Jump to content

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார்.

49285338_2617592474935933_69345063891170 

ஏற்கனவே ஜெசிக்கா யூட் சுப்பர் சிங்கர் மூலம் பலருக்கும் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவரைப்பற்றி உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த வரிசையில் மிகத் திறமையாகப் பாடக்கூடிய சின்மயி கனடாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தனது இசைத் திறமையை பல தடவைகள் வெளிக்காட்டியிருந்தார். சின்மயியின் பெற்றோர்களான திரு. திருமதி சிவகுமார் அவர்கள் தங்கள் மகளின் ஆர்வத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். யாராக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் போதுதான் பலராலும் பாராட்டப் படுவார்கள். எனவே சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி உங்கள் பிள்ளைகளின் திறமைகளையும் அது எந்த துறையாக இருந்தாலும் அதை வெளிக் கொண்டு வர பெற்றோராகிய நீங்கள்தான் முன்வந்து உதவவேண்டும்.

சின்ன வயதிலே மேடையில் பாடும் போதே சின்மயி போன்ற சிலரின் திறமையை என்னால் அடையாளம் காணமுடிந்தது. அவர்களிடம் நல்ல குரல் வளமும் திறமையும் இருப்பதை அவ்வப்போது பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி அடுத்த கட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்துங்கள் என்று முக்கியமாக சின்மாயியின் பெற்றோருக்கும், அபிநயாவின் பெற்றோருக்கும் ஆலோசனை கூறியிருந்தேன். போட்டி என்று வந்தால் திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சண்சுப்பசிங்கர் சுபவீனும், அவரது சகோதரி அபிநயாவும் என்னிடம் தமிழ் மொழி கற்றவர்கள்.


மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2014 ஆம் ஆண்டு நடத்திய இசைப் போட்டியின் போது சின்மயின் அப்பா சிவகுமாரிடம் இந்தப் போட்டி பற்றி கூறி, சின்மாயியைப் பங்கு பற்றும்படி ஊக்கப்படுத்த முடிந்தது. எந்தப் போட்டியிலும் திறமைசாலிகளுக்கு வெற்றி தோல்விகள் முக்கியமில்லை, உங்களால் அந்த அறைகூவலை துணிவோடு ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதுதான் முக்கியமானது. தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என்று சொல்வார்கள், பல போட்டிகளில் பங்கு பற்றி அதை எல்லாம் கடந்து வந்த அனுபவத்தால்தான் இன்று சின்மாயியால் சுப்பர் சிங்கர் மேடையில் நிற்க முடிகின்றது.

எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவின் போது எங்கள் அழைப்பை ஏற்று தன்னார்வத் தொண்டராக வந்து தமிழ் வாழ்த்தை அழகாக இசைத்திருந்தார். ரிஇரி தொலைக்காட்சியில் நடைபெற்ற தமிழினி போட்டியின் போது நடுவராகச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததால் சின்மையின் திறமையைப் பல சந்தர்ப்பங்களில் அறிந்து கொள்ள முடிந்தது. 2014 ஆம் ஆண்டு அந்த நிகழ்ச்சியில் அவர் ‘அம்மா’ என்ற தலைப்பில் அழகான கவிதை ஒன்றைப் பாடி அவையில் இருந்த எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார். அதேபோல பாரதி ஆட்ஸ் போட்டி நிகழ்வில் ‘பாடவா பாடவா’ என்ற பாடலைப்பாடி எல்லோர் கவனத்தையும் திருப்பி இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உதயன் விழாவில் சின்மாயி பாடியிருந்தார். அப்போது பிரபலமாக இருந்த ‘காற்றின் மொழி’ என்ற பாட்டைத் தெரிவு செய்து பாடியதால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். ரிவிஐ தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் யூனியர் பிரிவில் பங்கு பற்றி ‘தத்தித்தோம்’ என்ற பாடல் மூலம் அடுத்த கட்டத்திற்குத் தெரிவானார். ஐரிஆர் பெட்டகம் நிகழ்வில் நிகழ்ச்சியை நடத்திய இளங்கோ அவர்கள் மிகச் சிறப்பாக சின்மாயியை அறிமுகம் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டது போல ‘சின்மாயியின் அந்த சின்னச்சிரிப்பு’ எல்லோரையும் கட்டாயம் கவர்ந்திருக்கும். எனக்குப் பிடித்த பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை நான் அந்த நிகழ்வின்போது ரசித்துக் கேட்டேன். ‘நீ ஒரு காதல் சங்கீதம்,’ ‘தென்கிழக்குச் சீமையிலே,’ ‘சின்னத்தாய் அவள் தந்த ராசாவே’ போன்ற பாடலல்களையும் அந்த நிகழ்வில் அழகாகப் பாடியிருந்தார்.48430352_2617594421602405_75618407455737

‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்ற பாடல் மூலம் மீண்டும் சுப்பர் சிங்கர் நேயர்களின் மனதை சின்மாயி தொட்டிருக்கின்றார். எந்த ஒரு தயக்கமும் இன்றித் தமிழில் பேசும், பாடும் இவர்களைப் போன்ற எங்கள் அடுத்த தலைமுறையினரின் திறமைகளை நாங்கள் பாராட்ட வேண்டும். மேலை நாடான கனடாவில் இருந்து தமிழ் குரல்கள் ஒலிப்பதே தமிழ் நாட்டுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. பிரபல எழுத்தாளர் ஒருவருடன் உரையாடும் போது, ‘தமிழ்நாட்டுப் பாடகிகள் தமிழில் பாடுவது ஆச்சரியமல்ல, கனடாவில் பிறந்து வளர்ந்த சிறுமி ஒருத்தி தமிழில் அழகாகப் பாடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது’ என்றார். எம்மவர்களைப் பாராட்டினால் மட்டும் போதாது, அவர்கள் வெற்றி பெறுவதற்கு எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அதற்காக நாம் வாக்களிக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதை நீங்கள் அறிவீர்கள், கனடாவின் பக்கம் சர்வதேசத்துப் பார்வையைத் திருப்புவதற்கு, குறிப்பாகத் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முடியாதது என்று எதுவுமே இல்லை, நீங்கள் மனது வைத்தால் முடியும், எனவே சின்மாயியின் வெற்றிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

பாடல்களைவிட அவற்றை முந்திக் கொண்டு அரவது உதட்டில் மெல்ல விரியும் புன்சிரிப்பு, அவரது பணிவு எல்லோரையும் முதலில் கவர்ந்து விடும். மகாஜனக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் கையால் பரிசு பெறும் பாக்கியம் சின்மயிக்குக் கிடைத்திருந்தது. வீடு திரும்பும் போது பொதுவாக அவருடன் நிகழ்ச்சி பற்றி உரையாடுவேன், ‘மட்டுவில் ஐயாவுடைய பேர்த்தி, இந்தப் பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று அப்பொழுதே சின்மயியைப் பாராட்டியிருந்தார். கனடா வாழ் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் சின்மாயி போட்டியில் வெற்றி பெற்றுப் பரிசுகளும், பாராட்டுக்களும் பெறவேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்திப் பாராட்டுவோம். இன்னும் பலர் இங்கே இலைமறைகாயாக இருக்கிறார்கள், அவர்களையும் எங்களால் முடிந்தளவு ஆதரிப்போம்.

குரு அரவிந்தன்.

 

http://akkinikkunchu.com/?p=70652

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார்.

சத்தியமங்கலம் பிரச்சனை வியாபார விஜய் ரிவிக்காரருக்கும்.....
தேன் சொட்ட புகழ்ந்து தள்ளிய கட்டுரையாளருக்கும் தெரியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சத்தியமங்கலம் பிரச்சனை வியாபார விஜய் ரிவிக்காரருக்கும்.....
தேன் சொட்ட புகழ்ந்து தள்ளிய கட்டுரையாளருக்கும் தெரியுமா? 

கனடாவைப் பொறுத்தவரை .....யாரை முன்னிறுத்தி அழைப்புக்கொடுத்தால் ..அவர்  ஆகா ..ஓகோ என்று புழுகிவினம்...அப்படி இல்லாவிட்டல் அந்த நிகழ்வுக்கு ..எதோ ஒரு சாயம் பூசிவிடுவினம்.....இது பாடகர்களுக்கு நன்கு தெரியும்...

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வேறு எந்த டிவி கம்பெனியும் சந்தா பணம் மூலம் நிகழ்ச்சி நடாத்த முடியாத நிலையில், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றை வைத்தே, விஜய் டிவி சந்தா  மூலம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பணம் பார்க்கிறது. சன் டிவி கூட சந்தாவில் பெரிதாக இல்லை.

லைக்கா, ஐபிசி டீவிக்கள் 30 நிமிட விளம்பரத்துக்கு கேட்பதிலும் பார்க்க, 350% அதிகமாக இவர்கள் விளம்பரத்துக்கு வாங்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஜய் டீவிக்காரனுக்கு தனது டீவியை பிரபலப்படுத்த ஓர் ஈழத்து மன்னிக்கவும் ஓர் புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஓர் தமிழன் தேவைப்படுகிறான் 

வியாபார யுத்திதான்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.