Jump to content

ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்?

காரை துர்க்கா / 2019 ஜனவரி 08 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:51 

image_88dc0ce8c8.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார்.   

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.   

சற்றே, 70 ஆண்டுகள் பின்நோக்கின், பிரித்தானியரின் அடக்கு முறையிலிருந்து முழு இலங்கையும் விடுபட்டு (1948), சுதந்திரக் காற்றை சுவாசித்த அதேநேரம், பெரும்பான்மை இனத்தவரின் அடக்கு முறைக்குள் தமிழினம் சிக்கிக் கொண்டது.   

அடுத்த ஆண்டே (1949) கிழக்கு மாகாணம் அம்பாறையில், ‘கல்லாறு’, ‘கல்லோயா’ எனப் பெயர் மாறி, உருமாறியது. தொடர்ந்து, அரசாங்கத்தின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், வடக்கு, கிழக்கில் முழு வீச்சாக முன்னெடுக்கப்பட்டன; முன்னெடுக்கப்படுகின்றன. 

அடுத்து, சிங்கள மொழி மட்டும் சட்டம் (1956), கல்வியில் தரப்படுத்தல் (1972), தமிழ் மக்களின் கல்விப் பொக்கிஷம் எரிப்பு (1981) என, அடக்கு முறைகள் உச்சம் தொட்டன.  

இலங்கையில் தமிழ் மக்கள், காலங்காலமாகத் தேசிய இனமாகத் தன்னகத்தே, தனித்துவமான பண்புகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் ஒரு தேசமாக வாழ்ந்து வருகின்றனர்.   

நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் ஆகிய அடிப்படைப் பண்புகளே ஓர் இனத்தினது இருப்பைத் தாங்கும் பிரதான நான்கு தூண்களாக விளங்குகின்றன.  

இவ்வாறானதொரு நிலையில், தமிழினத்தின் தனித்துவமான நிலையை, முழுமையாகத் தகர்த்து, இலங்கைத் தீவு முழுவதையும் சிங்களப் பௌத்த தேசமாக்கும் நீண்ட கால நிகழ்ச்சித் திட்டத்தை, சூட்சுமமாகத் தயாரித்தது பேரினவாதம்.  

தமிழ் இனம், இந்தத் பேராபத்திலிருந்து தனது இருப்பைப் பேண அல்லது தக்கவைத்துக் கொள்ள, அன்றைய தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், ஜனநாயக ரீதியில் பல்வேறு அஹிம்சைப் போராட்டங்களை நடத்தினார்கள்.   

ஆனால், ஆட்சியாளர்களோ, தமிழ்த் தலைவர்களது ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு, எக்காலத்திலும் ஜனநாயக ரீதியில் பதில்களை வழங்கவில்லை. தமிழ் மக்களது, 30 ஆண்டு கால ஜனநாயகப் போராட்டங்களுக்குச் சற்றும் மதிப்பளிக்காத பேரினவாதம், மூர்க்கத்தனமாக மேலும் மேலும் கொடுமைப்படுத்தியது. இவ்வாறான நிலையில், சமாதானத்துக்கான அறப்போர் பயணிப்பதற்கு வேறு வழியின்றி, இறுதித் தெரிவாக, வலிகள் நிறைந்தது என நன்கு தெரிந்தும் ஆயுதப்போர் ஆரம்பமானது.  

இவ்வாறாக ஆரம்பித்த போராட்டமே, உள்நாட்டுக்குள் இருந்த சிங்கள, தமிழ் இனப்பிணக்கை, சர்வதேச அரங்குக்குக் கொண்டு சென்றது. ஆயுதப் போராட்டத்தின் வலுவே, புலிகளைத் தமிழ் மக்களது ஏகபிரதிநிதிகள் என்ற உயர்நிலைக்கு இட்டுச் சென்றது; இலங்கை அரசாங்கத்தைப் பேச்சு மேசைக்கு கட்டாயத்தின் நிமித்தம் அழைத்து வந்தது.   

ஆனையிறவு கூட்டுப் படைத்தளத்தின் வீழ்ச்சி (2000), இலங்கையில் மரபு வழியில் சண்டையிடக் கூடிய இரு சமவலுவான படைகள் உள்ளன என, உலகுக்குப் பறை சாற்றியது. 2002ஆம் ஆண்டில், தாய்லாந்து தொடக்கம் 2006ஆம் ஆண்டில் ஜெனீவா வரை, வெளிநாட்டு மத்தியஸ்தர்களுக்கு மத்தியில், இரு தரப்பும் சம தரப்பாகப் பேச்சுவார்த்தை மேசையில் பேரம் பேச வழி வகுத்தது.   

இது இவ்வாறிருக்க, ஆயுதப் போராட்டத்தின் மௌனத்தோடு, 2010களில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேசியப் பட்டியல் ஊடாகத் தமிழ் மக்களது தேசிய அரசியலுக்குள் காலடி வைத்தார்.   

இவ்வாறாக, கடந்த ஒன்பது ஆண்டுகளில், தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளோ, அரசியல் பிரச்சினைகளோ மீண்டும் தொடக்கப் புள்ளியிலேயே உள்ளன. ஆயுதப் போராட்டம் மௌனித்தாலும் இனப்பிணக்கு, அப்படியே துடிப்புடனேயே உள்ளது.   

இந்நிலையில், தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்க்க முன்னாள், இந்நாள் ஜனாதிபதிகளான மஹிந்த, மைத்திரி அல்லது பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத் தரப்பு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை ஆகியோரைக் கொண்ட அணியோடு, எப்போதாவது சமதரப்பாகப் பேச்சுவார்த்தை நடத்த, உளப்பூர்வமாக விரும்பினார்களா? அவ்வாறான தேவைகள் ஏதேனும் அவர்களுக்குத் தற்போது உண்டா?   

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் பல நூறு நாள்களாகத் தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வீதியில் உண்டும் உறங்கியும் ஆன தமிழ் மக்களது விதியை, ஜனநாயகப் போராட்டங்களால் தீர்க்க முடிந்ததா?   

புலிகளாகச் செயற்பட்டவர்கள் எனச் சில ஆயிரம் போராளிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புலிகள் என்றும் புலிகள் எனச் சந்தேகத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில நூறு அப்பாவிகளை விடுவிக்க, ஜனநாயகப் போராட்டங்கள் துணை புரிந்தனவா?  

திருகோணமலை திருகோணேஸ்வரம், நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயம் போன்ற பல ஆலயங்களது திருத்த வேலைகளுக்குக் குறுக்கே தொல்பொருள் திணைக்களம் நிற்கின்றது. இதற்கு ஜனநாயகப் போராட்டங்கள் விடை தந்தனவா?  

எமது நாட்டின் பொருளாதார விருத்திக்காகத் தங்களது குருதியை அட்டைக்குக் கொடுத்து உழைக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு, வெறும் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள ஜனநாயகப் போராட்டங்களால் முடிந்ததா?  

இன்று, “ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றோம்; பாதுகாத்தோம்” என வீர வசனம் பேசுகின்றவர்கள், நம்நாட்டில் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தை அட(ழி)க்கும் நோக்கோடு, 1979இல் ஐக்கிய தேசியக் கட்சியால் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.   

தற்போது, போர் இல்லை; பயங்கரவாதம் இல்லை. அப்படியாயின், ஏன் பயங்கரவாதச் சட்டம்? யாருக்கு எதிராக அது பாய்கின்றது? போர் மௌனித்த பத்து ஆண்டு காலங்களில், நீதிமன்றம் சென்று ஜனநாயகத்தைப் பாதுகாத்தவர்களால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடிந்ததா?  

இவ்வுலகில் பிறக்கின்ற குழந்தை கூட, அழுகை எனும் புரட்சி ஊடாகவே, தனது இருப்பை உறுதி செய்கின்றது; இதுவே யதார்த்தம். இந்நிலையில், 2002இல் ஆயுதப்புரட்சி மூலம், வலுவான நிலையைத் தமிழர் தரப்பு அடைந்த வேளையில், 2004இல் பொதுத் தேர்தல் ஊடாக, ஜனநாயகப் புரட்சி மூலம், வலுவான நிலையை எட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதுவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறப்புக்கும் வழி வகுத்தது.  

இது இவ்வாறிருக்க, ஒக்டோபர் 26ஆம் திகதி நிகழ்வுடன் ஓய்ந்திருந்த புதிய அரசமைப்பு முயற்சி தொடர்பான கதைகள், தற்போது மீண்டும் கூட்டமைப்பால், தூசு தட்டப்பட்டு வருகின்றது.   

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த சம்பந்தன், புதிய அரசமைப்பு மூலமாக, ‘ஒருமித்த நாடு’ வரும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். மஹிந்தவின் அராஜகத்தை அடக்கியதால், புதிய அரசமைப்புப் பணிக்கு, புத்துயிர் என சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.   

இதே நம்பிக்கைகளை, 2015 ஜனவரி தொடக்கம் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் வெளியிட்டு வருகின்றனர். “இரு கட்சிகள் இணைந்துள்ளன; தீர்வு வந்து கொண்டிருக்கின்றது” என்றார்கள்.   

ஆனால், உண்மையான களநிலைவரமாக, ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போதும் உறுதியாக இருக்கின்றார்; இருப்பார். ஒக்டோபர் 26 வரை, புதிய அரசமைப்புத் தொடர்பில், ஜனாதிபதி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை; அலட்டிக் கொள்ளவில்லை.   

இந்நிலையில், தற்போது ரணில் எவ்வகையான தீர்வைக் கொண்டு வந்தாலும் நிச்சயமாக, மறைமுகமாகவேனும் தடைகளை மைத்திரி போடுவார். இதற்கு மஹிந்தவும் வலுச் சேர்ப்பார். அத்துடன் மஹிந்த அணியின் அங்கத்தவர்கள், வெளிப்படையாகவே அரசமைப்புப் பணிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.   

“கைக்கு எப்போதும் அகப்படாத நிலாவை பிடித்துத் தருவதாகக் கூறி, அம்மா, குழந்தைக்கு அமுது ஊட்டுவதற்கு ஒப்பானதே, புதிய அரசமைப்பின் ஊடாகத் தமிழ் மக்களுக்குத் தீர்வு வரப்போகின்றது என்ற, எமது தலைவர்களின் கதையுமாகும். 

நாட்டின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் புலிகள் தடையாக உள்ளனர் என, 30 ஆண்டுகளுக்கு மேலாகக் கூக்குரல் இட்ட பேரினவாதம், புலிகள் இல்லாத கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்தது?   

ஜனநாயக அரசியலுக்குப் புலிகள் தடையாக இருந்தனர் எனக் கூறுவோரால், புலிகள் இல்லாத கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களுக்கு என்னத்தைச் செய்ய முடிந்தது?   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஜனநாயக-அரசியலில்-வெற்றிக்கனியைப்-பறிப்பாரா-சுமந்திரன்/91-227640

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.