Jump to content

மன்னாரில் பனை உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பனை உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில்

December 11, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

NARUVELLIKULAM-4.jpg?resize=540%2C360

மன்னார் மாவட்டத்தில் பனை உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் அழிந்து போகும் நிலையில் உள்ளது என பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் பழமையான கைத்தெழில்களில் பல அழிந்து வரும் நிலையில் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஆசிரியை சொலமோன் சுபாஜினி என்பவர் பல சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பனை உற்பத்தி பொருட்களை சிறு கைத்தொழிலாக செய்து கொண்டு வருகின்றார்.

தமிழரின் பாரம்பரிய தொழில் அழிந்து விடக் கூடாது என்பதற்காக இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு தொழில் நுனுக்கங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக செயற்பட்டு வருகின்றார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் ஆரம்பத்தில் அதிக இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த பனை உற்பத்தி பொருட்கள் தற்போது ஐந்து இடங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக இதன் மூலம் வருமானத்தை பெற்றுக் கொள்வதால் குடும்பப்பெண்களும், வயதானவர்களும் பனை உற்பத்தி பொருட்களை செய்து வருமானத்தை பெற்றுக் கொள்கிறார்கள்.

NARUVELLIKULAM-1.jpg?resize=792%2C528

இதன் மூலம் கணவன் இல்லாத பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு பேருதவியாக உள்ளது. இந்த தொழிலை செய்ய அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.எவ்வளவு பொருட்களையும் உற்பத்தி செய்யும் திறன் எம்மிடம் உள்ளது.ஆனால் அவற்யை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இவ் உற்பத்தியானது உள்ளுர் உற்பத்தியாக காணப்படுவதினால் உற்பத்திப் பொருட்களை மாவட்டத்திற்குள் வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிக்க முடியாது.

கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கே அனுப்ப வேண்டும். கிராமங்களில் இருந்து வாகனப் போக்குவரத்துகள் இல்லை. பயணிகள் பேருந்துகளில் ஏற்ற மாட்டார்கள். வாடகைக்கு வாகனங்கள் பிடித்து கொண்டு செல்லும் அளவு அதிக இலாபம் தரும் பொருட்கள் இவை அல்ல.  அரச தனியார் நிறுவனங்கள் எமது இடங்களுக்கு வந்து எம்மிடம் உள்ள பொருட்களை தடையில்லாமல் கொள்வனவு செய்வார்கள் என்றால் எமது பெண்கள் நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு உள்ளது.

அத்துடன் நானாக செய்து கொள்ளும் பொருட்களையும் எமது குழுவில் உள்ள பெண்கள் செய்து தரும் பொருட்களையும் வைத்து பாதுகாத்துக் கொள்ள இடம் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே அவற்றை வைத்திருந்து வியாபாரத்திற்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

சமூகத்தில் உள்ள அரச தனியார் துறையினர் எமக்கான ஒத்துழைப்பையும் உற்சாகத்தினையும் வழங்கும் பட்சத்தில் நவீன முறையில் வரும் மேற்கத்தேய வீட்டு பாவனைப் பொருட்களுக்கு நிகராக பெண்கள் கைப்பை ,பாடசாலை பைகள் ,பூக்கூடைகள், சாப்பாட்டு தட்டுகள், இன்னும் ஏராளமான புதுவிதமான பனை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் .

அத்துடன் வெளிநாட்டிலிருந்து பொருட்கள் உடல் உபாதைகளை வெகுவிரைவில் தரக் கூடியது. ஆனால் பனையின் மூலம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் வந்த நோயில் இருந்து உடல் நலத்தை தரக்கூடியது.

எனவே மனித சமூதாயத்திற்கு அதிக நலனை தரக்கூடியதும் பெண்களின் வாழவாதாரத்தை உயர்த்தக் கூடியதுமாகவுள்ள இந்த பாரம்பரிய தொழில் அழிந்து விடாமல் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று பனை கைத்தொழில் உற்பத்தி ஆசிரியை சொலமோன் சுபாஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

   NARUVELLIKULAM-6.jpg?zoom=3&resize=335%2

 

http://globaltamilnews.net/2018/106257/

Link to comment
Share on other sites

  • 3 months later...

பதில் அல்லது புதிய தலையங்களை ஏற்படுத்தும்போது படங்களை யும் சேர்த்து பதிவது என சொல்லி தாருங்கல் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 8:58 PM, E.Thevaguru said:

பதில் அல்லது புதிய தலையங்களை ஏற்படுத்தும்போது படங்களை யும் சேர்த்து பதிவது என சொல்லி தாருங்கல் நன்றி

வணக்கம் தேவகுரு.உங்களை கண்டதில் மகிழ்ச்சி.நீங்கள் கருத்துக்களம் பிரச்சனைகள் பகுதியில் கேளளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.