Jump to content

சபரிமலை சென்று வணங்கினார் இலங்கை தமிழ் பெண்மணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சபரிமலை சென்று வணங்கினார் இலங்கை தமிழ் பெண்மணி

à®à®²à®à¯à®à¯ பà¯à®£à¯ à®à®ªà®°à®¿à®®à®²à¯ பயணமà¯

எனினும் தனது பாதுகாப்பு கருதி தன்னை உள்ளே விடவில்லை என்று சொன்னாலும், அவர் உள்ளே சென்று வணங்கியது உண்மைதான் என வீடியோ ஆதாரத்துடன் கேரளா போலீசார் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம்: கனகதுர்கா, பிந்து ஆகியோர் சபரிமலை கோவிலுக்குள் சென்றதை போல, சபரிமலை கோவிலினுள் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் உள்ளே சென்றது உண்மை என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர். நாடு முழுவதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவகாரங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலும் ஒன்றாகும். கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து பெண்கள் சிலர் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால், போராட்டக்காரர்கள் மற்றும் தீவிர பக்தர்கள் அவர்களை செல்லவிடாமல் தடுத்து வருகின்றனர்.

இருப்பினும், கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள காவல்துறை உதவியுடன் சாமி தரிசனம் செய்தனர். இது அம்மாநில முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதனை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் சங் பரிவார் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்றது.

இலங்கை பெண் சபரிமலை பயணம் இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணி அளவில் காவல்துறை பாதுகாப்புடன் இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் சபரிமலை சென்றதாகவும், 18 படிகள் ஏறி தரிசனம் முடித்த பின்னர் பம்பையில் உள்ள முகாமிற்கு அவர் பாதுகாப்பாக திரும்பி கொண்டு வரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

கோயிலினுள் செல்லவில்லை அய்யப்ப பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் கோயிலுக்குள் தாம் செல்லவில்லை என்று அந்த பெண் மறுப்பு தெரிவித்து உள்ளார். பம்பையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்த போது இதனை மறுத்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், நான் ஒரு பக்தை. 48 நாட்கள் விரதத்தை முடித்து, அய்யப்பனை தரிசிக்க சென்றேன்.

போலீசார் தடுத்துவிட்டனர் ஆனால் என்னை செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். சாமி தரிசனம் செய்யக்கூடாது என்று என்னை தடுக்க இவர்கள் யார்? என்னுடைய கர்ப்பப்பை அகற்றப்பட்டுவிட்டது. அதற்கான மருத்துவ சான்றிதழும் என்னிடம் உள்ளது. ஆகையால் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முழு உரிமையும் எனக்கு இருக்கிறது என்றார்.

திருப்பி அனுப்பப்பட்டோம் சம்பவம் குறித்து அவரது கணவர் கூறுகையில், நாங்கள் மரக்கூட்டம் என்ற பகுதி வரை மட்டும் தான் செல்ல முடிந்தது. அதன் பின்னர் எங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர் என்றார். ஆனால் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள காவல்துறையின் உயரதிகாரி ஒருவர், சசிகலா சாமி தரிசனம் செய்திருக்கலாம். ஆனால், அதை அவரே உறுதிப்படுத்த மறுக்கிறார் என்று கூறினார்.

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/did-46-years-srilankan-women-worship-at-sabarimala-she-says-no/articlecontent-pf346217-338089.html

அய்யப்பன் கோயிலுக்கு சசிகலா போனது உண்மைதான்... இந்தாங்க சிசிடிவி ஆதாரம், போலீசார் அதிரடி

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இலங்கை பெண் சசிகலா சென்று சாமி கும்பிட்டது உண்மைதான் என்று கூறியுள்ள கேரள போலீசார், அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.