Jump to content

மரணம் திரும்பிச் சென்றது - நிழலி


Recommended Posts

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இருள் கலந்த சாலையில்
ஒரு சிறு வளைவில்
எனக்கான மரணம்
இன்று
காத்திருந்தது

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

பனியில் பெய்த மழையில்
வீதியின் ஓரத்தில்
மரணம் காத்திருந்ததையும்
என்னை பார்த்து புன்னகைத்ததையும்
பின் மனம் மாறி
திரும்பிச் சென்றதையும்
நானும் பார்த்திருந்தேன்


தூரத்தில் ஒலி எழுப்பும்
வாகனம் ஒன்றில் அது
ஏறி சென்றதையும்
ஏறிச் செல்ல முன்
தலை திருப்பி
மீண்டும் என்னை பார்த்ததையும்
நான் கண்டிருந்தேன்

எல்லாக் காலங்களிலும்
ஏதோ ஒரு புள்ளியில்
நானும் அதுவும் அடிக்கடி
சந்திக்க முயல்வதும்
பின்
சந்திக்காது பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

 

-----------

இன்று புதிதாக திறக்கப்பட்ட வீதியில் மோசமாக போயிருக்க கூடிய விபத்தில் சிறு நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினேன்.

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

மாபெரும் சோகத்தை மனம் கரையும் விதம் கவிதையாக்கிவதற்கும் ஒரு மனத் தைரியம் வேண்டும்......நீங்கள் நீடூழி வாழவேண்டும்.....!  

சோகம் எல்லாம் இல்லை...

இன்று தான் திறந்த புது றோட் என்பதால் வேகமாக காரை செலுத்திக் கொண்டு இருக்கும் போது, முன்னுக்கு போன பயபுள்ளை இடது பக்கம் இருக்கும் சிறு தெருவுக்கு திரும்புவதற்காக திடீரென்று நிறுத்தினார் (அவருக்கும் புது றோட் தானே).
நான் வழக்கமாக ஓடும் கார் சின்ன திருத்த வேலைக்காக கராஜில் நிற்பதால் இன்ஸூரன்ஸ் தந்த Ford Edge 2017 காரில் தான் நாலு நாட்களாக ஓடுகின்றேன். அந்த கார் இன்னும் சரியாக பழக்கப்படவில்லை.  எனக்கு கிடைத்த ஒரு நொடி அவகாசத்தில் சடுதியாக பிரேக் அடிக்க அது வழுக்கி கொண்டு போய் முன்னுக்கு நிறுத்திய காரை இடிக்க போக  தன்னிச்சையாக அடுத்த லேனுக்கு மாற்றும் போது அடுத்த Lane இல் வந்தவர் அரண்டு போய் ஹோர்ன் அடிக்க, இன்னும் கொஞ்சம் தள்ளி இருக்கும் Shoulder இற்கு காரை மாற்ற, அருகில் இருந்த மதிலில் வேகமாக மோதும் நிலைக்கு சென்று அரை அடி தள்ளி என் கார் நின்றது. இது எல்லாம் ஒரு நொடிக்குள் நிகழ்ந்து விட்டது. அது கொடுத்த அதிர்ச்சி சரியாக வர மூன்று மணி நேரத்துக்கு மேல் எடுத்தது. அந்த அதிர்ச்சி உணர்வுக்குள் தான் இந்த கவிதை(???) யை எழுதியது.

யோசிக்கும் போது நம் மூளை ஆபத்தில் இருந்து தன் உடலை காப்பாற் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது என ஆச்சரியமாக இருக்கு. ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் முன்னைய அனுபவங்களை புரொஸஸ் செய்து முடிவுகளை மனித மூளை எடுக்கின்றது.

10 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für thanks god

அட... நெருங்கிய மரணத்தை கூட, அழகிய கவிதையாக வடிக்க...  நிழலியால்  மட்டுமே முடியும்.
தலைப்பை பார்த்து விட்டு,  கவிதையை... வேகமாக வாசித்த போது, மனது ஒரு வித பதட்டத்தில் இருந்தது.

புதிதாக  போடப் பட்ட  வீதிகளில்... எண்ணைத் தன்மையுடன் கூடிய    வழுவழுப்பு  இருக்கும்.
நீங்கள், ஒரு  குடும்பத் தலைவன். அவர்களை வளர்த்து ஆளாக்கும் மட்டும்,  இவ்வுலகில் வாழ்ந்தே ஆக வேண்டும்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆனால்.. இன்றைய நாளில், உங்களை காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்ல,
அருகில் உள்ள கோவிலோ, தேவாலயமோ   எதுவாக இருந்தாலும்,
குடும்பத்துடன் சென்று வருவது, நல்லது என்பது... என் அபிப்பிராயம்.

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

நிழலி... உங்கள் மூளைக்கு... மட்டும்,  நன்றி, சொல்ல முடியாது. :grin:
நீங்கள்... சாப்பிட்ட,   ஆட்டு 🦌 மூளைக்கும்,  மாட்டு 🐂 மூளைக்கும்... சேர்த்தே...  நன்றி சொல்லி விடுங்கள். 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியர் ஒருவரின் நண்பர் ரஜினியின் 2.0 படம் பின்னிரவில் காட்சி பார்த்துவிட்டு திரும்பும்போது motorway இல் மூன்று கார்களுடன் விபத்து ஏற்பட்டு மரணமாகிவிட்டதை இன்றுதான் சொன்னார். இறந்தவருக்கு 36  வயது. மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனராம். விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியாது. ஆனால் ஒரு குடும்பம் குலைந்துவிட்டது. ஒரு வினாடியில் உயிர்போகக்கூடும் என்பதால் கவனமாக கார் ஓட்டுவது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

என் மூளைக்குத் தான் ...

thank-you-.jpg

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

Link to comment
Share on other sites

On ‎12‎/‎21‎/‎2018 at 2:56 PM, Nathamuni said:

திரும்பிச் செல்லவில்லை.

எச்சரித்து சென்றுள்ளது.... இன்றுபோய்.... இன்னொருநாள் வருகிறேன் என்று....

அது ஒரு தீர்மானத்துடன் வந்திருந்தால், உங்கள் மூளை ஒன்றும் செய்திருக்க முடியாது. 

கவனம் எடுங்கள்...

https://www.thesun.co.uk/archives/news/710808/bskyb-executive-dies-in-tragic-accident-with-his-daughter/

நான் நேர்முகத்துக்கு போனபோது, வந்த இந்த தகவலால், நேர்முகம் ரத்தானது.

ஒரு நினைத்துப் பார்க்க முடியாத விபத்து. 

 

ஒரு கணப் பொழுதில்
தீர்மானம் மாற்றி
இன்னொரு நாளை
குறித்து விட்டு
திரும்பிச் சென்றது

என்று அதைத்தானே நானும் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றேன். இப்படி எச்சரிக்கை செய்தது இதுவே முதல் தடவை அல்ல. ஒரு முறை நீரில் மூழ்கி Lifeguards இனால் காப்பாற்றப்பட்டும் இருக்கின்றேன்.

On ‎12‎/‎21‎/‎2018 at 3:35 PM, ரதி said:

சே ஒரு அருமையான சான்ஸ் மிஸ்சாகி விட்டது😟 இதை சாட்டியாவது நானும்  ஒரு கவிதை நானும் எழுதி பழகி  இருப்பன்

சான்ஸ் கிடைக்கவில்லை என்ற கவலையில் ஒரு கவிதை எழுதலாம் தானே

Link to comment
Share on other sites

22 hours ago, Nathamuni said:

ஊருக்கு போனை  போட்டு.... வெட்டித்  தாக்குறதா , பெட்டிக்குள்ள  போட்டு அனுப்புறதா எண்டு கேட்க வைக்கிற வேலை மிஸ் ஆயிருச்சு... :grin:   

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா....வருஷம் முடிய போகுதே...! நம்ம நிழலி மரணத்தைப் பற்றி..இந்த வருஷம் கதைக்கவே இல்லையே என்று குழம்பிப் போயிருந்த நேரத்தில் நிழலியின் பதிவு வந்திருக்கின்றது!

அப்படி ஒரு நெருக்கம், நிழலிக்கும்...நிழலின் கவிதைகளுக்கும்!

ஏதோ மகாத்மா காந்தி சத்திய சோதனை செய்த்து மாதிரி எழுதியிருக்கிறார்!

பொதுவாக மனித மூளை...நாம் திரும்பத்திரும்ப செய்யும் செயல்களை ஓட்டோ பைலட்டில் விட்டு விடட்டுப் பேசாமல்...பார்த்துக்கொண்டு இருக்கும்!

அவசியம் ஏற்படும் போது உடனேயே தலையிடும்! இந்தக் கால இடைவெளி ஒருவருக்கொருவர் வேறு படும்!

வயது, மனநிலை, தூக்கம், அசதி போன்றவை  காரணங்களாக இருக்கும்!

ஏதோ ...தலைக்கு வந்தது....தலைப்பாகையோடு போனதாக இருக்கட்டும்!

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

நானும் மனைவியும் எங்கள் உடம்பை donate பண்ண எழுதி கொடுத்து இருக்கின்றம் என்பதால் இந்த பிரச்சனை இல்லை. எனக்கு மத சடங்கு எதுவும் செய்ய கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருப்பதால் ஒரு நாளைக்கு வைச்சு விட்டு அனுப்பி விடுவினம்

நண்பர்களுடனான பாட்டி ஒன்றுக்கு, வேர்க்க, விறுவிறுக்க வந்த நண்பர்.... மிகவும் அதிர்வுடன் காணப்பட்டார். 

என்ன மச்சான் விசயம் என்று கேட்டபோது, கொஞ்சம் பொறு.... டென்ஷன் அடங்கட்டும் என்று சொன்னார்.

பிறகு, சொன்னார்... பெரும் தெரு ஒன்றில் வேகமாக வந்தபோது, முன்னே போன வாகனம் தீடீர் பிரேக் போட்டதால், இவரும் போட, மூன்று முறை வாகனம் வேகமாக சுழன்று வந்து நின்று இருக்கிறது. பின்னால் ஒரு வாகனமும் வராததால் தப்பித் பிழைத்தார்.

அவரது டென்ஷனை போக்க இன்னொரு நண்பர் சொன்ன அந்த வார்த்தைகள், சிரிப்பை வரவழைத்து.... அவரது டென்ஷனைக் குறைத்து 'ஊத்து மச்சான் விஸ்கியை' என்றார். 

நீங்களும் அதில் உள்ள, வேடிக்கையை மட்டும் பார்த்திருப்பீர்கள், டென்ஷன் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விட்டுச்சென்று இருக்கிறது பஸ் மாறிப்பயணம் செய்வது  போலத்தான் றூட் மாறி வந்திருக்கிறது ஆனால் எல்லோரையும் விரும்பம் இல்லாவிட்டாலும் அழைத்து செல்லும் சிலரை விட்டுப்பிடிக்கும் சிலரை எட்டிப்பிடிக்கும் பிடியும் ஒன்றுதான் தப்ப முடியாது 

Link to comment
Share on other sites

 பல்லாண்டு வாழிய நழலி.. 30 தடவையாவது மரனத்தை சந்தித்த அனுபவத்தால்  எனக்கு புரிகிறது உங்கள் கவிதையின் உள்ளும் புறமும்.

து பிரிவதும்
அதன் பின் இன்னொரு
சந்திப்பிற்காக காத்திருப்பதுமாக
வாழ்வு நீள்கின்றது

மரணத்தை எழி

லுடன் சொல்லும் கவிதை வடிவம் மெச்சப்படவேண்டியது. தைமாதம் கனடா வரக்கூடும். சந்திப்போம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.