Jump to content

எதிர்கட்சித் தலைவர் பதவியை மகிந்தவுக்கு வழங்குங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

Mahintha-Rajapaksha-Gl-Preis.jpg?zoom=1.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறும் தாம் சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் மகிந்தவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்காமலிருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லையெனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவையை நியமிப்பது இலகுவான காரியம் அல்ல எனவும் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும் என்பதனால் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் மாத்திரம்தான் இந்த அமைச்சரவை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படாது எனவும் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் ஜனாதிபதி அதனை நிராகரிப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.http://globaltamilnews.net/2018/106880/

 

Link to comment
Share on other sites

24 minutes ago, பிழம்பு said:
Mahintha-Rajapaksha-Gl-Preis.jpg?zoom=1.

யீ.எல். பீரிசு என்றால் முன்பு ஒரு மதிப்பு ஏற்படும். இப்போ மிதிக்கவும் கால் கூசுகிறது. Bildergebnis für %e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81

Link to comment
Share on other sites

2 minutes ago, nunavilan said:

உந்த வாத்தி அறிவில்லாத இனவாதி என்பது மட்டும் தெரிகிறது.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'.  உதுக்கு அறிவு அளவுக்கு மிஞ்சிப் போச்சு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

யீ.எல். பீரிசு என்றால் முன்பு ஒரு மதிப்பு ஏற்படும். இப்போ மிதிக்கவும் கால் கூசுகிறது. Bildergebnis für %e0%ae%aa%e0%af%81%e0%ae%b4%e0%af%81

6 hours ago, nunavilan said:

உந்த வாத்தி அறிவில்லாத இனவாதி என்பது மட்டும் தெரிகிறது.

 

அவர் சொல்லுறது சரிதானே! சிங்கள நாட்டிலை சிங்களம் தானே அரசாட்சி செய்யும். அது செய்யும் தவறை சிங்களம் தானே தட்டிக்கேக்க வேணும். அமிர்தலிங்கமும் சம்பந்தனும் எதிர்க்கட்சி கதிரையிலை இருந்து ஏதாவது நல்லது செய்திருந்தால்  ஒண்டையாவது சொல்லுங்கோ பாப்பம்???

முன்னவர்  அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்திலை எண்டார்....
பின்னவர் இன்னும் பல கருமங்கள் நிறைவேற வேணும் எண்டபடியே இருக்கின்றார்....
மூண்டு சந்ததி முடிஞ்சு நாலாவது சந்ததியும் கண் முழிக்க வெளிக்கிட்டுது. இன்னும்........................................................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.