Jump to content

பாரளுமன்றில் வெகுண்டார் சம்பந்தர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

image_1545214157-54996e740b.jpg

பாரளுமன்றில் இப்போது இரண்டு எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள்.

தன்னை நீக்காது, இன்னொருவரை நியமித்தது சபாநாயகரின் தவறான நடவடிக்கை.

புதிதாக நியமனமான மகிந்த  ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. 

பாரளுமன்ற அங்கத்தவராக இல்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்தது அரசியல் அமைப்புக்கு முரணானது.  

மகிந்தவும் மேலும் 45 பேரும், SLFP யில் இருந்து விலகி, SLPP என்னும் கட்சியில் சேர்ந்த படியால், அவர்கள் தமது பாரளுமன்ற உறுப்புரிமையினை இழந்து விட்டனர்.

சபாநாயகரே , உங்கள் முடிவு, பாராளுமன்ற சம்பிரதாயங்களை கணக்கில் எடுக்காது,  அவசரமாக எடுக்கப் பட்டதாக தெரிவதுடன், அது அரசியல் அமைப்பினை மீறுவதாகவும் உள்ளது என்று சம்பந்தர் பாராளுமன்றில் அறிவித்தார்.

பாராளுமன்றில் உள்ள, வயது முதிர்ந்த, நீண்ட கால பாராளுமன்ற அனுபவமுள்ள சம்பந்தர், சம்பிரதாய மீறல் குறித்து கருத்து தெரிவித்தது, முக்கியத்துவம் பெறுகின்றது.

இது தொடர்பில், சுமேந்திரன் முன்னதாக பேசிய போது , இது விடயமாக தனது முடிவினை வெள்ளியன்று அறிவிப்பதாக சபாநாயகர் கூறி இருந்தார்.

http://www.dailymirror.lk/article/Two-opposition-leaders-in-parliament-Sampanthan-159992.html

image_1545221180-14725a5944.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை

 
December 19, 2018
sambanthan.jpg?zoom=1.1024999499320984&r
 

மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சபாநாயகரின் அறிவிப்பு பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும்  அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய சம்பந்தன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழரசுக் கட்சியைவிட கூடுதலான  பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் சுதந்திர கட்சி மற்றும் சுதந்திர முன்னணி இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்றும் அதன் தலைவரே அரச தலைவர், அவர்கள் அமைச்சுப் பதவிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

 

 

ஐக்கிய மக்கள் சுத்நதிர முன்னணியின் சின்னத்தின் கீழேயே அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு இருக்கையில் எவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்க முடியும் என்றும் இது பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

அத்துடன் சபாநாயகரால் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை என்றும் இந்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, புதிய அரசியலமைப்பை நாடுவதாகவும் அதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளும் நாட்டில் காணப்படும் பிரச்சினைகளும் தீர்வு காணப்படும் என்றும் அத்துடன், அரசியலமைப்பில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/107172/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சலசலப்பிலேயே காலத்தை கடத்திவிடுவார்கள். கதையை விட்டிட்டு உயர்நீதிமன்றை நாடி இப்போதைக்கு  இடைக்கால தடையுத்தரவை பெற்றுக்கொண்டு  பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. சம்பந்தரின் கருத்துக்கு ஆதரவாக ரணில் கோஸ்டி எந்த அபிப்பிராயமும் கூறியதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் திரு. சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.

இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் இரா. சம்பந்தன் அவர்கள் ஆற்றிய உரை
கௌரவ சபாநாயகர் அவர்களே

தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க தங்களது அனுமதியை வேண்டுகிறேன்.
2015ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் செப்டம்பர் 2015ல் கூடியபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இரண்டாவது அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் . 
பாராளுமன்றத்தில் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட போது, இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அதி கூடிய ஆசனங்களை கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராக என்னை நீங்கள் மீண்டுமொருமுறை ஏற்றுக்கொண்டீர்கள் . அந்த தீர்ப்பினை நீங்கள் வழங்கிய போது அதுவே எனது இறுதி முடிவு எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.

நேற்றைய தினம் டிசம்பர் 18ம் திகதியன்று, கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு நியமிக்கவேண்டும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கோரிக்கையினை ஏற்று நீங்கள் மஹிந்த ராஜபக்ச அவர்களை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதாக அறிவித்தீர்கள். இரண்டுமுறை நீங்கள் மீளுறுதி செய்து எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் நியமித்த என்னை பதவியிலிருந்து நீக்காமல் இந்த அறிவிப்பினை நீங்கள் செய்ததுமன்றி, இந்த செயலானது தற்போதைய பாராளுமன்றத்தில் இருவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியினை தக்க வைத்திருப்பதாகவே புலப்படுகின்றது. மேலும் என்னை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்குவதில் உங்களிற்கு பூரண திருப்தி இருக்கவில்லையா என்ற கேள்வியினை இது தோற்றுவிக்கின்றது

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியை விட அதிகளவு ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொண்டுள்ளதனை கேள்விக்குட்ட்படுத்த முடியாது.பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் என்னை எதிர்க்கட்சி தலைவராக நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். இதற்க்கு காரணம் என்னவெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட இந்த இரு கட்சிகளினதும் ஒரு சாரார் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்தார்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நாட்டின் தலைவர், நிறைவேற்று அதிகார தலைவர்,அரசாங்கத்தின் தலைவர் மட்டுமல்லாது பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் ஒரு அமைச்சராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயற்படுகிறார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான இன்னும் பலர் அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தனர். அவர்கள் எல்லோரும் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள்.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்படுவதானது முறையற்ற செயலாக அமைந்திருக்கும். இந்த பின்னணியில் தான், உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் பாராளுமன்ற சம்பிரதாய மற்றும் சாசன முறைப்படி பாராளுமன்றில் இரண்டாவது பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்கப்படுவதனை நடைமுறைப்படுத்தி என்னை நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இரண்டுமுறை ஏற்றுக்கொண்டீர்கள்.
கடந்த அக்டோபர் 26ம் திகதியிலிருந்து பிரதமர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றன. எமது அரசியல் யாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அமைய உயர் மட்டதில் நீதித்துறையினால் கொடுக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் சில முடிவுகள் இந்த விடயங்கள் தொடர்பில் எட்டப்பட்டுள்ளன. இந்த பின்னணியில்தான் மேற்குறித்த எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் நீங்கள் தீர்மானமொன்றினை வழங்கியிருக்கின்றீர்கள்.
நீதிமன்ற தீர்ப்பிக்கமைய கடந்த 16ம் திகதி பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆனால் அமைச்சரவை ஒன்றோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இன்னமும் முறையாக நியமிக்கப்படவில்லை. நேற்றைய தினம் 18ம் திகதியன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்கள் சபையிலே கடந்து வந்து அரசாங்க தரப்பில் அமர்ந்து கொண்டனர். அரசாங்கம் ஒன்று நியமிக்கப்படாத இந்த பின்னணியில் அவசரமாக இன்னொமொருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பதற்கான தேவை இல்லை என்பதனை நான் வலியுறுத்த விரும்புகிறேன்

தற்போது பதவியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரை நீக்காமல் அப்படியான அறிவிப்பினை செய்தமையானது விடயங்களை இன்னும் சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது
மேலும் நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர் அக்கட்சியிலிருந்து விலகி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையானது வெற்றிடமாக உள்ளது என்ற குற்ற சாட்டும் உள்ளது.
நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக அறிவித்த குறித்த உறுப்பினர் நீங்கள் அறிவித்த அந்த நாளில் பாராளுமன்ற உறுப்பினராக கூட இல்லை என்பதனை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நீங்கள் எடுத்த தீர்மானமானது அவசரமாகவும் எமது அரசியலமைப்பை மீறும் வகையிலும் இருக்கின்றதாகவே கருதப்படுகின்றது.
மேலே நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் இலங்கை தனது மிக முக்கிய சட்டமான அரசியலமைப்பினை மதிக்காத ஒரு தோல்வியை நோக்கி நகருகின்ற நாடாக மாறுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது. 
பிளவுபடாத பிரிக்க முடியாத இலங்கை நாட்டில் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ விரும்பும் பிரஜைகள் இந்த நடவடிக்கையினை இந்த நாடு இன்றைக்கு இருக்கும் இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு மூல காரணமாக அமைந்த பெரும்பான்மைவாத சிந்தனையாகவே கருதுகிறார்கள்
இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது.
முழு நாட்டினதும் நன்மை கருதி எமது மிக பிரதானமான சட்டமான அரசியல் யாப்பின் புனித தன்மையை பாதுகாக்கும் முகமாக தேவையான மாற்று நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது மிக அவசியமானதொன்றாகும்.

இரா. சம்பந்தன் 
பாராளுமன்ற உறுப்பினர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின்  மடியில்... சிங்களவன் கை வைக்கும் போது தான்.. வெகுண்டு எழுகிறார்.
அவரது...  இத்துப் போன புளிச்சல் அரசியலுக்கு, நல்லாய் அனுபவிக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

புதிதாக நியமனமான மகிந்த  ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. 

பாரளுமன்ற அங்கத்தவராக இல்லாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்தது அரசியல் அமைப்புக்கு முரணானது.  

பதவிக்காக வெகுண்டெழும் சம்பந்தனே?

பாராளுமன்றத்தில் இதுவரை காலமும் இருந்து என்னத்தை புடுங்கினாய்?

செய் அல்லது செத்து மடி.

செத்தவர்களின் முன்னுதாரணங்கள்  உன் கண்முன் நிழலாடும்.

இனியாவது திருந்து என்று சொல்வதற்கு கூட உனக்கு வயது காணாது.

Link to comment
Share on other sites

 

2 hours ago, nunavilan said:

இந்த சூழ்நிலையானது தமிழ் மக்களும் தமிழ் பேசும் மக்களும் உள்ளடங்கலான அனைத்து மக்களும் சுய மரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்க வேண்டியதன் அதி முக்கியத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது.

இரா. சம்பந்தன் 

பாராளுமன்ற உறுப்பினர்

தலைவர் சம்பந்தர் தமிழரா…? தமிழ் பேசுபவரா...?? :rolleyes:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதவி பறிபோவது சம் சும் மாவை கும்பலுக்கு உயிர் பறிபோவது போல. சொந்த மக்களின் உயிரை முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னும்.. பறிக்கும்.. போது கூட இவர்கள் இந்தளவுக்கு பொங்கி இருக்கமாட்டார்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்தான் பிரதமராகவேண்டும் என்று பாராளுமன்றத்தில் வாக்களித்த கூட்டமைப்பு எப்படி ரணிலுக்கு எதிர்க்கட்சியாக இருக்கமுடியும்?பேசாமல் மறைமுகமாக வைச்சிருக்கிற கள்ள உறவை வெளிப்படையாக்கி 5 ,6 அமைச்சுப் பதவிகளைப் பெற்று அபிவிருத்தியைச் செய்யலமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

பதவிக்காக வெகுண்டெழும் சம்பந்தனே?

பாராளுமன்றத்தில் இதுவரை காலமும் இருந்து என்னத்தை புடுங்கினாய்?

செய் அல்லது செத்து மடி.

செத்தவர்களின் முன்னுதாரணங்கள்  உன் கண்முன் நிழலாடும்.

இனியாவது திருந்து என்று சொல்வதற்கு கூட உனக்கு வயது காணாது.

 

7 hours ago, nedukkalapoovan said:

பதவி பறிபோவது சம் சும் மாவை கும்பலுக்கு உயிர் பறிபோவது போல. சொந்த மக்களின் உயிரை முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னும்.. பறிக்கும்.. போது கூட இவர்கள் இந்தளவுக்கு பொங்கி இருக்கமாட்டார்கள். 😂

 

6 hours ago, புலவர் said:

ரணில்தான் பிரதமராகவேண்டும் என்று பாராளுமன்றத்தில் வாக்களித்த கூட்டமைப்பு எப்படி ரணிலுக்கு எதிர்க்கட்சியாக இருக்கமுடியும்?பேசாமல் மறைமுகமாக வைச்சிருக்கிற கள்ள உறவை வெளிப்படையாக்கி 5 ,6 அமைச்சுப் பதவிகளைப் பெற்று அபிவிருத்தியைச் செய்யலமே.

Image may contain: 1 person

முன்பு  மகிந்தவை...  புகழ்ந்த சம்பந்தனுக்கு...  "ஆப்பு"  இறுக்கிய... மகிந்த. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யாவுக்கு அந்ததள்வு எனர்ஜி இருக்கா....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.