Jump to content

பாரை மீன் ரோஸ்ட் / Bake -நிழலி


Recommended Posts

என் மகளும் நானும் இணைந்து இன்று செய்த உணவு இது

தேவையானவை:

பாரை மீன் (முழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்)
வெங்காயத்தூள் - Onion powder
மிளகுத் தூள்
உள்ளித் தூள் - Garlic powder
மஞ்சள் தூள்
சோழ மாவு
மிளகாய்த் தூள் (ஊர் முறைப்படி தயாரிக்கப்பட்டது)
உப்பு
ஒலிவ் ஒயில்
லெமன்

20181224_155320.jpg

சமைக்கும் முறை

1. மீனை நன்கு குளிப்பாட்டி (சோப் போடக் கூடாது) கழுவி சுத்தப்படுத்தி கொள்ளவும்.
2. மீன் மீது கத்தியால் சிறு கீறல்கள் போடவும்
3. மிளகுத்தூள், மிளகாய்த் தூள், உள்ளித் தூள், வெங்காயத்தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் தேவையான அளவு இட்டு, சற்று சூடான தண்ணீர் ஊற்றி ஒன்றாகக் கலக்கவும்.
4. ஒன்றாக கலக்கிய பின் கலவை கொஞ்சம் தடிப்பாக வரும் வரைக்கும் தேவையான அளவு சோழ மாவை  இட்டு மீண்டும் கலக்கவும்
5. கலவையை மீன் மீது நன்றாக பூசவும். ஏற்கனவே கீறிய இடங்களினூடாக உள்ளே செல்லும் வண்ணம் கலவையை நன்கு பூச வேண்டும்.
6. கலவையை நன்கு பூசிய பின் அரை மணித்தியாலத்தில் இருந்து 1 மணித்தியாலம் வரைக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும் (Freezer இல் அல்ல)

Bake செய்தல்:

7. ஒரு நல்ல அவனில் (Oven) வைக்க கூடிய Tray இல் வைத்து மீனின் மேல் புறம் முழுக்க சிறிதளவு ஒலிவ் ஒயில் தடவி பின் அதன் மேல் லெமன் சாறை பிளிந்து விடவும்.

8. அவனில் 350 பரனைட் வெப்பத்தில் ஒரு மணித்தியாலம் வரைக்கும் bake செய்யவும். இந்த நேர அளவு மீனின் அளவை / எடையை பொறுத்து மாறுபடும்.

இடையில் மீனை எடுத்து அடுத்த பக்கம் புரட்டி போடவும் (கவனமாக செய்தல் வேண்டும், இல்லாவிடின் மீன் பிய்ந்து விடும்)

9. நன்கு bake ஆனவுடன் 10 நிமிடங்களுக்கு Grill பண்ணவும் ( அனேகமான அவனில் Grill பண்ணும் வசதி இருக்கும்).

Grill பண்ணி முடிந்தவுடன் வெளியே எடுத்து சூடு சற்று ஆறிய பின் சாப்பிடலாம்

இன்று என் மதிய உணவு இந்த மீனும் அவித்த முட்டையும் மட்டும் தான். பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டனர்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி....நிழலி !

நாங்கள் அடிக்கடி செய்யும் உணவு வகை இது..!

முன்பெல்லாம் பாரை மீன் தான் உபயோகிப்போம்!

இப்போது ....கிங்க் பிஷ் ..அளவுக்கு முன்னேறி விடடோம்!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ழு மீன், அல்லது தலை மட்டும் அகற்றப்பட்ட முக்கால் மீன்

தலையை நீக்கினால், இதில் ருசியும், இரசனையும் இல்லாமல் ஆகிவிடுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

Grill பண்ணி முடிந்தவுடன் வெளியே எடுத்து சூடு சற்று ஆறிய பின் சாப்பிடலாம்

இன்று என் மதிய உணவு இந்த மீனும் அவித்த முட்டையும் மட்டும் தான். பிள்ளைகளும் விரும்பி சாப்பிட்டனர்

பார்வைக்கு அழகாக இருக்கிறது.செய்முறையும் சுலபமாக இருப்பதால் செய்து பார்க்கத் தான் இருக்கு.

அது சரி என்ன மீனுடன் முட்டையும்?

Link to comment
Share on other sites

19 hours ago, புங்கையூரன் said:

நன்றி....நிழலி !

நாங்கள் அடிக்கடி செய்யும் உணவு வகை இது..!

முன்பெல்லாம் பாரை மீன் தான் உபயோகிப்போம்!

இப்போது ....கிங்க் பிஷ் ..அளவுக்கு முன்னேறி விடடோம்!😁

முழு king fish (அறுக்குளா?) அளவில் பெரிசா இருக்குமே?

சிவப்பு விளையை இப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்குமென என் சகளை சொன்னார்.

 

15 hours ago, Kadancha said:

தலையை நீக்கினால், இதில் ருசியும், இரசனையும் இல்லாமல் ஆகிவிடுமே.

தலையை தனியாக வெட்டித்தான் வாங்கினனான். அடுத்த முறை தலையுடன் செய்து பார்க்க வேண்டும்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

பார்வைக்கு அழகாக இருக்கிறது.செய்முறையும் சுலபமாக இருப்பதால் செய்து பார்க்கத் தான் இருக்கு.

அது சரி என்ன மீனுடன் முட்டையும்?

தயார் செய்ய பெரியளவு நேரம் எடுக்காது, ஆனால் bake பண்ணத்தான் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் எடுத்தது.

நான் லைட்டா ஒரு முட்டை பைத்தியம்..அத்துடன் வேறு ஒன்றும் மத்தியானத்து சாப்பிடவில்லை (சோறு கறி எதுவும் சாப்பிடவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

முழு king fish (அறுக்குளா?) அளவில் பெரிசா இருக்குமே?

சிவப்பு விளையை இப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்குமென என் சகளை சொன்னார்.

 

தலையை தனியாக வெட்டித்தான் வாங்கினனான். அடுத்த முறை தலையுடன் செய்து பார்க்க வேண்டும்.

தயார் செய்ய பெரியளவு நேரம் எடுக்காது, ஆனால் bake பண்ணத்தான் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் எடுத்தது.

நான் லைட்டா ஒரு முட்டை பைத்தியம்..அத்துடன் வேறு ஒன்றும் மத்தியானத்து சாப்பிடவில்லை (சோறு கறி எதுவும் சாப்பிடவில்லை)

ஆதிகாலத்தில் சுட்டுச் சாப்பிட்டவனை காட்டான் என்றான்கள் இப்ப சுட்டு சாப்பிட்டு பீலா விடுறாங்கள்  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆதிகாலத்தில் சுட்டுச் சாப்பிட்டவனை காட்டான் என்றான்கள் இப்ப சுட்டு சாப்பிட்டு பீலா விடுறாங்கள்  :grin:

இதை நான் சொன்னால் குதர்க்கம் பிடித்தவன் என்பீர்கள்......tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 9:49 PM, நிழலி said:

தேவையானவை:

-------
ஒலிவ் ஒயில்
லெமன்

நிழலி ... தமிழ் நாட்டுக்காரர் சமையல் குறிப்பு எழுதினமாதிரி... ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து   இருக்கலாம். 👈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

இதை நான் சொன்னால் குதர்க்கம் பிடித்தவன் என்பீர்கள்......tw_lol:

அப்படியெல்லம் சொல்ல மாட்டன் இன்னும் எதிர்பார்க்கிறன் அந்த காலத்தில் உப்பால பல்லை மினுக்குவார்கள் இப்ப உங்க ரூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கிறாங்கள்:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பேக் பண்ணுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் அவனை oven  வெறுமனே சூடாக்கி வைக்கவும். பின்பு  மீனை உள்ளே வைத்தால் விரைவில் பொரிந்து விடும்.........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியெல்லம் சொல்ல மாட்டன் இன்னும் எதிர்பார்க்கிறன் அந்த காலத்தில் உப்பால பல்லை மினுக்குவார்கள் இப்ப உங்க ரூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கிறாங்கள்:27_sunglasses:

உப்பால் பல் துலக்குவதை விட கடற்தொழில் செய்பவர்கள் கடல் மண்ணிலேயே பல்துலக்கி கொப்பளிப்பார்கள்.
பல்லு பளிச்சு பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

11 hours ago, தமிழ் சிறி said:

நிழலி ... தமிழ் நாட்டுக்காரர் சமையல் குறிப்பு எழுதினமாதிரி... ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து   இருக்கலாம். 👈

உஸ்
குருக்களின் குசு மணக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியெல்லம் சொல்ல மாட்டன் இன்னும் எதிர்பார்க்கிறன் அந்த காலத்தில் உப்பால பல்லை மினுக்குவார்கள் இப்ப உங்க ரூத்பேஸ்ட்டில் உப்பு இருக்கா என்று கேட்கிறாங்கள்:27_sunglasses:

கரி இல்லாட்டி எரிச்ச உமியாலை பல்லை தீட்டிப்பாருங்கோ.....பல்லும் வெள்ளையாய் இருக்கும்.அந்தமாதிரி ஆரோக்கியமாயும் இருக்கும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பால் பல் துலக்குவதை விட கடற்தொழில் செய்பவர்கள் கடல் மண்ணிலேயே பல்துலக்கி கொப்பளிப்பார்கள்.
பல்லு பளிச்சு பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

உஸ்
குருக்களின் குசு மணக்காது.

ஏன்.....குருக்கள் முடடை சாப்பிடாத படியாலா,?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஈழப்பிரியன் said:

உப்பால் பல் துலக்குவதை விட கடற்தொழில் செய்பவர்கள் கடல் மண்ணிலேயே பல்துலக்கி கொப்பளிப்பார்கள்.
 பல்லு பளிச்சு பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

ம்ம் அந்த மண்ணினால் பல் துலக்கி உப்புத்தண்ணியால் முகத்தை கழுவி தொழில் செய்ய செல்வோரை அதிகம் பார்க்கிறேன் இப்ப வரைக்கும் அண்ண 

 

18 hours ago, குமாரசாமி said:

கரி இல்லாட்டி எரிச்ச உமியாலை பல்லை தீட்டிப்பாருங்கோ.....பல்லும் வெள்ளையாய் இருக்கும்.அந்தமாதிரி ஆரோக்கியமாயும் இருக்கும். tw_blush:

ஓம் சாமி அண்ண செங்கள் சூளையில் செங்கல் பழுப்பு நிறமான பின் அதன் அடியில் உள்ள சாம்பல் அந்த மாதிரி அது போக அந்தக்கால பற்பொடி உமி சாம்பல் தானே , சேவல் கூவினாப்பிறகு அந்த வேப்பங்குச்சிய வாயில கவ்வி திரிஞ்ச காலமும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

ஏன்.....குருக்கள் முடடை சாப்பிடாத படியாலா,?😂

யார் சொன்னது குருக்கள் முட்டை சாப்பிடமாட்டார்களென்று?
கருவில்லாத முட்டை மச்சமில்லை அது சைவம் என்கிறார்கள்.பிராமணரும் சாப்பிடுகினமாம்.

Link to comment
Share on other sites

On 12/26/2018 at 12:55 AM, தமிழ் சிறி said:

நிழலி ... தமிழ் நாட்டுக்காரர் சமையல் குறிப்பு எழுதினமாதிரி... ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து   இருக்கலாம். 👈

இந்த குறிப்பை எழுதும் போது Lemon இற்கு தமிழ் சாத்துக்குடி தேசிக்காய் சரியாக வருமா என யோசித்துப் பார்த்தேன். ஏனென்றால் lime இற்கு தமிழ் தேசிக்காய், இந்த மஞ்சள் மளேர் என்று இருக்கும் lemon இற்கு என்ன தமிழ் என்று நினைவில் வரவில்லை. எனவே லெமன் என்றே எழுதினேன்

ஆனால் ஒலிவ் ஒயிலுக்கு தமிழ் சொல்லை தேட முற்படவேயில்லை. அதுக்கு சரியான தமிழ் சொல் இருக்குதா? இருந்தால் சொல்லவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இந்த குறிப்பை எழுதும் போது Lemon இற்கு தமிழ் சாத்துக்குடி தேசிக்காய் சரியாக வருமா என யோசித்துப் பார்த்தேன். ஏனென்றால் lime இற்கு தமிழ் தேசிக்காய், இந்த மஞ்சள் மளேர் என்று இருக்கும் lemon இற்கு என்ன தமிழ் என்று நினைவில் வரவில்லை. எனவே லெமன் என்றே எழுதினேன்

ஆனால் ஒலிவ் ஒயிலுக்கு தமிழ் சொல்லை தேட முற்படவேயில்லை. அதுக்கு சரியான தமிழ் சொல் இருக்குதா? இருந்தால் சொல்லவும்.

நிழலி,  Lemon ஐ...   எலுமிச்சை  (எலும்பிச்சம்  பழம்) என்று தான்.. ஊரில்  சொல்வார்கள்.
ஒலிவ் மரம் நாட்டில் இல்லாததால்... அதற்கு ஆங்கில வார்த்தையையே நேரடியாக பாவிக்கலாம்.
ஆனால்... அதனை,  ஒலிவ் ஒயில் என்று சொல்லாமல், ஒலிவ் எண்ணை  என்று சொல்லியிருக்கலாம்.  regular.png

Bildergebnis für à®à®²à¯à®®à®¿à®à¯à®à¯  Bildergebnis für à®à®²à¯à®®à®¿à®à¯à®à¯

கன  நாள்.... மனதிற்குள் இருந்த கேள்வியையும்..  இந்தத் தலைப்பில் கேட்டு விடுகின்றேன்.
படத்தில் பச்சையாக இருப்பது எலுமிச்சை. மஞ்சளாக இருப்பது தேசிக்காய். 
இரண்டையும்... புளிப்பு சுவைக்குத்தான் பயன் படுத்துவார்கள்.

என்னைப்  பொறுத்தவரையில்... அதன் புளிப்பு சுவை, ஒரே மாதிரி என்று தான் நினைக்கின்றேன்.
அத்துடன்... மஞ்சளை  விட பச்சை  விலையும்  அதிகம்.
ஆனால்...  சமையலுக்கு, சிலர்  குறிப்பிட்ட பழத்தை மட்டும் தேர்ந்து எடுப்பது ஏன் என்று தெரியவில்லை.

யாருக்காவது... இதன் வித்தியாசம் தெரியுமா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.