Jump to content

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

சும்மா வதந்தி பரப்பக் கூடாது! கிறிஸ்தவ தேவாலயத்தில் இந்த பின் வரிசை முன் வரிசையெல்லாம் இல்லை! நான் கேள்விப் படவில்லை! பிந்தி வந்தவர் பின் வரிசை, முந்தி வந்தவர் முன் வரிசை! பொய்களைக் கண்டு பிடித்தால் உடனே வாபஸ் தான்!

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
12 minutes ago, ragunathan said:

யூகொஸ்லாவியா பிரிந்தபோது உருவாகிய செர்பியா, குரோஷியா மற்றும் பொஸ்னியா ஹெர்ஸகோவினா ஆகிய நாடுகளில் பொஸ்னியா பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்டது. குரோஷியா கத்தோலிக்கர்களையும், சேர்பியா பழமைவாத கிறீஸ்த்தவர்களையும் கொண்டது. 

பார்க்கபோனால், ஓரளவிற்கு மத அடிப்படையில்த்தான் பிரிந்து இவை உருவாகின என்று நான் நினைக்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில், யூதர்களுக்குப் பின்னர் இனவழிப்பிற்குள் அகப்பட்ட இனம் என்றால்  அது பொஸ்னிய முஸ்லீம்களாகத்தான் இருக்கும்.

ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பொதுவாக மொழிவாரி இன அடிப்படையிலேயே அமைந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இன அடிப்படையில் சுயநிர்ணய உரிமை கொண்ட  தேசங்களாக  இணைந்திருந்த நாடுகள் டிட்டோவின் மறைவற்கு பின்னரன காலப்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்தின் வீழ்ச்சியுடன் தனித்தனி சுதந்திர நாடுகளாக பிரிந்தன. கொசொவோ மாகாணம் மட்டும் இன அடிப்படையில் புதிய நாடாக உருவாகியது. பெரும்பாலான முஸ்லீம்களை கொண்டிருந்தாலும் கொசோவோ இஸ்லாமிய நாடாக தன்னை அடையாளப்படுத்தவில்லை. கணிசமான அளவு கிறிஸ்தவர்களும் அலபேனிய மக்களிடையே உண்டு. ஒரு நாடுமே  மத அடிப்படையில்  அங்கு உருவாகவில்லை.

Link to comment
Share on other sites

10 hours ago, ragunathan said:

கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

இலங்கையில் இது 100க்கு 100 உண்மை. சாதிய கட்டுப்பாடுகள் மிக ஆழமாக, இந்துக்கள் மத்தியில் உள்ளதற்கு இணையாக கிருஸ்தவர்கள் மத்தியிலும் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

கு.சா, எனக்கு நீங்கள் படிப்பிக்க அதிகம் இல்லை! மதம் என்பது நான் ஒரு காரணத்திற்காக மாறினாலும் ஒரு காரணமும் இல்லாமல் மாறினாலும் கேட்க அதிகாரம் யாருக்கும் இல்லை! என் சாப்பாடு, உடை, யாருடன் நான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது போன்றே இதுவும்! வன் முறை தவறு! மைனரை மாற்றுவது தவறும், குற்றமும்! தங்கள் மதத்தின் இயல்புகளைப் பற்றி எழுத, பேச யாருக்கும் உரிமை உண்டு! மற்றவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம்! விரும்பா விட்டால் தாண்டிப் போகலாம்!

இதில் அடக்கி வாசிக்க எதுவும் இல்லை! நினைப்பதைச் சொல்லவே யாழ் களம்!

 

அடுத்தவன் கருத்து எழுதினால் ...
மட்டுஉறுப்பினர் வந்து பார்க்க வேணும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

நூறு வீதம்! மதத்தை வீட்டிலேயே விட்டு வந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை!

அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். உங்கள் மதத்தை உங்கள் வீட்டுடனும் தேவாலயத்துடனும் வைத்துக்கொள்ளுங்கள். அதை என் மற்றவன் வீட்டிற்கு  சென்று போதித்து மதம் மாற்ற முனைகிறீர்கள் என்பதுதானே பிரச்சனையே!

சாதிப்பிரச்சனை, நிற துவேசம் என்பன எல்லா நாட்டிலும் ஏன் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கூட..இருக்கிறது. அப்படி இல்லை என்று வாதிடும் உங்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை.

11 hours ago, Justin said:

நான் கேட்பதெல்லாம், ஒருவன் தன் துன்பங்களுக்குத் தீர்வு மதம் மாறுவதால் கிடைக்கும் என்று நினைத்தால், அதைக் கேட்க நீங்கள் யார் என்பதே!

ஒருவன் தனது மனைவியையோ அல்லது கூடப்பிறந்தவர்களையோ கூட்டிக்கொடுப்பதால் சலுகைகளும் துன்பங்களுக்கு தீர்வும் கிடைக்கும் என்றால் அதைக்கூட செய்யலாம் என்பீர்களா? அதெப்படி மதம் மாறுவதால் இவை கிடைக்கும் என்றால் மதம் மாறலாம் என்பதை இவ்வளவு இலகுவாக நியாயப்படுத்துகிறீர்கள்.

எமது இனத்தின் அடையாளம் மதமும் மொழியுமே. அதை தொலைத்துவிட்டு எமது துன்பங்கள் தீர மத மொழி மாற்றங்களே தீர்வென்றால் சிங்களவராகவும் புத்தனாகவும் மாறி நமது நாட்டிலேயே வாழலாமே. போராட்டங்களே தேவை இல்லையே.

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

உங்களை ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அவர்களது நாட்டில் அனுமதித்தது உங்களிடம் வேலை வாங்கி அவர்களின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவே அன்றி உங்களில் உள்ள அக்கறையால் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, tulpen said:

அப்படி அவர் செய்திருந்தால் அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால அந்த சாதி நோய் அவருக்கு வந்தது அவரது தாய் மதமான எமது இந்துமதத துல் இருந்து தான். அது மறுக்கவோ மறைக கவோ முடியாத உண்மை. 

 

சாதிய நோயில் இருந்து விடுபடவே ஒருவர் இந்துமதத்தில் இருந்து மற்றய மதத்துக்கு  மாறுகிறார் என்று கூறிவிட்டு பல சந்ததிகளின் பின்னும் அவர் அதே மனா நிலையில்தான் இருக்கிறார் அது அவர் தாய் மதத்தில்  இருந்துதான் வந்தது என்றால் அது மாறியிருப்பவர்களின் பிழையா அல்லது மதத்தின் பிழையா?

அப்போ இப்படி மதம் மாறியவர்கள் மத்தில் உள்ள ஈர்ப்பால் மதம் மாறவில்லை சலுகைகளுக்காகத்தான் சோரம் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

சாதிய நோயில் இருந்து விடுபடவே ஒருவர் இந்துமதத்தில் இருந்து மற்றய மதத்துக்கு  மாறுகிறார் என்று கூறிவிட்டு பல சந்ததிகளின் பின்னும் அவர் அதே மனா நிலையில்தான் இருக்கிறார் அது அவர் தாய் மதத்தில்  இருந்துதான் வந்தது என்றால் அது மாறியிருப்பவர்களின் பிழையா அல்லது மதத்தின் பிழையா?

அப்போ இப்படி மதம் மாறியவர்கள் மத்தில் உள்ள ஈர்ப்பால் மதம் மாறவில்லை சலுகைகளுக்காகத்தான் சோரம் போனார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

மத மாற்றம ்தொடர்பான எனது கருத்தை முன்பே தெரிவித்து விட்டேன். இந்து மதம் என்ற முட்டாள் தனத்தில் இருந்தது கிறிஸ்தவ மதம் என்ற முட்டாள்த்தனத்திற்கு மாறுவதே மத மாற்றம். இப்படியானவர்கள் தமது தாய்மதமான இந்து சாதிய நோயில் இருந்து எவ்வாறு வெளியே வர முடியும்.  ஆனால் சாதீயத்தில் ஊற்று இந்து மத‍த்தில் தான் இருக்கிறது. இவ்வாறு எழுதும் நான் கூட சிறு வயதில் எமது வீட்டுக்கு வேலை செய்ய வந்த தொழிலாளர்களுக்கு  சிரட்டையில் தேனீர் கொடுத்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. 

  • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
  1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
  2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)

சாதிய கொடுமை ஒழிய நாம் செய்ய வேண்டியது எமது பிள்ளைகளுக்கு அந்த நோயை திணிக்காமல் இருப்பது தான்.  பிள்ளைகளுக்கு சாதிவெறியை வீட்டில் வைத்து  ஊட்டிவிட்டு சாதியை ஒழிப்பது நாம் விரும்பினாலும் முடியாது. அது கஷ்ரம் என்று  பொது இடங்களில் கூறும் பலரை நான் கண்டிருக்கிறேன்.  எனக்கு அந்த நோயில் பாதிப்பு இருந்த போதிலும் எனது பிள்ளைகளுக்கு நான் அதை கொடுக்கவில்லை என்பதை என்னால் பெருமையாக சொல்ல முடியும்

 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

ஆனால் சாதீயத்தில் ஊற்று இந்து மத‍த்தில் தான் இருக்கிறது. இவ்வாறு எழுதும் நான் கூட சிறு வயதில் எமது வீட்டுக்கு வேலை செய்ய வந்த தொழிலாளர்களுக்கு  சிரட்டையில் தேனீர் கொடுத்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. 

  • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
  1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
  2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)

இந்து மதத்திற்கு எதிரான மதவெறியர்களால் கற்பனையாக புனையப்பட்ட செய்திகளை ஆதாரமாக கொள்வதில் உங்களுக்குள்ள திருப்தி உங்கள் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

பகவத் கீதையில் இப்படியொரு கருத்து எங்கும், எந்தவொரு பகுதியிலும் சொல்லப்படவில்லை.

இங்கு குறிப்பிடப்பட்டது, இந்து மதத்திற்கு எதிரான மதவெறியர்களால் கற்பனையாக புனையப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மத மாற்றம ்தொடர்பான எனது கருத்தை முன்பே தெரிவித்து விட்டேன். இந்து மதம் என்ற முட்டாள் தனத்தில் இருந்தது கிறிஸ்தவ மதம் என்ற முட்டாள்த்தனத்திற்கு மாறுவதே மத மாற்றம். இப்படியானவர்கள் தமது தாய்மதமான இந்து சாதிய நோயில் இருந்து எவ்வாறு வெளியே வர முடியும்.  ஆனால் சாதீயத்தில் ஊற்று இந்து மத‍த்தில் தான் இருக்கிறது.

  • கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:
  1. நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)
  2. "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)

 

http://temple.dinamalar.com/news_detail.php?id=6363

சும்மா நுனிப்புல் மேய்ந்து சப்பைக்கட்டு காட்டாமல் முழுவதுமாக வாசித்து கருத்து எழுத பழகுங்கள் (மேலுள்ள இணைப்பில் உள்ளதை (4.13) தெளிவாக வாசித்து பின்னர் எழுதுங்கள்) . சாதியம் பிறப்பால் வந்ததல்ல. அதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. நான்கு சகோதரர்களே நன்கு சாதியினராக இருப்பது அவரவர் குணாதிசயத்தை கொண்டே என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

சும்மா நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சலுகைகளுக்காக சோரம்போனதற்கு மதத்தை காரணம் காட்டாதீர்கள்.

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் அப்படியான வாழ்க்கையே மேலென நினைத்தால் நீங்கள் வாழும் நாட்டின் அடையாளத்துடன் வாழ்ந்துவிட்டு போங்கள். தயவு செய்து இலங்கை தமிழனென்று அடையாளப்படுத்தி எமக்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய போராளிகளையும் மக்களையும் கொச்சை படுத்தாதீர்கள்.

இங்கு குறிப்பிடும் போராளிகளின் இயக்கம் சாதி மதமற்ற ஒரு சமூகத்தையே உருவாக்கவே முயற்சித்தது. அவ்வியக்கத்தின் அரசயலறிஞரின் நூல்களில் இவை தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழினம் மதத்தால் அடையாளப்படுத்தப் பட்டொன்றதல்ல. அவ்வாறு எம்மை அடையாளப்படுத்த முனைவது எம்மை  பலவீனப்படுத்தும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மததினரும் மண்ணுக்க தான் செல்வது இதில் எந்த கடவுளோ வந்து மேலோகத்து அழைத்து செல்வதில்லை ஆனால் மதம் கொண்ட மனிதர்கள் தான் இன்று வரைக்கும் 

அண்மையில் மட்டக்களப்பில் படிப்பிக்க சென்ற வாத்தி பிள்ளைக்கு குரான் கொடுத்து படிக்க சொல்லி மதத்தை மாற்றிவிட்டான் ஆர்ப்பாட்டமும் நடந்தது

ஆனால் சவுதியில் முஸ்லீம் மதம் பிடிக்கவில்லையென்று நாட்டை விட்டு சென்ற சவுதி பெண்ணும் அடைக்கலம் கொடுத்த அவுஸ்ரேலியாவும்  

பஸ்சில்  வேலைக்கு சென்று வந்து கொண்டிருக்கும் போது ஒரு சில பெண்கள் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள் பஸ்ஸில் ஏறும் பெண்களுக்கு அவர்கள் எழுந்து சீற் கொடுத்தார்கள் இதெல்லாம் நடக்குமா பஸ்ஸில் இருந்தால் யாரும் சீற் கொடுப்பதில்லை  ஆனால் அந்த சீற்றில் இருந்த பெண்ணுக்கு சன்லைட் சோப்பு போட்டு மண்டைக்கழுவிக்கொண்டிருந்தார்கள்  அடுத்தபடியாக எனக்கு நானோ வில்லங்கம் பிடித்த ஆள் என்று அவங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்னிடம் அவர்கள் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருந்தால் அதனை நாங்கள் தீர்த்து வைப்போம் என்றார்கள்  கொஞ்ச லிஸ்டில் உள்ள பல பிரச்சினைகளை சொன்னார்கள் ............

 

நானோ இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா ஓம் என்றார்கள்  அப்படியானால் யுத்தம் நடக்கும் நாடுகளுக்கு செல்லுங்கள் அங்கேதான் பல பிரச்சினைகள் எழுந்து யுத்தம் நடக்கிறது அங்கே சென்று ஏன் நீங்கள் அவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க கூடாது அங்கே கன பேருக்கு தீர்க்கமுடியாத பிரச்சினை இருக்கிறது  போய் தீர்த்து வையுங்களன்   என்று சொன்னேன்  உங்களுக்கு வேண்டுமானால் டிக்கற் வசதி செய்து தருகிறேன் என்றேன் பல்லை இழித்து பதில் இல்லை

இதை வந்து எனது உன்மையான ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை கிறிஸ்டியனாக வழும் என் நண்பவ் அன்றோவிடம் சொன்னேன் அதற்கு அவனோ  சுனாமிக்கு பிறகு மதம் மாறிய கூட்டங்கள் காசுக்கும் வீட்டுக்கும் என்றான் நானும் அது அவர்கள் சுய விருப்பம் ஆனால் அதை மற்றவர்களிடம் திணிக்க கூடாது என்றேன் அவனோ

ஆலமரம் ஒன்றுதான் அதன் வேர் மண்ணுக்குள்  இருக்க விழுதுகளை வேர் என்று சொல்கிற கூட்டமும் இருக்கு என்றான்  சொல்லிவிட்டு அந்தக்காலத்தில் இலங்கையை ஆண்ட வெள்ளைக்காரன் ஆரம்பித்த பள்ளிக்கூடத்தில் கல்விகற்க அவனின் மதத்துக்கு மாறி கல்வியை பெற்ற சமுதாயம் நம்ம சமுதாயம் என்றான் இல்லாவிட்டால் கல்வியறிவு நமக்கு கிடைத்திருக்காது என்றான் அதில் நானும் வம்ச வழி வந்தவன் என்றான்  

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

http://temple.dinamalar.com/news_detail.php?id=6363

சும்மா நுனிப்புல் மேய்ந்து சப்பைக்கட்டு காட்டாமல் முழுவதுமாக வாசித்து கருத்து எழுத பழகுங்கள் (மேலுள்ள இணைப்பில் உள்ளதை (4.13) தெளிவாக வாசித்து பின்னர் எழுதுங்கள்) . சாதியம் பிறப்பால் வந்ததல்ல. அதை மனிதர்களே உருவாக்கினார்கள் என்பது மிக தெளிவாக தெரிகிறது. நான்கு சகோதரர்களே நன்கு சாதியினராக இருப்பது அவரவர் குணாதிசயத்தை கொண்டே என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

சும்மா நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சலுகைகளுக்காக சோரம்போனதற்கு மதத்தை காரணம் காட்டாதீர்கள்.

நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை  மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும்  வாசியுங்கள். பிரம்மாவின்  சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்,  தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து  பிறந்தவன் சூத்திரன்.  இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும்  சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும்  அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை  கடைப்பிடிப்பதில்லை. 

மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள்  உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால்  பிராமணன்  என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. 

இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய  இதிகாசங்களில் உண்டு.

அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. 

இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை  மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும்  வாசியுங்கள். பிரம்மாவின்  சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்,  தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து  பிறந்தவன் சூத்திரன்.  இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும்  சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும்  அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை  கடைப்பிடிப்பதில்லை. 

மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள்  உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால்  பிராமணன்  என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. 

இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய  இதிகாசங்களில் உண்டு.

அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. 

இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!

துல்பன், இன்னொரு திரியில் மகாபாரதம் ,இராமாயணம் எல்லாம் போலி இரிகாசங்கள் என்று சொன்ன நீங்கள் தான் இந்த திரியில் அதை தூக்கி பிடிக்கிறீர்கள் 😕
 

Link to comment
Share on other sites

9 minutes ago, ரதி said:

துல்பன், இன்னொரு திரியில் மகாபாரதம் ,இராமாயணம் எல்லாம் போலி இரிகாசங்கள் என்று சொன்ன நீங்கள் தான் இந்த திரியில் அதை தூக்கி பிடிக்கிறீர்கள் 😕
 

அந்த போலி இதிகாசங்கள் புனித நூல்களாக காட்டப்பட்டு அதில் உள்ளதே நீதி என்று அப்பாவி மக்கள் நம்பவைக்கப்டடனர். இன்றும் நம்ப வைக்கப்படுகின்றனர். அதனால் அதை விமரசிக்கும் உரிமை எனக்கு உண்டு. நான் அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அந்த போலி இதிகாசங்கள் புனித நூல்களாக காட்டப்பட்டு அதில் உள்ளதே நீதி என்று அப்பாவி மக்கள் நம்பவைக்கப்டடனர். இன்றும் நம்ப வைக்கப்படுகின்றனர். அதனால் அதை விமரசிக்கும் உரிமை எனக்கு உண்டு. நான் அதை தூக்கிப்பிடிக்கவில்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். 

அவர்கள் நம்புகிறார்கள் சரியோ,தப்போ அதை அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.... நீங்கள் தான் அதை நம்பவே இல்லையே...நம்பாத ஒன்றை எப்படி உதாரணம் காட்டுவீர்கள்?

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

அவர்கள் நம்புகிறார்கள் சரியோ,தப்போ அதை அவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள்.... நீங்கள் தான் அதை நம்பவே இல்லையே...நம்பாத ஒன்றை எப்படி உதாரணம் காட்டுவீர்கள்?

நான் நம்புகிறேனோ இல்லையோ விவாதங்களின் போது ஒருவர் தனது நம்பிக்கைகாக வாதாடும் போது உங்கள் நம்பிக்கைகளில் என்ன அப‍த்தங்கள் உள்ளன என்பதை உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுவதே அறிவு பூர்வமான விவாதம். அதுவே இயல்பு. உங்களால் முடிந்தால் நான் கூறிவை தவறானவை என்று விவாதியுங்கள். அதுவே நியாயமானது கூட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2019 at 9:45 PM, tulpen said:

அவர்கள் பிரிந்து போக காரணம் அந்  நாடுகள் சுயநிர்ணய உரமை  உள்ள தேசங்களாஎ ஏற்கனவே யூகோஸ்லாவிய குடியரசில்  இணைந்திருந்ததே. தங்களை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியம் தவறானதல்ல. நாமும் அதையே விரும்பினோம்.  யூகோஸிலாவிய குடியரசு உடைந்து  மத அடிப்படையில் எந்த நாடு உருவாகியது  என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். தயவு செய்து அதை மட்டும் கூறிவிட்டு திரியில் இருந்து விடை பெறவும். 

குரேசியா கத்தோலிக்க மக்களை பெரும்பான்மையாக பூமி. பல அழிவுகளின் பின்  வத்திக்கானின்  ஆசிர்வாதத்துடன் சேர்பிய கூட்டரசில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

பொஸ்னியா! முஸ்லீம் வாசனையை சாதுவாக  கொண்ட மண்.  சவூதியினதும் துருக்கினதும் கைப்பலங்களால்  செர்பிய கூட்டரசிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

கொசோவோ ...மார்ஷல் டிட்டோ காலத்தில் அல்பேனிய சர்வாதிக அரசால் அகதியாக்கப்பட்டவர்களுக்கு ஒதுங்க கொடுக்கப்பட்ட செர்பியமண்ணின் ஒரு பகுதி.

அங்கு ஐரோப்பாவிலேயே அமெரிக்காவின் பெரிய ராணுவத்தளம் உள்ளது.

செர்பியா!  மதம் இனம் சம்பந்தமாக ரஷ்யாவையே சார்ந்திருக்கின்ற ஒரு நாடு.

கூட்டிக்கழித்து பாருங்கள்...விடை இலகு.

Link to comment
Share on other sites

50 minutes ago, குமாரசாமி said:

கூட்டிக்கழித்து பாருங்கள்...விடை இலகு.

பலருக்கு கூட்டிக்கழிக்கத் தெரியாது. பல பிரச்சினைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

இனம் என்பதே தமிழர்களுக்கான அடயாளம். இந்த இனத்தை மதவாரியாக பிரித்து பின்னர் மதங்கள் மோதும் போது இனம் அழிந்துபோகும்.  மதம் என்பது ஒரு ஆயுதம். அதை எவ்வாறு பயன்படுதுகின்றார்கள் என்பதே பிரதானம்.  ஒரு இனம் அல்லது தேசததை அழிக்கவும் ஆக்கவும் மதம் வலுவாகப் பயன்படும் ஆயுதம். பின்னணியில் ஒரு நோக்கமும் இன்றி யாரும் மதம் மாற்றப்போவதில்லை.  ஏன் மதமாற்றத்துக்கான அவசியம் ஏற்படுகின்றது என்பதே முக்கியமானது. 

சைவம் இந்துவாகியபோது சைவமும் தமிழும் என்ற அடிப்படை தன்மை வலுவிழக்கத்தொடங்கியது. தமிழ்கடவுள் என்ற வணக்கமுறை ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டு  தமிழர் மண்ணில் உருவாகிய பக்தி இலக்கியங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டது.  தமிழர் மண்ணில்  கடவுள் வழிபாட்டுடன் மொழியும் பிணைந்தே உள்ளது. 

ஈழத்தமிழர் சிறு இனக் கூட்டம். இதற்குள் நடக்கும்  மதமாற்றங்களும் பிளவுகளும் இவ் இனத்தை  அழிக்கவும் சிதைக்கவும் வழிசெய்யும். சிங்களப் பேரினவாதம் பல்லாயிரக்கணக்கில் தமிழர்களை கொன்றொழித்ததிற்கு பிரதான உந்து சக்தியாக பொளத்தமதம் இருக்கின்றது. புழுபூச்சியை கூட கொல்லக் கூடாது என்பதுதான்  அதன் அடிப்படைவாதம். ஆனால் மதம் என்ற ஆயுதம் அல்லது போதை அல்லது உணர்சிகளை கொந்தளிக்கச் செய்யும் உளவியல் நோய் என எப்படிவேண்டுமானாலும் மதம்  என்ற ஆயுததத்தை பயன்படுத்த முடியும்.  சிங்கள இரணுவத்திற்கு நிகராக தென்தமிழீழத்தில் இஸ்லாமியர்களால் தமிழர்கள் கொல்லப்பட்டும் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டும் உள்ளது.  இவைகள் ஏற்கனவே நடந்த வரலாறுகள்.

ஈழத்தமிழர் இந்து என்பதாலோ இல்லை சிவசேனை என்பதாலோ இந்தியாவில் உள்ள இந்துத்துவ மத்திய அரசு தமது அதரவை தந்ததும் இல்லை தரப்போவதும் இல்லை. மாறாக எம்மை அழிப்பதற்கே எப்போதும் துணைபோகின்றது. அதேபோல்  நாவாலிதேவாலயத்தில் குண்டுபோட்டதற்கு  கிறித்துவ நாடுகள் இலங்கைமீது நடவடிக்கை எடுத்ததும் இல்லை எடுக்கப்போவதும் இல்லை. தமிழ் இஸ்லாமியர்களுக்கு ஒரு துயர் என்றால் அரபுநாடுகள் வந்து உதவப்போவதும் இல்லை.  மதம் ஆட்சியை பிடிக்க தக்கவைக்க  அதிகாரத்தை அடைய அல்து தக்கவைக்க வியாபரம் கொள்கைகளை திணிக்க வன்முறை போர்களை தூண்ட  பெண்களை அடிமைப்படுத்த ஆணாதிக்கத்தை நிலைநாட்ட என பல நூறுவகையாக புத்திசாலிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதம்.  அதற்கும் கடவுள் என்ற உணர்தலுக்கும்  சம்மந்தமே கிடையாது. 

இனம் என்ற உணர்வை பின்தள்ளி மதம் என்பது முன்னுக்கு வருவது இனத்தின் அழிவின் தொடக்கம் எனலாம்.  இது கடந்த காலத்தில் நடந்தும் உள்ளது. 

Link to comment
Share on other sites

6 hours ago, போல் said:

பலருக்கு கூட்டிக்கழிக்கத் தெரியாது. பல பிரச்சினைகளுக்கு அதுவும் ஒரு காரணம்.

சரி கூட்டிக்கழித்து நீங்கள் இருவரும் என்ன சொல்ல வருகின்றீர்கள். மதமும் அது காட்டும் மூடப்பழக்கங்களையும் பத்தாம் பசலித்தனத்தையும் கட்டிக்கொண்டு முன்னேறாத காட்டுமிராண்டி இனமாக தமிழர்கள் தொடர்ந்தும்  வாழவேண்டும். அப்படித்தானே?  மேடையில் மைக்கின்  முன் மட்டும் “கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய  இனம்  தமிழுனம்  என்றுபழம் பெருமை பேசிக்கொண்டு மற்றயவர்்எள்ளி நகையாடும் வகையிலான பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு வாழவேண்டும் ( கல் தோனலறி மண்தோன்ற முதல் உயிரினங்களே உருவாக முன் எப்படி  தமிழன் தோன்றினான் என்று கேட கக்கூடாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

நுனிப்புல் மேய்ந்தது நானல்ல. நீங்களே. உண்மையை  மறைக்க பார்பன தினமலரின் இணைப்பில உள்ளதை மேற்கோள் காட்டாமல் பகவற்கீதையையும் இந்து மத மணு நீதியையும்  வாசியுங்கள். பிரம்மாவின்  சிரசில் இருந்து பிறந்தவன் பிராமணன், தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்,  தொடையில. இருந்து பிறந்தவன் வைசிகன், கால்களில் இருந்து  பிறந்தவன் சூத்திரன்.  இதுவே கீதையிலும் மனு தர்மத்திலும்  சொல்லப்பட்ட வருணாசிரம கோட்பாடு. நாகரீக உலகத்தில் இருந்து இது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதாலும் மக்களின் விழிப்புணர்வு காரணத்தாலும் போலியாக அதை மறுத்து பிறப்பில் இருந்து வருவதல்ல என்று ஆரிய பார்பனரகள் எவ்வளவுதான் சப்பைக்கட்டு கட்டினாலும்  அதை அவர்கள் ஒரு பிரச்சாரமாக செய்கிறாரகளேயொழிய உண்மையில் அதை  கடைப்பிடிப்பதில்லை. 

மகாபாரத்திலேயே இதற்கு பல உதாரணங்கள்  உண்டு. கர்ணன் சத்திரயன் அல்ல தேரோட்டி மகன் என்று பல தடவை ஏளனப்படுத்தப்பட்டான். பிறப்பால் பிராமணன் அல்லாததால் பரசுராமன் கர்னனுக்கு வில்வித்தை கற்று கொடுக்க மறுத்தார். பிறப்பால்  பிராமணன்  என்று பொய் சொல்லியே கர்னன் பரசுராமரிடம் வில்வித்தை கற்றான்.பொய் சொன்ன காரணத்திற்காக சாபமும் பெற்றான். வேடுவப்பிறப்பு என்பதால் ஏகலைவனுக்கு துரோணர் வில்வித்தை கற்றபிக்க மறுத்து காழ்புணர்சியால் பெரிவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. 

இராமாயணத்தில் பிறப்பால் பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம் ( கல்வி கற்கலாம்) என்ற காரணத்தை வைத்து தவம் செய்த கீழஜாதி சம்புகன் இராமனால் தலை வெட்டி கொல்லப்பட்டான். இவ்வாறு மறைக்கவோ மறுக்கவோ முடியாத பல சான்றுகள் மகாபாரதம், இராமாயணம என்ற ஆரிய  இதிகாசங்களில் உண்டு.

அண்மையில் சங்கர மடத்திற்கு சென்ற சுப்பிரமணிய சுவாமிக்கு சங்கராசீரியாருக்கு பக்கத்தில் கதிரை போடப்பட்டு அமரவைக்கப்பட்டது அதேபோல. அங்கு சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாக்கிருஷ்ணனுக்கு பிராமணர் அல்லாததால. அமைச்சர் என்றும் பாராது தரையில் இடம் வழங்கப்பட்டது. இந்து மதம் தான் சாதியநோயின் ஊற்று எனபதற்கு இவ்வாறு பல் சான்றுகள் உண்டு. 

இதில. குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் இந்தி கிரிக்கெட் அணியில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாசாரியார் வருது வழங்கப்படுகிறது. அதாவது நன்றாக விளையாடும் கீழ்ஜாதி வீரர்களை ஏகலைவனுக்கு கட்டை விரல் எடுத்தது போல் ........ discrimination!!!!!!!!!! செய்தால் இந்த விருது கிடைக்குமோ!!!!!!

 

எதற்கெடுத்தாலும் நீங்கள் ஏன் ஆரிய இதிகாசங்களை மேற்கோள்காட்டுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. நாங்கள் அதை நம்பவும் இல்லை அதன்வழி நடப்பதுமில்லை. எமது தாய்மண்ணை சேர்ந்தவர்கள் சிவனை முதல் கடவுளாக வழிபட்ட சிவ கோத்திரத்தை சேர்ந்தவர்கள். சைவர்கள். 

எமது மண்ணில் சாதியென்பது அவர்கள் செய்யும் தொழிலில் இருந்தே பார்க்கப்பட்டது. யாரும் எமது மண்ணில் பிராமணர்களை தலையில் வைத்து கொண்டாடுவதில்லையே. ஏன் இந்தியாவில் நடக்கும் கூத்துக்களை எங்கள் பிரச்சனைகளுக்கு மேற்கோள் காட்டுகிறீர்கள் என்று புரியவில்லை.

எமது மண்ணில் நாம் யாரிடமும் சைவ சமயத்தை திணிப்பதில்லை.எவராவது வேறு மதத்தை எம்மக்கள் மீது திணித்தால் அதை எதிர்த்து போராட எமக்கு உரிமை இருக்கிறது. மொழி, மதம். கலாச்சசாரம் என்பதுதான் ஒரு இனத்தின் அடையாளம். அவை அழிக்கப்பட்டால் இனமே அழிந்துவிடும். இதுதான் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இது புரியாவிட்டால் உங்களிடம் கருத்தாடி பயனில்லை.

ஏன் மேற்குநாடுகளில்கூட மன்னர் பரம்பரை இருந்ததே. இப்பவும் இருக்கிறதே. அங்கும் மன்னர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளும்  மதிப்பும் மற்றவர்களுக்கு கொடுக்கப்படவில்லையே. அதுபோலத்தான் இந்த இதிகாசங்களும் மன்னர்காலத்தவையே.இந்த ஆரிய இதிகாசங்களை நான் நம்புவதுமில்லை அதை யாருக்கும் மேற்கோள் காட்டுவதுமில்லை. நான் இந்து என்பதை விட சைவன் என்று சொல்வதில் பெருமைப்படுபவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, tulpen said:

 “கல் தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய  இனம்  தமிழுனம்  என்றுபழம் பெருமை பேசிக்கொண்டு மற்றயவர்்எள்ளி நகையாடும் வகையிலான பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு வாழவேண்டும் ( கல் தோனலறி மண்தோன்ற முதல் உயிரினங்களே உருவாக முன் எப்படி  தமிழன் தோன்றினான் என்று கேட கக்கூடாது)

எமது தாயகத்தில் அப்படி என்ன பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு நாம் வாழ்கிறோம் மற்றவர்கள் எள்ளி  நகையாட..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, tulpen said:

சரி கூட்டிக்கழித்து நீங்கள் இருவரும் என்ன சொல்ல வருகின்றீர்கள். மதமும் அது காட்டும் மூடப்பழக்கங்களையும் பத்தாம் பசலித்தனத்தையும் கட்டிக்கொண்டு முன்னேறாத காட்டுமிராண்டி இனமாக தமிழர்கள் தொடர்ந்தும்  வாழவேண்டும். அப்படித்தானே?  

ஏன்  இதே  சைவ தமிழர்கள்தான் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களது பொருளாதாரம் மேம்படவில்லையா அல்லது அதை மேம்படுத்த வேறு மத்திற்குத்தான் மாறினார்களா? தாயகத்தில் எம்மக்களை முன்னேற சிங்களமும் கிந்தியாவும் விடுவதில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Eppothum Thamizhan said:

எமது தாயகத்தில் அப்படி என்ன பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்திக்கொண்டு நாம் வாழ்கிறோம் மற்றவர்கள் எள்ளி  நகையாட..
 

 ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ஒரு கோவிலில்  பூசை நேரத்தில்  இங்கு பிறந்த சிறு குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்கு  கலாச்சாரத்தை காட்டும் முறை. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ஒரு கோவிலில்  பூசை நேரத்தில்  இங்கு பிறந்த சிறு குழந்தைகளுக்கு முன்னால் அவர்களுக்கு  கலாச்சாரத்தை காட்டும் முறை. இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே.

புலம்பெயர் நாடுகளில் வியாபாரத்துக்காக கோவிலைக்கட்டி அதில்  பணமோசடிகளாலும் பூசகர்களுடன் ஏற்படும் சிறு சிறு மனக்கசப்புகளால் நடக்கும் இப்படிப்பட்ட வாக்குவாதங்களையும் சண்டைகளையும் ஏன் மதத்தோடும்  கலாச்சாரத்தோடும் முடிச்சு போடுகிறீர்கள்.

இதைவிட மிக கேவலமான சண்டைகள் இலங்கை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல ஐரோப்பிய பாராளுமன்றங்களில் கூட நடைபெறுகிறதே. அதை வைத்து அந்தந்த நாட்டு கலாச்சாரங்கள் கேவலமானவை என சொல்வீர்களா? என்  தேவாலயங்களில்கூட போதகர்களின்  கேட்ட நடத்தைகளால் மக்கள்முன் அவரை அடித்து துவைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறதே.

ஓரிருவரின் அல்லது ஒரு குழுவின் நடத்தையை வைத்து ஒரு இனத்தையோ மதத்தையோ குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனம் . இது இயலாமையால் வருவதே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.