Jump to content

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்


Recommended Posts

37 minutes ago, Rajesh said:

விடுதலைப் புலிகள் தங்கள் குறிக்கோளை தெளிவாக சொல்லி, அதன்படி நடக்க முற்படடார்கள். அவர்கள் தங்களை அரசியல் கட்சி என்று அறிவிக்கவில்லை. அவர்களின் பிரதான குறிக்கோள் விடுதலைப் போராட்டம். பிற்காலத்தில் உருவான அவர்களது அரசியல் துறை அவர்களுக்கு ஆயுத போராட்டத்துக்கு வலு சேர்க்கத் தான். சில்லறை அரசியலுக்கு இல்லை.  எனவே இதற்குள் விடுதலைப்புலிகளை ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தானம் என்டு நான் நினைக்கிறன்.

இல்லை ராஜேஸ் நிச்சயமாக அவர்கள் அரசியலையும் இராணுவத்துடன் சமமாக நகர்ததி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நடந்த தவறை பாடமாக எடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
21 hours ago, Justin said:

சரி நெல்லையன், இப்போது முகநூல் எனப்படும் நம்பிக்கையான நூலில் எழுதியுள்ள படிக்கு, துரோகி என்று கையில் நகம் கூட இல்லாத ஒருவர் சொன்னால், அதைக் கேட்டு ஒரு ஆயுததாரி துரோகி என்று அழைக்கப்  பட்டவரைக் கொன்று போட்டால், துரோகி என்று கூப்பிட்டவருக்கு கொலையில் பாரிய பங்கு! கொலை செய்தவன் தூண்டப் பட்ட பலியாடு! அப்படியா? சரி , இப்ப சுமந்திரனுக்கு எதிராக எத்தனை சேறடிப்பு நீங்கள் உட்பட இங்கே பலரிடம் இருந்து? பல சேறடிப்புகளுக்கு அடிப்படையான செய்தியே பொய்ச்செய்தி! நாளை சுமைந்திரனுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் உட்பட இந்தப் பொய்ச் செய்திகாவிகள் பெரும் பொறுப்பை ஏற்பீர்களா? நடை முறை எல்லாருக்கும் ஒன்றல்லவா? ஆமா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள்!  

நீரும், என்னைப்போல் நுனிப்புல் மேய்தவுடன் ...! தோழர் பாலன், புலிகளின் தலைவர்,  சுந்தரம், சந்ததியார் ..உட்பட பலருடன் இருந்த ஆரம்பகால உறுப்பினர். கரவெட்டியை சேர்ந்தவர், பின்னாளில் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை, இந்திய/தமிழக நக்ஸலைட்டுகளின் உதவியுடன் நடாத்தி இந்திய சிறையில் பலகாலம் இருந்தவர். தோழர் பாலன் புலியாதரவாளர் அல்லர்! ... இவர்கள் கூறியதை மறுத்து, மாறாக அரசியலில் நேற்று பின் கதவால் உள்ளட்டு விட்டு ... ஓரிரு நாளுக்கு முன்னும், யாழில் சிவஞானத்தார், "வரலாறு தெரியாத அரசியல் கற்றுக்குட்டிகள்" என்று இத்தலைப்பு சம்பந்தமான கேள்விக்கு விடையளித்தார் .. இந்தா/அந்தா என்று படம் காட்டும் ஏமாற்றுவாதியின் கதையை கேட்க சொல்கிறீர்களா?  ... ரணிலின் சும்முக்கு ஏதாவது நடந்தால், அது மகிந்தவால்தான்! மற்றது சும்மை சுற்றி உள்ள அடுக்கு பாதுகாப்பு அரண் புகைப்படங்கள் தாங்கள் பார்வையிடவில்லைப்போல?

14 hours ago, ஜீவன் சிவா said:

அப்பாடா 

தலைவருக்கு சொந்தமா சிந்திக்கவே தெரியாது என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

இதுக்கு மேல நான் என்னத்தை சொல்ல / நன்றி வணக்கம் 

 


அப்போ, தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலருக்கு வயது 18 ஓ, 20 தான். அன்று அதில் நீங்கள் இருந்திருந்தால் என்ன, நான் இருந்திருந்தால் என்ன ... உடன் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டும், பிறரால் இலகுவாக பிழையாக வழிநடாத்தக்கூடிய, நிறைய சிந்திக்கக்கூடிய வயதல்ல!  

இத்தலைப்பில், ஓர் கருத்தொன்று .."பாலா அண்ணா-தமிழ்ச்செல்வன்"  ..தொடர்பாக பதியப்பட்டிருந்தது. நீக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். எனது கருத்தும் 2008இற்கு முன்னிருந்தே, அதுதான்! எம் அழிவிற்கு மிகப்பெரிய காரணம் "********" தான்"!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nellaiyan said:

நீரும், என்னைப்போல் நுனிப்புல் மேய்தவுடன் ...! தோழர் பாலன், புலிகளின் தலைவர்,  சுந்தரம், சந்ததியார் ..உட்பட பலருடன் இருந்த ஆரம்பகால உறுப்பினர். கரவெட்டியை சேர்ந்தவர், பின்னாளில் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை எனும் அமைப்பை, இந்திய/தமிழக நக்ஸலைட்டுகளின் உதவியுடன் நடாத்தி இந்திய சிறையில் பலகாலம் இருந்தவர். தோழர் பாலன் புலியாதரவாளர் அல்லர்! ... இவர்கள் கூறியதை மறுத்து, மாறாக அரசியலில் நேற்று பின் கதவால் உள்ளட்டு விட்டு ... ஓரிரு நாளுக்கு முன்னும், யாழில் சிவஞானத்தார், "வரலாறு தெரியாத அரசியல் கற்றுக்குட்டிகள்" என்று இத்தலைப்பு சம்பந்தமான கேள்விக்கு விடையளித்தார் .. இந்தா/அந்தா என்று படம் காட்டும் ஏமாற்றுவாதியின் கதையை கேட்க சொல்கிறீர்களா?  ... ரணிலின் சும்முக்கு ஏதாவது நடந்தால், அது மகிந்தவால்தான்! மற்றது சும்மை சுற்றி உள்ள அடுக்கு பாதுகாப்பு அரண் புகைப்படங்கள் தாங்கள் பார்வையிடவில்லைப்போல?


அப்போ, தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பலருக்கு வயது 18 ஓ, 20 தான். அன்று அதில் நீங்கள் இருந்திருந்தால் என்ன, நான் இருந்திருந்தால் என்ன ... உடன் உணர்ச்சிகளுக்கு வசப்பட்டும், பிறரால் இலகுவாக பிழையாக வழிநடாத்தக்கூடிய, நிறைய சிந்திக்கக்கூடிய வயதல்ல!  

இத்தலைப்பில், ஓர் கருத்தொன்று .."பாலா அண்ணா-தமிழ்ச்செல்வன்"  ..தொடர்பாக பதியப்பட்டிருந்தது. நீக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். எனது கருத்தும் 2008இற்கு முன்னிருந்தே, அதுதான்! எம் அழிவிற்கு மிகப்பெரிய காரணம் "********" தான்"!

ஓம் ஐயா! யாராய் இருந்தால் என்ன? இவ்வளவு உறுதியாய் சொல்லக் கூடியவர் ஏன் தான் முகநூலில் எழுதுவான்? ஒரு புத்தகமாய் விடட்டும் அல்லது நேரடியாக அறிக்கையாக விடட்டும்! வழக்குப் போட்டு விடுவார்கள் என்ற பயம் தானே இந்த கேள்விக் குறிகளோடு முகநூலில் "அபிப்பிராயத்தை தரவாக" மாற்றும் அல்கெமி வேலையின் பின்னணி? பாது காப்புப் பார்த்தேன்! நீலனும் இதை விடப் பெரிய பாதுகாப்புடன் சென்ற வேளையில் தான் தற்கொலைக் குண்டு தாரி தாக்கினார்! ஹிஸ்புல்லா இயக்கம் தான் செய்திருக்கும் என நினைக்கிறேன்!

(மற்ற படி உங்களுக்கென்று வரும் போது விதிகள் வேறென்று அறிவேன்! அதை உங்கள் வாயால் கேட்கவே அந்த கேள்வி: அரசு அல்லது மகிந்த தான் கொல்வர், நீங்கள் அல்ல!)

Link to comment
Share on other sites

15 hours ago, tulpen said:

ஆனால் விடுதலைபுலிகள் அரசியலை செய்ய தடையாக இருக்காவிட்டாலும் நமது தமிழ் கனவான் அரசியல்வாதிகள் சிறந்த அரசியலை முன்னெடுத்திருக்க மாட்டார்கள் என்பதற்கு ஆதாரம் விடுதலைபுலிகள் உருவாக முன்பே அவர்கள் கீழ்தரமான சுயநல அரசியலை தான் செய்தார்கள் என்ற வரலாற்று பாடம். அவர்கள்  மக்கள் அரசியலை செய்திருந்தால் ஆயுதப்போராட்டமே உருவாகி இருக்காது. ஆயுதப்போராட்டம் முடிந்து 10 வருடமாகி விட்ட போதிலும்  இப்போது கூட அவர்களால்  சிறந்த ராஜதந்திர அரசியலை செய்ய முடியாமல் இருப்பதை காண்கின்றோம்.  தமிழ் மக்களிடம் நன்கு படித்த சட்ட அறிஞர்களை கொண்ட பல அரசியல் தலைமைகள் நாடு சுதந்திரம் அடைய முன்பே இருந்தார்கள். அரசியலை மேற்கொள்ள போதிய கால அவகாசமும் இருந்த‍து. அதை பயன்படுத்தாமல் இருந்து  காலத்தை விரயம் செய்து ஆயுத போராட்டதில் மக்களை தள்ளி விட்டு இப்போது விடுதலை புலிகள் மீது மட்டும் பழி போடுவது சரியானதல்ல. அதே போல் விடுதலைப்புலிகளின் தோல்விக்கு மற்றயவர்கள் மீது மட்டும் பழியை போடுவதும் சரியானதல்ல. 

புரிந்துகொள்ளவேண்டிய கருத்து. நன்றிகள்.

ஆங்கிலேய ஆட்சியில் கணக்கு பிளளை கண்காணி குமாஸ்தா வேலை பாரக்கவும் படித்த கூட்டமே புத்திஜீவிதக் கூட்டம். இந்த படிப்பும் மேற்தட்டு வர்க்கத்துக்கே சாத்தியமானது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இந்த கண்காணிகள் சிங்களவர்களை நடத்திய விதமே அடிப்படை தமிழ் சிங்கள விரோதத்திற்கு காரணமாகியது. ஆங்கிலேயர் சென்றபின் சிங்கள அரசின் கீழ் இந்த வரக்கம் வேலை பாரக்கத் தொடங்கியது. ஆட்சியாளர்களை அண்டிப்பிழைப்பதற்கே கல்விபயன்பட்டது.  ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் அனுசரித்து நடத்தல் என்றவாறே அறிவுசார் வட்டாரத்தின் சிந்தனை முறை அமைந்தது.  இவற்றுக்குள்ளாகவே தமிழர்களுக்கான அரசியல் தலமைகள் இயங்கியது. இவ் அரசியல் ஒரு வர்க்க அரசியல்.  பேரினவாத ஒடுக்குமுறைக்கு துணைபோகும் அரசியலாக இருந்தது. இதன் எதிர்வினையே ஆயுதப்போராட்டம். இன்றும் இந்த வரக்க அரசியல் தொடர்கின்றது. நேற்றுவரை சிங்கள அரச இயந்திரத்தில் ஒரு அங்கமான விக்கினேஸ்வரன் இன்று வடக்கு முதலமைச்சர். அவரது அறிவுசார் தன்மையே இங்கு நம்பப் படுகின்றது ஆனால் அவர் அறிவை விருத்தி செய்ததது தமிழ்த்தேசீயவாதத்திற்காக அல்ல, மாறாக சிங்கள எந்திரத்தில் நீதிபதியாக இருப்பதற்கு.  தமிழ் அரசியல் வாதிகளிடம்  உள்ள அடிப்படை சிந்தனை முறையே  அண்டிப்பிழைத்தல் அனுசரித்து நடத்தல் என்பதாகவே இருக்கின்றது ஏனெனில் நாம் பாய்ந்து பாய்ந்து கல்வி கற்பது இதற்காகத்தான்.  உதாரணமாக இன்று சுமந்திரன் தமிழ்மக்களிடையே பேசி அவர்களை ஒரணியாக்கி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  ஒரு பேரணி , அடயாள உண்ணாவிரதம் ஆர்பாட்டம் என்பதை செய்வதற்குப் பதிலாக சிங்கள மக்களுக்கு சமஷ்டி பற்றி பாடம் எடுக்கின்றார். இப்படித்தான் இவர்களால் சிந்திக்க முடியும். அதாவது தமிழ் மக்களே நீங்கள் அமைதியாய் இருங்கள் நான் போய் சிங்களவர்களிடம் பேசி சமஸ்டியை வாங்கிக்கொண்டுவாரன் இது எப்படி மக்கள் அரசியலாகமுடியும் ? எமது அரசியல் வாதிகளுக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருககும் நெருக்கம் அரசியல் வாதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஒருபோதும் வரலாற்றில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது ஏனெனில் இதுவே எமது கல்வியும் அறிவும் தந்த சிந்தனைமுறை.  இந்த சிந்தனை முறையும் புலிகளின் சிந்தனை முறையும் இருவேறு துருவங்கள். அண்டிப்பிழைத்தல் அனுசரித்துப்போதல் என்பதற்கு நேரேதிரான இயங்கு நிலை. அவர்கள் பிரதேசங்களை மீட்டு தமிழீழம் என்ற அரசையும் அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க முனைந்தார்கள்.  அவர்களை பொறுத்தவரை அதுதான் அவர்களது அரசியல். அழிவுகளுக்கு ஏராளமான அக புற காரணிகள் இருக்கின்றது. எப்பொழுதும் சொலவதுபோல புலிகள் மீது விமர்சனங்களை தாரளமாக முன்வைக்கலாம் ஆனால் அவர்களை நேக்கி ஒரு விரல் சுட்டிக்காட்டும் போது ஏனைய விரல்கள் எம்மையே சுட்டிக்காட்டும். இது எமது சமூகத்தில் தவிர்க்க முடியாத விதி. 

 

Link to comment
Share on other sites

இந்த "கஞ்சா புகழ்" ஐக்கிய தேசிய கட்சியின் செம்புதூக்கி அரசியல்வாதியின் கொடுமை தாங்க முடியவில்லை!  

https://www.tamilwin.com/politics/01/204169?ref=home-imp-parsely

கஞ்சா கடத்தலுக்கு மேல் (... சிறிலங்கா பாராளுமன்றில் கூட கேட்கப்பட்டது. சரியான பதில் இல்லை! .... ). எந்த வடகிழக்கு அரசியல்வாதிகளாலும், கைது செய்தவர்களை விடுவிப்பதை முடியாததை, கஞ்சாக்கடத்தல்காரர்களை கூட விடுவிப்பதற்குரிய செல்வாக்கு, இந்த "பின் வாசல் கதவிற்கு" உள்ளது. உனது 10 வருட கால பின் வாசல் வழி உள்ளிட்ட அரசியலில் செய்தது என்ன???

எத்தனை தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்காணவர்கள் சிறிலங்கா அரசியல்வாதிகள்/படையினரால் கொல்லப்பட்டனர். இன்று வரை தொடர்ச்சியாக, கடந்த 10 வருட காலமாக "புலி வாந்தி எடுக்கும்" இந்த "கஞ்சா புகழ்" அரசியல்வாதி, இவற்றிற்காக எத்தனை தரம் குரல் கொடுத்திருப்பார்?????????? 

Link to comment
Share on other sites

On 1/7/2019 at 1:10 PM, tulpen said:

இல்லை ராஜேஸ் நிச்சயமாக அவர்கள் அரசியலையும் இராணுவத்துடன் சமமாக நகர்ததி இருக்க வேண்டும் என்பதே என் கருத்து. நடந்த தவறை பாடமாக எடுக்கலாம். 

அரசியல், இராயதந்திரம் இரண்டும் பலத்திலிருந்து பிறப்பன.

பலமில்லாதபோது இவையிரண்டும் வினைத்திறனற்றுப் போகும்.

விடுதலைப்புலிகளின் ஆயுத பலம் அரசியல் மற்றும் இராயதந்திர நகர்வுகளை ஏற்படுத்த உதவின. அதன் காரணமாகவே அவர்களது முழு வளமும் ஆயுதபலத்தை நோக்கி திசைதிருப்பபட்டன. 

எந்தபொரு பலமும் அற்ற இன்றைய நிலையில் கூட்டமைப்பினரையோ அல்லது ஏனையவர்களையோ குற்றம் சாட்டுவதனால் நன்மையேதும் கிடைக்கப்போவதில்லை.

தமிழர் நாம் எவ்வாறு பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக மீண்டும் உருவெடுக்கப் போகின்றோம் என்பதில் எமது எதிர்கால அரசியல் தங்கியுள்ளது, கூட்டமைப்பைச் சேர்ந்த தனிமனிதர்களில் அல்ல. 

Link to comment
Share on other sites

முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் .
புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் .
புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது . 

சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் தலைவர்! அவரின் தயவில்லாமல் பிற கூட்டணிக் கட்சிகளுக்கு எம்பியாகும் வாய்ப்புக் குறைவு. எனவே அடுத்த தேர்தலில் அவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் போல மக்களால் தெரிவு செய்யப்படாமல் இருக்க ஏதாவது ஏடாகூடமாகச் செய்தால்தான் உண்டு. அப்படி நடந்தாலும் தேசியப்பட்டியலில் வந்து சேருவார்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, பிரபாதாசன் said:

முதலில் சுமந்திரனை அரசியலில் இருந்து துரத்த வேண்டும் , இவர் எப்ப வந்தவர் .
புலிகளை பற்றி இவர் கூற இவர் மக்களுக்கு என்னத்த செய்தவர் . கடைசியாக இருந்த எல்லாவற்றையும் பிடுங்கும் அலுவலில் தான் அவரின் சாக்கடை அரசியல் உள்ளது . 

சில மாதங்களுக்கு முன், லண்டனில் உள்ள சில கூத்தமைப்பு ஆதரவாளர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம், "கஞ்சா புகழ்" அரசியல்வாதியின் மீது பல குற்றச்சாட்டுகள் வைத்தனராம். அதற்கு அந்த அரசியல்வாதியோ, .. "... நான் இதில் என்னத்தை சொல்ல? கஜேந்திரகுமாரும் தன்னிச்சையாக, உள் போராடாமல் வெளியேறி விட்டார்!  மாவையோ, எனக்கு ஆங்கிலமும் வராது, சட்டமும் தெரியாது, "கஞ்சா புகழ்" பின் வாசலை .... அறளை பெயர்ந்தவர் மேல் போனால்,... பொறுப்பெடுக்க சொல்லி விட்டதாகவும் ..." சொன்னாராம்! 

அங்கு .. இப்போ ... ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையோ! அதுதானாம்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.