Jump to content

செட்டிநாடு மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

செட்டிநாடு மீன் குழம்பு சுவையாக செய்வது எப்படி?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஸ்பூன்;;நல்லெண்ணெய் அத்தோடு இரண்டு ஸ்பூன் ஒயிலாம் 😝

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

இரண்டு ஸ்பூன்;;நல்லெண்ணெய் அத்தோடு இரண்டு ஸ்பூன் ஒயிலாம் 😝

 

எண்ணெய் அதிகம் என்றால் இரண்டு கரண்டி நல்லெண்ணெய்யுடன் நிப்பாட்டலாம்! அடுத்தமுறை மீன்கறி இந்தமுறையில் சமைத்துப்பார்க்கவுள்ளேன்.😀

Link to comment
Share on other sites

மீனை போட்டு ஒரு நிமிடத்தில் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்து விட்டால் மீன் சரியாக வேகாமல் பச்சையாக அல்லவா இருக்கும்? ஒரு 10 நிமிசமாவது வேக கூடாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மீனை போட்டு ஒரு நிமிடத்தில் குழம்பை அடுப்பில் இருந்து எடுத்து விட்டால் மீன் சரியாக வேகாமல் பச்சையாக அல்லவா இருக்கும்? ஒரு 10 நிமிசமாவது வேக கூடாதா?

ஒரு நிமிடம் மிகவும் குறைவானதுதான். நான் மீனை கழுவி மஞ்சள் தூளில் ஊறவைத்துவிட்டு, குழம்பு தயாரானபின்னர், மீன் துண்டுகளை குழம்பில் போட்டு 6-8 நிமிடங்கள் மிதமான சூட்டில் விட்டபின்னர் அடுப்பை அணைத்து (நெருப்பை நூர்த்து) விடுவேன். அதன் பின்னர் பத்து நிமிடங்கள் ஆறியபின்னர்தான் பரிமாறுவதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஒரு நிமிடம் மிகவும் குறைவானதுதான். நான் மீனை கழுவி மஞ்சள் தூளில் ஊறவைத்துவிட்டு, குழம்பு தயாரானபின்னர், மீன் துண்டுகளை குழம்பில் போட்டு 6-8 நிமிடங்கள் மிதமான சூட்டில் விட்டபின்னர் அடுப்பை அணைத்து (நெருப்பை நூர்த்து) விடுவேன். அதன் பின்னர் பத்து நிமிடங்கள் ஆறியபின்னர்தான் பரிமாறுவதுண்டு.

உங்கள் முறை நாறல் மீனுக்கு பொருந்தும்.
மீன் கொஞ்சம் பழுதாகினால் முதலே போட்டால் கரைந்துவிடும் என்று குழம்பு கொதித்த பின் தான் மீனைப் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

இரண்டு ஸ்பூன்;;நல்லெண்ணெய் அத்தோடு இரண்டு ஸ்பூன் ஒயிலாம் 😝

 

நல்லெண்ணெய் விலை கூடுதல் என்று தான் நினைக்கிறேன்.

அது சரி செட்டிநாட்டு மீன் சூடை மீனோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎1‎/‎2019 at 6:34 PM, கிருபன் said:

எண்ணெய் அதிகம் என்றால் இரண்டு கரண்டி நல்லெண்ணெய்யுடன் நிப்பாட்டலாம்! அடுத்தமுறை மீன்கறி இந்தமுறையில் சமைத்துப்பார்க்கவுள்ளேன்.😀

அவ 2 ஸ்பூன் ந.எண்ணெயும் விட்டு 2 ஸ்பூன் வேறு எதோ எண்ணெயும் விடுகிறா...இரண்டு எண்ணெயும் கலந்து விட்டால் வருத்தம் வராதோ?

21 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லெண்ணெய் விலை கூடுதல் என்று தான் நினைக்கிறேன்.

அது சரி செட்டிநாட்டு மீன் சூடை மீனோ?

ஆமாம்...சூடை மீன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன் குழம்புக்கு எண்ணை விடுவதில்லை நாங்கள் கறியை கூட்டி அடுப்பில் வைத்து இறக்குவதுதான் இந்த மீன் மலையாளிகள் விரும்பி சாப்பிடும் மத்தி மீன் போல இருக்கு கிழக்கிள் சாளை மீன் என்பார்கள்

Link to comment
Share on other sites

நேற்று மேலே சொல்லப்பட்ட முறையில் மீனை கொதிக்கவிடும் விடயத்தில் மட்டும் மாற்றம் செய்து வேறு ஒரு மாற்றமும் இன்றி செட்டி நாட்டு மீன் குழம்பு சமைத்துப் பார்த்தேன். இதில் காட்டப்பட்டவாறே சூடை மீன் தான் போட்டனான். அத்துடன் நல்லெண்ணை மட்டுமே பயன்படுத்தினனான்.

மீனைப் போட்ட பின் ஒரு நிமிடத்தில் இறக்குவதற்கு பதிலாக 11 நிமிடங்கள் வேக வைத்து விட்டு குக்கரை நிறுத்தி விட்டு மேலும் 5 நிமிடங்கள் குக்கரில் இருந்து இறக்காமல் வைத்து விட்டு பின் சற்று சூடு ஆறிய பின் சாப்பிட்டோம்.

சிவப்பு அரிசிமா இடியப்பத்துடன் (வீட்டில் செய்தது) சாப்பிடும் போது நல்ல சுவையாக இருந்தது.

 

 

20190104_094600.jpg


அடுத்த முறையாவது படம் எடுக்கும் போது ஒரு அழகான டிஷ் இல் வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதுடன் சரி...பிறகு மறந்து விடுவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

அடுத்த முறையாவது படம் எடுக்கும் போது ஒரு அழகான டிஷ் இல் வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைப்பதுடன் சரி...பிறகு மறந்து விடுவேன்

நாங்க சட்டியைப் பார்ப்பதில்லை.உள்ளுக்கு என்ன எப்படி என்று தான் பார்ப்போம்.
தொடர்ந்தும் சமைத்த சட்டியுடனே இணையுங்கள்.

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீன் குழம்புக்கு எண்ணை விடுவதில்லை நாங்கள் கறியை கூட்டி அடுப்பில் வைத்து இறக்குவதுதான் இந்த மீன் மலையாளிகள் விரும்பி சாப்பிடும் மத்தி மீன் போல இருக்கு கிழக்கிள் சாளை மீன் என்பார்கள்

இது சூடை மீன். எமது இடங்களில் சூடை சூவாரை பொரியலுக்கு பாவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2019 at 8:27 PM, ஈழப்பிரியன் said:

இது சூடை மீன். எமது இடங்களில் சூடை சூவாரை பொரியலுக்கு பாவிப்பார்கள்.

ம்ம் இங்கு பால் ஆணம் / பால் சொதி பொரியல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.