Jump to content

பிரெக்ஸிட்: பரபரப்பான சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கிறார் தெரீசா மே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
தெரீசா மேபடத்தின் காப்புரிமை Reuters

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதன்கிழமை மாலையில் (ஜிஎம்டி நேரம்) தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ள இருக்கிறார்.

 

பிரதமர் மே-யின் அணியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக தெரிகிறது,

அமைச்சரவையின் எல்லா முக்கிய உறுப்பினர்களும் பிரதமர் தெரீசா மே-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 172 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக பிபிசி கணக்கிட்டுள்ளது.

 

ஆனால், இது ரகசிய வாக்கெடுப்பு என்பதால், வெளியில் ஆதரவு தெரிவித்துவிட்டு, தனியாக இன்னொரு விதமாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் தெரீசா மே-க்கு எதிராக யார் போட்டி போடுவது என்பதில், எதிரணியினர் பிளவுண்டு இருப்பதாக தெரிகிறது,

பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ள போவதாக தெரீசா மே கூறியுள்ளார்.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2019ம் ஆண்டு மார்ச் 29ம் தேதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுகின்ற பொறிமுறையான 50வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதன் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.

இதனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தாமதமாகும் அல்லது நிறுத்தப்படும் என்று தெரீசா மே கூறியுள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிஎம்டி நேரப்படி மாலை 6 முதல் 8 மணிக்குள் இந்த வாக்கெடுப்பில் வாக்கு செலுத்தவுள்ளனர்.

ஐரோப்பிய தலைவர்களுடன் தெரீசா மே பேச்சுவார்த்தைபடத்தின் காப்புரிமை AFP

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்திற்குள்ளாக்கும், பிரிட்டனால் தாங்கி கொள்ள முடியாத ஸ்திரமின்மையை உருவாக்கும் என்றும் பிரதமர் மே கூறியுள்ளார்.

பிரதமர் தெரீசா மே மீதான இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு தேவையான 48 கடிதங்களை பெற்ற பின்னர், பிரதமர் பதவிக்கு இந்த சவால் எழுந்துள்ளது.

2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின்போது தெரீசா மே பிரதமராக பதவியேற்றார்.

அதன் பின்னர் அவர் நடத்திய பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையால் அவரது கட்சிக்குள்ளேயே தெரீசா மே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

ரகசியமாக நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் எவ்வளவு விரைவாக அறிவிக்கப்படும் என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் பிரதமர் தெரீசா மே இதில் வெற்றிபெற வேண்டுமென்றால், பெரும்பான்மையான வாக்குகளை பெற்றாக வேண்டும்.

இவ்வாறு தெரீசா மே பெரும்பான்மை பெற்றுவிட்டால், இன்னும் ஓராண்டுக்கு அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது.

வரைபட விளக்கம்

தெரீசா மே இந்த வாக்கெடுப்பில் வெற்றிபெறாவிட்டால், கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறும். ஆனால், இதில் தெரீசா மே போட்டியிட முடியாது.

தெரீசா மே ஒட்டுமொத்தமாக இல்லாமல் சிறிய பெரும்பான்மையில் வென்றுவிட்டால், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்யலாம்.

கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டன் பிரதிநிதிகள் அவையில் மிக பெரிய கட்சியாக இருப்பதால் இதன் தலைவராக இருப்பவர் பிரதமராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதே இதற்கு காரணமாகும்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரீசா மே தோற்றுவிட்டால், ஆறு வார நடைமுறையில் கட்சி உறுப்பினர்களால் புதிய தலைவர் தேர்தெடுக்கப்படும் வரை தற்காலிக பிரதமராக தெரீசா மே நீடிப்பார்.

இந்த கட்சியில் பலர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டால், கட்சி உறுப்பினர்களிடம் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தொடர் வாக்கெடுப்புகளை கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்துவர்.

https://www.bbc.com/tamil/global-46538632

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆளுமை மிக்க பெண். இப்போது யாரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய இவர் சமர்ப்பித்த வரைபை எதிப்பவர்கள் தாங்கள் ஒரு தீர்வும் சொல்லாமல் நழுவுகிறார்கள். இலங்கையில் நடப்பதுக்கு எதிர்மாறாக இங்கு நடக்கிறது. அங்கு ஒரு கதிரைக்கு இருவர் சண்டை. இங்கு ஆளை விட்டால் காணும் என்று ஒதுங்குகிறார்கள். மொத்தத்தில் குழப்பம்தான். 

சென்ற மாதம் ஜெர்மனிக்கு  காரில் போய் விட்டு வந்தோம். இனிமேல் விசாவுக்கு வரிசையில் நிக்க வேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

என்னை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆளுமை மிக்க பெண். இப்போது யாரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய இவர் சமர்ப்பித்த வரைபை எதிப்பவர்கள் தாங்கள் ஒரு தீர்வும் சொல்லாமல் நழுவுகிறார்கள். இலங்கையில் நடப்பதுக்கு எதிர்மாறாக இங்கு நடக்கிறது. அங்கு ஒரு கதிரைக்கு இருவர் சண்டை. இங்கு ஆளை விட்டால் காணும் என்று ஒதுங்குகிறார்கள். மொத்தத்தில் குழப்பம்தான். 

சென்ற மாதம் ஜெர்மனிக்கு  காரில் போய் விட்டு வந்தோம். இனிமேல் விசாவுக்கு வரிசையில் நிக்க வேண்டி வரும்.

இதனால் பிரித்தானியாவுக்கு  நன்மையா அல்லது    தீமையா   எதுவும் புரிவதில்லை, ஆனால் ஒவ்வொரு தடவையும் வரும் செய்திகளிற்கு பணச்சந்தையில் பவுண்ஸ் மேலேறுவது கீழிறங்குவதாகவே இருக்கின்றதனாலும் அதனுடன் நாணயப்பரிமாற்ற விகித நளுவல் மிகவும் அதிகமாக அனைத்து பவுண்ஸ் இணைகளில் காணப்படுகிறதனால் பவுண்ஸ் இணைகளில் ஒதுங்கியிருப்பது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, vasee said:

இதனால் பிரித்தானியாவுக்கு  நன்மையா அல்லது    தீமையா   எதுவும் புரிவதில்லை, 

பிரிவதால் பொருளாதாரத்தில்  பிரித்தானியாவுக்கும் பவுணுக்கும் வீழ்ச்சிதான் ஏற்படும். லண்டனில் வீடுகளின் பெறுமதி 1/3 பங்கால் விழும் என்று எதிர் பார்க்கப் படுகிறது (ஒரு உடன்படிக்கையும் இல்லை என்றால்). ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதால் தங்கள் அடையாளத்தையும், சில  உரிமைகளையும் இழப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.அநேகமான  பெரும் பணக்காரர்கள், பல அரசியல் வாதிகள் உட்பட, ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள். முதலீட்டு சந்தையை இழக்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

பிரிவதால் பொருளாதாரத்தில்  பிரித்தானியாவுக்கும் பவுணுக்கும் வீழ்ச்சிதான் ஏற்படும். லண்டனில் வீடுகளின் பெறுமதி 1/3 பங்கால் விழும் என்று எதிர் பார்க்கப் படுகிறது (ஒரு உடன்படிக்கையும் இல்லை என்றால்). ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதால் தங்கள் அடையாளத்தையும், சில  உரிமைகளையும் இழப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.அநேகமான  பெரும் பணக்காரர்கள், பல அரசியல் வாதிகள் உட்பட, ஐரோப்பாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறார்கள். முதலீட்டு சந்தையை இழக்க விரும்பவில்லை.

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎12‎/‎2018 at 8:01 PM, Ahasthiyan said:

என்னை பொறுத்த வரைக்கும் இவர் ஒரு ஆளுமை மிக்க பெண். இப்போது யாரும் பிரதமராக வர விரும்ப மாட்டார்கள். ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா பிரிய இவர் சமர்ப்பித்த வரைபை எதிப்பவர்கள் தாங்கள் ஒரு தீர்வும் சொல்லாமல் நழுவுகிறார்கள். இலங்கையில் நடப்பதுக்கு எதிர்மாறாக இங்கு நடக்கிறது. அங்கு ஒரு கதிரைக்கு இருவர் சண்டை. இங்கு ஆளை விட்டால் காணும் என்று ஒதுங்குகிறார்கள். மொத்தத்தில் குழப்பம்தான். 

சென்ற மாதம் ஜெர்மனிக்கு  காரில் போய் விட்டு வந்தோம். இனிமேல் விசாவுக்கு வரிசையில் நிக்க வேண்டி வரும்.

நான் இலங்கை பாஸ்போட் தான் இன்னும் வைச்சு இருக்கன்...ஒவ்வொரு முறைரும் விசா எடுக்கப் போவது என்டால் விசர் வரும்,,, இப்ப பிரிட்டிஷ் பாஸ்போட்க்காரரும் விசா எடுக்கோணும் என்று நினைக்க சந்தோசமாய்  இருக்கு.🙂

அரசியே இனிமேல் விசா எடுத்து தான் எங்கேயும் போகணும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நான் இலங்கை பாஸ்போட் தான் இன்னும் வைச்சு இருக்கன்...ஒவ்வொரு முறைரும் விசா எடுக்கப் போவது என்டால் விசர் வரும்,,, இப்ப பிரிட்டிஷ் பாஸ்போட்க்காரரும் விசா எடுக்கோணும் என்று நினைக்க சந்தோசமாய்  இருக்கு.🙂

அரசியே இனிமேல் விசா எடுத்து தான் எங்கேயும் போகணும் 
 

British passport ற்கு ஐரோப்பாவிற்கு நுழைவதற்கு இலங்கை passport காரர் போல் வீசா தேவையில்லை.

electronic visa waiver ற்கு விண்ணப்பம் செய்தால் போதும்

https://www.google.co.uk/amp/s/www.independent.co.uk/travel/news-and-advice/uk-europe-travel-post-brexit-fee-eu-etias-visa-waiver-a8682931.html%3famp

 

அரசிக்கு passport ஏ இல்லையே, உங்ஙகளுக்கு தெரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ஒவ்வொரு முறைரும் விசா எடுக்கப் போவது என்டால் விசர் வரும்,,,

நாசமாப்போனது அந்தநேரமும் வந்து துளைக்குதோ  நான் நினைச்சன்  யாழில் மட்டும்தான் என்று .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

British passport ற்கு ஐரோப்பாவிற்கு நுழைவதற்கு இலங்கை passport காரர் போல் வீசா தேவையில்லை.

electronic visa waiver ற்கு விண்ணப்பம் செய்தால் போதும்

https://www.google.co.uk/amp/s/www.independent.co.uk/travel/news-and-advice/uk-europe-travel-post-brexit-fee-eu-etias-visa-waiver-a8682931.html%3famp

 

அரசிக்கு passport ஏ இல்லையே, உங்ஙகளுக்கு தெரியாதா?

எனக்கும் வித்தியாசம் இருக்கும் என்று தெரியும்..உங்கள் இணைப்பிற்கு நன்றி ...அதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன் 
 

இவ்வளவு நாளும் அரசியார் எப்படி பயணம் செய்தார் என்பதை சொல்லவில்லை...வேலையிடத்தில் ஒருவர் சொன்னார் இனி மேல் அரசி ஜரோப்பியா நாடுகளுக்கு போவது எண்டால் விசா எடுக்க வேண்டும் என அது தவறான தகவலாக இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கும் வித்தியாசம் இருக்கும் என்று தெரியும்..உங்கள் இணைப்பிற்கு நன்றி ...அதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன் 
 

இவ்வளவு நாளும் அரசியார் எப்படி பயணம் செய்தார் என்பதை சொல்லவில்லை...வேலையிடத்தில் ஒருவர் சொன்னார் இனி மேல் அரசி ஜரோப்பியா நாடுகளுக்கு போவது எண்டால் விசா எடுக்க வேண்டும் என அது தவறான தகவலாக இருக்கலாம் 

நன்றி, சாதாரண பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்பவருக்கே Visa waiver இருக்கும் போது அரசி விசாவிற்கு விண்ணப்பம் செய்வதா?

அரசி மார்ச் 29 இன் பிறகும் கடவுச்சீட்டின்றி பயணம் செய்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எனக்கும் வித்தியாசம் இருக்கும் என்று தெரியும்..உங்கள் இணைப்பிற்கு நன்றி ...அதன் மூலம் அதிகம் தெரிந்து கொண்டேன் 
 

இவ்வளவு நாளும் அரசியார் எப்படி பயணம் செய்தார் என்பதை சொல்லவில்லை...வேலையிடத்தில் ஒருவர் சொன்னார் இனி மேல் அரசி ஜரோப்பியா நாடுகளுக்கு போவது எண்டால் விசா எடுக்க வேண்டும் என அது தவறான தகவலாக இருக்கலாம் 

 உங்களோடை சேர்ந்து வேலை செய்யிற அந்தத்தெய்வம்   போலந்து இல்லாட்டி ரூமேனியா ரஷ்யாவாய் இருக்குமெண்டு நான் நினைக்கிறன்...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம் அடிப்படைவாதிகளால் பாதிக்கபட்ட அடக்கி ஒடுக்கபட்ட முஸ்லிம் மதத்தை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்டோரும் இருக்கின்றனர். இஸ்ரேலின் மீதான முல்லாக்களின் தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களை விடுவோம் ஈரானிலும் எல்லோ இந்த தாக்குதலை விரும்பாத ஈரானியர்கள் இருக்கின்றனர் .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட இலங்கை  தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு முல்லாக்களின் இந்த தாக்குதல் இஸ்ரேலின் அழிவு ஆரம்பம் முஸ்லிம்களின் வெற்றி  என்று கற்பனை செய்து வெற்றி கொண்டாட்டம் தானே
    • தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே. திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை. ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே? அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.
    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.