Jump to content

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும்.. புலம்பெயர் நாடுகளுக்குள் புலம்பெயரும் எம்மவர்களை ஏன் இதில கணக்கில காட்டேல்ல..??!  மடில கணம் போல. 🤣

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, manimaran said:

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

இன்றைய வெஸ்ரேண் கலாச்சாரங்களை ஆதரிக்கின்றீர்களா?


ஏனென்றால் எமது வரலாற்றை அடுத்த சமுதாயத்திற்க்கு எடுத்து செல்ல வேண்டும் என இங்கு ஒரு  பலர் கூறுகின்றார்கள்.

அப்படியாயின் வரலாறு என்று வரும் போது  அது சம்பந்தப்பட்ட பண்பாடும் தொடர்ந்து நிற்கும் அல்லவா?

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

இன்றைய வெஸ்ரேண் கலாச்சாரங்களை ஆதரிக்கின்றீர்களா?

 

 

நிச்சயமாக.

மேற்கத்தைய பண்பாடுகளில் இருந்து நாம் கற்பதற்கு ஏராளமானவை உள்ளன. அதே வேளை இற்றுப் போன எமது பழக்கவழக்கங்களில் பலவற்றை தூக்கி எறிய வேண்டிய அவசிய தேவை எமக்கு நிறையவே உள்ளது. 

நாம் அவற்றை செய்யாவிடின் எமது அடுத்த தலைமுறை(பெரும்பாலும் புலத்து தலைமுறை) எமது கலாச்சாரத்தை முற்று முழுதாக தூக்கி எறியும் நிலையே ஏற்படும். 

அதை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இக் கட்டுரையாளரின் ஆதங்கமும் அதுவாகவே தென்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, manimaran said:

நிச்சயமாக.

மேற்கத்தைய பண்பாடுகளில் இருந்து நாம் கற்பதற்கு ஏராளமானவை உள்ளன. அதே வேளை இற்றுப் போன எமது பழக்கவழக்கங்களில் பலவற்றை தூக்கி எறிய வேண்டிய அவசிய தேவை எமக்கு நிறையவே உள்ளது. 

நாம் அவற்றை செய்யாவிடின் எமது அடுத்த தலைமுறை(பெரும்பாலும் புலத்து தலைமுறை) எமது கலாச்சாரத்தை முற்று முழுதாக தூக்கி எறியும் நிலையே ஏற்படும். 

அதை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இக் கட்டுரையாளரின் ஆதங்கமும் அதுவாகவே தென்படுகின்றது. 

மேற்கத்திய கலாச்சாரங்களில் தமிழ்மக்கள் எதை உள்வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களின் கலாச்சாரத்தில் எதை தூக்கியெறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 
ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஒரு வேண்டுதல்! சாதியைப்பற்றி  இங்கே குறிப்பிட வேண்டாம். ஏனெனில் நீண்டகாலமாக பேசப்படும் விடயமென்பதால் அது வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 10:59 PM, nedukkalapoovan said:

அது இருக்கட்டும்.. புலம்பெயர் நாடுகளுக்குள் புலம்பெயரும் எம்மவர்களை ஏன் இதில கணக்கில காட்டேல்ல..??!  மடில கணம் போல. 🤣

அது தனியானதொரு கட்டுரையாகவேண்டியது. அதுதான் இதில் சேர்க்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 3:19 PM, Justin said:

முதலில் நீங்கள் தமிழர் எனப்படும் இனத்தினரிடம் எதிர் பார்க்கும் பண்புகள் விழுமியங்கள் எவை என வரையறை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்த வரை, கல்வியில் ஆர்வம் என்பதைத் தவிர தமிழர்களின் பண்புகளாகக் கொள்ளப் படும் பல விடயங்கள் பிற்போக்கானவை. உதாரணமாக, எவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வகுத்துக் கொண்டு,  மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது தமிழரின் பண்பு - இது களையப் பட வேண்டிய ஒரு பண்பு. என்னைப் பொறுத்த வரை, சுதந்திரமாக இருக்கவே புலம் பெயர்ந்த இடத்தில் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஒரு இனக் கலாச்சாரத்தைக் காக்கும் நோக்கில் வாழ இஷ்டமில்லை! 

சுதந்திர மனப்போக்கு அனைவரிடமும் இருப்பதுதான். ஆனால் அதை எல்லோரும் நினைத்ததுபோல் பயன்படுத்துவதால்த்தான் மேற்கத்தைய உலகிடம் காணப்படும் பலமணங்களும் சொந்தப் பெற்றோர் இல்லாது மாற்றாருடன் வாழும் நிலையும் தனித்து வாழும் நிலையும். தனித்தனியாக வாழும் நிலையும். அதேபோல் எமது இனமும் மாறவேண்டும் என்கிறீர்களா???  

On 12/28/2018 at 6:32 PM, manimaran said:

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

புதிதாகப் பெறுபவை எமக்கு நன்மை பயக்கும் என்றால் யாரும் கவலைகொள்ளப் போவதில்லை.
ஆனால் எமது அடையாளத்திலொன்றான பண்பாடு வழக்கொழிந்தால் இனமே அற்றுப்போகுமே.

காலத்துக்கு ஒவ்வாத கலாச்சாரம் என்று எவற்றை  நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 7:42 AM, tulpen said:

மிகச்சரியான பார்வை. எம்மிடையே கடைப்பிடிக்கப் படும் மிக பிற்போக்கான பழக்கங்களை எம்து பிள்ளைகளுக்கும் பழக்குவது எந்த வித்த்தில் நியாயம். அறிவுக்கு சற்றும் பொருந்தாகத விடயங்களை எமது கலாச்சாரம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒருவகை காட்டுமிராண்டித்தனம் தான். 

எம்மிடையே முற்போக்கான விடயங்கள் எத்தனையோ உள்ளனவே. அவற்றைக்கூட எமது எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தாது தேவையற்ற விடயங்களை மட்டும் தானே பலரும் பிள்ளைகளுக்கு முன்னால் செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/25/2018 at 2:58 AM, சண்டமாருதன் said:

 

எமது மனமும் தளமும் அடிப்படையில் பரந்துபட்டதாக மாறுவது புதிய தலமுறைகளுக்கு நல்லது. ஈழத்தமிழர் இப்போது கனடா தமிழர் இங்கிலாந்து தமிழர் என்று பல பிரிவுகளாக விரிவடைகின்றார்கள்.. பிரெஞ்சு டொச்சு ஜெர்மன் என்று பல அடயாளப் பின்புலங்களோடு இணைகின்றார்கள். தாய்த்தமிழகம் உட்பட உலகின் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரு பொது தன்மைக்குள் வருவதும் உறவுகள் ஏற்படுவதும் இந்த ஆக்கம் வெளிப்படுத்தும் எதிர்கால தலமுறைகள் குறித்த ஐயத்திற்கு தீர்வாக அமையலாம். 

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

On 12/27/2018 at 8:40 PM, ரதி said:

யாழில் எழுதுபவர்கள்,வேறு இடத்து எழுதும் போது விரும்பினால் அதை தாங்களே யாழில் வந்து இணைப்பார்கள் தானே!...கிருபனுக்கு ஏன் வேண்டாத வேலை😟

 

 

அதுதானே. கிருபன் அவசரப்பட்டிட்டார். உங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்  😀

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

மொழி கலாச்சாரம் பண்பாடு என்ற அடிப்படையில் எங்கும் ஒற்றுமையுடன் தமிழர்கள் இல்லை. கலாச்சரம் பண்பாடு என்பது எந்த வரையறைக்கும் உட்பட்டதும் இல்லை. பல்வேறு தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு இடையிலாக ஏற்படும் தொடர்பு எதிர்கால புலம்பெயர் தலமுறைக்கு தமது அடயாளங்களை உணர்ந்துகொள்ள உதவும் என்பதே எழுதப்பட்ட கருத்து. நீங்கள் மொழி கலாச்சாரம் பண்பாட்டை தக்கவைத்தால் தான் தொடர்புகளும் பொதுத் தன்மையும் வரும் என்று புரிந்துகொள்கின்றீர்கள் நான் தொடர்புகளும் பொதுத் தன்மையும் தான் எதிர்காலத் தலமுறைக்கு மொழியையும் தமது இன அடயாளங்களையும் தக்கவைக்க உதவும் என்கின்றறேன். 

உதாரணமாக றியுனியன் தீவில் உள்ள தமிழர்களுக்கும் தாய்த்தமிழகத்துக்குமிடைலான தொடர்பு அவர்கள் அடயாளங்களை தக்க வைக்க உதவும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு உதவியாக இருக்கும். றியூனியன் தீவில் உள்ள மக்கள் தமது மொழி கலாச்சாரம் பண்பாட்டைத் அழித்தொழித்தவிட்டால் எங்கிருந்து இது வரும் என்பது புரிதல் அல்ல. வேறு வேறு இனங்கள் வாழும் தேசத்திற்கு புலம்பெயர்ந்துவிட்டால் தலமுறைகள் தாண்டும் போது எமது இன அடயாளங்கள் காணாமல் போவது தவிர்க்க முடியாத நிகழ்வு. அவற்றை எவ்வாறு தக்கவைப்பது என்பது தான் இங்கு முன்வைக்க முயலும் கருத்துக்கள்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுதந்திர மனப்போக்கு அனைவரிடமும் இருப்பதுதான். ஆனால் அதை எல்லோரும் நினைத்ததுபோல் பயன்படுத்துவதால்த்தான் மேற்கத்தைய உலகிடம் காணப்படும் பலமணங்களும் சொந்தப் பெற்றோர் இல்லாது மாற்றாருடன் வாழும் நிலையும் தனித்து வாழும் நிலையும். தனித்தனியாக வாழும் நிலையும். அதேபோல் எமது இனமும் மாறவேண்டும் என்கிறீர்களா???  

 

தமிழராக இருந்தால் இதெல்லாம் புலத்தில் நடக்காது என்ற மாயையை முதலில் விடுங்கள். தாயத்திலேயே இதெல்லாம் நடந்தது நடக்கிறது. எங்கள் கண் முன் இல்லாமல் மறைவாக. இங்கே இவற்றை வெளிப்படையாகச் செய்கிறார்கள், அவ்வளவே வித்தியாசம். சிலர் வெள்ளைக் காரனில் தான் கள்ளக் காதலும், தன்னினச் சேர்க்கையும், பல தார/மறு மணமும் இருப்பதாக அதிர்ச்சியடைவதே ஒரு பெரிய நடிப்பு என்கிறேன் நான்! இதெல்லாம் சரியா என்றால், அது அவரவர் வாழ்வைப் பொறுத்தது! தடுக்க எவ்வளோ வழிகள் உண்டு: சுய மரியாதையை ஊக்குவியுங்கள், குறுகிய வாழ்வில் சாதிக்க நிறைய உண்டு என்ற ஒரு அவசரத்தை ஊட்டுங்கள், கல்வியைக் கட்டாயமாக்குங்கள், ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர வையுங்கள்! இவையெல்லாம் மனவியல் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட வழிகள். தமிழ் கலாச்சாரம் இல்லாமலே இதையெல்லாம் செய்யலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல நாடுகளிலும் பரந்து வாழும் தமிழ் மக்களிடமும் உள்ள ஒரே ஒற்றுமை எமது மொழியும் கலாச்சாரம் பண்பாடு போன்றவையுமே. அவை பற்றி எமது அடுத்ததலைமுறைக்குத்தெரியாது அழிந்தொழிந்தபின் எங்கிருந்து வரும் பொதுத் தன்மை????

அதுதானே. கிருபன் அவசரப்பட்டிட்டார். உங்களை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்  😀

கோமகன் போன்றோர் யாழுக்கு முற்றாக வருவதில்லை...அவரர்களைப் போன்றவரது ஆக்கங்களை கிருபன் போன்றோர் கொண்டு வந்து இணைப்பதில் தப்பில்லை.
        நீங்கள் யாழுக்கு இடைக்கிடை வந்து போறீங்கள்...ஒன்று இந்த கட்டுரையை யாழில் முதலில் எழுதி இருக்க வேண்டும் அல்லது நீங்களே கொண்டு வந்து இணைத்திருக்கலாம்...உங்களுக்கு இல்லாத அக்கறை கிருபனிற்கு எதற்கு என்று கிருபனிடம் தான் கேட்ட ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

கோமகன் போன்றோர் யாழுக்கு முற்றாக வருவதில்லை...அவரர்களைப் போன்றவரது ஆக்கங்களை கிருபன் போன்றோர் கொண்டு வந்து இணைப்பதில் தப்பில்லை.
        நீங்கள் யாழுக்கு இடைக்கிடை வந்து போறீங்கள்...ஒன்று இந்த கட்டுரையை யாழில் முதலில் எழுதி இருக்க வேண்டும் அல்லது நீங்களே கொண்டு வந்து இணைத்திருக்கலாம்...உங்களுக்கு இல்லாத அக்கறை கிருபனிற்கு எதற்கு என்று கிருபனிடம் தான் கேட்ட ஞாபகம்

நானும் வாசித்தவுடன் இணைக்கவில்லை. பலநாட்களின் பின்னர்தான் யாழில் இணைத்தேன். சுமே ஆன்ரியின் குமுறலை யாழ் வாசகர்களும் வாசிக்கவேண்டும், கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்ற நன்நோக்கம் தவிர வேறொன்றுமில்லை😬

Link to comment
Share on other sites

On 12/29/2018 at 10:06 PM, குமாரசாமி said:

மேற்கத்திய கலாச்சாரங்களில் தமிழ்மக்கள் எதை உள்வாங்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
தமிழ்மக்களின் கலாச்சாரத்தில் எதை தூக்கியெறிய வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 
ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள்.

ஒரு வேண்டுதல்! சாதியைப்பற்றி  இங்கே குறிப்பிட வேண்டாம். ஏனெனில் நீண்டகாலமாக பேசப்படும் விடயமென்பதால் அது வேண்டாம்.

 

 

22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காலத்துக்கு ஒவ்வாத கலாச்சாரம் என்று எவற்றை  நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று கூற முடியுமா ?????

 

குறுகிய வட்டத்தை விட்டு வெளியே எம்மை சிந்திக் கலாச்சாரரீதியாக தடையாக இருக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். 

தற்போதைய மேற்கத்தைய சமூக நாகரீக பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி நாம் உட்பட உலகின் பெரும்பாலானோரை பொறாமைப்பட வைக்கும் ஒன்றாகும். (சிலசமயம் எமது ஈகோ அதனை ஏற்க மறுக்கக்கூடும்)

இந்த வளர்ச்சிக்கு அவர்களது கலாச்சாரம் மற்றும் அதனடிப்படியில் பிறந்த சிந்தனையோட்டம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
எமக்கு இப்படியான ஒரு வளர்ச்சியை நோக்கி நகரும் விருப்பு இருப்பின் அவர்களது வழியினைப் பின்பற்றுவது எமக்கு பாதகமாக அமையாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, manimaran said:

 

குறுகிய வட்டத்தை விட்டு வெளியே எம்மை சிந்திக் கலாச்சாரரீதியாக தடையாக இருக்கும் அனைத்தும் இதனுள் அடங்கும். 

தற்போதைய மேற்கத்தைய சமூக நாகரீக பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி நாம் உட்பட உலகின் பெரும்பாலானோரை பொறாமைப்பட வைக்கும் ஒன்றாகும். (சிலசமயம் எமது ஈகோ அதனை ஏற்க மறுக்கக்கூடும்)

இந்த வளர்ச்சிக்கு அவர்களது கலாச்சாரம் மற்றும் அதனடிப்படியில் பிறந்த சிந்தனையோட்டம் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
எமக்கு இப்படியான ஒரு வளர்ச்சியை நோக்கி நகரும் விருப்பு இருப்பின் அவர்களது வழியினைப் பின்பற்றுவது எமக்கு பாதகமாக அமையாது. 

 

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sabesh said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

 

சபேஸ், நீங்கள் எப்படி மாற வேண்டும் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டுமென எதிர் பார்க்கிறீர்களா அல்லது இது rhetoric ஒரு கேள்வியா? முதல் கேசாக இருந்தால், உங்களுடைய வாழ்க்கைக்கு உவப்பான விளைவுகளைத் தரக் கூடிய மாற்றங்கள் தேவையா என்று நீங்கள் மட்டும் தான் முடிவெடுக்கலாம்! மணிமாறன் உட்பட யாரும் உங்களுக்குப் பட்டியல் தர இயலாது!  தமிழர் கலாச்சாரத்தில் எங்கள் சந்ததிக்கு வளர்ச்சித் தடையாக இருக்கும் ஏதாவது இருந்தால் அதை நாம் அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பது தான் இங்கே அடிக்கருத்து! இது concept, இதில் இருந்து செயல்முறையைத் திட்டமிடுவது ஆளுக்காள் மாறுபடும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Sabesh said:

எனக்கு இன்னும் விளங்கவில்லை அப்பிடி என்னதான் மாற வேண்டும் என்று. 

அவையள் சொல்ல வாறது சாதி பிரச்சனையைத்தான்...... அந்த சாதிப்பிரச்சனை புலிகள் காலத்திலை இல்லயெண்டது  அவையளுக்கு தெரியாது.
எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு இப்ப குய்யோ முய்யோ  எண்டு தொண்டை கிழிய கத்தீனம்....அதிலையும் ஒரு காமெடி என்னவெண்டால் உண்மையை ஒத்துக்கொள்ளுற பழக்கம்  அவையளுக்கு இன்னும் வரேல்லை :cool:

Link to comment
Share on other sites

12 hours ago, குமாரசாமி said:

அவையள் சொல்ல வாறது சாதி பிரச்சனையைத்தான்...... அந்த சாதிப்பிரச்சனை புலிகள் காலத்திலை இல்லயெண்டது  அவையளுக்கு தெரியாது.
எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு இப்ப குய்யோ முய்யோ  எண்டு தொண்டை கிழிய கத்தீனம்....அதிலையும் ஒரு காமெடி என்னவெண்டால் உண்மையை ஒத்துக்கொள்ளுற பழக்கம்  அவையளுக்கு இன்னும் வரேல்லை :cool:

சாதியம் எம்மிடையே உள்ள மிகப் பிற்போக்குத்தனமான காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. 

சிங்கள பேரினவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் தமிழரின் தொகையுடன் ஒப்பிடுகையில் சாதியம் மற்றும் பிரதேச வாத பாகுபாட்டினால் அன்றாடம் பாதிக்கப்படும் தமிழரின் தொகை அதிகமானது.

எமக்குள்ள பிரச்சணைகளுக்கு வெளிப்புறக் காரணிகளை குற்றம் சாட்டாது முதலில் எங்களால் எங்களுக்குள் வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்தாலே பெரும்பாலான பிரச்சணைகளுக்கு தீர்வு காணலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, manimaran said:

சாதியம் எம்மிடையே உள்ள மிகப் பிற்போக்குத்தனமான காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. 

சிங்கள பேரினவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்படும் தமிழரின் தொகையுடன் ஒப்பிடுகையில் சாதியம் மற்றும் பிரதேச வாத பாகுபாட்டினால் அன்றாடம் பாதிக்கப்படும் தமிழரின் தொகை அதிகமானது.

எமக்குள்ள பிரச்சணைகளுக்கு வெளிப்புறக் காரணிகளை குற்றம் சாட்டாது முதலில் எங்களால் எங்களுக்குள் வரும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதனை நிவர்த்தி செய்தாலே பெரும்பாலான பிரச்சணைகளுக்கு தீர்வு காணலாம். 

பிறகென்ன ஒருமாதிரி சுத்திவளைச்சு விசயத்துக்கு வந்துட்டியள்.....:grin:
சரி!  எங்கடை சமூகத்திலை மோசமான சாதிப்பிரச்சனை இருக்குத்தான்....இல்லையெண்டில்லை.
இந்த சாதிப்பிரச்சனையை எங்கையிருந்து? எந்த சமூகத்திடமிருந்து? எப்படி அழித்தொழிக்கலாம் எண்டு ஏதாவது ஐடியா உங்களிட்டை இருக்கா?

அல்லது யார் திருந்தினால் சமூகமும் நாடும் முன்னேறும் என நினைக்கின்றீர்கள்?
அல்லது வெள்ளாளர் மட்டும் திருந்தினால் போதும் என நினக்கின்றீர்களா?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2019 at 3:52 AM, குமாரசாமி said:

பிறகென்ன ஒருமாதிரி சுத்திவளைச்சு விசயத்துக்கு வந்துட்டியள்.....:grin:
சரி!  எங்கடை சமூகத்திலை மோசமான சாதிப்பிரச்சனை இருக்குத்தான்....இல்லையெண்டில்லை.
இந்த சாதிப்பிரச்சனையை எங்கையிருந்து? எந்த சமூகத்திடமிருந்து? எப்படி அழித்தொழிக்கலாம் எண்டு ஏதாவது ஐடியா உங்களிட்டை இருக்கா?

அல்லது யார் திருந்தினால் சமூகமும் நாடும் முன்னேறும் என நினைக்கின்றீர்கள்?
அல்லது வெள்ளாளர் மட்டும் திருந்தினால் போதும் என நினக்கின்றீர்களா?:cool:

நல்ல கேள்வி வாயால் விடை சொல்லலாம் ஆனால் செயற்படுத்த முடியாது மன்னதளவில் குமாரசாமி அண்ண 

Link to comment
Share on other sites

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நல்ல கேள்வி வாயால் விடை சொல்லலாம் ஆனால் செயற்படுத்த முடியாது மன்னதளவில் குமாரசாமி அண்ண 

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

எனக்கு தெரிய.....ஜேர்மனியில்  சாதி மாறி திருமணங்கள் பல நடந்துள்ளன. நானும் நேரில் சென்று பங்கேற்று வாழ்த்தியிருக்கின்றேன். அதில்......நாங்கள் மேல் சாதியில் சம்பந்தம் வைத்து விட்டோம் என்று மார்தட்டியதையும் நான் கவனிக்காமல் இல்லை.

நீங்களாக திருந்துங்கள் அல்லது தானாக திருந்த  விடுங்கள். சந்ததிகள் மாற கால அவகாசம் தேவை.

 புலம் பெயர்ந்து மதம் மாறிய ஜெகோவா தமிழரும் சாதி விடயத்தில் பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2019 at 4:34 AM, tulpen said:

நாகரீகம் அடைந்த ஒரு மனித இனத்தினல் நிச்சயமக நடைமுறைப்படுத்த முடியும். உதவக்கரை புராண இதிகாசங்களையும் அர்த்தமற்ற  மூடப்பழங்கங்களையும் ஏவனோ பரப்ப அதை எந்த கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு  அதை தாம் குடியேறிய  நாடுகளில்கூட  காவி வந்து கடைப்பிடிக்கும்  இனக்குழுவினால் மற்றயவர்களின் அடிமை சேவகத்தை தான் திறம்பட செய்ய முடியும். 

ஒளித்தாலும் ஒளிரும் அழிக்க முடியாது மீண்டும் அனலாகவே இருக்கும் அந்த தீ நீங்கள் மேலைத்தேயத்தை ஒப்பிட்டாலும் ஈழத்தில் புகைந்து கொண்டுதான் இருக்கிறது அணைப்ப தென்பது ........................

 எங்க ஊரில் சந்தானத்துக்கு கோவில் முக்கியமானது பிரபலமானது அந்த சந்தானத்துக்காரர்கள் நாங்கள் ஆனால் இதுவரை நான் அந்த கோவில் கூட்டங்களில் கலந்து கொண்டதில்லை  செல்வதும் இல்லை காரணம் மற்ற சமூகத்தை  உள்வாங்குவதில்லை ( மன்னிக்கவும்மற்ற சமூகம் என்றதை அப்படி நான் யாருடனும் நினைத்து பழகுவதும் இல்லை ) எல்லோரும் சக நண்பர்களே ஆனால் பெரியோர்கள் என்ற சிறு மனது உள்ளவர்களால் தீக்குச்சி எரிந்து கொண்டுதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

On 12/31/2018 at 4:55 AM, கிருபன் said:

நானும் வாசித்தவுடன் இணைக்கவில்லை. பலநாட்களின் பின்னர்தான் யாழில் இணைத்தேன். சுமே ஆன்ரியின் குமுறலை யாழ் வாசகர்களும் வாசிக்கவேண்டும், கருத்துக்களைத் தெரிவிக்கவேண்டும் என்ற நன்நோக்கம் தவிர வேறொன்றுமில்லை😬

சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, அபராஜிதன் said:

சுமே ஆன்ரி குத்து வாங்குவதை பார்க்கிறதில அவ்வளவு சந்தோசம் 😄

அடடா யாருக்கு மகிழ்வோ இல்லையோ உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிகிறது. என்னால் நீங்கள் அற்ப சந்தோசப் படுகிறீர்கள் என்பதே எத்தனை பெரிது. போக ஒரு half boil கட்டுரையை மதித்து இத்தனை உறவுகளும் தம் நேரத்தைக் கொடுத்துக் கருத்து எழுதியதும், நான் கிருபனுக்குத்தான் முதலில் நன்றி கூறியிருக்க வேண்டும். எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.  😎

Link to comment
Share on other sites

35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா யாருக்கு மகிழ்வோ இல்லையோ உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிகிறது. என்னால் நீங்கள் அற்ப சந்தோசப் படுகிறீர்கள் என்பதே எத்தனை பெரிது. போக ஒரு half boil கட்டுரையை மதித்து இத்தனை உறவுகளும் தம் நேரத்தைக் கொடுத்துக் கருத்து எழுதியதும், நான் கிருபனுக்குத்தான் முதலில் நன்றி கூறியிருக்க வேண்டும். எனக்கு நினைவூட்டிய உங்களுக்கு நன்றி.  😎

எங்க போய் முட்ட..:D, உங்களுக்கும் எனக்கும் என்ன காணி தகராறா? .நான் சந்தோசப்பட  இங்கு எதுவும் இல்லை... பகிடிய பகிடியா எடுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.