Jump to content

“கருத்துக்களால் களமாடுவோம் “ - அரசியல் கருத்தரங்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“கருத்துக்களால் களமாடுவோம் “

January 8, 2019

3867.jpg?zoom=3&resize=335%2C371

தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும். தமிழ் தலைமைகளின் வகிபாகமும் எனும் தொனிப்பொருளில் “கருத்துக்களால் களமாடுவோம் ” எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள் , தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் தியாகராஜா , யாழ்.பல்கலைகழக பொருளியல் பீட பேராசிரியர் கலாநிதி சு.சிவகுமார் , யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். அதற்கு பதிலுரையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் வழங்கவுள்ளார்.

http://globaltamilnews.net/2019/109295/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.