Jump to content

திருகோணமலையில் பழந்தமிழர் மலை ஒன்றுக்கு வந்துள்ள ஆபத்து!


Recommended Posts

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராம மக்கள் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வாருவதோடு தமது பகுதியில் உள்ள கந்தசாமி மலையையும் அங்குள்ள முருகன் ஆலயத்தையும் காப்பாற்றி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராமத்தில் காணப்படும் தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் என்பன தாம் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மீண்டும் தாம் மீள்குடியேற்றம் வந்து குறித்த பகுதியில் முருகன் சிலை மற்றும் வேல் என்பவற்றை வைத்து வழிபாடுகள் மேற்கொண்டபோது அவை அனைத்தும் பெரும்பான்மை இனத்தவரால் தகர்த்தழிக்கப்பட்டதாக கூறுகின்றனர். அதனை தொடர்ந்து குறித்த மலைப்பகுதியில் புத்தர் சிலை நிறுவுவதற்காக பௌத்த துறவிகள் வருகைதந்தபோது தாம் தடுத்து நிறுத்தியதாகவும் இதனை தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு இரண்டு தரப்பினரையும் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என தடை விதித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது குறித்த மலையடிவாரத்தில் தொல்பொருள் திணைக்களம் தமது பெயர்ப்பலகையை நிறுவி கட்டிடம் ஒன்றை அமைத்து வருவதாகவும் இந்த சூழலில் தொல்பொருள் திணைக்களம் அபகரித்து தம்மை மலைக்கு செல்லவிடாது தடுத்து பெரும்பான்மையினரின் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு துணைபோய் விடுவார்கள் எனவும் கூறிய மக்கள், இதனை உரியதரப்புக்கள் கருத்தில் கொண்டு தமது மலையையும் முருகன் ஆலயத்தையும் காத்து தம்மை குறித்த மலையில் உள்ள தமது ஆலயத்தை வழிபட ஆவன செய்யுமாறு கோருகின்றனர்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள்,

1984 ம் ஆண்டு நாம் வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து சென்றோம் அதுவரை நாங்கள் இந்த கந்தசாமி மலையில் இருந்த முருகன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்தோம். அதனை தொடர்ந்து யுத்தத்தின் அழிவுகளை சந்தித்த நாம் 2010 ம் ஆண்டு மீண்டும் மீள்குடியேற்றம் வந்து குறித்த பகுதியில் வேல் ஒன்றை வைத்து வழிபட்டோம். அதனை புடுங்கி எறிந்தனர். அதனை தொடர்ந்து ஒரு முருகன் சிலை வைத்தோம் அதனை அடித்து உடைத்து போட்டிருந்தனர். அதனை மீளவும் நிறுவினோம் அதன் பின்னர் அந்த சிலை உடைக்கப்பட்டு சிலையையே காணவில்லை. இவ்வாறு எமது ஆலயம் திட்டமிட்டு பெரும்பான்மை இனத்தாரால் உடைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து புத்தர் சிலை வைக்கும் முயற்சியில் ஏற்ப்பட்ட குழப்பத்தில் யாரும் மலைக்கு செல்ல கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது இவ்வாறான ஒரு செயலை செய்கிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என வினாசித்தம்பி தம்பிஜயா என்ற மூத்தவர் தெரிவித்தார்.

இந்த விடயமாக குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க உபதலைவரான கந்தையா பரமநாதன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

”நான் 1952 ம் ஆண்டு பிறந்து அன்றிலிருந்து இன்று என்னுடைய 76 வயதுவரை இந்த தென்னமரவாடி கிராமத்திலேயே படித்து திருமணம் செய்து வாழ்ந்துவருகிறேன். இதுவரை எமது கிராமத்துக்கு ஒரு பௌத்த மதகுருவோ அல்லது வேறு முஸ்லிம் மதகுருவோ வந்ததில்லை. இது சேர சோழ பாண்டிய கால இற்றைக்கு சுமார் 300 வருடங்களுக்கு மேற்ப்பட்ட முருகன் கோவில். இந்த கோவிலுக்கு வரலாறு உண்டு. இது ஒரு வரலாறு படைத்த மலை 1962 ம் ஆண்டுமுதல் இந்த கோவிலில் நான் வழிபட்டு வந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் இந்த ஆலயத்தோடு இணைந்த எங்களது காணிகள் எல்லாம் 1803 ம் ஆண்டு பிரிட்டிஸ் காலத்து அரசினால் உறுதிகள் வழங்கப்பட்டு உள்ளது. அந்த ஆவணங்கள் எம்மிடம் உள்ளன. ஆகவே எமது இந்த பூர்விக கிராமம் நாங்கள் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்ற பின்னர் இது பெரும்பான்மை இனத்தவரால் சுவீகரிக்கப்பட்டது.

இந்த இடம் மாத்திரமல்ல எமது வயல் நிலங்கள் விவசாய நிலங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டு இன்று யுத்தம் முடிந்து மீள்குடியேற்றம் வந்தும் எமது நிலங்களை மீட்க முடியாது திண்டாடுகிறோம். இந்நிலையில் எமது இந்த வரலாற்று தொன்மை மிக்க ஆலயத்தையும் அபகரிக்க இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் இவற்றை தடுத்து நிறுத்தவேண்டும்” என அவர் கோரினார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/110734

Link to comment
Share on other sites

18 hours ago, போல் said:

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராமத்தில் காணப்படும் தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் என்பன தாம் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பந்தன் ஊர் திருகோணமலை இல்லையோ?

மக்களை படுகொலை செய்யும் ஜனநாயகத்துக்கு பாடுபடும் அந்த மனுஷனை நம்பி வேலையில்லன்னு புரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.