Jump to content

10 சதவீத இடஒதுக்கீடு: ‘’பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பது மிகப் பெரிய மோசடி’’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்
  •  
நாடாளுமன்றம்படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் பொது பிரிவினரில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன். "அரசமைப்பு சட்டத்தின் எந்த இடத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறப்படவில்லை. சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்று கூறப்பட்டு இருக்கிறதே தவிர, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை" என்கிறார் அவர்.

கடந்து வந்த பாதை

பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்ற கருத்தியல் கடந்து வந்த பாதையை விவரிக்கும் அவர், முதல் முதலாக மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு தீர்ப்பில்தான் இது குறிப்பிடப்பட்டது என்கிறார்.

"பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு குறித்த ஒரு கருத்தை தெரிந்து கொள்வதற்காக 1953ஆம் ஆண்டு காகா கலேக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறிவிட்டது. மண்டல் குழுவும் அப்படிதான் பரிந்துரைத்திருக்கிறது." என்று விவரிக்கிறார் சுப. வீரபாண்டியன்.

சுப வீரபாண்டியன்படத்தின் காப்புரிமை Facebook

மேலும், "இந்த பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பது 1992 நவம்பர் மாதம் மண்டல் குழுவின் மீதான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. அதனை 'தீர்ப்பு அடிப்படையிலான சட்டம்' என்கிறார்கள். ஆனாலும், அது அரசியல் சாசனத்தில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். " என்று தெரிவித்தார்.

அதனால்தான், மத்திய அமைச்சரவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் முன் மொழிந்து, அரசியல் சட்டத்தை திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அது அத்தனை எளிதல்ல. அவர்களுக்கு சட்டத்தை திருத்தும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறார் சுப.வீரபாண்டியன்.

பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள்

"எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உடையவர்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்கிறார்கள். ஆண்டுக்கு எட்டு லட்சம் என்றால், மாதம் அறுபதாயிரத்திற்கு மேல். இவ்வளவு வருவாய் ஈட்டுபவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பது மிகப் பெரிய மோசடி" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்தும் இவ்வாறாகவே இருக்கிறது. அவர், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு அரசமைப்புச் சட்டத்தை கேலிகுள்ளாக்கும் செயல் என்கிறார்.

அவர், "இந்திய அரசமைப்பு சட்டத்தை எழுதும் போது இந்தியாவில் இருக்கும் சமூக பிரிவுகளில் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள், மற்றவர்களோடு இணைந்து சமமான வாழ்க்கையை வாழ முடியாத, ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகங்கள் சமத்துவத்தை அடைய வேண்டுமென்று சொன்னால், முற்பட்ட சமூகங்களுக்கு சமமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று சொன்னால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின் தங்கிய சமூகங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிற உடனடி உறுதியான நடவடிக்கையாக இட ஒதுக்கீடு கொள்கையை பார்த்தார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எல்லாவகை கல்வியை கற்பதற்கும், அந்த கல்வியை கற்று ஆசிரியராக இருப்பதற்குமான பணி ஒரு குறிப்பட்ட சமூகத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அதுதான் இடஒதுக்கீடாக இருந்தது. அத்தைகைய இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடிய... சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடிய இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதாவது அது சமூகத்தில் பின் தங்கியவர்களுக்குதான் இடஒதுக்கீடே தவிர, பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கு கிடையாது." என்று விவரிக்கிறார்.

கேலிக்குள்ளாக்கும் செயல்

மேலும், "பொருளாதார ரீதியாக ஒருவர் பின் தங்கி இருக்கிறார் என்று சொன்னால், அவருக்கு வங்கிக் கடன் மூலமோ, பிற பொருளாதார உதவிகள் செய்வதன் மூலமோ அவரை மேம்படுத்திவிட முடியும். பொருளாதார ரீதியாக ஒருவருக்கு இட ஒதுக்கீடு என்பது முற்றிலுமாக அரசமைப்பு சட்டத்தை கேலிக்குள்ளாக்கும் செயல்" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திரபாபுபடத்தின் காப்புரிமை Facebook

"அனைவருக்கும் கல்வி அளிக்க விரும்பினால், உண்மையாக முற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீது அக்கறை இருக்குமானால், அதிக அளவில் கல்லூரிகளை திறக்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கும். அப்படியாகதான் கல்வியை அனைவருக்கும் எடுத்து செல்ல முடியும். அதனை செய்யாமல் இப்படி இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வருவது ஏமாற்று வேலை, ஜோதிராவ் புலேவை, அம்பேத்கரை, பெரியாரை, ஐயங்காளியை அவமதிக்கும் செயல்.கல்வியை தனியார்மயமக்கிவிட்டு, இடஒதுக்கீடு என்பது முற்பட்ட சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கை" என்கிறார் அவர்.

முற்பட்டவர்கள் பணக்காரர்கள் அல்ல

இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு என்கிறார் தமிழ்நாடு பிராமண சங்க தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன்.

"முற்பட்ட சமூகத்தை சேர்ந்த அனைவரும் பணக்காரர்கள் அல்ல, பொருளாதார ரீதியில் செல்வ செழிப்போடு இருப்பவர்கள் அல்ல. பலர் மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு மிகவும் அவசியமான ஒன்று. இதற்காகதான் தாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்" என்கிறார்.

Arvindபடத்தின் காப்புரிமை AFP
டுவிட்டர் இவரது பதிவு @YashwantSinha: The proposal to give 10% reservation to economically weaker upper castes is nothing more than a jumla. It is bristling with legal complications and there is no time for getting it passed thru both Houses of Parliament. Govt stands completely exposed.புகைப்பட காப்புரிமை @YashwantSinha @YashwantSinha <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @YashwantSinha: The proposal to give 10% reservation to economically weaker upper castes is nothing more than a jumla. It is bristling with legal complications and there is no time for getting it passed thru both Houses of Parliament. Govt stands completely exposed." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/YashwantSinha/status/1082210355089043456~/tamil/india-46783539" width="465" height="272"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @YashwantSinha</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@YashwantSinha</span> </span> </figure>

உண்மையில் அரசுக்கு அக்கறை இருந்தால் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள் அன்று இதனை கொண்டு வந்திருக்க வேண்டும். கூட்டத் தொடர் முடியும் தருவாயில் அல்ல.

இது அரசியல் தந்திரம் என்று சில ட்வீட்டுகள் கூறுகின்றன.

சட்டரீதியான வாய்ப்பு

சட்டரீதியாக இதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று முன்னாள் நீதிபதி சந்துருவிடம் பிபிசி தமிழ் பேசியது.

இது குறித்து சந்துரு கூறுவகையில், "இந்திய அரசமைப்பு சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்கிறது. இந்திய அரசமைபில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இதனை செய்ய முடியும். ஆனால், அரசமைப்பு பிரிவு 15-ன் கீழ் இதனை செய்ய முடியாது. ஒரு நலத்திட்டமாக இதனை செய்யலாம்" என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-46783539

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.