Jump to content

போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்கப்பல் கொடுத்து ரணிலை வீழ்த்திய அமெரிக்கா! தோற்றுப்போன சீனா?

Report us Suresh Tharma 7 hours ago

இலங்கையில் தற்போதைய நிலை குறித்த இந்தப் பதிவிற்குள் உறைந்திருக்கின்ற பல உண்மைகள் காலம் கடந்துமே வெளிவர முடியாதவை. அந்தளவிற்கு இப்போது நடைபெற்ற அரசியல் களேபரங்கள் சர்வதேச அரசியலுடன் பிற நாடுகளின் நலன்களிற்கான ஒரு முயற்சியாகப் பின்னிப் பிணைந்துள்ளது.

சீனாவும் அமெரிக்காவும் தேர்வு செய்துள்ள பல இடங்களில் இலங்கை தற்போது மையமாக மாறியுள்ளதே இதற்கான காரணமாகும்.

சர்வதேசம் பற்றிய தெளிவைப் பெறுவதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒரு விடயத்தை மனதார ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை சீனாவிடம் முற்றுமுழுதாகச் சிக்குண்டுள்ளது.

அது மகிந்த ராஜபக்சாவாக இருந்தாலென்ன, ரணில் விக்கிரமசிங்காவாக இருந்தால் என்ன, சீனாவின் நிலைப்பாட்டிற்கு மாறாகச் செயற்பட முடியாது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கின்றது தற்போதைய நிகழ்வுகள்.

இதற்கான காரணம் என்னவென்றால் இலங்கை சீனாவிடம் பெற்றுள்ள பெருந்தொகைக் கடன்களாகும். சீனாவின் கடன்மூலம் நாடுகளைக் கைப்பற்றுதல் என்கிற திட்டத்தின் முதற்பலிக்கடா இலங்கை. அது பெற்ற கடன் 8,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

அதனால் தான் மகிந்தாவால் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கான பணத்தைச் செலுத்த முடியாமல் துறைமுகத்தின் 99 வருடத்திற்கான உரிமைத்தை சீனாவிடம் ரணில் கொடுந்திருந்தார்.

இதைவிடவும் அடுத்த ஆண்டு தை மாதமும் ,ஏப்ரல் மாதமும் இலங்கை ஒரு பெரும் பணத்தொகையை தான் பட்ட கடன்களிற்காகச் செலுத்த வேண்டியுள்ளது. சர்வதேச இறையான்மைப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டவையே அவை.

அடுத்த நான்கு மாதங்களிற்குள் செலுத்த வேண்டிய தொகை என்பது சுமார் 1,700 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இலங்கை மதிப்பில் இது 27,710 கோடி ரூபாக்கள்.

இந்தத் தொகையைச் செலுத்துவதற்கு இலங்கை நம்பியிருந்த பணம் சீனா ஹம்பாந்தோட்டை துறைமுக குத்தகைக்காக இந்த மாதம் கொடுக்கவிருந்த 650 மில்லியன் டொலர்களாகும்.

இந்த நேரத்தில் தான் அமெரிக்கா இலங்கைக்கு சுமார் 166 மீற்றர் நீளமுள்ள கடலோரப் பாதுகாப்பிற்கான ஹமில்டன் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய ஆயுதக்கப்பலை வழங்கியிருந்தது.

இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை வந்தடையும். இந்த விவகாரம் சீனாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஏனென்றால் இலங்கையின் சொந்தக் கடல் எல்லைகளான 14 கடல்மைல்களை விட இலங்கையின் பொருளாதார [Exclusive Economic Zone] எல்லையான சுமார் 800 கடல்மைல் வரையான ரோந்திற்கே இது வழங்கப்பட்டிருந்தது.

அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா சட்டவிரோத தேவைகளிற்கு பயன்படுத்தி வருவதை கண்காணிக்கும் ஒரு நடவடிக்கையாக அமெரிக்கா இதனைச் செய்கின்றது என்பதை சீனா நன்கே அறிந்திருந்தது.

ஏனென்றால் அம்பாந்தோட்ட மாத்தள விமான நிலையத்திற்கு தற்போது உலகிலேயே மிகவும் பெரிய சரக்கு விமானமாக அன்ரரோவ் 124 இரவு வேளைகளில் வந்து செல்கின்றது.

அது எரிபொருள் நிரப்ப வருவதாகவே இலங்கைசார் செய்தியூடங்கள் நம்ப வைக்கப்பட்டாலும், அவற்றின் மூலம் எடுத்து வரப்படும் சீன ஆயுதங்கள் ஆபிரிக்காவிற்கு கடல்மூலம் சட்டவிரோதக் கும்பல்களிற்கு கடத்தப்பட்டு ஆபிரிக்கா கொதிநிலையில் வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா சந்தேகமாகக் கொண்டுள்ளது.

இத்தோடு ஈரானிடமிருந்து கொண்டுவரப்படும் சட்டவிரோத எண்ணெய்கள் கூட நாடுகளின் கொடிகளற்ற கப்பல்களின் மூலம் அம்பந்தோட்டைத் துறைமுகக் கொல்கலன்களிற்கு விநியோக்கிக்படுவதும், அங்கிருந்து உத்தியோகபூர்வமாக எடுத்துச் செல்லப்படுவதும் இடம்பெற்றுவருகின்றது. ஏனென்றால் அம்பாந்தோட்டையில் தான் அதிபெரிய எண்ணெய் கொள்;கலன் வசதி இலங்கையிலிருக்கின்றது.

இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் ஒருமுறை இலங்கையின் வரைபடத்தை கண்முன்னே நிறுத்தினால் ஆபிரிக்கா இலங்கைக்குக் கீழேயிருப்பதும் அம்பாந்தோட்டையே இலகுவான பயணப்பாதை என்பதையும் விட தென்னாசியாவிலுள்ள அதிபெரிய அமெரிக்கத்தளமான டியகோ காசியாவிற்கு அச்சுறுத்தலாக அம்பந்தோட்டையில் சீனாவின் அதீத செயற்பாடு அமைந்து விட்டது.

ஏனென்றால் டியாகோ காசியா இருப்பது இலங்கையில் இருந்து நேர் தெற்காக 800 மைல் தொலைவில்.

இங்கிருந்து தான் அமெரிக்கா ஆப்கான் மற்றும் மத்திய தரைக்கடற்பகுதியிலுள்ள தனது படைகளிற்கான பொருள் விநியோகத்தை கடல்வழிப்பாதையால் மேற்கொண்டு வருகின்றது எனவே அந்தக் கடல்வழிப் பாதையில் வேறு கப்பல்களின் பிரசன்னத்தை அமெரிக்கா அறுதியாகவே விரும்பவில்லை.

எனவே அமெரிக்காவின் வியூகம் என்பது கடன்பட்டு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை மாற்றத்தைக் கொண்டு வராது என்பதை சீனா நம்பியிருந்தாலும் அமெரிக்க முயற்சி வியாபிக்கும் என்பதனால் மகிந்தாவை பிரதமாராக்கும் முடிவை மகிந்த சார்ந்த தரப்பிற்கு சீனா மறைமுக ஆசையாக வழங்கியது.

இதற்கான சந்திப்பிற்காக பிரத்தியேகமாக வாடகைக்கு அமர்ந்தப்பட்ட ஏயர் ஏசியன் என்ற விமானத்தில் மகிந்தவின் படை சிங்கப்பூர் பறந்து சென்றார்கள்.

சீனா உளவாளிகளைச் சந்தித்தார்கள். திட்டத்துடன் மீண்டு வந்தார்கள். மைத்திரிக்கும் கூட இது திட்டங்கள் விளக்கப்படுத்தப்பட்டிருக்கலாம். அதாவது சீனா டிசம்பரில் தர வேண்டிய 650 மில்லியன் டொலர்களை தராமல் இழுத்தடிப்புச் செய்தால் இலங்கைப் பணம் பாதாளத்தில் வீழ்ந்து நாடு ஸ்திரமற்ற தன்மையை அடையும் என்பது கூட விளங்கப்படுத்தப்பட்டிருக்கலாம்.

மகிந்தாவைப் பிரதமாராக்குதை சீனா விரும்புகின்றது என்பதை விட இலங்கை ஸ்திரமற்றுப் போவதைத் தடுப்பதற்காக ரணிலை அகற்றி மகிந்தாவை நியமிக்கும் முடிவை எடுக்க மைத்திரி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம்.

அவ்வளவு ஆபத்திற்கு இலங்கையைச் சீனா இட்டுச் சென்று மிரட்டிவருகின்றது. அதனை நீங்கள் மேற்கத்தைய செய்தியூடங்களால் அறிய வேண்டுமாக இருந்தால் அடுத்த மாதம் வரைப் பொறுத்திருக்க வேண்டும்.

ஆம் கனடாவின் முன்னணி செய்தி நிறுவனமொன்று “சீனாவிடம் சிக்குண்டுள்ள சிறீலங்கா” என்கிற விவரனத்தை தயாரித்து வருகின்றது.

அது நெற்பிளிக்ஸ் எனப்படும் இணைய ஊடகத்தினூடாக அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படும்.

இவ்வாறு சிங்கப்பூரில் தீட்டப்பட்ட திட்டம் வெற்றிபெறாமல் இலங்கையில் இன்றைய தேதியில் சீனாவின் பிடி தளர்வதற்கான காரணமாக இருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது ஆதரவை ரணிலிற்கு வழங்கியதே.

ரணிலிற்கே ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்பது ராஜதந்திரரீதியில் சிலவேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கூடச் சொல்லப்பட்டிருக்கலாம்.

இரண்டு மாதப் போராட்டத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் நிரூபிக்கப்பட்டதான தோற்றம் தற்போது ஏற்படுத்தப்பட்டாலும், இனிச் சீனாவை ரணில் அரசாலோ அல்லது தமிழர்களால் கூட வேறு ஒரு தரப்பாக பார்க்க முடியாதபடி அதன் கடன் வரப்புக்கள் அமைந்து விட்டன.

எனவே கனடாவிலுள்ள பெரிய ஊடகம் விவரணம் தயாரிப்பதற்கு முன்பதாக சிலவேளைகளில் சீனா கூட ஒரு மாற்றத்தை அதாவது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களிற்கு தீர்வைக் கொடுங்கள் என்ற நிர்ப்பந்தத்தை கொடுத்து தனது பிடியை இலங்கை மீது அதிகரிக்கலாம்.

இதற்கான காரணம் யாதெனில் இலங்கையின் ஆட்சிமாற்றங்களில் நாங்கள் திழைத்துக் கொண்டிருக்க அமெரிக்கா தனது அனுஆயுதந் தாங்கிய Nimitz-class aircraft carrier USS John C Stennis (CVN 74) என்கிற அனுஆயுத நாசகாரிக் கப்பல் தனது கப்பலிலுள்ள 90க்கு மேற்பட்ட யுத்த விமானங்களை தற்காலிகப் பராமரிப்பிற்கு உள்ளாக்குவதற்கான விமானத் தங்குமிடமொன்றை திருக்கோணமலையில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இன்றைய தேதி தன்னை இணைத்துள்ளது.

எனவே சீனா என்கிற மீளமுடியாக கடணாளி மற்றும் அமெரிக்கா என்கிற இலங்கைக்கு தெற்கே டியாகோ காசியா என்கிற தீவை பாரிய முகாமைக் கொண்டுள்ள அமெரிக்கா தங்களின் நலனிற்காக செயற்படுத்தப் போகும் திட்டங்களில் ஒன்றுமட்டுமே தமிழர்களிற்கான வெற்றியாக அமையும்.

அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயான தீர்வு என்பதையே சீனாவும் அமெரிக்காவும் ஆதரிக்கப் போகின்றன என்கிற ஒரு நெருடலான உண்மையாகும். எனவே தமிழர்களின் பேசுபலம் சிதறாமல், தமிழர்கள் ஒன்றாகச் செயற்படுவதே எம்முன் இப்போதுள்ள பணி.

இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Suresh Tharma அவர்களால் வழங்கப்பட்டு 16 Dec 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Suresh Tharma என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.

https://www.tamilwin.com/articles/01/201696?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இலங்கை பிரச்சனை தொடர்பான இந்த அரசியல் கட்டுரையில் இந்தியா என்ற சொல்லே வரவில்லை!!!!! 

வாவ்....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 இலங்கை பிரச்சனை தொடர்பான இந்த அரசியல் கட்டுரையில் இந்தியா என்ற சொல்லே வரவில்லை!!!!! 

வாவ்....:cool:

பிரச்சனை இந்தியாவை தாண்டி எப்போவோ போயிட்டுது நம்மடை அப்புக்காத்து கூட்டம் மட்டும் டெல்லி பெல் அடிக்குதோ என்று பார்த்து கொண்டு இருக்கினம் .

(பெல் அடிப்பது அந்தகால மன்னர்கள் காலைக்கடனை முடித்தபின் பெல் அடிப்பார்கள் அடிமைகள் ஓடிபோய் சுத்தம் செய்யணும் ) 

எதை சுத்தம் செய்யினம் என்று கேட்க்க கூடாது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.