Jump to content

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

சும்மா வதந்தி பரப்பக் கூடாது! கிறிஸ்தவ தேவாலயத்தில் இந்த பின் வரிசை முன் வரிசையெல்லாம் இல்லை! நான் கேள்விப் படவில்லை! பிந்தி வந்தவர் பின் வரிசை, முந்தி வந்தவர் முன் வரிசை! பொய்களைக் கண்டு பிடித்தால் உடனே வாபஸ் தான்!

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
12 minutes ago, ragunathan said:

யூகொஸ்லாவியா பிரிந்தபோது உருவாகிய செர்பியா, குரோஷியா மற்றும் பொஸ்னியா ஹெர்ஸகோவினா ஆகிய நாடுகளில் பொஸ்னியா பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்டது. குரோஷியா கத்தோலிக்கர்களையும், சேர்பியா பழமைவாத கிறீஸ்த்தவர்களையும் கொண்டது. 

பார்க்கபோனால், ஓரளவிற்கு மத அடிப்படையில்த்தான் பிரிந்து இவை உருவாகின என்று நான் நினைக்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில், யூதர்களுக்குப் பின்னர் இனவழிப்பிற்குள் அகப்பட்ட இனம் என்றால்  அது பொஸ்னிய முஸ்லீம்களாகத்தான் இருக்கும்.

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பொதுவாக மொழிவாரி இன அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இன அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கொண்ட  தேசங்களாக  இணைந்திருந்த நாடுகள் டிட்டோவின் மறைவற்கு பின்னரன காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சியுடன் தனித்தனி சுதந்திர நாடுகளாக பிரிந்தன. கொசொவோ மாகாணம் மட்டும் இன அடிப்படையில் புதிய நாடாக உருவாகியது. பெரும்பாலான முஸ்லீம்களை கொண்டிருந்தாலும் கொசோவோ இஸ்லாமிய நாடாக தன்னை அடையாளப்படுத்தவில்லை. கணிசமான அளவு கிறிஸ்தவர்களும் அலபேனிய மக்களிடையே உண்டு. ஒரு நாடுமே  மத அடிப்படையில்  அங்கு உருவாகவில்லை.

Link to comment
Share on other sites

10 hours ago, ragunathan said:

கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

இலங்கையில் இது 100க்கு 100 உண்மை. சாதிய கட்டுப்பாடுகள் மிக ஆழமாக, இந்துக்கள் மத்தியில் உள்ளதற்கு இணையாக கிருஸ்தவர்கள் மத்தியிலும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

கு.சா, எனக்கு நீங்கள் படிப்பிக்க அதிகம் இல்லை! மதம் என்பது நான் ஒரு காரணத்திற்காக மாறினாலும் ஒரு காரணமும் இல்லாமல் மாறினாலும் கேட்க அதிகாரம் யாருக்கும் இல்லை! என் சாப்பாடு, உடை, யாருடன் நான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது போன்றே இதுவும்! வன் முறை தவறு! மைனரை மாற்றுவது தவறும், குற்றமும்! தங்கள் மதத்தின் இயல்புகளைப் பற்றி எழுத, பேச யாருக்கும் உரிமை உண்டு! மற்றவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம்! விரும்பா விட்டால் தாண்டிப் போகலாம்!

இதில் அடக்கி வாசிக்க எதுவும் இல்லை! நினைப்பதைச் சொல்லவே யாழ் களம்!

 

அடுத்தவன் கருத்து எழுதினால் ...
மட்டுஉறுப்பினர் வந்து பார்க்க வேணும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

நூறு வீதம்! மதத்தை வீட்டிலேயே விட்டு வந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை!

அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உங்கள் மதத்தை உங்கள் வீட்டுடனும் தேவாலயத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். அதை என் மற்றவன் வீட்டிற்கு  சென்று போதித்து மதம் மாற்ற முனைகிறீர்கள் என்பதுதானே பிரச்சனையே!

சாதிப்பிரச்சனை, நிற துவேசம் என்பன எல்லா நாட்டிலும் ஏன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட..இருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடும் உங்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை.

11 hours ago, Justin said:

நான் கேட்பதெல்லாம், ஒருவன் தன் துன்பங்களுக்குத் தீர்வு மதம் மாறுவதால் கிடைக்கும் என்று நினைத்தால், அதைக் கேட்க நீங்கள் யார் என்பதே!

ஒருவன் தனது மனைவியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக்கொடுப்பதால் சலுகைகளும் துன்பங்களுக்கு தீர்வும் கிடைக்கும் என்றால் அதைக்கூட செய்யலாம் என்பீர்களா? அதெப்படி மதம் மாறுவதால் இவை கிடைக்கும் என்றால் மதம் மாறலாம் என்பதை இவ்வளவு இலகுவாக நியாயப்படுத்துகிறீர்கள்.

எமது இனத்தின் அடையாளம் மதமும் மொழியுமே. அதை தொலைத்துவிட்டு எமது துன்பங்கள் தீர மத மொழி மாற்றங்களே தீர்வென்றால் சிங்களவராகவும் புத்தனாகவும் மாறி நமது நாட்டிலேயே வாழலாமே. போராட்டங்களே தேவை இல்லையே.

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

உங்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அவர்களது நாட்டில் அனுமதித்தது உங்களிடம் வேலை வாங்கி அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவே அன்றி உங்களில் உள்ள அக்கறையால் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

அப்படி அவர் செய்திருந்தால் அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால அந்த சாதி நோய் அவருக்கு வந்தது அவரது தாய் மதமான எமது இந்துமதத துல் இருந்து தான். அது மறுக்கவோ மறைக கவோ முடியாத உண்மை. 

 

சாதிய நோயில் இருந்து விடுபடவே ஒருவர் இந்துமதத்தில் இருந்து மற்றய மதத்துக்கு  மாறுகிறார் என்று கூறிவிட்டு பல சந்ததிகளின் பின்னும் அவர் அதே மனா நிலையில்தான் இருக்கிறார் அது அவர் தாய் மதத்தில்  இருந்துதான் வந்தது என்றால் அது மாறியிருப்பவர்களின் பிழையா அல்லது மதத்தின் பிழையா?

அப்போ இப்படி மதம் மாறியவர்கள் மத்தில் உள்ள ஈர்ப்பால் மதம் மாறவில்லை சலுகைகளுக்காகத்தான் சோரம் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

சாதிய நோயில் இருந்து விடுபடவே ஒருவர் இந்துமதத்தில் இருந்து மற்றய மதத்துக்கு  மாறுகிறார் என்று கூறிவிட்டு பல சந்ததிகளின் பின்னும் அவர் அதே மனா நிலையில்தான் இருக்கிறார் அது அவர் தாய் மதத்தில்  இருந்துதான் வந்தது என்றால் அது மாறியிருப்பவர்களின் பிழையா அல்லது மதத்தின் பிழையா?

அப்போ இப்படி மதம் மாறியவர்கள் மத்தில் உள்ள ஈர்ப்பால் மதம் மாறவில்லை சலுகைகளுக்காகத்தான் சோரம் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

மத மாற்றம ்தொடர்பான எனது கருத்தை முன்பே தெரிவித்து விட்டேன். இந்து மதம் என்ற முட்டாள் தனத்தில் இருந்தது கிறிஸ்தவ மதம் என்ற முட்டாள்த்தனத்திற்கு மாறுவதே மத மாற்றம். இப்படியானவர்கள் தமது தாய்மதமான இந்து சாதிய நோயில் இருந்து எவ்வாறு வெளியே வர முடியும்.  ஆனால் சாதீயத்தில் ஊற்று இந்து மத‍த்தில் தான் இருக்கிறது. இவ்வாறு எழுதும் நான் கூட சிறு வயதில் எமது வீட்டுக்கு வேலை செய்ய வந்த தொழிலாளர்களுக்கு  சிரட்டையில் தேனீர் கொடுத்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. 

  • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
  1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
  2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)

சாதிய கொடுமை ஒழிய நாம் செய்ய வேண்டியது எமது பிள்ளைகளுக்கு அந்த நோயை திணிக்காமல் இருப்பது தான்.  பிள்ளைகளுக்கு சாதிவெறியை வீட்டில் வைத்து  ஊட்டிவிட்டு சாதியை ஒழிப்பது நாம் விரும்பினாலும் முடியாது. அது கஷ்ரம் என்று  பொது இடங்களில் கூறும் பலரை நான் கண்டிருக்கிறேன்.  எனக்கு அந்த நோயில் பாதிப்பு இருந்த போதிலும் எனது பிள்ளைகளுக்கு நான் அதை கொடுக்கவில்லை என்பதை என்னால் பெருமையாக சொல்ல முடியும்

 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

ஆனால் சாதீயத்தில் ஊற்று இந்து மத‍த்தில் தான் இருக்கிறது. இவ்வாறு எழுதும் நான் கூட சிறு வயதில் எமது வீட்டுக்கு வேலை செய்ய வந்த தொழிலாளர்களுக்கு  சிரட்டையில் தேனீர் கொடுத்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. 

  • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
  1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
  2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)

இந்து மதத்திற்கு எதிரான மதவெறியர்களால் கற்பனையாக புனையப்பட்ட செய்திகளை ஆதாரமாக கொள்வதில் உங்களுக்குள்ள திருப்தி உங்கள் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையில் இப்படியொரு கருத்து எங்கும், எந்தவொரு பகுதியிலும் சொல்லப்படவில்லை.

இங்கு குறிப்பிடப்பட்டது, இந்து மதத்திற்கு எதிரான மதவெறியர்களால் கற்பனையாக புனையப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மத மாற்றம ்தொடர்பான எனது கருத்தை முன்பே தெரிவித்து விட்டேன். இந்து மதம் என்ற முட்டாள் தனத்தில் இருந்தது கிறிஸ்தவ மதம் என்ற முட்டாள்த்தனத்திற்கு மாறுவதே மத மாற்றம். இப்படியானவர்கள் தமது தாய்மதமான இந்து சாதிய நோயில் இருந்து எவ்வாறு வெளியே வர முடியும்.  ஆனால் சாதீயத்தில் ஊற்று இந்து மத‍த்தில் தான் இருக்கிறது.

  • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
  1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
  2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)

 

http://temple.dinamalar.com/news_detail.php?id=6363

சும்மா நுனிப்புல் மேய்ந்து சப்பைக்கட்டு காட்டாமல் முழுவதுமாக வாசித்து கருத்து எழுத பழகுங்கள் (மேலுள்ள இணைப்பில் உள்ளதை (4.13) தெளிவாக வாசித்து பின்னர் எழுதுங்கள்) . சாதியம் பிறப்பால் வந்ததல்ல. அதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. நான்கு சகோதரர்களே நன்கு சாதியினராக இருப்பது அவரவர் குணாதிசயத்தை கொண்டே என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

சும்மா நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சலுகைகளுக்காக சோரம்போனதற்கு மதத்தை காரணம் காட்டாதீர்கள்.

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

இங்கு குறிப்பிடும் போராளிகளின் இயக்கம் சாதி மதமற்ற ஒரு சமூகத்தையே உருவாக்கவே முயற்சித்தது. அவ்வியக்கத்தின் அரசயலறிஞரின் நூல்களில் இவை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழினம் மதத்தால் அடையாளப்படுத்தப் பட்டொன்றதல்ல. அவ்வாறு எம்மை அடையாளப்படுத்த முனைவது எம்மை  பலவீனப்படுத்தும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மததினரும் மண்ணுக்க தான் செல்வது இதில் எந்த கடவுளோ வந்து மேலோகத்து அழைத்து செல்வதில்லை ஆனால் மதம் கொண்ட மனிதர்கள் தான் இன்று வரைக்கும் 

அண்மையில் மட்டக்களப்பில் படிப்பிக்க சென்ற வாத்தி பிள்ளைக்கு குரான் கொடுத்து படிக்க சொல்லி மதத்தை மாற்றிவிட்டான் ஆர்ப்பாட்டமும் நடந்தது

ஆனால் சவுதியில் முஸ்லீம் மதம் பிடிக்கவில்லையென்று நாட்டை விட்டு சென்ற சவுதி பெண்ணும் அடைக்கலம் கொடுத்த அவுஸ்ரேலியாவும்  

பஸ்சில்  வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்கும் போது ஒரு சில பெண்கள் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் பஸ்ஸில் ஏறும் பெண்களுக்கு அவர்கள் எழுந்து சீற் கொடுத்தார்கள் இதெல்லாம் நடக்குமா பஸ்ஸில் இருந்தால் யாரும் சீற் கொடுப்பதில்லை  ஆனால் அந்த சீற்றில் இருந்த பெண்ணுக்கு சன்லைட் சோப்பு போட்டு மண்டைக்கழுவிக்கொண்டிருந்தார்கள்  அடுத்தபடியாக எனக்கு நானோ வில்லங்கம் பிடித்த ஆள் என்று அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்னிடம் அவர்கள் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை நாங்கள் தீர்த்து வைப்போம் என்றார்கள்  கொஞ்ச லிஸ்டில் உள்ள பல பிரச்சினைகளை சொன்னார்கள் ............

 

நானோ இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா ஓம் என்றார்கள்  அப்படியானால் யுத்தம் நடக்கும் நாடுகளுக்கு செல்லுங்கள் அங்கேதான் பல பிரச்சினைகள் எழுந்து யுத்தம் நடக்கிறது அங்கே சென்று ஏன் நீங்கள் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடாது அங்கே கன பேருக்கு தீர்க்கமுடியாத பிரச்சினை இருக்கிறது  போய் தீர்த்து வையுங்களன்   என்று சொன்னேன்  உங்களுக்கு வேண்டுமானால் டிக்கற் வசதி செய்து தருகிறேன் என்றேன் பல்லை இழித்து பதில் இல்லை

இதை வந்து எனது உன்மையான ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை கிறிஸ்டியனாக வழும் என் நண்பவ் அன்றோவிடம் சொன்னேன் அதற்கு அவனோ  சுனாமிக்கு பிறகு மதம் மாறிய கூட்டங்கள் காசுக்கும் வீட்டுக்கும் என்றான் நானும் அது அவர்கள் சுய விருப்பம் ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது என்றேன் அவனோ

ஆலமரம் ஒன்றுதான் அதன் வேர் மண்ணுக்குள்  இருக்க விழுதுகளை வேர் என்று சொல்கிற கூட்டமும் இருக்கு என்றான்  சொல்லிவிட்டு அந்தக்காலத்தில் இலங்கையை ஆண்ட வெள்ளைக்காரன் ஆரம்பித்த பள்ளிக்கூடத்தில் கல்விகற்க அவனின் மதத்துக்கு மாறி கல்வியை பெற்ற சமுதாயம் நம்ம சமுதாயம் என்றான் இல்லாவிட்டால் கல்வியறிவு நமக்கு கிடைத்திருக்காது என்றான் அதில் நானும் வம்ச வழி வந்தவன் என்றான்  

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

http://temple.dinamalar.com/news_detail.php?id=6363

சும்மா நுனிப்புல் மேய்ந்து சப்பைக்கட்டு காட்டாமல் முழுவதுமாக வாசித்து கருத்து எழுத பழகுங்கள் (மேலுள்ள இணைப்பில் உள்ளதை (4.13) தெளிவாக வாசித்து பின்னர் எழுதுங்கள்) . சாதியம் பிறப்பால் வந்ததல்ல. அதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. நான்கு சகோதரர்களே நன்கு சாதியினராக இருப்பது அவரவர் குணாதிசயத்தை கொண்டே என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

சும்மா நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சலுகைகளுக்காக சோரம்போனதற்கு மதத்தை காரணம் காட்டாதீர்கள்.

நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை  மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும்  வாசியுங்கள். பிரம்மாவின்  சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்,  தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து  பிறந்தவன் சூத்திரன்.  இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும்  சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும்  அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை  கடைப்பிடிப்பதில்லை. 

மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள்  உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால்  பிராமணன்  என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. 

இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய  இதிகாசங்களில் உண்டு.

அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. 

இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை  மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும்  வாசியுங்கள். பிரம்மாவின்  சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்,  தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து  பிறந்தவன் சூத்திரன்.  இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும்  சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும்  அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை  கடைப்பிடிப்பதில்லை. 

மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள்  உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால்  பிராமணன்  என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. 

இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய  இதிகாசங்களில் உண்டு.

அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. 

இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!

துல்பன், இன்னொரு திரியில் மகாபாரதம் ,இராமாயணம் எல்லாம் போலி இரிகாசங்கள் என்று சொன்ன நீங்கள் தான் இந்த திரியில் அதை தூக்கி பிடிக்கிறீர்கள் 😕
 

Link to comment
Share on other sites

9 minutes ago, ரதி said:

துல்பன், இன்னொரு திரியில் மகாபாரதம் ,இராமாயணம் எல்லாம் போலி இரிகாசங்கள் என்று சொன்ன நீங்கள் தான் இந்த திரியில் அதை தூக்கி பிடிக்கிறீர்கள் 😕
 

அந்த போலி இதிகாசங்கள் புனித நூல்களாக காட்டப்பட்டு அதில் உள்ளதே நீதி என்று அப்பாவி மக்கள் நம்பவைக்கப்டடனர். இன்றும் நம்ப வைக்கப்படுகின்றனர். அதனால் அதை விமரசிக்கும் உரிமை எனக்கு உண்டு. நான் அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அந்த போலி இதிகாசங்கள் புனித நூல்களாக காட்டப்பட்டு அதில் உள்ளதே நீதி என்று அப்பாவி மக்கள் நம்பவைக்கப்டடனர். இன்றும் நம்ப வைக்கப்படுகின்றனர். அதனால் அதை விமரசிக்கும் உரிமை எனக்கு உண்டு. நான் அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். 

அவர்கள் நம்புகிறார்கள் சரியோ,தப்போ அதை அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.... நீங்கள் தான் அதை நம்பவே இல்லையே...நம்பாத ஒன்றை எப்படி உதாரணம் காட்டுவீர்கள்?

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

அவர்கள் நம்புகிறார்கள் சரியோ,தப்போ அதை அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.... நீங்கள் தான் அதை நம்பவே இல்லையே...நம்பாத ஒன்றை எப்படி உதாரணம் காட்டுவீர்கள்?

நான் நம்புகிறேனோ இல்லையோ விவாதங்களின் போது ஒருவர் தனது நம்பிக்கைகாக வாதாடும் போது உங்கள் நம்பிக்கைகளில் என்ன அப‍த்தங்கள் உள்ளன என்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுவதே அறிவு பூர்வமான விவாதம். அதுவே இயல்பு. உங்களால் முடிந்தால் நான் கூறிவை தவறானவை என்று விவாதியுங்கள். அதுவே நியாயமானது கூட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 9:45 PM, tulpen said:

அவர்கள் பிரிந்து போக காரணம் அந்  நாடுகள் சுயநிர்ணய உரமை  உள்ள தேசங்களாஎ ஏற்கனவே யூகோஸ்லாவிய குடியரசில்  இணைந்திருந்ததே. தங்களை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியம் தவறானதல்ல. நாமும் அதையே விரும்பினோம்.  யூகோஸிலாவிய குடியரசு உடைந்து  மத அடிப்படையில் எந்த நாடு உருவாகியது  என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். தயவு செய்து அதை மட்டும் கூறிவிட்டு திரியில் இருந்து விடை பெறவும். 

குரேசியா கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக பூமி. பல அழிவுகளின் பின்  வத்திக்கானின்  ஆசிர்வாதத்துடன் சேர்பிய கூட்டரசில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

பொஸ்னியா! முஸ்லீம் வாசனையை சாதுவாக  கொண்ட மண்.  சவூதியினதும் துருக்கினதும் கைப்பலங்களால்  செர்பிய கூட்டரசிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

கொசோவோ ...மார்ஷல் டிட்டோ காலத்தில் அல்பேனிய சர்வாதிக அரசால் அகதியாக்கப்பட்டவர்களுக்கு ஒதுங்க கொடுக்கப்பட்ட செர்பியமண்ணின் ஒரு பகுதி.

அங்கு ஐரோப்பாவிலேயே அமெரிக்காவின் பெரிய ராணுவத்தளம் உள்ளது.

செர்பியா!  மதம் இனம் சம்பந்தமாக ரஷ்யாவையே சார்ந்திருக்கின்ற ஒரு நாடு.

கூட்டிக்கழித்து பாருங்கள்...விடை இலகு.

Link to comment
Share on other sites

50 minutes ago, குமாரசாமி said:

கூட்டிக்கழித்து பாருங்கள்...விடை இலகு.

பலருக்கு கூட்டிக்கழிக்கத் தெரியாது. பல பிரச்சினைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

இனம் என்பதே தமிழர்களுக்கான அடயாளம். இந்த இனத்தை மதவாரியாக பிரித்து பின்னர் மதங்கள் மோதும் போது இனம் அழிந்துபோகும்.  மதம் என்பது ஒரு ஆயுதம். அதை எவ்வாறு பயன்படுதுகின்றார்கள் என்பதே பிரதானம்.  ஒரு இனம் அல்லது தேசததை அழிக்கவும் ஆக்கவும் மதம் வலுவாகப் பயன்படும் ஆயுதம். பின்னணியில் ஒரு நோக்கமும் இன்றி யாரும் மதம் மாற்றப்போவதில்லை.  ஏன் மதமாற்றத்துக்கான அவசியம் ஏற்படுகின்றது என்பதே முக்கியமானது. 

சைவம் இந்துவாகியபோது சைவமும் தமிழும் என்ற அடிப்படை தன்மை வலுவிழக்கத்தொடங்கியது. தமிழ்கடவுள் என்ற வணக்கமுறை ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு  தமிழர் மண்ணில் உருவாகிய பக்தி இலக்கியங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டது.  தமிழர் மண்ணில்  கடவுள் வழிபாட்டுடன் மொழியும் பிணைந்தே உள்ளது. 

ஈழத்தமிழர் சிறு இனக் கூட்டம். இதற்குள் நடக்கும்  மதமாற்றங்களும் பிளவுகளும் இவ் இனத்தை  அழிக்கவும் சிதைக்கவும் வழிசெய்யும். சிங்களப் பேரினவாதம் பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை கொன்றொழித்ததிற்கு பிரதான உந்து சக்தியாக பொளத்தமதம் இருக்கின்றது. புழுபூச்சியை கூட கொல்லக் கூடாது என்பதுதான்  அதன் அடிப்படைவாதம். ஆனால் மதம் என்ற ஆயுதம் அல்லது போதை அல்லது உணர்சிகளை கொந்தளிக்கச் செய்யும் உளவியல் நோய் என எப்படிவேண்டுமானாலும் மதம்  என்ற ஆயுததத்தை பயன்படுத்த முடியும்.  சிங்கள இரணுவத்திற்கு நிகராக தென்தமிழீழத்தில் இஸ்லாமியர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டும் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டும் உள்ளது.  இவைகள் ஏற்கனவே நடந்த வரலாறுகள்.

ஈழத்தமிழர் இந்து என்பதாலோ இல்லை சிவசேனை என்பதாலோ இந்தியாவில் உள்ள இந்துத்துவ மத்திய அரசு தமது அதரவை தந்ததும் இல்லை தரப்போவதும் இல்லை. மாறாக எம்மை அழிப்பதற்கே எப்போதும் துணைபோகின்றது. அதேபோல்  நாவாலிதேவாலயத்தில் குண்டுபோட்டதற்கு  கிறித்துவ நாடுகள் இலங்கைமீது நடவடிக்கை எடுத்ததும் இல்லை எடுக்கப்போவதும் இல்லை. தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஒரு துயர் என்றால் அரபுநாடுகள் வந்து உதவப்போவதும் இல்லை.  மதம் ஆட்சியை பிடிக்க தக்கவைக்க  அதிகாரத்தை அடைய அல்து தக்கவைக்க வியாபரம் கொள்கைகளை திணிக்க வன்முறை போர்களை தூண்ட  பெண்களை அடிமைப்படுத்த ஆணாதிக்கத்தை நிலைநாட்ட என பல நூறுவகையாக புத்திசாலிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதம்.  அதற்கும் கடவுள் என்ற உணர்தலுக்கும்  சம்மந்தமே கிடையாது. 

இனம் என்ற உணர்வை பின்தள்ளி மதம் என்பது முன்னுக்கு வருவது இனத்தின் அழிவின் தொடக்கம் எனலாம்.  இது கடந்த காலத்தில் நடந்தும் உள்ளது. 

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

பலருக்கு கூட்டிக்கழிக்கத் தெரியாது. பல பிரச்சினைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

சரி கூட்டிக்கழித்து நீங்கள் இருவரும் என்ன சொல்ல வருகின்றீர்கள். மதமும் அது காட்டும் மூடப்பழக்கங்களையும் பத்தாம் பசலித்தனத்தையும் கட்டிக்கொண்டு முன்னேறாத காட்டுமிராண்டி இனமாக தமிழர்கள் தொடர்ந்தும்  வாழவேண்டும். அப்படித்தானே?  மேடையில் மைக்கின்  முன் மட்டும் “கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய  இனம்  தமிழுனம்  என்றுபழம் பெருமை பேசிக்கொண்டு மற்றயவர்்எள்ளி நகையாடும் வகையிலான பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு வாழவேண்டும் ( கல் தோனலறி மண்தோன்ற முதல் உயிரினங்களே உருவாக முன் எப்படி  தமிழன் தோன்றினான் என்று கேட கக்கூடாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை  மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும்  வாசியுங்கள். பிரம்மாவின்  சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்,  தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து  பிறந்தவன் சூத்திரன்.  இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும்  சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும்  அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை  கடைப்பிடிப்பதில்லை. 

மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள்  உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால்  பிராமணன்  என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. 

இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய  இதிகாசங்களில் உண்டு.

அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. 

இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!

 

எதற்கெடுத்தாலும் நீங்கள் ஏன் ஆரிய இதிகாசங்களை மேற்கோள்காட்டுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நாங்கள் அதை நம்பவும் இல்லை அதன்வழி நடப்பதுமில்லை. எமது தாய்மண்ணை சேர்ந்தவர்கள் சிவனை முதல் கடவுளாக வழிபட்ட சிவ கோத்திரத்தை சேர்ந்தவர்கள். சைவர்கள். 

எமது மண்ணில் சாதியென்பது அவர்கள் செய்யும் தொழிலில் இருந்தே பார்க்கப்பட்டது. யாரும் எமது மண்ணில் பிராமணர்களை தலையில் வைத்து கொண்டாடுவதில்லையே. ஏன் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களை எங்கள் பிரச்சனைகளுக்கு மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று புரியவில்லை.

எமது மண்ணில் நாம் யாரிடமும் சைவ சமயத்தை திணிப்பதில்லை.எவராவது வேறு மதத்தை எம்மக்கள் மீது திணித்தால் அதை எதிர்த்து போராட எமக்கு உரிமை இருக்கிறது. மொழி, மதம். கலாச்சசாரம் என்பதுதான் ஒரு இனத்தின் அடையாளம். அவை அழிக்கப்பட்டால் இனமே அழிந்துவிடும். இதுதான் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இது புரியாவிட்டால் உங்களிடம் கருத்தாடி பயனில்லை.

ஏன் மேற்குநாடுகளில்கூட மன்னர் பரம்பரை இருந்ததே. இப்பவும் இருக்கிறதே. அங்கும் மன்னர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளும்  மதிப்பும் மற்றவர்களுக்கு கொடுக்கப்படவில்லையே. அதுபோலத்தான் இந்த இதிகாசங்களும் மன்னர்காலத்தவையே.இந்த ஆரிய இதிகாசங்களை நான் நம்புவதுமில்லை அதை யாருக்கும் மேற்கோள் காட்டுவதுமில்லை. நான் இந்து என்பதை விட சைவன் என்று சொல்வதில் பெருமைப்படுபவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, tulpen said:

 “கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய  இனம்  தமிழுனம்  என்றுபழம் பெருமை பேசிக்கொண்டு மற்றயவர்்எள்ளி நகையாடும் வகையிலான பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு வாழவேண்டும் ( கல் தோனலறி மண்தோன்ற முதல் உயிரினங்களே உருவாக முன் எப்படி  தமிழன் தோன்றினான் என்று கேட கக்கூடாது)

எமது தாயகத்தில் அப்படி என்ன பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு நாம் வாழ்கிறோம் மற்றவர்கள் எள்ளி  நகையாட..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, tulpen said:

சரி கூட்டிக்கழித்து நீங்கள் இருவரும் என்ன சொல்ல வருகின்றீர்கள். மதமும் அது காட்டும் மூடப்பழக்கங்களையும் பத்தாம் பசலித்தனத்தையும் கட்டிக்கொண்டு முன்னேறாத காட்டுமிராண்டி இனமாக தமிழர்கள் தொடர்ந்தும்  வாழவேண்டும். அப்படித்தானே?  

ஏன்  இதே  சைவ தமிழர்கள்தான் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களது பொருளாதாரம் மேம்படவில்லையா அல்லது அதை மேம்படுத்த வேறு மத்திற்குத்தான் மாறினார்களா? தாயகத்தில் எம்மக்களை முன்னேற சிங்களமும் கிந்தியாவும் விடுவதில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

எமது தாயகத்தில் அப்படி என்ன பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு நாம் வாழ்கிறோம் மற்றவர்கள் எள்ளி  நகையாட..
 

 ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ஒரு கோவிலில்  பூசை நேரத்தில்  இங்கு பிறந்த சிறு குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்கு  கலாச்சாரத்தை காட்டும் முறை. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ஒரு கோவிலில்  பூசை நேரத்தில்  இங்கு பிறந்த சிறு குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்கு  கலாச்சாரத்தை காட்டும் முறை. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

புலம்பெயர் நாடுகளில் வியாபாரத்துக்காக கோவிலைக்கட்டி அதில்  பணமோசடிகளாலும் பூசகர்களுடன் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளால் நடக்கும் இப்படிப்பட்ட வாக்குவாதங்களையும் சண்டைகளையும் ஏன் மதத்தோடும்  கலாச்சாரத்தோடும் முடிச்சு போடுகிறீர்கள்.

இதைவிட மிக கேவலமான சண்டைகள் இலங்கை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல ஐரோப்பிய பாராளுமன்றங்களில் கூட நடைபெறுகிறதே. அதை வைத்து அந்தந்த நாட்டு கலாச்சாரங்கள் கேவலமானவை என சொல்வீர்களா? என்  தேவாலயங்களில்கூட போதகர்களின்  கேட்ட நடத்தைகளால் மக்கள்முன் அவரை அடித்து துவைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறதே.

ஓரிருவரின் அல்லது ஒரு குழுவின் நடத்தையை வைத்து ஒரு இனத்தையோ மதத்தையோ குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனம் . இது இயலாமையால் வருவதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.