Jump to content

ரீவி சேனல் ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த் ..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரீவி சேனல் ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த்.. பெயர் என்ன தெரியுமா.. ? 

rajinikanth-mulling-to-start-tv-channel-

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்காக ஆழமாக விதையை தூவ தொடங்கி உள்ளார் என்று தெரிகிறது.அரசியலுக்கு வரப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் அறிவித்து ஓராண்டு நிறைவடையப் போகின்றது.

மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணிகளில் ரஜினிகாந்த ஈடுபட்டு வருகிறார். ஆனால் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

அடிப்படை

இதனிடையே கட்சி துவங்குவதற்கு தேவையான ஒரு மிக முக்கியமான அடிப்படை விஷயத்தை கையில் எடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

அப்படி என்ன முக்கியமான விஷயம் என்கிறீர்களா தமிழகத்தில் ஒரு கட்சி வலுவாக செயல்பட வேண்டுமானால் அவர்களுக்கு என்று ஒரு தொலைக்காட்சி சேனல் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. அந்த நோக்கத்தில்தான் ரஜினிகாந்த் முதல் படியை எடுத்து வைத்துள்ளார்.

3 பெயர்களில் பதிவு

ரஜினிகாந்த் அரசியலுக்காகவே ஒரு தனி சேனலை தூங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளாராம். கோவையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் இதுதொடர்பாக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ளார் பிரகாஷ்.

தடையில்லா சான்றிதழ்

டிரேட்மார்க் பதிவாளர் அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் தனது கையொப்பமிட்டு அனுப்பியுள்ள தடையில்லா சான்றிதழ் கடிதம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் மேற்கண்ட பெயர்களில் டிவி சேனல்கள் தொடங்குவதற்கு தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மூலமாக தடையில்லாத சான்றிதழுக்கான பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை இருக்காதுல்ல

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரஜினிகாந்த விரைவிலேயே தொலைக்காட்சி சேனல் துவங்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. பொதுவாக, இப்படியான விண்ணப்பங்களுக்கு பிறகு, டிவி சேனல் பயன்பாட்டுக்கு வர 12 மாதங்களாவது ஆகும். ஆனால் பாஜக தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து, அதைவிட விரைவில் டிவி சேனலை ஆரம்பித்துவிடுவார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

பிரதமர் மோடி ரேடியோவில் உரையாற்றுவதை போல, இந்த சேனலில் ரஜினிகாந்த் உரையாற்றினால், நிருபர்களின் கேள்விகளை தவிர்க்கலாம், இதனால் சர்ச்சைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறார்கள் அவர்களது ரசிகர்களும்."

https://tamil.oneindia.com/news/chennai/rajinikanth-mulling-start-tv-channel/articlecontent-pf343344-337019.html

டிஸ்கி :

ஏற்கனவே பெரும்பாலான இல்லங்களில் "நந்தினி", "அந்தகிளி" அது இது என்று அந்த நேரத்தில சட்னி சாம்பாரே வைக்க மாட்டீனம் .. இட்டலி தோசைக்கு தூள் சேர்த்து குழைத்து சாப்பிடுறவை .. இதுல இது வேறயா .?. ஓ மை .. ஏதோ ஒரு ஆதித்யா , சிரிப்பொலி , போகோ அளவிற்காவது ஆண்டவன் தான் காப்பாத்த வேணும் ..😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அந்த விண்ணப்பத்தில் சூப்பர் ஸ்டார் டிவி,  ரஜினி டிவி,  தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்ய அனுமதி கேட்டுள்ளார் பிரகாஷ்.

அடேங்கப்பா... ரஜனி ஆரம்பிக்க இருக்கும்  ரீவி பெயர்களை கேட்டவுனேயே...
அவரின் ரசிக குஞ்சுகளுக்கு... பெரிய சந்தோசமாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரீவி சேனல் ஆரம்பிக்கிறார் ரஜினிகாந்த்

மீனா குஞ்சுவின்ரை பாட்டெல்லாம் போடுவாங்களா சார்? :grin:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.