Jump to content

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது பாகிஸ்தான் – தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது பாகிஸ்தான் – தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

sa.jpg

பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவிற்கு 41 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை  நிர்ணயித்துள்ளது.

தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 3 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட தென்னாபிரிக்கா அணி முடிவு செய்தது.

அதன் பிரகாரம் முதலில் களமிறங்கிய பாக்கிஸ்தான் அணி 177 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் சர்ஃப்ராஸ் அகமட் 56, ஷான் மசூத் 44 ஓட்டங்களை பெற பந்துவீச்சில் டுவானோ ஒலிவியே 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாபிரிக்கா 431 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் டூ பிளெஸ்ஸிஸ் 103, மார்கரம் 78, தம்பா பவூமா 75, குயின்டன் டி கொக் 59 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதன் பின்னர் 254 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 3 ஆம் நாள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அவ்வணி சார்பில் ஆசாத் ஷபிக் 88, பாபர் அசாம் 72, ஷான் மசூத் 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் டேல் ஸ்டெயின் மற்றும் றபாடா தல 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனால் 41 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா  அணிக்கு நிர்ணயித்துள்ளது. இப்போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

 

http://athavannews.com/இன்னிங்ஸ்-தோல்வியை-தவிர்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.