Jump to content

மட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து!!


Recommended Posts

மட்டக்களப்பில் தமிழ் குழந்தைகள் பிறந்தால் ஆபத்து!!

_17964_1544856573_2747A211-CBBE-4097-A9B

இலங்கையின் வட,கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தில் தமிழ் மக்கள் பல்லாயிரம் உயிரழிவு, சொத்தழிவு, காணிகள் இழந்து இன்று மூன்றாவது இனமாக வீழ்ச்சியடைந்து உள்ளது.

தமிழரின் சந்ததி பெருக்கம் மிகவும் குறைவு இதன் தொடக்கப்புள்ளி வறுமை நாம் யுத்தத்தைதான் மறந்தாலும் தற்பொழுது 2009க்கு பிறகு தற்போது வரை பத்தாண்டிலுள்ள தமிழர் கிழக்கில் அரச அமைச்சராகவோ, இல்லாததால் அரச வேலைவாய்ப்புகள், சாதரண தகமை கொண்ட சிற்றூழியர்கள், அரச போக்குவரத்து சாரதிகள், நடத்துனர்கள், பாடசாலை பாதுகாவலர், விவசாய திணைக்கள ஊழியர்கள் போன்ற பதவிகளில் கூட அரசியல் பலம் இல்லாததால் வேலைவாய்ப்பு இல்லை.

இதனால் கூழித்தொழிலாளிகள், அத்தோடு கணவன்மார் சிறைக்கதி, உயிரிழப்பு காரணமாக விதவைகள், இப்படியொரு அவல நிலையால் திருமணம் முடிக்கும் தமிழர் விரலுக்கு ஏற்ற வீக்கம் போல குடும்ப செலவை சுருக்க தமது கணவர்மார் கூலித்தொழில் வருமானத்தில் ஒரு குழந்தைகளோடு குடும்ப கட்டுப்பாடாக மருத்துவரீதியில் ஊசி ஏற்றுதல், குச்சி வைத்தல், தாம்பத்தியத்தியத்தில் நாட்டமின்மை போன்ற வழியில் எல்லாம் மட்டக்களப்பில் தமிழர் விகிதசாரம் மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஒரு நாளைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் பிள்ளைப்பேறினை ஆய்வு செய்தால் தமிழர் நான்கில் ஒரு பங்கு மற்றையது சகோதர சமூகத்தவர்.

ஒவ்வொரு பகுதிகளிலும் அந்த அந்த நகரசபை ,பிரதேச சபை உறுப்பினர்கள் தமது பகுதி மக்களின் நீண்ட கால,குறுகிய கால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்க திட்டமிடலை செய்வது சிறந்த பிரதிநிதி கடமை.

இதை மத, இன வாதத்தால் யோசித்து நச்சு விதைவிதைப்பது கடமையல்ல. உதாரணத்திற்கு காத்தான்குடி வெள்ளிக்கிழமையில் ஆண்கள் பள்ளிவாசல் செல்வதால் தமிழ் ஆண்கள் கூலித்தொழிலுக்கு வைத்திருக்க கூடாது.

அல்லது கிழக்கில் தமிழர் முஸ்லிம்களால் பாதிக்கப்படுவதாக தினக்குரல் பத்திரிகை செய்திற்காக பத்திரிகையை தடை செய்து கிண்ணியா, காத்தான்குடி, அக்கரைப்பற்று மாநகரசபைகளில் பிரேரணை நிறைவேற்றியது போன்று தமது இனவாதத்தை வெளிப்படுத்துவதை செய்யவில்லை,

மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தமது ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் 3 பிள்ளைகள் மேல் பெறுவருக்கு புலம்பெயர் தமிழர் நிதியம் மூலம் ஊக்குவிப்பு தொகை 5000ரூபா வழங்குவது முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை அடுத்ததாக புலம்பெயர் தமிழரை டயஸ்போராக்கள் என்று முஸ்லிம்கள் கூறுவது நகைப்புக்குரியது.

இவர்களை போல் மத்திய கிழக்கு நாடுகள் இறைக்கும் பணத்தை கொண்டு மதமாற்றவோ ,புதிதுபுதிதாக பள்ளிவாசல் கட்டவோ செய்யவில்லை.

இலங்கையில் ஏதும் சிறுபிரச்சினை நடந்தால் அல்ஜெசிராவிற்கு ஊடக அடிமையாய் வாழவில்லை.

பாகிஸ்தானிலிருந்து போதைப்பொருள் கடத்தும் மாபியாக்களாக உருவாகவில்லை மாறாக யுத்தத்தால் இலங்கையில் உயிருக்கு பாதுகாப்பில்லை என வெளியேறியவர் அத்தோடு படித்த கல்வியாளர் மூளைசாலி வெளியேற்றம் டயஸ்போராக்கள் என சொல்லும் அறிவிழித்தனமான மதவாத பேச்சுதான் தெரிகின்றது,

இவ் மௌலவி கூறுவது மூன்று பிள்ளை பெற மட்டக்களப்பு மேயர் சொன்னால் முஸ்லிம்களை அழிப்பதற்கு உதிப்பது போன்று கொடிய மதவாத விசத்தை சாமர்த்தியமாக கலந்து தமிழரை இனவாதியாக காட்டி அப்பாவி போல் தமது சமுகத்தை நியாயப்படுத்துவது.

இன்று நேற்றல்ல 90ம் ஆண்டு காலமிருந்து வீரமுனை,சத்துறுகொண்டான் ,கல்முனை என பல பகுதிகளில் தமிழரை கொலை செய்தும் அம்பாரையில் 30மேற்பட்ட தமிழ்கிராமமே தடம் இல்லாமல் அழித்து துரத்தியதை மறைத்து காத்தான்குடி கொலையையும் யாழ். வெளியேற்றத்தை பெருப்பித்து சொல்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தயவு செய்து அனைத்து தமிழர் வாழும் பிரதேச சபை,நகரசபைகளும் மட்டக்களப்பு மேயர் முன்வைத்த திட்டம் போன்று நிறைவேற்ற தயராகுங்கள்.

 

http://www.battinaatham.net/description.php?art=17964

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.