Jump to content

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

50059409_2058482517571403_4768667000081743872_n.jpg?_nc_cat=110&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=11b1c3446961ff4918c23b611e2f899e&oe=5CCB1C2D

 

மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாத
சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

 
மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
 இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் "சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்" என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை.
ஆனாலும் மன்னார் மாவட்டம் அனைத்து மதத்தினருக்கும் உரிய பூமி எனவும் எந்த தனி நபர்களும் எங்கள் மத ஒற்றுமையை இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் சீர்குழைக்க முடியாது என பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான மத வாத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

இந்த சிவ சேனை குரூப்பை விரட்டுவது நல்லம், இவர்களது குறிக்கோள் எப்படியாவது சைவ மக்களுக்கும் கத்தொலிக்க மக்களுக்கும் பகையை மூட்டுவது தான்.

Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

Link to comment
Share on other sites

10 hours ago, Rajesh said:

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

இன்னொருவரை வலிந்து மதம் மாற்ற நினைப்பது கொடிய மனநோய்! 

இவர்களுக்கு உரிய முறையில் "வைத்தியம்" பார்க்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

அன்னியர்களின் படையெடுப்புகளால் எம்மவர்கள் மதரீதீயாக துன்புறுத்தப்பட்டனர், நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆசைவார்த்தைக்கு இரையாக்கப்பட்டனர். இவையெல்லாம் வரலாறுகளாக உள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் இருந்தது.

 இலங்கையில் சைவர்கள் கோவிலுக்கு போகவிட்டால் ஐயர் வீடு தேடி வரமாட்டார். ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு அவர் இவர் வரவில்லையெனில் பாதர் வீடுதேடி வருவார். என் கண்ணால் பார்த்தது. 

வெள்ளிக்கிழமைகளில் அநேக கிறிஸ்தவர்கள் மீன் சாப்பிடுவார்கள் ஏன் டாக்டர்?

மத சுதந்திரம் வேறு. மத மாற்ற தூண்டுதல் வேறு. படித்துவிட்டு வாருங்கள். சுதந்திரத்தை  பற்றி அலசி ஆராய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

சுயமாக  மதம் மாறுவதற்கும்  இயலாமையை பயன்படுத்தி இலவச உதவிகளை காட்டி மதம் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் மதம்  மாற்றிகள் இரண்டாவது ரகம். இவர்கள் எமது தாயகத்தில் இருந்து மிக முக்கியமாக அகற்றப்பட வேண்டியவர்களே!

முடிந்தால்  இந்த உலகிலிருந்தே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

ஜஸ்டின்,

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்?

அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. 

தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. 

மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் வாளின் முனையினால் பரப்பப்பட்ட ஓர் மதம்.
வழுக்கட்டாயமாகவே பலர் மதம் மாற்ற‌ப்பட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

அன்னியர்களின் படையெடுப்புகளால் எம்மவர்கள் மதரீதீயாக துன்புறுத்தப்பட்டனர், நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆசைவார்த்தைக்கு இரையாக்கப்பட்டனர். இவையெல்லாம் வரலாறுகளாக உள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் இருந்தது.

 இலங்கையில் சைவர்கள் கோவிலுக்கு போகவிட்டால் ஐயர் வீடு தேடி வரமாட்டார். ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு அவர் இவர் வரவில்லையெனில் பாதர் வீடுதேடி வருவார். என் கண்ணால் பார்த்தது. 

வெள்ளிக்கிழமைகளில் அநேக கிறிஸ்தவர்கள் மீன் சாப்பிடுவார்கள் ஏன் டாக்டர்?

மத சுதந்திரம் வேறு. மத மாற்ற தூண்டுதல் வேறு. படித்துவிட்டு வாருங்கள். சுதந்திரத்தை  பற்றி அலசி ஆராய்வோம்.

கு.சா, எனக்கு நீங்கள் படிப்பிக்க அதிகம் இல்லை! மதம் என்பது நான் ஒரு காரணத்திற்காக மாறினாலும் ஒரு காரணமும் இல்லாமல் மாறினாலும் கேட்க அதிகாரம் யாருக்கும் இல்லை! என் சாப்பாடு, உடை, யாருடன் நான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது போன்றே இதுவும்! வன் முறை தவறு! மைனரை மாற்றுவது தவறும், குற்றமும்! தங்கள் மதத்தின் இயல்புகளைப் பற்றி எழுத, பேச யாருக்கும் உரிமை உண்டு! மற்றவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம்! விரும்பா விட்டால் தாண்டிப் போகலாம்!

இதில் அடக்கி வாசிக்க எதுவும் இல்லை! நினைப்பதைச் சொல்லவே யாழ் களம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

ஜஸ்டின்,

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்?

அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. 

தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. 

மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.

நான் மேலே சொன்ன பதிலே இங்கும் பொருந்தும் ரகு! வாள் முனை, துவக்கு முனையில் மாற்றுவது குற்றம்! மேலே 15- 16 வயதுப் பிள்ளையை மாற்றியதை சிறுவர் கடத்தல் என்று தான் கையாள வேண்டும்- குற்றமே! ஆனால், ஒரு மதத்தை ஒருவர் வீதியில் நின்று போதிப்பது தவறு என்பதும், அதன் பால் ஈர்க்கப் பட்டோ அல்லது தாம் இருக்கிற மதத்தினால் தமக்குக் கிடைக்காத உரிமைகளுக்காகவும் மாறுவது தவறு என்பதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! ஒருவன் வாழும் கொஞ்ச நாட்களில் அவனை அவனுக்காக வாழ விடுங்கள், ஒரு மதத்தைக் காக்க, கலாச்சாரத்தைக் காக்க என்று மற்றவனை எடை போடும் வேலை விடுதலைக்கு உழைப்பதாகச் சொல்லும் ஆட்களுக்கு உகந்த வேலையல்ல!

3 hours ago, Eppothum Thamizhan said:

சுயமாக  மதம் மாறுவதற்கும்  இயலாமையை பயன்படுத்தி இலவச உதவிகளை காட்டி மதம் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் மதம்  மாற்றிகள் இரண்டாவது ரகம். இவர்கள் எமது தாயகத்தில் இருந்து மிக முக்கியமாக அகற்றப்பட வேண்டியவர்களே!

முடிந்தால்  இந்த உலகிலிருந்தே..

என்ன வித்தியாசம்? என் கேள்வியே சட்டம் இருக்கிறது என்றீர்கள், எப்படி சட்டம் மீறப்பட்டதை நிரூபிப்பீர்கள்? என்பது தான். அமல் படுத்த முடியாத சட்டம் துஷ்பிரயோகமாகவே மாறும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. 

ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? 

நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?   

இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. 

மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

மனிதன் வாழ்வதற்கு மதம் என்பது தேவையற்றது. மனிதனின்  பலவீனமே மதத்தை உருவாக்கியது. உலகின் முதலில்  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே மதம் ஆகும். எல்லா  மதங்களுமே முட்டாளத்தனத்தை தான் மக்களுக்கு போதிக்கின்றன. ஒரு முட்டாள்த்தனத்தில்  இருந்து விலகி மற்றய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்வது தான்  மத மாற்றம். 

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

வருணாசிரம்ம் என்னும் மனிதரை தரவரிசைப் படுத்தும் சாதி  அடுக்கு பிரிவினை இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது. அதை கிருஷனரே பகவத்கீதையில் கூறுகிறார்  இந்து மதம் இல்லாத நாடுகளில் சாதி அடுக்கு இல்லை.(மத இனப் பிரிவுகள் இருக்கலாம் அது ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற சாதி அடுக்கு அல்ல)

ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற மனிதரை தரவரிசைப்படுத்தும் சாதி அடுக்கு என்பது இந்து மதத்தினால் அது உள்ள  மற்றைய மத மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் ஆகும். அந்த நோயின் மூலக்கூறு உள்ள இந்து மதத்தில் இருந்து அது அகற்றப்பட்டால் மற்றைய சிறு பகுதி மக்களிடம் இருந்தும் அது மறைந்துவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

2 minutes ago, tulpen said:

வருணாசிரம்ம் என்னும் மனிதரை தரவரிசைப் படுத்தும் சாதி  அடுக்கு பிரிவினை இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது. அதை கிருஷனரே பகவத்கீதையில் கூறுகிறார்  இந்து மதம் இல்லாத நாடுகளில் சாதி அடுக்கு இல்லை.(மத இனப் பிரிவுகள் இருக்கலாம் அது ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற சாதி அடுக்கு அல்ல)

ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற மனிதரை தரவரிசைப்படுத்தும் சாதி அடுக்கு என்பது இந்து மதத்தினால் அது உள்ள  மற்றைய மத மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் ஆகும். அந்த நோயின் மூலக்கூறு உள்ள இந்து மதத்தில் இருந்து அது அகற்றப்பட்டால் மற்றைய சிறு பகுதி மக்களிடம் இருந்தும் அது மறைந்துவிடும். 

ஆக இதற்கும் சைவ/இந்துமதங்கள் தான் காரணம். மற்றவர்களில் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதானே.

இந்து மத வாசனையே இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொடுமையான சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அறியவில்லையென நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

2 minutes ago, குமாரசாமி said:

ஆக இதற்கும் சைவ/இந்துமதங்கள் தான் காரணம். மற்றவர்களில் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதானே.

இந்து மத வாசனையே இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொடுமையான சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அறியவில்லையென நினைக்கின்றேன்.

 

ஆம் சரிதான் இந்து மதம் போல் அயோக்கியத்தனமாக  மக்களைப் பிரிக்கும்  கொடுமை நீங்கள் கூறியதைப் போல் ஆபிரிக்க நாடுகளில் உள்ளது என்றால் அதுவும் களையப்பவேண்டியது என்று அர்த்தமே தவிர இந்து மதத்தில் அந்தக் கொடுமை இல்லை என்று ஆகிவிடாது. எம்மைபப் போலவே கேவலமாய் மற்றயவனும் இருக்கிறான் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது கேவலத்தை மறைக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

ஆம் சரிதான் இந்து மதம் போல் அயோக்கியத்தனமாக  மக்களைப் பிரிக்கும்  கொடுமை நீங்கள் கூறியதைப் போல் ஆபிரிக்க நாடுகளில் உள்ளது என்றால் அதுவும் களையப்பவேண்டியது என்று அர்த்தமே தவிர இந்து மதத்தில் அந்தக் கொடுமை இல்லை என்று ஆகிவிடாது. எம்மைபப் போலவே கேவலமாய் மற்றயவனும் இருக்கிறான் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது கேவலத்தை மறைக்க முடியாது. 

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் சாதி விடயத்தில் திருந்தவில்லை என்று குறிப்பிட்டதற்கு....அதற்கும் இந்துக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட உங்களுடன் கருத்தெழுதுவது வீண். 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் சாதி விடயத்தில் திருந்தவில்லை என்று குறிப்பிட்டதற்கு....அதற்கும் இந்துக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட உங்களுடன் கருத்தெழுதுவது வீண். 

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எமது இத்து மதத்தில் இருந்து தான் சாதி போனது என்பது யதார்ததமானது. 100 வீத உண்மையும் கூட. நீங்கள் இருக்கும் ஜேர்மனியில் வாழும் கிறிஸ்தவர்களிடம் சாதி இருந்திருந்தால் அது  ஜெரூசலத்தில் இருந்து அல்லது பைபிளில் இருந்து போனது எனலாம். ஆனால் இங்கு இல்லையே!  நீங்கள் கூறியது போல  ஊரில் தானே இருக்கிறது. அப்படியானால் அது எம்மில் இருந்து தானே போயிருக்க வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எப்படித் திருந்துவார்கள் அவர்கள் ஒரு முட்டாள்த்தனத்தில் இருந்து விலகி மற்றைய முட்டாள்த்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாச்சே. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. 

ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? 

நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?   

இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. 

மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.

நான் கேட்பதெல்லாம், ஒருவன் தன் துன்பங்களுக்குத் தீர்வு மதம் மாறுவதால் கிடைக்கும் என்று நினைத்தால், அதைக் கேட்க நீங்கள் யார் என்பதே! நீங்கள் சவூதி, ஈரான் மலேசியாவில் இருப்பது போன்ற கலாச்சார/மத காப்புப் படையா? வன்முறை மாற்றம் பற்றி நான் எதிர்ப்பை ஏற்கனவே சொல்லி விட்டேன். மறு கருத்தில்லாமல் அது தவறு. ஆனால், மென்முறையில் ஒருவன் மாற்றப் பட்டால், அவன் பொருளுக்காக மாறினால் என்ன, ஒன்றுமில்லாததற்காக மாறினால் என்ன? அவன் வாழ்வு, அவன் விருப்பம்! இந்த மாதிரியான ஒரு சுதந்திரத்திற்காக அல்லவா நாம் புலம் பெயர்ந்து தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் மேற்கு நாடுகளுக்கு வந்தோம்? நாம் ஏன் இந்தியாவிலோ, மதத்தை அனுமதிக்காத வடகொரியாவிலோ, அல்லது மத்திய கிழக்கிலோ தங்க முனையவில்லை?

என்னுடைய கருத்து பிரபலமாக இல்லாதிருக்கலாம், ஆனால் அது என்னுடைய சுதந்திரத்திற்கான என் ஸ்ராண்டர்ட்! சாதியைப் பற்றி நான் இங்கு பேசவேயில்லை. அது யாருக்காவது சுட்டு அவர்கள் அதை இழுத்தால் அது அவர்கள் பிரச்சினை!

1 hour ago, tulpen said:

மனிதன் வாழ்வதற்கு மதம் என்பது தேவையற்றது. மனிதனின்  பலவீனமே மதத்தை உருவாக்கியது. உலகின் முதலில்  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே மதம் ஆகும். எல்லா  மதங்களுமே முட்டாளத்தனத்தை தான் மக்களுக்கு போதிக்கின்றன. ஒரு முட்டாள்த்தனத்தில்  இருந்து விலகி மற்றய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்வது தான்  மத மாற்றம். 

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

நூறு வீதம்! மதத்தை வீட்டிலேயே விட்டு வந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எமது இத்து மதத்தில் இருந்து தான் சாதி போனது என்பது யதார்ததமானது. 100 வீத உண்மையும் கூட. நீங்கள் இருக்கும் ஜேர்மனியில் வாழும் கிறிஸ்தவர்களிடம் சாதி இருந்திருந்தால் அது  ஜெரூசலத்தில் இருந்து அல்லது பைபிளில் இருந்து போனது எனலாம். ஆனால் இங்கு இல்லையே!  நீங்கள் கூறியது போல  ஊரில் தானே இருக்கிறது. அப்படியானால் அது எம்மில் இருந்து தானே போயிருக்க வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எப்படித் திருந்துவார்கள் அவர்கள் ஒரு முட்டாள்த்தனத்தில் இருந்து விலகி மற்றைய முட்டாள்த்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாச்சே. 😀

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

கு.சா, எங்கே போய் எதைப் பார்த்து விட்டுப் பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை! அப்பம் வாங்க வரிசையில் தான் இப்போது போகிறார்கள்! இது தான் தாயகத்திலும். இங்கே இரு அங்கே இரு என்று யாரையும் யாரும் ஒதுக்கி வைத்ததாக நான் இலங்கையில் வடக்கிலும் மத்தியிலும் மேற்கிலும் சென்ற எந்த ஆலயத்திலும் காணவில்லை!இது 2002 வரையில் தெரிந்தது. ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்! இதென்ன புதுக் கதை? இந்த சாதி மேட்டரில் எனக்கு ஆர்வம் இல்லை! ஆனால் எந்த இடம் எந்தக் கோவில் என்றாவது சொல்லுங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

5 minutes ago, Justin said:

ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்!

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

8 minutes ago, Justin said:

கு.சா, எங்கே போய் எதைப் பார்த்து விட்டுப் பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை! அப்பம் வாங்க வரிசையில் தான் இப்போது போகிறார்கள்! இது தான் தாயகத்திலும். இங்கே இரு அங்கே இரு என்று யாரையும் யாரும் ஒதுக்கி வைத்ததாக நான் இலங்கையில் வடக்கிலும் மத்தியிலும் மேற்கிலும் சென்ற எந்த ஆலயத்திலும் காணவில்லை!இது 2002 வரையில் தெரிந்தது. ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்! இதென்ன புதுக் கதை? இந்த சாதி மேட்டரில் எனக்கு ஆர்வம் இல்லை! ஆனால் எந்த இடம் எந்தக் கோவில் என்றாவது சொல்லுங்கள்?

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

அப்படி அவர் செய்திருந்தால் அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால அந்த சாதி நோய் அவருக்கு வந்தது அவரது தாய் மதமான எமது இந்துமதத துல் இருந்து தான். அது மறுக்கவோ மறைக கவோ முடியாத உண்மை. 

 

59 minutes ago, குமாரசாமி said:

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

அவர்கள் பிரிந்து போக காரணம் அந்  நாடுகள் சுயநிர்ணய உரமை  உள்ள தேசங்களாஎ ஏற்கனவே யூகோஸ்லாவிய குடியரசில்  இணைந்திருந்ததே. தங்களை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியம் தவறானதல்ல. நாமும் அதையே விரும்பினோம்.  யூகோஸிலாவிய குடியரசு உடைந்து  மத அடிப்படையில் எந்த நாடு உருவாகியது  என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். தயவு செய்து அதை மட்டும் கூறிவிட்டு திரியில் இருந்து விடை பெறவும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூகொஸ்லாவியா பிரிந்தபோது உருவாகிய செர்பியா, குரோஷியா மற்றும் பொஸ்னியா ஹெர்ஸகோவினா ஆகிய நாடுகளில் பொஸ்னியா பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்டது. குரோஷியா கத்தோலிக்கர்களையும், சேர்பியா பழமைவாத கிறீஸ்த்தவர்களையும் கொண்டது. 

பார்க்கபோனால், ஓரளவிற்கு மத அடிப்படையில்த்தான் பிரிந்து இவை உருவாகின என்று நான் நினைக்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில், யூதர்களுக்குப் பின்னர் இனவழிப்பிற்குள் அகப்பட்ட இனம் என்றால்  அது பொஸ்னிய முஸ்லீம்களாகத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.