Jump to content

ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-2


Recommended Posts

ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்!

மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-2

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

"என்னப்பா! நேத்தே வந்துருவேன்னு சொன்ன! இப்பத்தான் ஊர்லந்து வர்றாப்ல இருக்கு! ஆங்கில உயிர்மெய் எழுத்து எப்படி இருக்கும் என்ற மண்டக் கொடைச்சல் தாங்கலப்பா! க்+அ=க மாதிரி b+a=ba, c+a=ca-ன்னுட்டு என்னென்னவோ கற்பனை செஞ்சு பாத்துட்டேன். கூகிள் பண்ணியும் பாத்துட்டேன்! எங்கயும் ஆங்கில உயிர்மெய் எழுத்துன்னு ஒண்ணக் கூடக் காணவே இல்லயே!", என்று அங்கலாய்த்தபடி வந்தார் நண்பர்.

"வாப்பா! இப்படி யோசிப்பமே! தமிழ்-ல உயிர்மெய் எழுத்து இல்லன்னு வச்சுக்குவம். 'வணக்கம்' என்பதை எப்படி எழுதுவோம்?", என்றேன் நான்.

"பிரிச்சு அப்படியே எழுதிற வேண்டியதுதான். 'வ்அண்அக்க்அம்'-னு தான் இருக்கும்! சரியா!", என்றார் நண்பர்.

"சரிதான்! அப்படித்தான் ஆங்கிலம் உள்ளிட்ட இந்தோ-ஆரியமொழிகளில் சொற்கள் எழுதப்படுகின்றன. சொற்களுக்கான உச்சரிப்புகள் சொற்களுடன் இணைத்துச் சொல்லிக்கொடுப்பார்கள்.", என்றேன்.

"சரிப்பா! தமிழுக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லு", என்றார் நண்பர்.

தமிழ் மொழிக்கும் இந்தோ-ஆரிய மொழிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு!

"தமிழ் எழுத்துக்கள் மனிதனின் இயல்பொலிகளால் (Natural Phonemes) உருவானவை. Iranian, and Nuristani, English, French, German, Italic உள்ளிட்ட Indo-Aryan (Indo-European) மொழிகளின் வரிவடிவ எழுத்துக்களுக்கும், ஒலிவடிவத்துக்கும் தொடர்பு இருக்காது!. அடிப்படை வேறுபாடு இதுதான்!", என்றேன் நான்.

தமிழ்எழுத்து முறையில் ஆரிய-கிரந்த எழுத்துக்கள் உருவாக்கம்!

"அப்படியானால், Indo-Aryan மொழிகளின் பின்வரிசையில் வந்த வடமொழி (பிற்காலத்தில் சமற்கிருதம்) எப்படி இயல்பொலிகளால் உருவானது?", என்றார் நண்பர்.

"அதில்தான் சங்கதியே இருக்கு! மற்ற Indo-Aryan மொழிகளில் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்பே, அதாவது, சுமார் 3500 ஆண்டுகள் முன்னால், அவர்களிடமிருந்து பிரிந்து இந்தியா வந்த    வேத ஆரியர்களிடமும் எழுத்து இல்லை; ஆடு-மாடுகளை மேய்த்துக்கொண்டு, எழுத்தில்லாமல், தம் இன இலக்கியமான ஆரியவேத ருக்வேதத்தை செவிவழியாகவே ஓதிவந்த வேதஆரியர்களுக்குத் தமிழ் மொழியின் நெடுங்கணக்கு அமைப்பைக் காப்பியடித்து, தம் கனத்த பொலிவொலிகளுக்கென்று (voiced sounds) சில தனி எழுத்துக்களையும் சேர்த்து, கிரந்த எழுத்துக்களை எளிதாக உருவாக்க முடிந்தது." என்றேன் நான்.

"சரிதான்! போற போக்கப் பாத்தா  சமற்கிருதமொழியில் பாதிச்சொற்கள் தமிழ் சொற்கள்-னு சொன்னாலும் சொல்லுவப்பா! கலிகாலம்! தேவபாஷைக்கே இந்த நெலமையா!", என்றார் நண்பர்.

"எப்படிப்பா இவ்வளவு சரியா சொல்லுற! தமிழர்களின் மொழி-இலக்கியச் செழுமையை உள்வாங்கி,  தம் ஆரியமொழியுடன் ஐம்பது விழுக்காடுக்கும் மேற்பட்டத் தமிழ்ச் சொற்களைக் கடன்வாங்கி, தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி, ஆரியமொழிக்கு கிரந்த எழுத்துக்களையும், பிராகிருதத்தின் தேவநாகரி வரிவடிவ எழுத்துக்களையும்,  ஒலிவடிவ எழுத்துக்களையும், உருவாக்கிக் கொண்டனர் என்பதே உண்மை!", என்றேன் நான்.

"நீ சொன்னதை நிரூபிக்க முடியுமா?", என்று கேட்ட நண்பர், சுதாரித்துக்கொண்டு, "அதை அப்புறம் சொல்லு! முதல்ல, ஆங்கிலேயன் எப்போ உயிர்மெய் எழுத்தக் கண்டுபுடிச்சான்? அதச்சொல்லு", என்று மீண்டும் ஆர்வமானார் நண்பர்.

ஆங்கிலமொழியில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை உயிர்மெய்ஒலி எழுத்தில்லை!

"கட்டாயம் நிரூபிக்கிறேன்! சரி, ஆங்கில உயிர்மெய் ஒலி எழுத்துப் பிறந்த கதைய மொதல்ல பார்ப்போம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களுக்குப் புதிதாக முளைத்த ஆரிய இனப்பற்றின் விளைவாக, தங்கள் இனமொழிகளின் வரிசையில் மிகவும் பின்னால் இருக்கும் Indo-Aryan மொழியான சமற்கிருத மொழியைக் கற்க முனைந்தபோது, வரிவடிவத்திலும், ஒலிவடிவத்திலும் ஒன்றாக இருக்கும் சமற்கிருத எழுத்துக்களின் ஒலிவடிவ மொழி அமைப்பைப் பார்த்து வியந்தேபோனார்கள்.", என்றேன் நான்.

"ஏன் அவர்கள் ஆச்சரியப்படணும்?", என்றார் நண்பர்.

"ஆரிய  இனமொழிகள் ஒன்றிலும் இப்பண்பு இல்லாததே அவர்தம் வியப்புக்குக் காரணம்!" என்ற நான், "அத்தோடு விட்டால் பரவாயில்லை! இன்னும் பலபடி மேல போயி, சமற்கிருதமே இயல்பான மொழி என்றும், உலக மொழிகளின் தாய்மொழி என்றும் உரக்கக் கூவினார்கள்.", என்ற நான்,

"மூத்த ஆரிய மொழிகளில் இல்லாத பண்பு இளைய ஆரியமொழியான சமற்கிருதத்துக்கு இருந்தா அது வேற எங்கயோ கடன் வாங்கியிருக்கும்னு ஊகிக்க முடியாத முட்டாள்தனத்தைச் செய்தார்கள் ஐரோப்பியர்கள்!", என்றேன்.

"வெள்ளக்காரனவிட நாமெல்லாம் புத்திசாலின்னு சொல்லுவ போலிருக்கே!", என்றார் நண்பர் படுநக்கலாக.

"செவப்பா இருக்கவன் கூமுட்டயா இருக்கக் கூடாதுன்ற 'வடிவேல் logic' இங்க வேண்டாமே! இந்திய நாகரிகத்தின் சுவட்டை கங்கைக் கரையில தேடுனதுனால வெள்ளக்காரனால தேவநாகரி சமற்கிருத எழுத்துக்கு முந்தின கிரந்த சமற்கிருத எழுத்தக் கண்டுபிடிக்க முடியல. 'பேரன் பாட்டனைப் பெற்றான்' என்பது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் 'சமற்கிருதம் உலக மொழிகளின் தாய்மொழி' என்னும் ஆய்வுக் கருதுகோள் என்பதை, சமற்கிருதத்துக்கும் மூத்தமொழி பேசிய ஜெர்மானிய மொழியியல் அறிஞர்கள் உணரவில்லை." என்றேன் நான்.

"இன்னங் கொஞ்சம் வெளக்கமா சொல்லப்பா!", என்றார் நண்பர்.

"'வெள்ளக்காரன் கிரந்த சமற்கிருத எழுத்த மொதல்ல பாத்திருந்தா, அதோட வேர் தமிழ்மொழியிலே இருக்குறதக் கண்டுபிடிச்சுருப்பான். நம்மஊரு இடையன்குடியிலேயே குப்பகொட்டி, திராவிட மொழிகளுக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பன்மொழிப்புலவர் பிஷப் கால்டுவெலாருக்கே இந்த விஷயம் கண்ணத் தப்பிருச்சே! மத்தவுங்க எம்மாத்திரம்?"  கால்டுவெலார் காலத்துல தொல்காப்பியம் அச்சுக்கு வரல. அதுனால அவருக்கு இது தெரியாமப் போச்சு!", என்றேன் நான்.

தமிழ்மொழியே சமற்கிருதமொழிக்குத் தந்தைமொழி!

"அப்ப வடமொழி நெடுங்கணக்கு எழுத்துக்களுக்கு மூலம் தமிழ்தான்னு சொல்லுறியா? ஏன், ஆரியர்களே கண்டுபுடிச்சிருக்க முடியாதா என்ன?", என்றார் நண்பர் அப்பாவியாக.

"Indo-European மொழிகளில் மிகவும் பின்வரிசையில் உள்ள சமற்கிருத மொழிக்கு, அதற்கு மூத்த இனமொழிகளைவிட மேம்பட்ட பண்பு இருந்தால், அப்பண்பு Indo-European அல்லாத வேற்று இனமொழியிலிருந்தே கடன் வாங்கியிருக்க முடியும் என்ற LOGIC ஏனோ அவர்கள் மூளைக்குத்தான் எட்டவில்லை. ஒனக்குமா எட்டவில்லை?", என்றேன் சற்றே காட்டமாக.

"சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். நீ ஆங்கில உயிர்மெய்க் கதயச் சொல்லுப்பா!", என்றார் நண்பர் விடாப்பிடியாக.

"ஆமா, தமிழ் மொழியே சமற்கிருதத்தின் ஒலிவடிவக் குறியீட்டு எழுத்துமுறைக்குத் தந்தைமொழி என்று அறியாமல், சமற்கிருதத்தின் உயிர்மெய் ஒலிவடிவை மற்ற ஆரியஇனமொழிகளுக்கு ஒட்டவைக்க, பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் முனைந்தனர்,", என்றேன் நான்.

"ஆங்கில உயிர்மெய் ஒலிவடிவம் செஞ்சாங்களா இல்லையா!", என்று பொறுமையிழந்தார் நண்பர்.

"அங்கதான் சிக்கலே வந்திச்சு! வேத ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்துக்கு வந்தபோது, எழுதப்படிக்கத் தெரியாத தற்குறிகளாகவே இருந்ததுனால, எழுத்தில்லாமல் இருந்தார்கள். தெற்கே புலம் பெயர்ந்த வேத ஆரியனுக்குத் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துமுறையை புதிதாய் அப்படியே உள்வாங்கி ஆரியமொழிக்கு உயிர்மெய் கிரந்த ஒலிவடிவம் உருவாக்குவது மிக எளிதாக இருந்தது!", என்ற என்னை இடைமறித்து,  

"வேத ஆரியர்கள் எழுதப்படிக்கத்தெரியாத தற்குறின்னுட்டு எப்படிச் சொல்ற?", என்று காட்டமாகக் கேட்டார் நண்பர்.

"சான்று இருக்கப்பா! வேத ஆரியர்கள் தம் இன இலக்கியமான 'ருக்' வேதத்தைச் செவிவழியாகவே ஓதி, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வந்தனர். இதனால் வேதத்துக்கு ச்ருதி (எழுதாக்கிளவி) என்று பெயர். பிற்காலத்தில் அதையே காரணமாச்சொல்லி, கடவுள் அசரீரியாச் சொன்னார் என்று புராணத்தைக் கெளப்பி, வேதத்துக்குப் புனிதம் ஏற்றினர்.", என்ற நான், தொடர்ந்து,

"கிரந்த எழுத்துக்கள் முறையிலேயே,  பின்னர் தேவநாகரி எழுத்தையும் வடிவமைத்துக் கொண்டனர். இது குறித்து விரிவான தரவுகள் பின்னர் தரப்படும். இப்போது, ஐரோப்பிய ஆய்வாளர்களின் ஒலி எழுத்துக்கள் முயற்சியைக் குறித்துப் பேசுவோமே!", என்றேன்.

"சரி! மேல சொல்லு", என்றார் நண்பர் காட்டமாக.

ஐரோப்பிய மொழிகளுக்கான (உயிர்மெய்) ஒலிஎழுத்துக்கள் கி.பி. 1886-ல்தான் உதயமானது!

"கி.பி. 1886-களில், பிரெஞ்சு மொழியிலாளர் திரு.பவுல் பாசி(Paul Passy) தலைமையில் ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழியியல் ஆசிரியர்கள் ஒன்றுகூடி IPA எனப்படும் International Phonetic Association  அமைப்பை  உருவாக்கினர். ஏற்கனவே உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் தனித்தனியே எழுதும் வழக்கத்தில் ஊறிப்போயிருந்த எழுத்துமுறையை மாற்றுவது அவ்வளவு எளிதன்று என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.", என்று சற்றே நிறுத்தினேன்.

அவ்வளவுதான்; கடுப்பான நண்பர், "மொத்தத்துலே உயிர்மெய் ஒலி எழுத்துக்கள் இல்ல! இதுக்குத்தான் இவ்வளவு build-up-ப்பா!", என்றார் வெறுப்புடன்.  

"உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாட்டி என்ன? அதுக்குப் பதிலா, பெரும்பான்மையான சொற்களுக்கான ஒலி எழுத்துக்களை அவர்களால் உருவாக்க முடிந்தது. அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்குமான மூல ஒலி எழுத்துக்களை (Phonetic Alphabets) உருவாக்கியது IPA அமைப்பு. "கூட்டு-ஒலியாக அல்லாத ஒவ்வொரு தனித்த ஒலிக்கும் ஒரு எழுத்தை உருவாக்குவது" என்ற நோக்கத்துடன் புதிய ஒலி எழுத்துக்கள் அமைக்க முனைந்தது IPA. ", என்றேன் நான்.

"அதையாவது உருப்படியாச் செய்தாங்களா என்ன?", என்று வினவினார் நண்பர்.

"ஆமாம்! அதப்பத்தி விரிவா நாளக்கிப் பேசுவோமே! இப்ப பசி வந்திருச்சு.", என்று எழுந்தேன்.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

மொழிகளின் இயற்கை அறிவோம்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.சிறந்த பணி.பகுத்தறியும் வாதம். பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

ஐயா, மொழிகளின் இயற்கையை அறிய ஆவலாக உள்ளேன். தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக நவில்கின்றீர்கள் .....மிகவும் சுவாரஸ்யமாக எழுதிக்கொண்டு வருகின்றீர்கள்........! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.