Jump to content

முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா


colomban

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(Basheer Segu Dawood)

மட்டக்களப்பு/ சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும்,விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார்.அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது நண்பிகள் கூறுகிறார்கள்.

 

ஹாஸியா அழகி, பணக்காரி என்ன குறை அவளுக்கு ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்று தெரியவில்லை என்கின்றனர் இவரது இன்னும் சில நண்பிகள்.

 

ஹாஸியாவுக்குத் திருமணம் பேசி திகதி குறித்து அழைப்பிதழும் அச்சிட்டாயிற்று, விநியோகமும் தொடங்கிற்று. கல்யாணத்துக்கு இரண்டு நாள் இருக்கையில் ஹாஸியாவைக் காணவில்லை. அவர் புலிகள் அமைப்பில் இணைந்து விட்டமை பின்னர் வெளிச்சது. இவர் திருமணத்தில் விருப்பின்மை காரணமாக இயக்கத்தில் சேரவில்லை, அவர் நம்பிய போராட்டத்தைக் காதலித்தமையால்தான் திருமணத்தில் இருந்து தப்பினார் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன்.

 

1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய இராணுவம் (TNA) என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் சிலவற்றின் கூட்டுப் படையால் மட்டக்களப்பு நகருக்குள் வைத்து ஹாஸியா தூக்கிச் செல்லப்பட்டார். 

 

ஹாஸியா இன்னொரு விடுதலைப் புலிப் பெண் உறுப்பினரான ராசாத்தியோடு சேர்ந்து பெண் புலிகளுக்கு பைசிக்கிள் வாங்குவதற்காக நகருக்கு வந்திருந்தார். இந்நேரத்தில்தான் இவர் தூக்கிச் செல்லப்பட்டார். ஆனால் ராசாத்தியை அவர்கள் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டனர்.ராசாத்தி இன்னும் உயிர்வாழ்கிறார்.

 

எங்கோ மறைவிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹாஸியா அநேகரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் துண்டு துண்டாக அரியப்பட்டுக் கொல்லப்பட்டாள். எங்கு புதைக்கப்பட்டாள் என்று தெரியவில்லை. ஹாஸியாவின் பெயர் மாவீரர் பட்டியலில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

 

எனக்குத் தெரிந்த வரையில் ஈழப் போராட்டத்தில் முதலாவது இன்னுயிர் ஈந்த பெண் போராளி டக்ளஸ் தேவானந்தாவுடைய தங்கை சோபா ஆகும். இவர் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டார். அக்காலத்தில் டக்ளஸ் EPRLF அமைப்பின் தளபதியாக இருந்தார். 

 

புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவில் முதன்முதலில் உயிர் நீத்தவர் மாலதி என்று நினைக்கிறேன். இம்மரணம் 1987 ஒக்டோபர் பத்தாம் திகதி நிகழ்ந்தது.

 

ஹாஸியாவின் மரணம் 1988 இல் நிகழ்ந்தது. இவர் உயிரிழந்த எத்தனையாவது பெண் இயக்கப் போராளி?

 

( மேற்சொன்ன தகவல்களில் ஏதும் பிசகுகள் இருந்தால் சுட்டுங்கள்)

http://battinaatham.net/description.php?art=18153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

(Basheer Segu Dawood)

எங்கோ மறைவிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹாஸியா அநேகரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் துண்டு துண்டாக அரியப்பட்டுக் கொல்லப்பட்டாள். எங்கு புதைக்கப்பட்டாள் என்று தெரியவில்லை. ஹாஸியாவின் பெயர் மாவீரர் பட்டியலில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

என்னடா எலி கோவணத்தோட போகுதே என்று பார்த்தேன்...

நானா... வழக்கம் போல புதுக்கதை விடுறார்....

இவர்களின் உசுப்பல் கதைகளினால் தான் இஸ்லாமிய இளைஞர்களினால். விகாரைகள், கிறித்தவ தேவாலையங்கள், இந்து கோவில்கள் தாக்கப் படுகின்றன.

தாக்கியவர்கள் தப்பி ஓடினால்... ஒன்றும் தெரியாத மாதிரி இருப்பார்கள். பிடி பட்டால்... மத ஒற்றுமை குறித்து வகுப்பு எடுப்பினம். 🙄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
    • "காதல் & காமம்" [காதல் ஈவு, இரக்கம் சார்ந்தது. காமம் இச்சை, இம்சை சார்ந்தது.]   காதல் கை கொடுக்கும். காமம் கை விடும். காதல் குறுகுறுப்பு. காமம் கிளுகிளுப்பு. காதல் ஏற்றம் தரும். காமம் ஏமாற்றம் தரும். காதல் வயல்வெளி. காமம் புதைகுழி. காதல் பாசவலை. காமம் நாச வேலை. காதலில் காமம் அடங்கும். காமத்தில் காதல் முடங்கும். காதலில் 'நீயும் நானும்' இருக்கும். காமத்தில் 'நீயா நானா' இருக்கும்   ஆனால் காதல் நிலைக்க காமமும் கூட்டுச் சேரவேண்டும்  ஊடலும் கூடலும் அதற்கு ஒரு உதாரணம் 
    • காக்கா விடம் இருந்து நரி பறித்த  அதே வடையை தான் என்று வேறு சத்தியம் பண்ணியவர் 😃
    • வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.