Jump to content

தமிழனின் சிற்பக் கலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுண்டு விரலுக்கும் சிறிய அளவில் சிற்பம் வடிக்க இயலும்..💐

CNlHKekUEAAX4kM.jpg

                        சிறி.முஸ்னம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

     ராஜராஜன் கால சப்பாத்து ..

tamilarhistory01.jpg

                தாராசுரம் கோவில்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

கற் சிலையில்... "நரம்பு"  படைத்த தமிழன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு மலர் ஆட .. அபிநயங்கள்..💐

main-qimg-2ad1a1c66f3387f9ed0285a42c1719

       சிதம்பரம் நடராஜர் கோயில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்த மார்க்கண்டேயன்

a-sculpture-brihadeeswarar-temple-thanja

                திருக்கடையூர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

சீனாவில் கண்டெடுக்கப் பட்ட,  தமிழனின்... வாடி வாசல் சிற்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தூண் சிற்பம் காட்டும் நெடுநல்வாடைக் காட்சி ..

aavudaiyaar-kovil-sculpture.jpg

பொதுவாகவே காற்றானது மனித உயிர்நாடியாக விளங்குகிறது. பிராணவாயு, மனிதனுக்குத் உயிர் வாழத் தேவைப்படுகிறது. அபான வாயு தாவரங்களுக்கு உயிர்வாழ உணவு தயாரிக்கத் தேவைப்படுகிறது என்று பள்ளி செல்லும் சிறார்களுக்குப் புத்தகங்கள் வழியாகக் கற்பிக்கப்படுகின்றது.

காற்று மண்டலத்திலிருந்து வீசும் காற்றைத் திசைவழி வைத்துப் பெயரிட்டனர் நந்தமிழர்கள்! தெற்கிலிருந்து வீசுவது தென்றல். கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல் (உவர்க்காற்று), மேற்கிலிருந்து வீசுவது கோடை. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை. ஏன் இவ்வாறு பெயரிட வேண்டும்? நோக்கின் ஞாயிற்று (சூரியனுடைய)க் கதிர்கள் கடலலைகளில் உள்ள உப்புக்காற்றை வெப்பக்கடத்தல் மூலம் கொண்டு வருவதால் கொண்டல் (நடுப்பகற்பொழுதின் ஞாயிற்று வெப்பம் மேற்கேயுள்ள மலைகளின் வெப்பக்காற்றைக் கொண்டுவருவதால் கோடைக் காற்று. (கோடு-மலை, அடை-அடைந்து) மாலையில் ஞாயிற்றின் வெப்பங் குறைந்து, மலர்க்காடுகளிலும் சோலைகளிலும் உள்ள பூக்களிலிருந்து தேன் மகரந்தம் நுழைந்து நல்ல நறுமணத்துடன் கூட காற்று வருவதால் தென்றல் என்றும் அழைக்கப் பெறுகின்றது.

வடதிசை மாறிய ஞாயிற்றால் வாடி, உருக்குலைந்த இமயப் பனிக்காற்றானது வடக்கிலிருந்து நமக்கு வீசுவதால் வாடை என்றானது. இவ்வாறு, அறிவியல் அறிவோடும் இயற்கை இயைபோடும் வாழும் நம் தமிழரைத் தமிழ் மொழியை நம் சிறார்களுக்கும் உலகோர்க்கும் கற்றுக் கொடுப்பது நம் கடனல்லவா?

“ஊதக் காத்து வீசயிலே குயிலுங்க கூவயில கொஞ்சிடும் வேளயிலே வாடைதான் என்னை வாட்டுது” என்று ஓர் திரையிசைப் பாடல் உண்டு. இதன் பொருள், தென்றல் காற்றானது மகரந்தங்களையும் தேனையும் ஊதி வரும் மாலைப் பொழுதில் குயில்கள் புணரத் தன் இணைகளை அழைக்கும் இனிய பொழுதில் உன் பிரிவானது வாடைபோல் என்னை வாட்டுகின்றதே! என்பதாம்.

நெடுநல்வாடை: கோல நெடுநல் வாடை என்று தமிழ் கூறு நல்லுலகம் புகழும் இந்நூலை நக்கீரர் இயற்றினார். 188 அடிகள் கொண்ட அகவற் பாடல்களால் அமைந்த நூல். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாடிய நூலாகும். இந்நூல் அகப்பாடல் நூலா அல்லது புறப்பாடல் நூலா என்று வேறுகாட்ட இயலாநிற்பது. இருப்பினும், “வேம்புதலையாத்த நோன்காழ் எஃகம்” எனப் பாண்டியனது அடையாள மாலையைக் குறிப்பிடுவதால் இஃது புறப்பாடல் நூலானது.

வாடைக்காலத்தில் மனித உடலானது வெப்பத்தை நாடுகிறது. தலைவன் தலைவியர் மெய்யுறு புணர்ச்சியை நாடுகின்றனர். நெடுநல்வாடைத் தலைவன் (பாண்டியன்) போர்ப்பாசறையில் இருக்கிறான். அவனது தலைவி (பாண்டியன் தேவி) பிரிவால் ஓவியப்பாவை போல அரண்மனையில் மிக்குகாமம் மேலிடத் தலையணையில் கண்துஞ்சாது, தலைவனையே நினைந்து வாடைக்கு ஆற்றாது வாடுகின்றாள். குழந்தைகள் முதல் முதியவர்கள் ஈறாக யாவரும் தீக்காய்வார்கள். இதனை வள்ளுவரும் திருக்குறளில்,

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்!” (குறள்:691)

என்கிறார். வாடைக்கு கூதிர் என்று மற்றொரு பெயரும் உண்டு. “கூ” என்பது மிக்க குளிர்ச்சி என்பதாகும். நீண்டு காமத்தைத் தூண்டும் வாடை நெடுநல்வாடை.

“வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோட,
னீடிதழ்க் கண்ண நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉநடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்று கோ ளொழியக் கடியவீசிக்
குன்று குளிரக் கூதிர்ப் பானாட்”
(நெடுநல்-1:12)

இதன்பொருளாவது, ஞாயிறு வடதிசை நோக்கிச் செல்ல இந்நிலம் குளிரப் பனியானது உண்டாகிறது. மழைபொழியாது சும்மா கிடந்த வானம். புதிதாக மழையைப் பெய்தது. ஆடுமாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் கோவலர்கள் (இடையர்கள்). ஆடுமாடுகளை மேட்டு நிலத்தில் கொண்டுபோய் அடைய வைத்தார்கள். கைகால்கள் நடுங்க கண்களில் நிரம்பிய பீளையைக் கூடக் கழுவாது உடலை வருத்தும் வாடையைத் தணிக்கக் குடலை மாட்டிக் கொண்டு கூதற் காய்ந்தார்கள்.

வாடைக்கு ஆற்றாது ஆடுமாடுகள் மேய்வதை மறந்து நின்றன. பறவைகள் கிளைகளில் படியாமல் கால்கள் விரைத்துத் தடுமாறி வீழ்ந்தன. கன்றுகள் தன்தாயிடம் பாலூட்ட மறந்தன. குன்றுகள் குளிரும்படியாகக் கூதிர்(வாடை) நெடுநாள் நீடித்தது.

மேற்காணும் நெடுந்தூண் சிற்பக்காட்சி இந்நெடுநல் வாடைக்காட்சியை நினைவூட்டுகின்றது. இக்காட்சி ஆவுடையார்கோயில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி திருக்கோயில் தூணில் உள்ளது. பழந்தமிழ்ப் பண்பாடுகளைப் பாதுகாத்தலும் பதிவு செய்தலும் நங்கடனே!

- பனையவயல் முனைவர். கா.காளிதாஸ்

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37461-2019-06-17-04-33-43

Link to comment
Share on other sites

நெடுந்தூண் சிற்பமும், நெடுநல்வாலை பற்றியக் காட்சியும் விளக்கமும் சிறப்பு.

மேற்குறிப்பிட்ட இடம் ஆவுடையார் திருக்கோயில் என்பது ஆத்மசாமி கோயிலா அல்லது ஆ ளுடைய பரம சாமி கோயிலா, அல்லது இவ்விரண்டும் ஒன்றுதானா? இக்கோயிலில் அருவ வழிபாடு பின்பற்றப்படுவதாக அறிந்தேன்.

இங்கு 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இதுபோன்ற பற்பல சிறப்புகளைக் கொண்ட கோயிலை அவசியம் தரிசிக்க வேண்டும்.

 

பகிர்விறகு நன்றி @ புரட்சிகர தமிழ்தேசியன்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐராதேசுவரர் கோவில்

13604676081496846949947194325bee23641-ae

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பரங்குன்றம் குடை வரை கோவில்..

_DSC3495.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

ஒரு விரல்  அளவு கூட... உயரமில்லாத, நுட்பமான சிற்பம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

hre.png

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் ஒர்க்கிரெக் - திருவாதவூர் கோயில் 👌

DSCN3878.JPG?part=0.1&view=1&vt=ANaJVrE-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாற்புறமும் வாயில்கள் அமைந்த "ஸ்வஸ்திக" வடிவிலான குளம் .

-- திருவெள்ளறை --

1774-swastika-well-pundarikakshan-peruma

 

2017-09-21+%25281%2529.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gfd.png

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

sirpam.png

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sir.png

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோகாமல் நோன்பு கும்பிடுதல்  ..

nombu.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணி ஆபரணங்கள், கையில் கத்தியோடு இவர் எங்கு கிளம்புறார்..?

abar.png

நெல்லையப்பர் கோவில் - திருநெல்வேலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

..பெண் யானை குட்டி போட, ஆண் யானை  ஒத்தாசை. குட்டி வெளி வந்து கொண்டிருக்கிறது...

தமிழன் தன் இயற்கையின் நேசிப்பை வெளிக் காட்டியிருக்கும், விதத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை....

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் காணப்படுகிறது இந்தச் சிற்பம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

meenaci.png

  • Like 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யானையை அடக்கும் சேவல் - உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில்.. 😄

nht.png

  • Like 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

காதலன் - காதலி

dpa-maa-174791.jpg

தியாகராஜ சுவாமி திருக்கோவில்

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே... பாறை கற்களை குழாயாக செதுக்கி, 
மழைநீர் சேகரிப்பு முறையை... அறிமுகப் படுத்தியவன் நம் ஆதித் தமிழன்.
இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.