Jump to content

ஆங்கிலத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி! -1


Recommended Posts

ஆங்கிலத்துடன் ஒரு அக்கப்போர்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

"இங்கிலீஸ்காரன் 26 எழுத்தை வைச்சுக்கிட்டு ஒலகத்தையே ஆட்டிப்படைக்கிறான்! தமிழ்-ல உயிர்-12; மெய்:1௮, உயிர்மெய்:216; ஆய்தம்:1 ன்னு ஆகமொத்தம் 247 வைச்சி ஒண்ணும் கிழிக்க முடியலே! தமிழ உருவாக்கின சிவபெருமான் short and sweet-ஆ யோசிக்கல போல", என்றார் நண்பர்.

"இருக்கலாம்!", என்றேன் நான்.

"என்னப்பா! ஏதாச்சும் சுவாரசியமாச் சொல்லுவேன்னு நெனச்சா பொசுக்குனு படுத்துட்டயே!", என்று உண்மையாகவே வருத்தப்பட்டார் நண்பர்.

"கேள்வி கேட்டால் விடை சொல்லலாம். நீயே முடிவும் சொல்லி, விரிவான கருத்தும் சொன்ன பிறகு, நான் சொல்ல என்ன இருக்கு?", என்றேன் நான்.

"அப்ப நான் சொன்னது சரியானது இல்லையா?", என்று படபடத்தார் நண்பர்.

"அப்படிச் சொல்லவில்லையே! உண்மையின் ஒரு பகுதியை மட்டுமே சொன்னாய்", என்றேன் நான்.

"மிச்சத்தை நீயே சொல்லேன்! கேட்டுக்கிறேன்", என்றார் நண்பர்.

தமிழ் - 'குறுங்கணக்கு'ம் 'நெடுங்கணக்கு'ம்

"தமிழில் vowels எனப்படும் உயிரெழுத்துக்கள் 12 தனியாகவும், Consonents எனப்படும் உயிரின்றி இயங்காத மெய்யெழுத்துக்கள் : 18 தனியாகவும், ஆக மொத்தம் 30 அடிப்படை எழுத்துக்கள்தாம் உண்டு!. ஆங்கிலத்தில் இப்படித் தனித்தனியே பிரிக்காமல், vowels எனப்படும் ஆங்கில உயிரெழுத்துக்கள் a, e, i,  o, u ஐந்தும், Consonents எனப்படும் ஏனைய மெய்யெழுத்துக்கள் 21-றுடன் விரவிக்கலந்து 26 எழுத்துக்கள் a-z எழுதப்படுகின்றன.", என்றேன் நான்.

"அப்படீன்னா ஆய்த எழுத்து 1, உயிர்மெய் 216 எழுத்துக்கள் ஆகியன தமிழ் எழுத்துக்கள் இல்லையா?", என்று கொதித்தார் நண்பர்.

"இல்லையென்று சொல்லவில்லை! உயிரும் மெய்யுமான அடிப்படை எழுத்துக்கள் தம்முள் புணர்வதால் உருவாகும் கூட்டு எழுத்துக்களின் மொத்தமே உயிர்மெய் 216. அனைத்தும் கூடிய 247 எழுத்துக்களுக்கு 'தமிழ் நெடுங்கணக்கு' என்றும், 30 அடிப்படை எழுத்துக்களுக்கு 'தமிழ் குறுங்கணக்கு' என்றும் பெயர். ஆங்கில மொழி 'Vowel:5+consonents:21 = 26 என்ற ஆங்கில குறுங்கணக்குடன் தன் எழுத்துக் கணக்கை முடித்துக்கொண்டது.", என்றேன் நான்.

18-19ம் நூற்றாண்டுவரை உயிர்மெய் இல்லாத ஆங்கில ஐரோப்பிய மொழிகள்

'உயிர்மெய் இல்லாமலா ஆங்கிலம் இயங்குகின்றது? நம்புறமாதி இல்லையே!", என்று சந்தேகப்பட்டார் நண்பர்.

"ஆங்கிலம் மட்டுமல்ல, ஜேர்மன், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகள் பலவும் உயிர்மெய் இல்லாமலேதான் 19வது நூற்றாண்டுவரை இயங்கிவந்தன என்பதை அறியவும்.", என்றேன் நான்.

"மற்றது கிடக்கட்டும்! ஆங்கிலத்தின் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை? எப்படி எழுதுகிறார்கள்?", என்றார் நண்பர் ஆர்வம் பொங்க.

"சொல்கிறேன்! அதற்கு முன், உயிர்மெய் என்றால் என்ன? என்று நீ சொல்", என்றேன் நான்.

"உயிர்மெய் என்றால் 216 உயிர்மெய் எழுத்துக்களின் வரிவடிவங்கள்.", என்றார் நண்பர்.

தமிழ் எழுத்துக்கள் ஒலிவடிவைக் குறிப்பன!

"இல்லை! உயிர்மெய் 216ம் வரிவடிவ எழுத்துக்கள் அன்று! அவை 216 உயிர்மெய் ஒலிவடிவக் குறியீடுகள். உயிரெழுத்து 12ம் மெய்யெழுத்து 18ம் வெறும் எழுத்துக்களின் வரிவடிவங்கள் அன்று. அவையும் ஒலிவடிவக் குறியீடுகளே!", என்றேன் நான்.

"இரண்டுக்கும் என்ன வேறுபாடு?", என்றார் நண்பர்.

ஆங்கில ஐரோப்பிய  எழுத்துக்கள் வரிவடிவைக் குறிப்பன!

"ஆங்கிலத்தில், அடிப்படை எழுத்துக்களின் வரிவடிவங்களே 26 எழுத்துக்களாக இருப்பதால்தான் எழுதுவதுபோல் படிக்க முடிவதில்லை. 'அ' 'ம்' 'மா' என்ற தனித்தனி எழுத்துக்களின் சேர்ந்த ஒலிகளும், 'அம்மா' என்ற சொல்லின் ஒலியும் ஒத்துப்போகிறது இல்லையா? ஆனால், 'P' 'U' 'T' என்ற தனி எழுத்துக்களின் ஒலிகளும், 'PUT' என்ற சொல்லின் ஒலியும் ஒத்தே போகவில்லையே! ஆங்கில எழுத்துக்கள் வரிவடிவத்தை மட்டுமே குறிப்பதால், ஆங்கிலச் சொல்லில் வரும் தனிச்சொற்களை உச்சரித்து, அச்சொல்லின் ஒலியைப் பெற இயலாது.  'BUT' மற்றும் 'PUT' வரிவடிவில் ஒரே ஒலிவடிவு இருப்பதுபோல் எழுத்தால் காணப்பட்டாலும், ஒலி வடிவில் முதலாவது 'பட்' என்றும் இரண்டாவது 'புட்' என்றும் ஒலிக்கப்படுகின்றன. ஆங்கிலம் கற்பவர் இவ்வொலி வடிவங்களை செவி வழியாக ஆங்கில ஆசிரியரின் வாய் உச்சரிப்பைக் கேட்டுக் கேட்டு, மனதில் மீண்டும் மீண்டும் 'மக்கு உரு'ப் போட்டுதான் நுனிநாக்கு ஆங்கிலம் பேச முடியும்!", என்றேன் நான்.

"நமக்குச் சரி! ஆங்கிலேயனுக்கு எப்படி இம்முறை சரிப்படும்? குழம்புகிறதே!", என்று சோர்வானார் நண்பர்.

"சரி! உன் வழிக்கே வருகிறேன். நாம தமிழ் எழுத்துக்களை எப்போ கத்துக்கிட்டோம்?", என்றேன் நான்.

"என்னப்பா! நம்ம காலத்துல இந்த LKG கருமாந்திரம்லா வரலன்றதால அஞ்சு வயசு முடிஞ்சுதான் ஒன்றாம் வகுப்புக்கு ஆனா, ஆவன்னா கத்துக்கப் போனோம். அதுக்கு இப்போ என்ன?", என்றார் சலிப்புடன்.

"ஒன்னாம் வகுப்பு போறதுக்கு முன்னாலேயே தமிழ் பேசுனியா இல்லையா?", என்றேன் நான்.

"இதென்னப்பா வம்பாப் போச்சு! நான் பத்து மாசத்திலேயே பேச ஆரம்பிச்சுட்டேன்னு எங்கம்மா சொல்லுவாங்க! பொறவு அஞ்சு வயசாகும்போது எப்படிப் பேசிருப்பேன்?", என்றார் நக்கலாக.

"அதேதான்! தமிழ், ஒலிவடிவத்தில் தாய்-தந்தை உள்ளிட்ட உற்றார்-உறவினரால் நாமறியாமலேயே நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! அதனால்தான், 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!' என்று முதலில் அறிவித்த முதல் ஆசிரியர்களாக தாய்-தந்தை வருகின்றார்கள்.", என்றேன் நான்.

"தெரிஞ்ச விசயம்தானே!", என்றார் நண்பர் சலிப்புடன்.

"ஆமாம், இதேபோலத்தான், ஆங்கிலேயன் வீட்டுக் குழந்தை, ஒலிவடிவ ஆங்கிலத்தைத் அதனுடைய Dady-Mummy உள்ளிட்ட Near and Dear மூலம் வீட்டிலேயே கற்றுக் கொண்டுவிடுகின்றது. School-ல் வரிவடிவ எழுத்தைக் கூட்டி, சொல்லைக் கற்பிக்கும்போது, ஒலிவடிவம் மறைமுகமாகப் பயிற்றுவிக்கப்படுகின்றது. "BUT'-ஐயும் 'PUT'ஐயும் வரிவடிவ உச்சரிப்பில் 'பியுடி' என்று  தனித்தனி எழுத்துக்களாகப் படித்தாலும், 'BUT' என்ற சொல்லை ஒலிவடிவில் மட்டுமே உள்வாங்கிக் கொள்ளப் பயிற்றுவிக்கப்படுகின்றது. வேற்றுமொழியினருக்கு ஆங்கிலம் பயிற்றுவித்தலில் இந்த தனியெழுத்து வரிவடிவம், சொல்-ஒலிவடிவம் முரண்பாடுகள் பெரும் தடைக்கற்களாக உருவெடுக்கின்றன!" என்றேன் நான்.

"ஆங்கிலேயனே ஒலிவடிவை மக்கு-உருப் போடணும்னா நம்ம கதையக் கேக்கவே வேண்டாம்!", என்ற நண்பர், '18-19ம் நூற்றாண்டில் ஆங்கிலத்துல உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கியவர் யார்? ஆங்கில உயிர்மெய் எழுத்துக்கள் எப்படி எழுதப்படுகின்றன? நான் அவற்றை இதுவரை பார்த்ததில்லையே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேன்", என்றார் அப்பாவியாக.

"அது ஒரு தனிக்கதை! இப்போ வெளியூருக்குப் போறேன்! நாளை மறுநாள் வந்து சொல்றேனே!", என்றவாறு விடைபெற்றேன்!

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

மொழிகளின் இயற்கை அறிவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆசிரியரே , வெளியூரில் இருந்து வந்து கொண்டிருக்கிறீர்களா, நான் இன்னும் ஆலமரத்தடியை விட்டு அகலவேயில்லை......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.