Jump to content

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம்: சீ.வி


Recommended Posts

2-3-1-720x450.jpg

 

 

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார்.

அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தப்பெதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே.

இது தான் ஜனாதிபதியின் வாதம். ‘எமது படையினர்’ இவ்வாறான மனோநிலை கொண்ட அரசாங்கத்தினர் இருக்கும் போது அவ்வாறான அரசாங்கத்தினரைத் தமது தொழில் புரியும் காலத்தில் காப்பாற்றி வந்த நீதியரசர்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமோ வேறேதேனும் சிறப்பு நீதிமன்றங்களோ நீதியை நிலைநாட்டும் என்று எதிர்பார்க்கமுடியாது.

ஆகவே சிங்கள அரசியல்வாதிகளிடையே ஜனநாயகம் பற்றிய பிணக்கு, அரசியல் யாப்பு பற்றிய பிணக்கு எழும்போது நீதியுடன் நடந்து கொள்ளும் நீதியரசர்கள் அல்லது நீதிபதிகள் இனரீதியான அல்லது தமிழர் சம்பந்தப்பட்ட விடயங்கள் எழும் போது அல்லது ‘எமது படையினர்’ பற்றி எழும் போது நீதியை நிலைநாட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

அவர்களின் பின்னணி அதற்கு இடங் கொடுக்காது. ஆகவே யுத்த குற்றங்கள் சம்பந்தமாக நியாயத்தை எதிர்பார்த்தால் வெளிநாட்டு சட்டத்துறை அல்லது நீதித்துறை உள்நுழைவுகள் அவசியமே” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/போர்க்குற்ற-விசாரணைகளுக/

Link to comment
Share on other sites

8 hours ago, போல் said:

அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உள்ளார்கள். விசாரணைகள் ஏதும் செய்தறியாமலே அவர்கள் தப்பெதுவும் செய்யவில்லை என்று கூறுவதற்குக் காரணம், அவர்கள் ‘எமது படையினர்’ என்பதால் தப்பேதும் செய்திருக்க மாட்டார்கள் என்பதே.

மிகத் தெளிவாக சொறிலங்கா அரசின் போக்கை கூறியுள்ளார்.

மைத்திரி நேற்று விட்ட அறிக்கை இதுக்கு நல்ல சான்று.

அப்பாவி பொதுமக்களை கொன்ற ராணுவக் கொலைகாரர்களை விட்டால் தானாம் எந்த ஆதரமுமின்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை விடுவாராம்.

எனவே படுகொலைகளுக்கு உடந்தையான மைத்திரியும் சிறைகளில் வேண்டியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் ஒருபோதும் தனது ராணுவத்தைக் காட்டிக் கொடுக்காது.  ஏனென்றால், ராணுவ இயந்திரத்தைப் பாவித்து இனக்கொலையை அரங்கேற்றியதே சிங்களப் பேரினவாதம் தான் என்றாகிறபோது, தனது ராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதென்பது, தன்னைக் காட்டிக்கொடுப்பது போலாகிவிடும்.

சேர்பியாவிலும், தென் சூடானிலும் நடந்தது போன்று, வெளித்தலையீட்டுடனான அரசியல் மற்றும் ராணுவத் தலைமகள் மீதான வழக்கொன்றே இப்போர்க்குற்றவாளிகளை நீதிமன்றம் முன் கொண்டுவரச் செய்ய முடியும். 

இதற்கு உள்நாட்டில் தமது காணாமல்ப் போன சொந்தங்களை இன்றுவரை தேடும் உறவுகளும், போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் உறவுகளும் ஒன்றிணைந்து வழக்கொன்றை சர்வதேச நீதிமன்று ஒன்றினூடாக சமர்ப்பித்து சர்வதேச பிடியாணையொன்றை ஏதேனும் ஒரு குற்றவாளிக்கெதிராகப் பிறப்பிக்கப் பண்ணினால், இது சாத்தியம்.

இறுதிக் கட்டப் போரில் பெருமளவிலான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை சிங்களப் பேரினவாதம் இன்று ராணுவ மனிதவுரிமைகள் அமைப்பின் தலைவராக நியமித்துள்ளது. இது ஒரு மிகவும் வெட்கக் கேடான சம்பவம் மற்றுமன்றி, அவனின் இரத்தம் தோய்ந்த கரங்களை மறைக்கச் சாதுரியமாகப் பாவிக்கப்பட்டிருக்கும் ஒரு கைங்கரியமும் ஆகும். இவன் போன்றே முன்னாள் தளபதி ஜகத் டயஸும் பிறேசில் நாட்டு தூதுவராக இருந்தபொழுது தன்மீது அந்நாட்டில் போடப்பட்ட போர்க்குற்ற வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக மத்திய கிழக்கினூடாக தலைமறைவாகி இலங்கையில் வந்திறங்கினான். இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படவேண்டும்.

இவர்களைப் போன்றே, ராணுவத் துணைக்குழுவான கருணா குழுவின் பல உறுப்பினர்கள் இறுதிக்கட்டப் போரில் பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். புலிகளின் கிழக்குத் தளபதியான கேணல் ரமேஷ் மற்றும் சில முக்கிய தளபதிகளை மற்றைய கைதிகளிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்று கொன்றவர்கள் இவர்கள் தான் என்று கண்ணால் பார்த்த சாட்சியங்கள் உள்ளன. மே 15 இலிருந்து 18 வரையான நாட்களில் கருணா குழு உறுப்பினர்கள் ராணுவ முன்னரங்க சரணடையும் நிலையங்களில் மக்களை சல்லடை போட்டுத் தேடி, புலிகளைப் பிரித்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டதையும், பலரை அவர்களே இழுத்துச் சென்றதையும் கண்ட சாட்சிகள் இருக்கிறார்கள்.

தேசியத்தின்பால் அக்கறையுள்ளவர்களும், தேசியத்தின் வளங்களை இன்றுவரை காத்துவருபவர்களும் தமது நேரத்தையும், வளங்களையும் இவற்றிற்காகச் செலவு செய்வது காலத்தின் தேவை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.