Jump to content

மரணம் திரும்பிச் சென்றது - நிழலி


Recommended Posts

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

சோகம் எல்லாம் இல்லை...

இன்று தான் திறந்த புது றோட் என்பதால் வேகமாக காரை செலுத்திக் கொண்டு இருக்கும் போது, முன்னுக்கு போன பயபுள்ளை இடது பக்கம் இருக்கும் சிறு தெருவுக்கு திரும்புவதற்காக திடீரென்று நிறுத்தினார் (அவருக்கும் புது றோட் தானே).
நான் வழக்கமாக ஓடும் கார் சின்ன திருத்த வேலைக்காக கராஜில் நிற்பதால் இன்ஸூரன்ஸ் தந்த Ford Edge 2017 காரில் தான் நாலு நாட்களாக ஓடுகின்றேன். அந்த கார் இன்னும் சரியாக பழக்கப்படவில்லை.  எனக்கு கிடைத்த ஒரு நொடி அவகாசத்தில் சடுதியாக பிரேக் அடிக்க அது வழுக்கி கொண்டு போய் முன்னுக்கு நிறுத்திய காரை இடிக்க போக  தன்னிச்சையாக அடுத்த லேனுக்கு மாற்றும் போது அடுத்த Lane இல் வந்தவர் அரண்டு போய் ஹோர்ன் அடிக்க, இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கும் Shoulder இற்கு காரை மாற்ற, அருகில் இருந்த மதிலில் வேகமாக மோதும் நிலைக்கு சென்று அரை அடி தள்ளி என் கார் நின்றது. இது எல்லாம் ஒரு நொடிக்குள் நிகழ்ந்து விட்டது. அது கொடுத்த அதிர்ச்சி சரியாக வர மூன்று மணி நேரத்துக்கு மேல் எடுத்தது. அந்த அதிர்ச்சி உணர்வுக்குள் தான் இந்த கவிதை(???) யை எழுதியது.

யோசிக்கும் போது நம் மூளை ஆபத்தில் இருந்து தன் உடலை காப்பாற் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது என ஆச்சரியமாக இருக்கு. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முன்னைய அனுபவங்களை புரொஸஸ் செய்து முடிவுகளை மனித மூளை எடுக்கின்றது.

10 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

நிழலி... உங்கள் மூளைக்கு... மட்டும்,  நன்றி, சொல்ல முடியாது. :grin:
நீங்கள்... சாப்பிட்ட,   ஆட்டு 🦌 மூளைக்கும்,  மாட்டு 🐂 மூளைக்கும்... சேர்த்தே...  நன்றி சொல்லி விடுங்கள். 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியர் ஒருவரின் நண்பர் ரஜினியின் 2.0 படம் பின்னிரவில் காட்சி பார்த்துவிட்டு திரும்பும்போது motorway இல் மூன்று கார்களுடன் விபத்து ஏற்பட்டு மரணமாகிவிட்டதை இன்றுதான் சொன்னார். இறந்தவருக்கு 36  வயது. மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனராம். விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியாது. ஆனால் ஒரு குடும்பம் குலைந்துவிட்டது. ஒரு வினாடியில் உயிர்போகக்கூடும் என்பதால் கவனமாக கார் ஓட்டுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

Link to comment
Share on other sites

On ‎12‎/‎21‎/‎2018 at 2:56 PM, Nathamuni said:

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

என்று அதைத்தானே நானும் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றேன். இப்படி எச்சரிக்கை செய்தது இதுவே முதல் தடவை அல்ல. ஒரு முறை நீரில் மூழ்கி Lifeguards இனால் காப்பாற்றப்பட்டும் இருக்கின்றேன்.

On ‎12‎/‎21‎/‎2018 at 3:35 PM, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

சான்ஸ் கிடைக்கவில்லை என்ற கவலையில் ஒரு கவிதை எழுதலாம் தானே

Link to comment
Share on other sites

22 hours ago, Nathamuni said:

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா....வருஷம் முடிய போகுதே...! நம்ம நிழலி மரணத்தைப் பற்றி..இந்த வருஷம் கதைக்கவே இல்லையே என்று குழம்பிப் போயிருந்த நேரத்தில் நிழலியின் பதிவு வந்திருக்கின்றது!

அப்படி ஒரு நெருக்கம், நிழலிக்கும்...நிழலின் கவிதைகளுக்கும்!

ஏதோ மகாத்மா காந்தி சத்திய சோதனை செய்த்து மாதிரி எழுதியிருக்கிறார்!

பொதுவாக மனித மூளை...நாம் திரும்பத்திரும்ப செய்யும் செயல்களை ஓட்டோ பைலட்டில் விட்டு விடட்டுப் பேசாமல்...பார்த்துக்கொண்டு இருக்கும்!

அவசியம் ஏற்படும் போது உடனேயே தலையிடும்! இந்தக் கால இடைவெளி ஒருவருக்கொருவர் வேறு படும்!

வயது, மனநிலை, தூக்கம், அசதி போன்றவை  காரணங்களாக இருக்கும்!

ஏதோ ...தலைக்கு வந்தது....தலைப்பாகையோடு போனதாக இருக்கட்டும்!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

நண்பர்களுடனான பாட்டி ஒன்றுக்கு, வேர்க்க, விறுவிறுக்க வந்த நண்பர்.... மிகவும் அதிர்வுடன் காணப்பட்டார். 

என்ன மச்சான் விசயம் என்று கேட்டபோது, கொஞ்சம் பொறு.... டென்ஷன் அடங்கட்டும் என்று சொன்னார்.

பிறகு, சொன்னார்... பெரும் தெரு ஒன்றில் வேகமாக வந்தபோது, முன்னே போன வாகனம் தீடீர் பிரேக் போட்டதால், இவரும் போட, மூன்று முறை வாகனம் வேகமாக சுழன்று வந்து நின்று இருக்கிறது. பின்னால் ஒரு வாகனமும் வராததால் தப்பித் பிழைத்தார்.

அவரது டென்ஷனை போக்க இன்னொரு நண்பர் சொன்ன அந்த வார்த்தைகள், சிரிப்பை வரவழைத்து.... அவரது டென்ஷனைக் குறைத்து 'ஊத்து மச்சான் விஸ்கியை' என்றார். 

நீங்களும் அதில் உள்ள, வேடிக்கையை மட்டும் பார்த்திருப்பீர்கள், டென்ஷன் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விட்டுச்சென்று இருக்கிறது பஸ் மாறிப்பயணம் செய்வது  போலத்தான் றூட் மாறி வந்திருக்கிறது ஆனால் எல்லோரையும் விரும்பம் இல்லாவிட்டாலும் அழைத்து செல்லும் சிலரை விட்டுப்பிடிக்கும் சிலரை எட்டிப்பிடிக்கும் பிடியும் ஒன்றுதான் தப்ப முடியாது 

Link to comment
Share on other sites

 பல்லாண்டு வாழிய நழலி.. 30 தடவையாவது மரனத்தை சந்தித்த அனுபவத்தால்  எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் உள்ளும் புறமும்.

து பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

மரணத்தை எழி

லுடன் சொல்லும் கவிதை வடிவம் மெச்சப்படவேண்டியது. தைமாதம் கனடா வரக்கூடும். சந்திப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.