Jump to content

அட்லாண்டிக் பெருங்கடலை ‘பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது சாதனையாளர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Frenchman-to-drift-across-Atlantic-ocean-on-wooden-barrel-720x450.jpeg

அட்லாண்டிக் பெருங்கடலை ‘பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது சாதனையாளர்!

படகுகளில் பொருத்தப்படும் இயந்திரங்களின் வலு எதுவும் இன்றி, பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்தியே அவர் இந்த பீப்பாய் கொள்கலன் மூலம் 4500 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ளார்.

தேங்கியுள்ள கடல் நீருக்கு மத்தியில், ஆறு போன்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி செல்லும் நீர்ப்பரப்பு ‘பெருங்கடல் நீரோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 71 வயதான ஜீன்-ஜாக்குவஸ் சவின் என்பவர் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை கடந்து 2019 மார்ச் மாதம் அளவில் அட்லாண்டிக்கின் மறுகரையை அடையமுடியும் என்று நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

அவரின் சுய முயற்சியால் தயாரிக்கப்பட்ட வலுவான கொள்கலனுக்குள் உறங்குவதற்கு தனி இடமுள்ளது. சமையலறை மற்றும் பொருட்களை வைப்பதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலடியின் நீரோட்டங்கள் குறித்து கடலியலாளர்கள் அறிவதற்காக, ஜீன்-ஜாக்குவஸ் சவின், தான் செல்லும் வழியில் குறிப்பான்களை இட்டுச் செல்வார்.

தனது பயணம் குறித்த மேலதிக தகவல்களை தனது முகநூல் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதன்படி இறுதியாக அவர் வெளியிட்ட ஒரு பதிவில் பீப்பாய் நன்றாக ஒத்துழைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி செவ்வியொன்றில் பேசிய ஜீன், ”காலநிலை நன்றாக இருக்கிறது. மணிக்கு 2-3 கிமீ வேகத்தில் சென்று கொண்டிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை வரை சாதகமான வகையில் காலநிலை நிலவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜீன்-ஜாக்குவஸ் சவின் ஒரு முன்னாள் ராணுவ பாராசூட் வீரர் என்பதுடன், வனச்சரக அலுவலராகவும், விமானியாகவும் பணியாற்றியிருக்கிறார்.

மரப் பிசின் பூசப்பட்ட தனது பிளைவுட் பீப்பாய் கொள்கலன் மூலம் 4500 கி.மீ தொலைவில் உள்ள கரீபியன் தீவுகளைச் சென்றடைய கடலடி நீரோட்டங்கள் மட்டுமே போதுமானவை என்று அவர் கூறுகிறார்.

இந்த பீப்பாய் சுமார் மூன்று மீட்டர் நீளம் கொண்டது. 2.10 மீட்டர் அகலமும் ஆறு சதுர மீட்டர் அளவுக்கு தங்குமிட வசதியும் கொண்டுள்ளது.

இதன் தரையில் கப்பல் சாளரம் ஒன்று உள்ளது. இதன் மூலம் கடலில் தனது கொள்கலன் கடந்து செல்லும் பாதையில் ஜீன்-ஜாக்குவஸால் மீன்களை அவதானிக்க முடியும்.

இந்த கொள்கலன் வலுவான அலைகளை தாங்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆர்கா திமிங்கிலங்களின் தாக்குதல்களை சமாளிக்கும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வெளியுலக தொடர்புக்கும், ஜி.பி.எஸ் வசதிக்காகவும் மின்சாரம் தேவைப்படும் என்பதால் அதற்கு தேவையான மின்சாரத்தை தயாரித்துத் தரும் வண்ணம் சூரிய சக்தி மின்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்கலனை தயாரிப்பதற்கு அவருக்கு தேவையான 68 ஆயிரம் டொலர் நிதியை பலரிடமிருந்து கூட்டாக நிதி திரட்டும் திட்டத்தின் (Crowd Funding) மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.

அவரது கொள்கலனில் வாத்து கறி உள்ளிட்ட உணவுப் பொருள்களும், புத்தாண்டு தினத்தன்று மாலையில் அருந்துவதற்கு வெள்ளை ஒயின் போத்தல்களும் உள்ளன. ஜனவரி 14-ம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தேவையான சிவப்பு ஒயினையும் கொள்கலனில் வைத்திருக்கிறார்.

அவர் செல்லும் வழியில் போடும் குறிப்பான்கள் (Marker), JCOMMOPS சர்வதேச கடல் கண்காணிப்பகத்தின் கடலியலாளர்களின் கடலடி நீரோட்டங்கள் குறித்த ஆய்வுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://athavannews.com/அட்லாண்டிக்-பெருங்கடலை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

அவரது கொள்கலனில் வாத்து கறி உள்ளிட்ட உணவுப் பொருள்களும், புத்தாண்டு தினத்தன்று மாலையில் அருந்துவதற்கு வெள்ளை ஒயின் போத்தல்களும் உள்ளன. ஜனவரி 14-ம் திகதி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தேவையான சிவப்பு ஒயினையும் கொள்கலனில் வைத்திருக்கிறார்.

எண்டாலும் கோப்பி தேத்தண்ணி போட்டுக்குடுக்க ஒரு பெண் பிரசையை கூட்டிக்கொண்டுபோயிருக்கலாம்......tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

எண்டாலும் கோப்பி தேத்தண்ணி போட்டுக்குடுக்க ஒரு பெண் பிரசையை கூட்டிக்கொண்டுபோயிருக்கலாம்......tw_blush:

விடுங்கள் அவர் ஒரு குறிக்கோளோடு கரிபியன் தீவை கடக்க போகிறார், அவரை ஒரு குறியோடு கன்னித்தீவுக்குள் கவுண்டு போயிட வழி சொல்கிறீர்கள்.....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.