Jump to content

`பேட்டை’ முதல் `மிராசு’ வரை... 2018-ல் கவனம் ஈர்த்த நாவல்கள்..! #2018Rewind


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியான இந்த ஆண்டை உண்மையில் நாவலுக்கான பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த நாவல்களுள் அதிக பதிப்பு… வித்தியாசமான கதை… களம்… என 2018-ல் அதிகமாகக் கவனம் ஈர்த்த முக்கியமான சில நாவல்கள் பற்றிய மீள்பார்வை.

லக்கியத்தில் எந்த ஆண்டையும்விட இந்த ஆண்டு நாவலின் பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட நாவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மூத்த எழுத்தாளர்களின் நாவல்கள் தொடங்கி புதிதாக வந்தவர்களின் நாவல்கள், கவிஞர்களாக மட்டுமே இருந்தவர்களின் நாவல்கள் எனப் பலரது நாவல்கள் அடங்கும். அந்த நாவல்களுள் அதிக பதிப்பு… வித்தியாசமான கதை… களம்… என 2018-ல் அதிக கவனம் ஈர்த்த முக்கியமான சில நாவல்கள் எவை என பார்க்கலாம். 

பேட்டை

தமிழ்ப்பிரபா எழுதிய `பேட்டை’, சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைக் களமாகக்கொண்ட நாவல். ரூபன் என்கிற கதாபாத்திரத்தின் வழியே மத்திய சென்னையில் இருக்கும் ஹவுஸிங் போர்டு வாழ்க்கையின் கொண்டாட்டம், அங்கு இருக்கும் மக்களின் வாழ்வியலோடு கலந்த கேரம் போர்டு, சைன் போர்டு ஆர்டிஸ்டுகள், கிறிஸ்துவ மதம், அது அந்த மக்களிடம் செலுத்தும் ஆதிக்கம் என இதுவரை யாரும் பார்த்திராத மத்திய சென்னை வாழ்க்கையைப் பேசியது. அதுமட்டுமல்ல, மனித வாழ்க்கையின் சின்னச் சின்ன ஆசைகள், கோபங்கள், அவர்களின் துன்பங்கள், இயலாமைகள், இழப்புகள் போன்றவற்றை மிக இயல்பாக ரூபன் மூலம் வாசகருக்கு அறிமுகம்செய்தது இந்த நாவல்.

 

மத்திய சென்னை பற்றிப் பல படைப்புகள் வந்துள்ளன என்றாலும், அந்த வட்டாரப் பகுதியின் தோற்றம், அந்த மக்களின் வாழ்வியல், அந்த மக்களின் கொண்டாட்டம், மொழி என அனைத்தையும் மிகவும் உயிர்ப்போடு பதிவுசெய்தது `பேட்டை'தான் என்று சொல்லலாம். இதுதான் ஒட்டுமொத்த மத்திய சென்னையின் வாழ்வியலா என்றால், இப்படித்தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை இருக்கும் என்று நிச்சயம் சொல்லலாம். ஏனென்றால், நாவலின் ஆசிரியர் தமிழ்ப்பிரபா, மத்திய சென்னையைக் கதையாகக் கேட்டவர் அல்ல; அந்த நிலத்தில் ஓர் அங்கமாக இருப்பவர். 'இதுதான் உண்மையில் அவரின் முதல் நாவலா?' என்று ஆச்சர்யமூட்டும் அளவிலான நேர்த்தியில் அமைந்த நாவல். இதுவரை மூன்று பதிப்புகளையும் உயிர்மை வழங்கிய சுஜாதா விருது மற்றும் விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கான த.மு.எ.க.ச விருது ஆகியவற்றைப் பெற்றது இந்த நாவல்.

 

பேட்டை - தமிழ் பிரபா - 2018 நாவல்கள்

பேட்டை, தமிழ்ப்பிரபா, காலச்சுவடு, பக்கம்: 350, விலை:390

 

அற்றவைகளால் நிரம்பியவள்

அஞ்சனா என்கிற மருத்துவரின் வாழ்க்கைப் பயணம் குறித்த இந்த நாவலை எழுதியது பிரியா விஜயராகவன். மருத்துவரான அஞ்சனா, தன் வாழ்நாளில் 10-க்கும் மேற்பட்ட ஆண்களையும் பெண்களையும் சந்திக்கிறாள். அவள் சந்திக்கும் அனைத்து ஆண்களாலும் காதலிக்கப்படுகிறாள். அனைத்து பெண்களும் ஏதாவது ஒரு துன்பத்துடனேயே இருக்கிறார்கள். அவர்கள் வழியாக பாலியல் வறட்சி மிகுந்த, சாதியம் பற்றிக்கொண்ட, இயலாமை மிகுந்த இந்தச் சமூகத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறாள் அஞ்சனா. எண்ணற்ற கதைமாந்தர்கள், ஏகப்பட்ட கிளைக் கதைகளுக்கு ஊடாக, வாழ்க்கை என்பது ஏற்றுக்கொள்ளுதலும் அதிலிருந்து கற்றுக்கொள்ளுதலுமே என்ற புரிதலில் நின்று, வாழ்வின் பக்கங்கள் அனைத்திலும் அன்பையே எழுதிச் செல்கிறாள் அஞ்சனா. இவை அனைத்தையும் பெண்ணின் பார்வையில் பார்க்கப்படுகிறது என்பதே இந்த நாவலின் மிக முக்கியமான அம்சமாக இருக்கிறது.

 

 

இதன் ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியை விளக்கும்விதமாக ஓர் ஓவியம் வரையப்பட்டிருக்கும். அந்த ஓவியத்தையும் இந்த நாவலாசிரியரே வரைந்துள்ளார். இந்த நாவலின் சுவாரஸ்யத்துக்கு இந்த முயற்சியும் ஒரு காரணம். இது இயக்குநர் ராம் நடத்திய இணையப் பக்கத்தில் தொடராக வந்து பிறகு நாவலாக உருவம் பெற்றுள்ளது. இந்த நாவலின் ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பதால் இதில் வரும் மருத்துவக் குறிப்புகள் அனைத்தும் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. மிக நீண்டநாள்களுக்குப் பிறகு வந்த பெண் படைப்பு. பெண்கள் எழுதிய நாவல்கள் மிகக் குறைவு. அதுவும் பெண் பார்வையில் ஒரு பெண்ணால் எழுதப்பட்ட நாவல்கள் மிகக்  குறைவு. அந்த வகையில் இந்த நாவல் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

அற்றவைகளால் நிறம்பியவள் - நாவல்கள்

பிரியா விஜயராகவன், கொம்பு பதிப்பகம், பக்கங்கள்: 712, விலை: 430

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

தாங்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தம் பற்றி எழுதும் ஒருசில எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழ்மகன். அப்படி அவரது அரசியல் சார்போடு வெளிவந்துள்ள `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' அவரது மற்றோர் அரசியல் புனைகதை எனலாம். தமிழ் மொழிதான் எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக உள்ளது. மேலும் தமிழர்கள் ஏன் தங்கள் மொழி மீது அவ்வளவு பிடிப்போடு இருக்கிறார்கள் என்பதை ஆதாரங்களோடு அறிவியல், அரசியல் புனைகதையாகச் சொல்லியுள்ளது இந்த நாவல். 

இவற்றை வெறும் உணர்வு நிலை சார்ந்து மட்டுமல்லாது வரலாற்றுச் சான்றுகளான செப்பேடுகள், கல்வெட்டுகள், வெளிநாட்டினர் மற்றும் தமிழக, இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுக் குறிப்புகளைக்கொண்டு விவரிக்கிறது. பல வரலாற்றுத் தரவுகள் இருந்தாலும் அவை நாவலின் கதையோடு ஒட்டியிருப்பது இந்த நாவலின் மிகப்பெரிய பலம். இன்றைய தலைமுறை வாசகர்களைக் கருத்தில்கொண்டு இன்றைய அரசியல் மற்றும் தமிழ்மொழியின் பெருமையை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ள வகையில் தமிழ்மகனின் ஜீன் குறிப்புகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இந்த நாவல் வெளிவந்து இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது என்பதும், டிஜிட்டல் யுகத்தில் கூடுதல் சிறப்பு.

நாவல்கள்

தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக்கங்கள்: 184, விலை:190 

நிலநடுக் கோடு

விட்டல் ராவ் எழுதிய `நிலநடுக் கோடு' நாவல், 60-களின் சென்னையை அப்படியே சித்திரித்திருக்கிறது. ஆங்கிலோ-இந்தியன் பின்னணி  சிறப்பு, சென்னையில் இருந்த இரண்டாம் உலகப்போர்க் கால ப்ங்கர், ஜூக் பாக்ஸ், பேக்கரிகள், மின்ரயில் போக்குவரத்துகள், தேர்தல்கள், தியேட்டர்கள் எல்லாவற்றைப் பற்றியும் சொல்ல வேண்டும் என்ற அக்கறை தெரிகிறது. எல்லாவற்றையும் மிகுந்த விளக்கம் கொடுத்து எழுதியிருக்கிறார். அவருடைய நினைவாற்றலும் கதையில் அவற்றைப் பின்னியவிதமும் அற்புதம். இந்தி எதிர்ப்புப் போராட்டம், அதனால் எழுந்த ஆட்சி மாற்றம் ஆகியவை ஓர் எள்ளலுடன் சிறிய சிறிய வரிகளில் கடந்து செல்கிறார். அவருக்கு ஏற்பில்லாத மாற்றமாக அது இருந்திருக்கலாம். இருந்தாலும் நடந்தவற்றை விவரித்திருக்கலாம். ஆயினும் சென்னையின் ஆவண நாவல் எனும் வகையிலும் வாசிப்பில் எளிமையும் இந்த நாவலின் சிறப்பு.

Nilanadukkodu_final_13493.jpg

விட்டல் ராவ், பாரதி புத்தகாலயம், பக்கங்கள்: 328, விலை: ரூ.295 

மிராசு

சி.எம்.முத்து, தஞ்சை வட்டார வழக்கின் ஒரே ஆதாரமாக இருக்கும் எழுத்தாளர். சுதந்திர காலகட்டத்துக்குப் பிறகான தஞ்சைப் பகுதி மிராசுகளின் வாழ்வியலைப் பதிவுசெய்திருக்கும் நாவல்தான் இந்த `மிராசு'. இதில் பெரிய திருப்பங்களோ, மர்ம முடிச்சுகளோ, பெரிய பெரிய சம்பவங்களின் கோப்புகளோ இல்லை. சேது காளிரங்கராயர் என்கிற மிராசுதாரின் வாழ்வு எந்த அளவுக்கு அபாரமானதாக, ரசனையானதாக இருந்தது என்பதை மட்டும் பதிவுசெய்யாமல், விவசாயத்தை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் எந்த அளவுக்கு மிடுக்கான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள் என ஓர் இனக்குழு வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளது இந்த நாவல். 

இன்றைய காலகட்டத்தில் நம் பண்டைய இனக்குழு வாழ்வியலை அதன் அழகியலோடு அறிந்துகொள்வது தேவையாக இருக்கிறது. அதன் அழுத்தமான ஆரம்பம் இந்த நாவல். இது ஓர் ஆரம்பம்தான். இதைப்போல தமிழகத்தின் இனக்குழு வாழ்வியலைப் பதிவுசெய்யும் நாவல்கள் வெளிவர வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது இந்த நாவல்.

மிராசு நாவல்

சி.எம்.முத்து, அனன்யா பதிப்பகம், பக்கங்கள்: 849, விலை:ரூ.780

இவை தவிர முக்கியமான பல நாவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், இவை மற்ற நாவல்களிலிருந்து ஒருசில வகையில் வேறுபட்டு அமைந்துள்ளன என்பதால், இங்கே தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.

https://www.vikatan.com/news/miscellaneous/145623-a-review-of-best-tamil-novels-released-in-2018.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.