Jump to content

சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாங் இ-4 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது

January 3, 2019

change-4-lon-moon.jpg?resize=800%2C470

சாங் இ-4 ( chang’e E-4 )  விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. .

அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது.

இந்த நிலையில், நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில், சாங் இ-4 விண்கலத்தின் வட்டப் பாதை, நீள்வட்டப் பாதையாக ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டதனடிப்படையில் குறித்த விண்கலம் இன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

chi.jpg?resize=600%2C400

 

http://globaltamilnews.net/2019/108732/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் சீன விண்கலம் சாங்'இ 4: நிலவின் துருவப்பகுதியில் தரையிறங்கும் முதல் வாகனம்

  •  
     
சீன அரசு ஊடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள ரோபோ விண்கலம்.படத்தின் காப்புரிமை TWITTER/CGTNOFFICIAL Image caption சீன அரசு ஊடகத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள ரோபோ விண்கலம்.

நிலவின் தொலைதூரப் பகுதியில் தமது ரோபோ விண்கலம் ஒன்றைத் தரையிறக்கியதாக சீனா கூறியுள்ளது. இது போன்ற ரோபோ விண்கலம் ஒன்று நிலவில் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

சாங்'இ-4 என்ற அந்த விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி காலை 10.26 மணிக்கு (2.26 கிரீன்விச் நேரம்) தரையிறங்கியதாக சீனாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வட்டாரத்தின் மண்ணியல் வகையை ஆராய்வதற்கும், உயிரியல் தொடர்பான ஆய்வுகள் நடத்துவதற்கும் தேவையான கருவிகள் இந்த விண்கலத்தில் உள்ளன.

இந்த விண்கலம் தரையிறங்கியதை, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என்று விவரித்துள்ளது சீன அரசு ஊடகம்.

ஏனெனில் இதுவரையில் நிலவுக்கு சென்ற விண்கலங்கள் எல்லாம் நிலவின் புவியை நோக்கிய பகுதியிலேயே தரையிறங்கின. இதுவரை கண்டறியப்படாத நிலவின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறங்குவது இதுவே முதல் முறை.

கடந்த சில நாள்களாகவே, சாங்'இ-4 விண்கலம் தரையிறங்குவதற்காக தமது சுற்றுப்பாதையை நிலவை நோக்கி தாழ்த்திவந்தது.

கடந்தவார இறுதியில் இந்த விண்கலம் நிலவை நெருங்கி நீள் வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கியதாகவும், அந்நிலையில் நிலவின் தரைப் பகுதிக்கும் விண்கலத்துக்குமான குறைந்தபட்ச தொலைவு வெறும் 15 கிலோ மீட்டராக இருந்ததாகவும் சீன ஊடகம் தெரிவித்தது.

நிலவின் தொலைதூரப் பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவது என்ற முடிவு, இந்தப் பயணத்தை மிகுந்த சிக்கலும், ஆபத்தும் நிறைந்ததாக மாற்றியது. இதற்கு முன் நிலவை நோக்கி சீனா அனுப்பிய சாங்'இ-3 விண்கலம் 2013-ம் ஆண்டு நிலவின் மேர் இம்பிரியம் பகுதியில் தரையிறங்கியது. அந்த விண்கலம் எதிர்கொண்டதைவிட தற்போதைய விண்கலப் பயணம் அதிக ஆபத்தை எதிர்கொண்டது.

ஆனால், சீனாவின் இந்த சமீபத்திய நிலவுப் பயணம் மூலம் நிலவின் பாறை மற்றும் தூசி மாதிரிகளை சீனா புவிக்கு கொண்டுவரும்.

https://www.bbc.com/tamil/science-46743610

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à¯à®© à®à®°à®à¯ à®à®à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¿à®¤à¯à®¤à®¿à®°à®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³ à®°à¯à®ªà¯ விணà¯à®à®²à®®à¯.

எங்கடை நாகர்கோவில்  மண்புட்டியும் இரவிலை பாத்தால் உப்புடித்தான் தெரியும்...

kudathanai à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

எங்கடை நாகர்கோவில்  மண்புட்டியும் இரவிலை பாத்தால் உப்புடித்தான் தெரியும்

விஞ்ஞானம் ஒரு எல்லையை மீறி எதுவுமே செய்ய முடியாது. இதற்கு பெயர்தான் இயற்கை.

தாம் இருக்கும் பூமியை காக்க வக்கில்லாத மனிதம் சந்திரனிலும் செவ்வாயிலும் தண்ணியையும்  இன்னொரு வாழ்வையும் தேடுகின்றதாம்.:grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

செய்ய தெரிஞ்சவன் சாதனைகள் புரிகிறான். ஒன்றும் தெரியாதவன் நாகர்கோவிலில் நாகதம்பிரானுக்கு பொங்கி படைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கவேண்டியது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

செய்ய தெரிஞ்சவன் சாதனைகள் புரிகிறான். ஒன்றும் தெரியாதவன் நாகர்கோவிலில் நாகதம்பிரானுக்கு பொங்கி படைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கவேண்டியது தான். 

 சாதனை அது இதெல்லாம் அரசுகள் சார்ந்த விடயங்கள்.

இதில் சாதாராண பொதுமக்கள் பாத்திரவாளிகளாக மாட்டார்கள்.

மேலைத்தேய கீழைத்தேய அரசுகளே மதத்தை முன்னிலைப்படுத்தும் போது  அதன் கீழ்வாழும் குப்பனும் சுப்பனும் எம்மாத்திரம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தகவல்

பூமிக்கு தொலை தூரத்தில் இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் சாங் இ–4 விண்கலம் முதல் முறை தரையிறக்கப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் திகதி அங்கு தரையிறங்கிய இந்த விண்கலம் அந்த பிராந்தியத்தின் நிலவின் தன்மையை ஆராய்ந்து வருகிறது.நிலவில் தரையிறங்கிய இந்த விண்கலம் பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு விதைகளை எடுத்துச் சென்றது. விண்கலத்தில் மூடப்பட்ட கொள்கலனில் இந்த விதைகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த பருத்தி விதைகள் தற்போது மொட்டுகளாக தளிர்விட்டிருப்பதாக சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.china

நிலவில் எந்த ஒரு உயிரியல் பொருளும் முளைவிட்டிருப்பது இது முதல் முறை என்பதோடு, நீண்டகால விண்வெளி ஆய்வுகளுக்கு இது முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்கள் வளர்க்கப்பட்டபோதும் நிலவில் இதுவே முதல்முறையாகும். இது செவ்வாய் கிரகம் போன்ற நீண்ட தூர விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/நிலவுக்கு-எடுத்துச்-செல்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.