Jump to content

கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறி மிளகாய் தூள் தயாரிக்கும் முறை

Untitled-1-1_zpsccdbd618.jpg 



 

1 1/2 கி.கிராம் தூள் கிடைக்கும் 

தேவையான பொருட்கள் 

  1. செத்தல் மிளகாய் - 500 கிராம் 
  2. மல்லி - 400 - 500 கிராம் 
  3. பெருஞ்சீரகம் - 100 கிராம் 
  4. மிளகு - 50 கிராம் 
  5. சிறிதாக வெட்டிய மஞ்சள் - 25 கிராம் 
  6. கடுகு - 1 மே. க. ( நிரப்பி )
  7. வெந்தயம் - 1 மே. க . ( நிரப்பி )
  8. நற்சீரகம் - 2 மே . க ( நிரப்பி ) 
  9. இறைச்சி சரக்கு - 2 பக்கட் ( சிறியது )
  10. கறிவேப்பிலை - 10 நெட்டு 

செய்முறை :-

  • மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . 

 

  • மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு  சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி கொண்டபின் , மிளகாய் விதைகள் வேறாகவும் , மிளகாய் தோல் வேறாகவும் பிரித்து எடுத்துக் கொள்க . ( விதைகளை வேறாக எடுக்கா விடல் வறுக்கும்போது கருகிவிடும் ) 

 

  • பின்பு தாச்சியை அடுப்பில் வைத்து சூடானதும் மல்லியை இட்டு வறுக்கவும் . மல்லி சரியாக வறுக்கபட்டிருப்பின் விரல்களின் இடையே வைத்து நசுக்கி பார்க்கும் போது தூளாக உதிரும் பருவத்தில் மல்லியை எடுத்துக் கொள்க .மீண்டும் தாய்ச்சியில் பெருஞ்சீரகத்தை போட்டு வறுத்து , விரல்கள் இடையே வைத்து நசிக்கும் போது உதிரும் பருவத்தில் எடுத்துக் கொள்க . 

 

  • மீண்டும் தாய்ச்சியில் நற்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் . கச்சான் முத்து , கறிவேப்பிலை என்பவற்றை போட்டு வறுத்துக் கறிவேப்பிலை முறுகிய பதத்தில் எடுத்துக் கொள்க  

 

  • இவ் வண்ணமே மிளகாய் விதைகளைத் தனியாக பொன் நிறமாக  வறுத்தெடுத்துக் கொள்க . மிளகாய்த் தோலை தனியாக நன்றாக சூடாகும்வரை  வறுத்தெடுத்து  கொள்க . 

 

  • பின்பு வறுத்த மல்லி , பெருஞ்சீரகம் , மிளகு , வெந்தயம் , கடுகு , இறைச்சி சரக்கு , மஞ்சள் , கச்சான் முத்து , கறிவேப்பிலை , மிளகாய் விதை , மிளகாய் தோல்  என்பவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து திரித்தெடுத்து  நன்றாக ஆற வைத்து அரித்தெடுத்துக் கொள்க . 

 

  • காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம் .

குறிப்பு :-

விரும்பினால் ஒரு பிடி உழுந்து , அரிசி , கடலைப் பருப்பு , கச்சான் முத்து  என்பவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம் .

 

http://yarlsamayal.blogspot.com/2013/02/blog-post_9228.html?m=0

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  
Quote

 

  • மிளாகாய் , மல்லி , பெருஞ்சீரகம் ஆகியவற்றை துப்பரவு செய்து தனி தனியாக கழுவி காய வைத்து எடுத்துக் கொள்க . 

 

  • மிளகாயின் காம்பை நீக்கிவிட்டு  சிறு சிறு துண்டுகளாக வெட்டி கையால் நன்கு கசக்கி கொண்டபின் , மிளகாய் விதைகள் வேறாகவும் , மிளகாய் தோல் வேறாகவும் பிரித்து எடுத்துக் கொள்க . ( விதைகளை வேறாக எடுக்கா விடல் வறுக்கும்போது கருகிவிடும் ) 

 

 

ஆரோ ஒண்டு வேலை மினைக்கெட்டு எழுதியிருக்கு....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:
  •  

ஆரோ ஒண்டு வேலை மினைக்கெட்டு எழுதியிருக்கு....:cool:

மிளகாயைக் கசக்கி விதைகளை வேறாக்குவதால் கருகாமல் வறுக்கலாமாம். ஆனால் கசக்கின கையால் தொடக்கூடாத இடத்தில் தொட்டால் நடப்பதற்கு பரிகாரம் தரப்படவில்லை🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் காம்பையும் நீக்க தேவையில்லை. நல்ல தூளுக்கு கச்சான் எல்லாம் அவசியமில்லை.பிரயோசனமான குறிப்பு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

 

குறிப்பு :-

விரும்பினால் ஒரு பிடி உழுந்து , அரிசி , கடலைப் பருப்பு , கச்சான் முத்து  என்பவற்றை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம் .

 

http://yarlsamayal.blogspot.com/2013/02/blog-post_9228.html?m=0

 

உது எந்த ஊரு தூள் ?

ஐயோ. அய்யோ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உது எந்த ஊரு தூள் ?

ஐயோ. அய்யோ ...

நீங்கள் சொந்தமாக தூளைத் திரிக்காமல் கடையில் வாங்கினால் செங்கல் உட்பட தெரியாத கலவை எல்லாம் இருக்கும்.😯

அதைவிட கடலைப்பருப்பு, கச்சான் முத்து பரவாயில்லை🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

மிளகாயைக் கசக்கி விதைகளை வேறாக்குவதால் கருகாமல் வறுக்கலாமாம். ஆனால் கசக்கின கையால் தொடக்கூடாத இடத்தில் தொட்டால் நடப்பதற்கு பரிகாரம் தரப்படவில்லை🤓

நீங்கள் சூரிய வெளிச்சம் படாத இடத்தைப்பற்றி கதைக்கிறியள்

ஆனால் இவையள்?????? :cool:

Quote

காற்று புகாத ஜாடியில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

உது எந்த ஊரு தூள் ?

ஐயோ. அய்யோ ...

குழம்பு.. தடிப்பாக  வர வேண்டும் என்பதற்காக ஊரில்... சிலர் கொஞ்ச அரிசி போட்டு, மிளாகாய்த் தூள் தயாரிப்பார்கள்.
ஆனால்.... உளுந்து, கடலைப் பருப்பு,  கச்சான்  போடுவது புதிதாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.