Jump to content

நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்


Recommended Posts

 நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்

டாக்டர் ஜி. ஜான்சன்

dIABETIC-nEUROPATHY-treatment-florida-30

நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது.
நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது இல்லை.அதுவரை நாம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால் உடல் முழுதும் பின்னிப் பிணைந்துள்ள வலைத்தளம் போன்ற நரம்புகள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.இதனால் நரம்புகள் கொண்டு செல்லும் சமிக்ஞைகள் தடைபட்டு, தவறான தகவல்களும்,தடைபட்ட தகவல்களும் அனுப்பப்பட்டு தாறுமாறாகின்றன.
நீரிழிவு நோயால் நரம்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை என்பதே உண்மை.இருப்பினும் சில யூகங்கள் மூலமாக அதற்கு காரணம் கூறலாம்.
* அதிகமான இனிப்பு, நரம்புகள் செய்திகளை அனுப்ப தேவையான இரசாயன சமநிலையை கெடுக்கலாம்.
* அதிகமான இனிப்பு இரத்த ஓட்டத்தை தடை செய்து நரம்புகளுக்குத் தேவையான பிராண வாயுவைக் குறைக்கலாம்.
* அதிகமான இனிப்பு நரம்புகளைச் சுற்றியுள்ள ” மைலின் ” உறையை ( Myelin Sheath ) கெடுக்கலாம்.
நீரிழிவு நோயால் நரம்புகள் 3 விதங்களில் கெடுகின்றன. இவற்றை மொத்தமாக நீரிழிவு நரம்பு நோய் ( Diabetic Neuropathy ) என்று அழைக்கலாம். இவை உடலின் இதர பகுதிகளை வெவ்வேறு விதமாக பாதிக்கலாம். அதற்கேற்ப அறிகுறிகளும் மாறுபடும். அந்த 3 விதமான நரம்பு நோய்கள் வருமாறு.

* பல நரம்புகள் நோய் ( Polyneuropathy )
இதில் உடலின் பல நரம்புகள் தாக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கைகளிலும் கால்களிலும் உள்ள நீண்ட நரம்புகள் அதிகம் தாக்கப்படுகின்றன.பெரும்பாலும் இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் ஒரே மாதிரி பாதிக்கலாம். இதனால் கை கால்களின் அசைவுகள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் அப்பகுதியில் தொடு உணர்வு தடை படலாம். அது கூசுதல் போன்று துவங்கி, மதமதப்பில் முடியலாம்.இல்லையேல் வலி உண்டாகி தசை இறுக்கம் ( Cramps ) உண்டாகி கடுமையாக வலிக்கலாம்.

* ஒற்றை நரம்பு நோய் ( Mononeuropathy )
இது மிகவும் குறைவாக உண்டானாலும், ஒரு சிலருக்கு இது ஏற்படலாம். இதில் ஒரு நரம்பு மட்டும் பாதிப்புக்கு உள்ளாகலாம்.அல்லது உடலின் ஒரு பகுதியில் மட்டும் சில நரம்புகள் கூட்டாக பாதிப்புக்கு உள்ளாகலாம். இது திடீரென்று தாக்கவல்லது. இதனால் வலி, மதமதப்பு, தசையில் பலவீனம், போன்ற அறிகுறிகள் உண்டாகும். இதற்கு நல்ல உதாரணம் திடீரென்று முகத்தின் ஒரு பகுதி ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது அல்லது முகம் கோணலாகிப்போவது. இதை ” பெல்ஸ் பால்சி ” ( Bell’s Palsy ) என்பர். இதை முக வாதம் எனலாம். முகத்தின் ஒரு பக்க தசைகளை கட்டுப்படுத்தும் நரம்புகள் செயலிழந்துபோவதால் இப்படி உண்டாகிறது. இதுபோன்று ஒரு பக்க கண் பாதிக்கப்பட்டால் கண் அசைவு குறைவுபடும். அது மாறு கண் போன்று தோன்றும்.கை நரம்பு பாதிக்கப்பட்டால் கையில் பலவீனமும் வலியும் உண்டாகும்.

* சுய நரம்புகள் நோய் ( Autonomic Neuropathy )

சுய நரம்புகளின் செயல்பாடுகளை நாம் அறிவதில்லை. ஆனால் இவைதான் உடலின் முக்கியமான உறுப்புகளை தானாக இயங்கச் செய்பவை.இதயத் துடிப்பு, சுவாசம், ஜீரணம், வியர்ப்பது, சிறுநீர்ப்பையைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய பணிகளைச் செய்ய வைக்கும் நரம்புகள்தான் இந்த சுய நரம்புகள். இந்த நரம்புகள் பாதிப்புக்கு உள்ளானால் பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்.

> இருதயம் – இதயத் துடிப்பில் மாற்றம் உண்டாவதால் நெஞ்சில் படபடப்பு, படுத்து எழுந்ததும் இரத்த அழுத்தம் குறைவு பட்டு உண்டாகும் மயக்கம்,தலை சுற்றுதல், மாரடைப்பின்போது வலி தெரியாமல் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
> வயிறும் குடலும் – இவற்றின் தசைகள் வலுவிழந்து செயல் குன்றி போவதால், ஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை போன்றவை உண்டாகும். அதோடு உணவு ஜீரணக் கோளாறினால் இரத்தத்தின் இனிப்பின் அளவையும் சரியாக நிர்ணயம் செய்ய முடியாமல் போய்விடும்.
> சிறுநீரகப்பையில் கோளாறு – இங்கு நரம்புகள் பாதிக்கப்பட்டால் சிறுநீர் நிறைந்துள்ளது தெரியாது. எப்போது சிறுநீர் கழிக்கவேண்டும் என்பதும் தெரியாது. அப்படியே கழித்தாலும் முழுதும் வெளியேறியதும் தெரியாது.இதனால் சிறுநீரகத் தொற்று ஏற்படும்.
> பாலியல் கோளாறு – ஆண்களுக்கு விறைப்புத்தன்மை இல்லாமலும், அப்படியே விறைத்தாலும் அது நில்லாமலும் போகலாம். பெண்களுக்கு உலர்ந்துபோன நிலையும், உடலுறவில் திருப்தியும் இல்லாமல் போகலாம்.
> வியர்வை சுரப்பிகள் – அதிகமான வியர்வையும், உடலின் வெப்ப அளவு சீராக இல்லாமலும் போகலாம்.
> இரத்தத்தில் இனிப்பின் அளவு மிகவும் குறைந்து விட்டால் அதை உடல் நடுக்கம், வியர்வை, படபடப்பு போன்ற சில அபாய அறிவிப்புகள் மூலமாக தெரிவித்து நம்மை எச்சரிக்கும்.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை இல்லாமல் போய் உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணலாம்.

நரம்புகளைப் பாதுகாப்பது எப்படி?

இனிப்பின் அளவை கட்டுப்படுத்துவது நரம்புகள் கெடுவதை 60 சதவிகிதம் தடுக்கிறது. நரம்பு நோய் உண்டான பின்பு அது உடலின் எந்த பாகத்தை பாதித்துள்ளது என்பதை வைத்து சிகிச்சை தரப்படும். நரம்புகள் மேற்கொண்டு பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கும் வழிமுறைகள் வருமாறு.

* நரம்பு தொடர்புடைய சில அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அவை வருமாறு:
கை கால்களில் மதமதப்பு,எரிச்சல், ஊசி குத்துவது போன்ற வலி,
இரவில் கால்களிகளில் தசை இறுக்கம் உண்டாகி கடுமையான வலி.
கால் இருக்கும் இடத்தை உணரமுடியாத நிலை.
கால் பாதங்களில் புண்

* உணவுக் கட்டுப்பாடு – இனிப்பின் அளவை குறைக்கும் வகையில் உணவுப் பழக்கம் இருக்கவேண்டும்.

* வைட்டமின் பி6, பி12 ஆகியவை குறைபாட்டினால் நரம்புகள் மேலும் கெடலாம். இவை நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.வைட்டமின் பி 6 வாழைப்பழம், உருளைக்கிழங்கு, மீன், கோழி இறைச்சி ஆகியவற்றில் அதிகம் உள்ளது. வைட்டமின் பி 12 கோழி இறைச்சி, கடல் மீன்,சார்டின் மீன் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

* ஆஸ்பிரின் மாத்திரை – நரம்பு வலிக்கு ஆஸ்பிரின் மாத்திரை சாபிடுவது நல்லது.இது வலியைக் குறைப்பதோடு இருதயத்தையும் பாதுகாக்கிறது.

* இதர மருந்துகள் – நரம்பு வலியையும், நரம்புகள் பாதிப்பால் உண்டான இதர குறைபாடுகளுக்கு பல்வேறு மருந்துகள் உள்ளன.அவற்றை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் உட்கொண்டு பயன் பெறலாம்.

அதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிப்பின் அளவை சீராக வைத்துக்கொள்வதுடன், நரம்புகளையும் முறையாக பராமரிப்பது நல்லது.

http://puthu.thinnai.com/?p=37462

Link to comment
Share on other sites

நீரிழிவு நோய்: ஒரு கண்ணோட்டம்

டைப் 1 மற்றும் டைப் 2 இரண்டு வகையான நீரிழிவு நோய்க்கான சிகிச்சை பற்றிய தகவலுடன், நீரிழிவு நோயுள்ள ஒருவரின் உடலில் என்ன சம்பவிக்கிறது என்பது பற்றிய ஒரு கண்ணோட்டம்.

 

நீரிழிவு நோய் என்பது, உடலால் உணவிலிருந்து தேவையான சக்தியை எடுக்கவேண்டிய முறையில் எடுக்கமுடியாமலிருப்பதாகும். இது ஏனென்றால், உடல் போதியளவு இன்சுலினை சுரக்காமலிருப்பதனால் அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்யாமலிருப்பதனால் ஆகும். இன்சுலின் ஒரு முக்கியமான ஹோர்மோன். உணவிலிருந்து எமது உயிரணுக்கள் சக்கரைச் சத்தை உறிஞ்ச உதவி செய்வதற்கு எமக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. பின்பு உயிரணுக்கள் சர்க்கரைச் சத்திலிருந்து சக்தியை உண்டாக்குகின்றன. சில சமயங்களில் உயிரணுக்கள் இன்சுலினுக்குப் பிரதிபலிப்பைக் காண்பிக்காது. இதுவும் நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம்.

இருபது லட்சத்திற்கும் மேலான கனேடிய மக்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், 60,000 க்கும் மேலானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படுகிறது.

ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்படும்போது அவரது உடலில் என்ன சம்பவிக்கிறது?

நீரிழிவு நோயுள்ள ஒருவர், அத்தியாவசியமான இன்சுலின் ஹோர்மோன் சுரப்பதை நிறுத்திவிடுகிறார் அல்லது அந்த நபரில் இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்வதில்லை. ஹோர்மோன் என்பது, உடலின் பாகங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்காக உடலின் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்துக்குப் பிரயாணம் செய்யும் ஒரு இரசாயனத் “தூதுவர்” ஆகும்.

நாம் உண்ணும் உணவிலுள்ள சக்கரையை, சக்தியாக மாற்றுவதற்கு நமது உடல் இன்சுலினை மாத்திரமே உபயோகிக்கமுடியும். அங்கு இன்சுலின் இல்லாவிட்டால், உயிரணுக்களால் சக்கரையைச் சக்தியாக மாற்றமுடியாது. “உபயோகிக்கப்படாத” சக்கரை இரத்தத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு சிறுநீர் மூலமாக உடலிலிருந்து வெளியேற்றப்படும்.

பின்வருவனவற்றிற்கு எமக்குச் சக்தி தேவை:

  • எமது உடல் வெப்பத்தை உற்பத்திசெய்வதற்கு
  • எமது தசைகள் வேலை செய்வதற்கு, எமது இதயங்கள் துடிப்பதற்கு, எமது நுரையீரல்கள் சுவாசிப்பதற்கு, எமது மூளை சிந்திப்பதற்கு
  • எமது உடலிலிருக்கும் கோடிக்கணக்கான உயிரணுக்களை வளர அனுமதிப்பதற்கு, புதிப்பிப்பதற்கு, மற்றும் சீர் செய்வதற்கு

இன்சுலின் இல்லாமல் நம்மால் தொடர்ந்து வாழ முடியாது

இன்சுலின் கணையத்தில் உற்பத்தியாகிறது. வயிற்றுக்கு சற்றுப் பின்னால் இந்த உறுப்பு அமைந்திருக்கிறது. கணையத்திலுள்ள பீட்டா உயிரணுக்கள் என்றழைக்கப்படும் விசேஷ உயிரணுக்கள் இன்சுலினைச் சுரக்கின்றன. பீட்டா உயிரணுக்கள் இலங்கர்கான் சிறு தீவுகள் என்று பெயரிடப்பட்ட திசுக்களின் கூட்டத்தில் காணப்படுகின்றன.

பல்வேறுவகைப்பட்ட நீரிழிவு நோய்கள் இருக்கின்றன. ஆனால் பிள்ளைகளும் பதின்ம வயதினரும் டைப் 1 நீரிழிவு நோயை பெறுகிறார்கள். டைப் 1 நீரிழிவு நோயில், பீட்டா உயிரணுக்கள் அழிக்கப்பட்டுவிடும். அதனால் உடலினால் எந்த இன்சுலினையும் சுரக்க முடியாது.

அதிகமதிகமான பதின்ம வயதினர் டைப் 2 நீரிழிவு நோயை பெறுகிறார்கள். இந்த வகையான நீரிழிவு நோயுடன், பெரும்பாலும் உடலால் கொஞ்சம் இன்சுலினைச் சுரக்கமுடியும். ஆயினும், இரத்தத்தில் சக்கரையின் அளவை இயல்பு நிலையில் வைத்துக்கொள்ள அல்லது போதுமானளவு நன்கு வேலை செய்வதில்லை அல்லது அதன் அளவு போதுமானதாக இருப்பதில்லை.

நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை

நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு இரண்டு இலக்குகள் இருக்கின்றன. ஒன்று, உங்கள் பிள்ளை ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், முடிந்தளவு இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவை நிலைநாட்டி அதைத் தக்கவைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீண்ட கால, ஆரோக்கியமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வதற்காக, உங்கள் பிள்ளை நீரிழிவு நோயுடன் வாழப்பழகிக்கொள்வதாகும்.

டைப் 1 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை

டைப் 1 நீரிழிவு நோய்க்கான அடிப்படைச் சிகிச்சை உலகம் முழுவதும் ஒரே மாதிரியானது. அது பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

  • ஒரு நாளில் பல முறைகள் இன்சுலின் ஊசிமருந்தை எடுத்துக்கொள்வது, அல்லது உணவு நேரங்களில் மேலதிக மருந்தையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஒரு பம்ப்பை உபயோகித்தல்
  • ஒரு நாளில் பல முறைகள் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்தல்
  • ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவது
  • மேலதிக நடவடிக்கைகளின்போது அதை மேலதிக உணவுடன் அல்லது சில வேளைகளில் குறைந்தளவு இன்சுலினுடன் ஈடு செய்வது

இந்த அடிப்படை வடிவமைப்புக்குள், வித்தியாசப்பட்ட உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள், உங்கள் பிள்ளையின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் வீட்டில் உங்கள் குடும்பத்தின் வழக்கமான வேலைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்காக உங்கள் குடும்பத்துடன் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வழக்கமான பரிசோதனைகளுக்காக உங்கள் பிள்ளையை மருத்துவமனைக்குக் கொண்டுவரும்படி கேட்கப்படுவீர்கள். இந்த மருத்துவமனைச் சந்திப்புக்களின்போது, உங்களுக்கு இருக்கும் ஏதாவது கவலைகள் பற்றி நீரிழிவுப் பராமரிப்புக் குழுவுடன் நீங்கள் கலந்து பேசலாம்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கான சிகிச்சை

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, எடையைக் குறைத்தல், மற்றும் அநேக இளைஞருக்கு மருந்துகள் என்பனவற்றின் இணைந்த செயற்பாட்டினால் டைப் 2 நீரிழிவு நோய் சமாளிக்கப்படுகிறது. பெரும்பாலாக எல்லாருக்கும் சிகிச்சை, வாழ்க்கைப்பாணியில் ஒரு மாபெரும் மாற்றத்தை உட்படுத்துகிறது.

முழுக் குடும்பத்தினரும் டைப் 2 நீரிழிவு நோயைப் பற்றிக் கற்றுக் கொண்டு அதே ஆரோக்கியமான வாழ்க்கைப் பாணியைப் பின்பற்றினால், பதின்ம வயதினருக்கு மிகச்சிறந்த வெற்றிவாய்ப்பு கிடைக்கும். அது உங்கள் பதின்ம வயதினருக்கு மிகப் பெரிய ஆதரவின் ஊற்றுமூலமாக இருக்கும். அத்துடன், குடும்பத்தின் மற்ற அங்கத்தினரும் நீரிழிவு நோய் ஏற்படும் அதிக அபாயத்தில் இருந்தாலும், நீரிழிவு நோயை விருத்தி செய்துகொள்ளும் அபாயத்தை அது குறைக்கக்கூடும்.

உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மாத்திரமே இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தாதிருக்கும்போது, உடலில் இன்சுலின் நன்கு வேலைசெய்ய உதவி செய்யக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் மருந்துக் குறிப்பெழுதிக் கொடுக்கக்கூடும். சில இளைஞருக்கு இன்சுலின் ஊசி மருந்தும் தேவைப்படலாம். ஆரோக்கியமான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி, மற்றும் ஒரு ஆரோக்கியமான எடையை இலக்கு வைத்து அடைவதற்குக் கூர்ந்த கவனம் செலுத்த வேண்டிய தேவையை மாத்திரைகள் மற்றும் இன்சுலினும் மாற்றீடு செய்யாது. இவை டைப் 2 நீரிழிவு நோயின் சிகிச்சைக்கான மூலைக் கற்களாகும்.

முக்கிய குறிப்புகள்

  • நீரிழிவு நோய் என்பது உடல், உணவிலிருந்து சக்தியை உறிஞ்சிக்கொள்ளமுடியாத நிலைமையிலிருக்கும் ஒரு நோயாகும்.
  • உயிரணுக்கள் உணவிலிருந்து சக்கரைச் சத்தை உறிஞ்சி சக்தியை உண்டாக்க உதவி செய்வதற்கு உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது.
  • டைப் 1 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினைச் சுரப்பதில்லை. இன்சுலின் ஊசி மருந்துகள், இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்தல், மற்றும் ஒரு உணவுத் திட்டத்தைப் பின்பற்றுதல் மூலமாக, டைப் 1 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
  • டைப் 2 நீரிழிவு நோயில், பெரும்பாலும் உடலால் கொஞ்சம் இன்சுலினைச் சுரக்கமுடியும். ஆயினும், அது போதுமானதல்ல அல்லது நன்கு வேலை செய்வதில்லை. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, எடையைக் குறைத்தல், மற்றும் சில வேளைகளில் மருந்துகள் என்பனவற்றின் இணைந்த செயற்பாட்டினால் டைப் 2 நீரிழிவு நோய் சமாளிக்கப்படுகிறது.
https://www.aboutkidshealth.ca/Article?contentid=937&language=Tamil
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுணா, நன்றி. இவை போன்ற தெளிவான பதிவுகளே எங்கள் ஆரோக்கியம் காக்கும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.