Jump to content

"இரணைமடு நீர்மட்டம் 39 அடியாக அதிகரிக்கும் வரையில் ஏன் வான்கதவுகள் திறக்கப்படவில்லை"


Recommended Posts

Image may contain: people standing, ocean, sky, cloud, beach, outdoor and water
Image may contain: sky, cloud, ocean, beach, outdoor, water and nature
Vicky Vigneswaran

"இரணைமடு நீர்மட்டம் 39 அடியாக அதிகரிக்கும் வரையில் ஏன் வான்கதவுகள் திறக்கப்படவில்லை" என்ற கேள்வி ஒன்றையும் 
"மழை பெய்துகொண்டிருந்தபோது பொறுப்பான பொறியியலாளர்கள் பொறுப்பற்று யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்" என்ற கருத்து ஒன்றையும் பார்த்தபோது அவசரத் தகவல் திரட்டல் ஒன்றை எத்தனித்தேன்.

எனது நீர்சார் அறிவையும் இணைத்து....

1. ஆங்கிலத்தில் antecedent conditions என்று சொல்லப்படுகிற 'உடனடியாக முன்னர் இருந்த நிலை' என்ன என்பது கடும் மழைக்காலத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும். உலர் நிலத்தில் பெய்யும் மழைக்கும் ஏற்கெனவே மழை பெய்து முழு ஈரமாக இருக்கும் நிலத்தில் பெய்யும் மழைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பின்னைய மழை ஒவ்வொரு துளியையும் வெள்ளமாக மாற்றும்.

2. Rainfall intensity என்ற மழைவீழ்ச்சி வீதம் வெள்ளம் வருவதில் கணிசமான பங்கை வகிக்கும். ஒரு வாரத்தில் பெய்து வெள்ளம் வராத மழை ஒரே நாளில் பெய்தால் வெள்ளம் வரும். இதுவே சில மணிநேரத்தில் பெய்தல் வெள்ளம் (flash flood) அடித்துக்கொண்டு ஓடும்.

3. வானிலை அவதான நிலையம் 78 மில்லிமீற்றர் மழை வரும் என்று சொன்னபோது 375 - 400 மில்லிமீற்றர் மழை ஒரு நாளில் கொட்டித் தீர்த்தது. அதாவது, கிளிநொச்சியின் ஆண்டுச் சராசரி (1240 மில்லிமீற்றர்) மழையின் காற்பங்கு ஒரு நாளில் அடித்திருக்கிறது. Risk Assessment என்ற இடர் மதிப்பீடு இந்த அளவுக்கு வெள்ளம் வந்து வைக்கும் என்று சுட்டியிருக்காது. இரவுகளில் தமது தொலைபேசிகளைத் திறந்து வைத்திருந்தாலும் பொறியியலாளர்களும் பொறுப்பாளர்களும் தூக்கத்துக்குப் போயிருப்பார்கள்.

4. எனது தகவல்களின்படி, பெருமழை கொட்டி நிலைமை சிக்கலானபோது கிளிநொச்சியில் நின்ற பொறியியலாளர் சுதாகரன் உடனடியாகவே இரணைமடு சென்றிருக்கிறார். குள முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் பரணீதரன் யாழ்ப்பாணத்திலிருந்து அவசரமாகப் புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார். தீர்மானம் எடுக்கவேண்டிய தொழில்சார் நிபுணர்கள் இரவிலேயே குளத்தருகில் இருந்திருக்கிறார்கள்.

5. நீரேந்து பகுதிக் கிராமங்களில் நீர்மட்டம் உயரத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும் அந்த உயர்வு கொஞ்சம் கொஞ்சமாகவே நடந்ததால் நீரேந்துபகுதி மக்கள் உயர்வை அவதானித்து நகர்வார்கள் என்று ஒரு தீர்மானத்தை அந்த இடத்தில் பொறியியலாளர்கள் எடுத்திருப்பார்கள். இதேவேளை, குளத்தின் இறங்குபகுதில் நிலைமை மோசமாக இருந்திருக்கும். ஏற்கெனவே நனைந்து போயிருக்கும் பிரதேசத்தில் திடீரென்று திறந்துவிடப்படும் அணை வெள்ளம் குறைந்தது நான்கு கிராமங்களையாவது சிதைத்திருக்கும். மக்களை இரவிரவாக எழுப்புகிற வசதியோ அவர்களது ஆடு மாடுகளை அவிழ்த்து காக்கிற வாய்ப்போ இருந்திருக்காது. திக்குத் தெரியாது ஓடி அவர்களே நீரில் அடிபட்டுப் போயிருப்பார்கள். இப்போது அதிக உயிர் இழப்பில்லாது தப்பியிருக்கும் கிளிநொச்சி, கதவுகளை இரவுடன் திறந்துவிட்டிருந்தால் மக்களையும் கால்நடைகளையும் ஆனையிறவு உப்புநீரேரியில் மட்டுமல்ல சுண்டிக்குளம் தொடுவாயிலும் பொறுக்கி எடுத்திருக்கும்.

6. அன்று இரவே கொஞ்சம் கொஞ்சமாகக் கதவுகளைத் திறக்க ஆரம்பித்து பகல் வெளிச்சத்தின் பின்னரே மக்களை எச்சரித்து கதவுகள் மேலும் திறக்கப்பட்டன. அப்படியிருந்தும் சில கிராமங்களில் கடற்படையின் துணையுடன் மக்கள் மீட்கப்பட்டிருந்தனர்.

7. கதவுகளைத் துரிதமாக திறந்திருந்தால் பல வீதிகளும் வீடுகளும் நீருடன் போயிருக்கும்.

திறந்தாலும் தவறு - திறக்காவிட்டாலும் தவறு என்றால் பொறியியலாளர்கள் எங்கே போவது?

இவ்வளவு மழை வரும் என்று உறுதியாகத் தெரிந்திருந்தால் முதலே கதவுகளைத் திறந்து நீரை வெளியேற்றி குறைந்த அளவு நீருடன் இரணைமடுவை வைத்திருந்திக்கலாம்.

எனது தகவல்கள் உண்மையானால் இந்த அளவுடன் கிளிநொச்சியைக் காத்த பொறியியலாளர்களைப் பாராட்டலாம் என்றே தோன்றுகிறது.

  •  
     
     
     
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.