Jump to content

லாவணி: அழிவின் விளிம்பில் இருக்கும் 300 ஆண்டுகால கலை வடிவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்
  •  
300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளைப் போலவே, அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் ஒரு கலை வடிவம் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ப்புடன் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா?

 

தஞ்சையை ஆண்ட மராத்தியர்களால் தமிழகத்திற்கு கிடைத்த கலைவடிவமான லாவணிதான் அந்த பழங்கால விவாத நிகழ்ச்சி.

எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இரண்டு பிரிவாக கலைஞர்கள் அமர்ந்துகொண்டு, பாடல் மற்றும் வசனத்தை இசையோடு பேசி ஒரு தலைப்பை விவாதிக்கும் நிகழ்ச்சி லாவணி ஆகும்.

 

கலைஞர்கள் தாங்கள் தேர்வுசெய்த குழுவிற்கு வலுசேர்க்க புராண, இதிகாச கதைகள், தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்தாளப்படும் கதைகள், வரலாற்று உண்மைகள் போன்றவற்றை பாடியும், கதையாக சொல்லியும், நயத்துடன் விவாதிக்கவேண்டும்.

சொல்லும் கருத்து வலிமையானதாகவும், நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனடியாகவும் பதில் தந்து எதிர்க்கட்சியை வீழ்த்தும் கட்சி வெற்றிபெறும்.

300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

மராத்திய மன்னர்கள் காலத்தில் தொடங்கிய லாவணி கலை, ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர வேட்கை ஊட்டவும், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அவ்வப்போது மக்களுக்கு நாட்டு நடப்புகளை சொல்வதற்கும் பயன்பட்டது என அனுபவம் மிக்க லாவணி கலைஞர்கள் கூறுகிறார்கள்.

அழிவின் விளிம்பில் லாவணி

தற்போது தமிழகத்தில் அதிபட்சமாக 20 லாவணி குழுக்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக தஞ்சையைச் சேர்ந்த மூத்த லாவணி கலைஞரான 67 வயதாகும் ஜோதிவேல் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

தளர்ந்த உடலோடு, இரண்டு பைகளுடன் நம்மை சந்திக்க வந்த ஜோதிவேலிடம் களைப்பு தெரிந்தது. ஆனால் லாவணி பற்றி கேட்டதும் உற்சாகம் அடைந்தவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்று நடித்த லாவணி கச்சேரி புகைப்படங்களை ஆர்வத்தோடு காட்டினார்.

''லாவணி கலையை சொல்லித்தர எங்களைப் போன்ற வயதானவர்கள் மட்டுமே இருக்கிறோம். இளைய தலைமுறையில் பலருக்கும் இதுபோன்ற ஒரு கலைவடிவம் தமிழகத்தில் இருந்தது என்பதே தெரியாமல் போய்விடுமோ என்று அச்சப்படுகிறோம். தஞ்சாவூரில் பிரபலமாக இருந்த லவாணி, தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் கட்டாயமாக இடம்பெற்றிருந்தது.''

''காலம் மாறியதும், லாவணியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. நீங்கள் லாவணி நிகழ்ச்சியை பாரக்கவேண்டும் என்றால், மதுரை மீனாட்சி கோயில் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதத்தில் காமன் பண்டிகை என்ற பெயரில் நடக்கும் லாவணியைப் பார்க்கலாம்,''என தொய்வுடன் பேசினார் ஜோதிவேல்.

காட்டுப்புறம், நாட்டுப்புறம், பூபாளம் மற்றும் காலங்கடா என நான்கு விதமான லாவணிகள் இருந்தன. கிராம திருவிழாக்களின்போது, இரவு முழுவதும் நடக்கும் என நினைவுகூறுகிறார் இந்த மூத்தக்கலைஞர்.

எரிந்த கட்சி, எரியாத கட்சி எது?

லாவணியில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரால் இரண்டு குழுக்கள் அழைக்கப்படுவதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது சுவாரசியமான தகவலை தெரிவித்தார் ஜோதிவேல்.

''மராத்திய லாவணிக்கு முன்னதாக, தமிழகத்தில் காமன் கூத்து என்ற புராணக் கதை, லாவணி பாணியை போலவே வழங்கப்பட்டு வந்தது. காமனை சிவன் எரித்தார் என்ற புராண கதையில் எரிந்த கட்சி என்பது காமனை குறிக்கிறது, எரியாத கட்சி என்பது சிவனைக் குறிக்கிறது.''

300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

''லாவணி போலவே அந்தக் கூத்து இருந்ததால், லாவணியை வழங்குவதிலும் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற முறை பின்பற்றப்பட்டது. விவாதம் செய்பவர்கள், தங்களது அணியின் கருத்தை நிலைநாட்ட விவரங்களை பேசுவார்கள், பாடுவார்கள். ''

''அரசியல் விவகாரங்களை சுவாரசியமாக எதுகை, மோனையோடு பாடுவது என்ற நடைமுறைகூட இருந்ததது. மொழிப்போர் தொடர்பான விவாதங்கள் லாவணி வடிவில் நடைபெற்றன,'' என லாவணி நிகழ்ச்சியை விளக்கினார் ஜோதிவேல்.

மராத்தியர்கள் விட்டுச் சென்ற கலை பாரம்பரியம்

தனது ஆசானாகக் கருதும் எம்.கே.அப்துல் காதர் அல்லது டேப் காதர் என்ற கலைஞர் தனது இறுதி ஆண்டுகளுளில், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்ததை நினைவுகூர்ந்த ஜோதிவேல், ''லாவணி ஆவணப்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது என்பது எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அவ்வப்போது அரசாங்கத்தில் கலை நிகழ்ச்சிகளில் லாவணிக்கு முக்கியத்துவம் தந்தால், இந்த கலை உயிர்ப்புடன் இருக்கும்,'' என கூறியபோது அவரது கண்கள் குளமாகின.

ஜோதிவேலின் உணர்ச்சிபூர்வமான சந்திப்பை அடுத்து, லாவணி கலையைப் பற்றி சுமார் பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்துள்ள ஆந்திராவில் உள்ள குப்பம் பல்கலைகழகத்தில் தமிழ்துறையில் பணியாற்றும் விவேகானந்த கோபாலனிடம் பேசினோம். அவர் 'லாவணி வரலாறும் வளர்ச்சியும்' என்ற புத்தகத்தின் ஆசிரியரும்கூட.

p04dtmk7.jpg
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"அறைகளுக்குள் சிறைப்படுவதல்ல கலை"

Exit player
 
"அறைகளுக்குள் சிறைப்படுவதல்ல கலை"

லாவணியின் வரலாறு 1670களில் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் வெங்கோஜியின் காலத்தில் இருந்து தொடங்குகிறது என்றார் ஆராய்ச்சியாளர் கோபாலன்.

''மராத்தியப் படைகளை வழிநடத்திய தளபதி வெங்கோஜி, தஞ்சையை ஆளும் நிலை ஏற்பட்டபோது, அவரோடு தஞ்சைக்கு வந்த போர்வீரர்கள் தங்களது ஊருக்கு திரும்பாமல், இங்கயே தங்கிவிட்டனர். அரண்மனையில் மன்னருக்காக நடைபெறும் கலை நிகழ்ச்சியில் லாவணி இடம்பெற்றது''.

''அதைத் தொடர்ந்து மராத்திய குடும்பங்களுக்காக, பொதுவெளியில் மராத்திய மொழியில் லாவணி நடத்தப்பட்டது. காலப்போக்கில் அது தமிழ் மொழியிலும் நடத்தப்பட்டது,'' என்றார் ஆராய்ச்சியாளர்.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஓலைசுவடிகளில், தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்களில் சரபோஜி மன்னனின் மகன் இரண்டாம் சிவாஜி லாவணி பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர் என்பதற்கான சான்று உள்ளது.

300 ஆண்டு லாவணிகலை: தமிழகத்தில் அழிய காரணம் என்ன?

குறிப்பாக இரண்டாம் சிவாஜி தனது அவையில் லாவணி வேங்கட ராவ் என்ற அவைப் பாடகருக்கு வாய்ப்புகளை கொடுத்தார் என்பதும் புலனாகிறது. மேலும், லாவணி போட்டிகளில் அவர் தலைமையேற்று நடத்தியுள்ளார் என்றும் தெரியவருகிறது.

லாவணிக்கு அங்கீகரம் தேவை

மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்கு பின்னரும் லாவணி கலை தமிழகத்தில் நிலைபெற்று, கோயில் திருவிழாக்களில் நடத்தப்பட்டது.

வானொலி மற்றும் தூர்தர்சன் தொலைக்காட்சியில் லாவணி நிகழ்ச்சி இடம்பெற்றதை நினைவுகூறும் கோபாலன், ''1970 முதல் 1980கள் வரை லாவணி பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பிரபலமாக இருந்தது. தகவல் தொழில்நுட்பம் மாறிவிட்ட நிலையில், லாவணிக்கு கிடைத்த இடம் மறையத்தொடங்கியது. தற்போது வெகு சில ஊர்களில் மட்டுமே, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை காணலாம்,'' என்றார் கோபாலன்.

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் லாவணி தொடர்பான புத்தகமும், சுவடிகளும் உள்ளன என கோபாலன் கூறியதை அடுத்து, அங்குள்ள மராத்திய மொழி நிபுணர் ராமச்சந்திரனிடம் பேசினோம்.

இரண்டாம் சரபோஜி மன்னர் காலத்தில், தென்னிந்தியா மற்றும் வடஇந்தியாவில் அவர் பயணம் செய்த திருத்தலங்களின் வரலாறுகளை லாவணி பாடல்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என விளக்கினார்.

மேலும் 'லாவணி' என்றால் 'நடுதல்' என்ற பொருள் தரும் மராத்திய சொல் என்றும், ஆரம்பத்தில் நாற்று நடும்போது பாடப்பட்ட பாடல்களாக லாவணி இருந்தது என்றும், பின்னர் தனி ஒருவகை இசைப்பாடலாக மாறிவிட்டது என்ற குறிப்பையும் தந்தார்.

சரபோஜி காலத்தில் தஞ்சாவூரின் தெருக்களில் ஒலித்த நூற்றுக்கும் மேற்பட்ட லாவணி பாடல்கள் புத்தக வடிவில் சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடல்கள் தங்களை பாடும் குரலுக்காக காத்துக்கிடக்கின்றன.

https://www.bbc.com/tamil/india-46552725

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி பிழம்பு ......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.