்.🥰

 

Link to comment
Share on other sites

9 hours ago, ragunathan said:

பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். பார்க்கலாம் , இந்த வார விடுமுறையில்.

பார்த்துவிட்டு அதைப்பற்றிய உங்கள்  பார்வையையும் எழுதுங்கள். ஆவலுடன் உள்ளேன்! 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண ஓர் காதல் கதைதான் மல்லிகை வாசம்  தன் தகப்பனின் கடன் சுமையால் ஊரை விட்டு போகிறார் (காதலியையும் ) சின்ன வயதில் பிறகு கல்லூரியில் சந்திக்க போகிறார் முடியாது போகிறது பிறகு ஒர் ஆண்டில பயின்றவர்கள் கூட நினைக்கிறார்கள்  அந்த வேளையில் அவர்கள் ஓர் இரவை கழிக்கிறார்கள் சுத்தமாக 

 

ஆனால் அவள் நினைவாக வாழ்வதென்பதெல்லாம்  சீறோ நிலைதான் காதல் வாழும் காதலர்களும் வாழ்வார்கள் கழட்டிவிடப்பட்டவர்கள் , கரசேர முடியாதவர்கள் வாழ்க்கையென்பது தூரம் தெரியும் கானல் நீர் மாத்திரம் தெரியும் ஆனால் அருகில் போனால் இராது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் சேதுபதியின் அற்புதமான அலட்டலில்லாத நடிப்புக்கும் சிறு வயது தேவதர்சினியின் குறும்புக்குத்தனமான நடிப்பிற்கும் இப்படத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தைப் பார்த்தேன் நண்பர்களே ! படம் ஒன்றிரண்டு இடங்களில் ' போர் ' அடித்தது. மற்றபடி விஜய் சேதுபதியும் திரிஷாவும் தங்களது தேர்ந்த நடிப்பால் சமூகத்தில் அபாயகரமான ஒரு விடயத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியிருக்கிறார்கள். சிறுவயதில் தங்களுக்கிடையே இருந்த இனக்கவர்ச்சியை (infatuation), பெரியவர்களான பின்னர் உரசிப் பார்க்கிறார்கள் (அதுவும் திரிஷாவிற்கு வேறு ஒரு அழகான மணவாழ்க்கை அமைந்த பின்னர்). நடிப்பாற்றலாலும் நல்ல படமாக்கலினாலும் ஒரு சமூகச் சீர்கேடான விடயத்தை ஏதோ உன்னதமான காதல் காவியம் போல் தீட்டியிருக்கிறார்கள். பார்வையாளர்களை மதிமயங்க வைக்கும் அளவு திறமை எட்டிப் பார்க்கிறது (அத்திறமையும் சுமார் ரகம்தான்). படம் பண்ணுகிறவர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும் வேண்டும். 'மேற்குத் தொடர்ச்சி மலை' மற்றும் 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களைக் கொடுத்தவர்களுக்கு அந்தப் பொறுப்புணர்வு நிரம்ப உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96 வார்த்தைகள் இல்லை

தமிழ் சினிமாவில் வழமையான மசாலாப்படங்களுக்கு மத்தியில் மனதைவசைக்கும் படங்களும் இடையிடையே வரத்தான் செய்கிறது. படம் 96 யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று முகநூல் வெளிகளிலும் பல விமர்சனத்தளங்களிலும் சர்ச்சைக்குரிய தாக மற்றும் சமூக ஒழுக்கஞ் சிதறியதாக அல்லது ஒழுக்கத்தை சிதற வைக்கக்கூடியதாக அல்லது அத்தகைய நடப்புகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக என்றதான கருத்தாடல்களுக்களைக் கடந்து 96 மனதிற்கு இசைவான அகவெளித்தேடல்களுக்கு பதில் சொல்வதாகவும் அமைந்துள்ளது. ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு பள்ளிக்கூட வயதுக்காதல் எவ்வளவு ரம்மியமானது என்பதை பதிவு செய்து எல்லோருக்குள்ளும் மீள அப்பருவத்தை அசை மீட்ட வாய்ப்பளித்திருக்கிறது. இதமாக வருடி விட்டிருக்கிறது. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதேபோல ஒவ்வொருவருடைய குணநலன்களும் நற்பண்புகளைக் கொண்டிருப்பதில்லை. அண்மையில் 96 இன் விமர்சனம் ஒன்று ராமின் ஆண்மை குறித்தும் ராமும் ஜானுவும் புணராமல் விட்டமை குறித்தும் முகநூல் வெளியில் பலதரப்பட்ட அருவருக்கத்தக்க வகையில் முற்போக்குவாதிகளாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் மேதாவித்தனமாக பதிவிட்டிருந்தார்கள். முற்போக்கு என்றால் அம்மணமாக நிற்பதும் கிடைத்த சந்தர்ப்பங்களில் ஆண்குறிகளை நிமிர்த்துவதாக நினைத்துவிட்டார்களோ..  படத்தின் நாயகன் அப்படி இல்லை என்பதை ஏற்க முடியாமல் நம்ம விமர்சகர்கள் கதாநாயகனை கே ஆக்கி விட்டார்கள். உண்மையிலேயே சபலங்களுக்கு அப்பாலும் காதல் வாழும். அத்தகைய காதல் எல்லோருக்கும் புரியாது. பிம்பங்களுக்கு அப்பாலும் காதல் செய்ய முடியும். ஆழமாக காதலித்த இருவர் மறுபடியும் பல ஆண்டுகளின் பின்னால் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்போது அவர்களுக்குள் காமம் தோன்றுவதில்லை. காமம் தோன்றவில்லை என்றால் அது காதல் இல்லை என்று ஆகிவிடாதுதானே. காலமும், சமூகமும் சேர்ந்து ஒருங்கமைத்த எவராலும் காதலனையோ அல்லது காதலியையோ மீளவும் காணும்போது பேசப்பழக முடியுமே தவிர காமுறமுடியாது. கால இடைவெளி சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்கு இருவரையும் மாற்றிவிடும். ஒருவித பக்தி மனப்பான்மை அதிகரிக்கும் வேறென்ன சொல்ல….  மல்லிகை வாசம் தன்பங்குக்கு எழுதியிருக்கிறார் நாமும் நம்ம பங்குக்கு…….. 96 பலருக்குள் தேடலை புதுப்பித்திருக்கும். இந்த அலை அவ்வளவு சீக்கிரம் அடங்கிவிடாது. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள அகவெளியை நோண்டிவிட்டிருக்கிறது. பலநேரங்களில் இரணமாக இருந்தாலும் ஆறுகிற காயத்தை மீள மீளச் சொறிவதில் இன்பம்போல் இதுவும் அகவெளியில் மீள மீள வலித்தாலும் சுகம் கொடுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்தப்படத்தை பார்த்தேன். என்னை பொறுத்தவரை இது காதல் அல்ல என்பேன் இனக்கவர்ச்சியே. இது பொதுவாக எல்லாருக்கும் 14, 15 வயதில் ஏற்படுவது. படத்தில் கதாநாயகன் மிகவும் நல்லவனாக காட்டப்படுகின்றான். பாத்ரூமில்அழுகின்ற ஜானுவை (திரிஷா) தேற்றக்கூட தொடுகின்றானில்லை. இது மிகவும் ஓவர், சாத்தியமற்றது. ஒரு கட்டியணைபேபோதும் ஆயிரம் முறை வாயல் தேற்றுவதற்கு சமம். 

(ஆனால் அப்படி செய்யமுடியாது ஜானு இன்னொருவரின் மனைவி) பின்பு ஏன் இந்த உணர்வுகளின் உரசல்கள். 

ஒரு கட்டத்தில் காரில் கியர் மாத்தும்போது கூட காதலி கையை பிடிக்கும்போது, காதலனுக்கு உணர்ச்சியில்லை. (பார்க்கின்ற எங்களுக்கு படபட வேன கியர் எறுகின்றது). இதென்னடா இப்படியும் நடக்குமா? மேலும் இந்த காதலியை நினைத்து கல்யாணமே செய்யாமல் காதலன் பிரம்ம்ச்சாரியாக வாழுகின்றான். இது மிகவும் பிழையானது.

என்னை பொறுத்தவரை 100% காதல்/அன்பு என்பதெல்லாம் சுத்தப்பபொய். காதலுக்குள் காமம் உள்ளது, இதை தவிர்க்கவேமுடியாது.  காமத்தினூடாகவே காதல் முடிவு பெறும்/பூரணப்படும் காமமின்றி காதல் இல்லவே இல்லை. 

சிங்ப்பூரில் இருந்து வரும் ஜனூ தன்னை நம்பி அனுப்பிய  கணவருக்கு துரோகம் செய்தாரா? உடல்ரீதியாக அல்ல,ஆனால் மான‌சீகமாக ஏனெனில்  இங்கு marriage vow மீற்ப்பட்டுள்ளது.
 

Link to comment
Share on other sites

1 hour ago, வல்வை சகாறா said:

படம் 96 யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று முகநூல் வெளிகளிலும் பல விமர்சனத்தளங்களிலும் சர்ச்சைக்குரிய தாக மற்றும் சமூக ஒழுக்கஞ் சிதறியதாக அல்லது ஒழுக்கத்தை சிதற வைக்கக்கூடியதாக அல்லது அத்தகைய நடப்புகளுக்கு வழிவகுக்கக்கூடியதாக என்றதான கருத்தாடல்களுக்களைக் கடந்து 96 மனதிற்கு இசைவான அகவெளித்தேடல்களுக்கு பதில் சொல்வதாகவும் அமைந்துள்ளது.

அண்மையில் 96 இன் விமர்சனம் ஒன்று ராமின் ஆண்மை குறித்தும் ராமும் ஜானுவும் புணராமல் விட்டமை குறித்தும் முகநூல் வெளியில் பலதரப்பட்ட அருவருக்கத்தக்க வகையில் முற்போக்குவாதிகளாக தம்மை நிலை நிறுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் மேதாவித்தனமாக பதிவிட்டிருந்தார்கள். ..  

 

இவ்வாறான சர்ச்சைகளை நானும் பல்வேறு சமூகத் தளங்களில் பார்த்துள்ளேன். அவர்கள் தமது  பார்வை எதுவோ அதற்குள்ளேயே முடங்கிப் பிறரது எண்ணங்களை புரிந்து கொள்ள இயலாதவர்களாக / விரும்பாதவர்களாக இருக்கின்றபடியால் அவற்றைக் கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறேன். 

உங்கள் பார்வையையும் அருமையாக இங்கு பகிர்தமைக்கு நன்றி சகாரா அக்கா. 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.