Jump to content

போரைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கை வாட்டும் வறுமை!! - பேட்டி: ஒஸ்லோ பிரதி முதல்­வர் குண­ரட்­ணம் கம்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோ பிரதி முதல்­வர் குண­ரட்­ணம் கம்சி இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். குண­ரட்­ணம் கம்­சி­யின் தாயார் யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தை­யும் தந்தை கைத­டி­யை­யும் பூர்­வீ­க­மாக கொண்­ட­வர்­கள். இவர் தனது நான்கு வய­தில் நோர்­வேக்­குப் புலம்­பெ­யர்ந்­தார். 2007ஆம் ஆண்டு தனது 19ஆவது வய­தில் முதன் முத­லாக மாந­கர உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வா­னார். இன்று வரை அந்த மாந­க­ரத்­தின் உறுப்­பி­ன­ரா­கத் தொடர்­கின்­றார். 2015ஆம் ஆண்­டு­மு­தல் ஒஸ்லோ பிரதி முதல்­வ­ரா­க­வும் செயற்­பட்டு வரு­கின்­றார். இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்ள அவர் அண்­மை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­தித்­தார். தற்­போது யாழ்ப்­பா­ணத்­தில் உள்­ளார். அவ­ரு­ட­னான செவ்வி.

கேள்வி: – இலங்­கை­யின் யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்­தில் பிறந்து நோர்வே நாட்­டில் தஞ்­ச­ம­டைந்த நிலை­யில், இளம் வய­தில் பிரதி முதல்­வ­ராக வந்­தமை தொடர்­பில் என்ன நினைக்­கின்­றீர்­கள்?

பதில்: – சமூ­கம் அமைத்த கட்­ட­மைப்பை சமூ­கத்­தால் மாற்ற முடி­யும். பெண்­க­ளால் முயன்­றால் முடி­யா­தது என எது­வுமே இல்லை. அந்த நிலை­யில் நோர்வே நாட்­டில் நான் செய்த முயற்சி மட்­டு­மல்ல அந்த நாட்­டின் அமைப்பு முறை­க­ளும் இதற்கு வழி­ச­மைத்­தன. இத­னால்­தான் 19 வய­தில் ஒஸ்லோ மாந­க­ரத்­தின் உறுப்­பி­ன­ரா­கத் தேர்­வா­கி­னேன். அதைத் தொடர்ந்து தற்­போது பிரதி முதல்­வ­ரா­னேன்.

ஈழத்­துப் பெண்­க­ளுக்­காக
குரல் கொடுக்க வேண்­டும்

கேள்வி: – தங்­கள் பய­ணத்­தின்
முக்­கிய நோக்­கம் என்ன?

பதில்: – குரல்­க­ளுக்­குக் குரல் கொடுப்­பதே எனது பய­ணத்­தின் முக்­கிய நோக்­கம். இங்­குள்ள பெண்­கள் தமக்­கான குரலை தாங்­களே உயர்த்த வேண்­டும். அதில் எந்த விட­யத்­துக்கு? எவ்­வாறு?, எங்கே?, எப்­போது? என்­ப­தனை மட்­டுமே நாம் வழி­காட்ட வேண்­டும். அதன் பிர­கா­ரம் முத­லில் குரலை உயர்த்தி அவர்­க­ளுக்­கான பாதை­யைத் திறக்க வேண்­டும்.

கேள்வி: – நோர்வே நாட்­டின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு எவ்­வாறு உள்­ளது.?

பதில்: – ஒஸ்லோ மாந­கர சபை­யில் 40 வீத­மா­னோர் பெண்­கள். நேர்­வே­யின் உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்­க­ளில் ஆண்­கள் 50 வீத­மும் பெண்­கள் 50 வீத­மும் இருத்­தல் வேண்­டும். அதி­லும் இளை­யோ­ருக்கே சகல கட்­சி­க­ளும் முன்­னு­ரிமை வழங்­கு­கின்­றன. இதன் கார­ண­மா­கவே முதன் முத­லாக 2007ஆம் ஆண்டு தேர்­வாகி இன்று 30 வய­து­வரை ஒஸ்லா மாந­க­ரின் உறுப்­பி­ன­ராக அங்­கம் வகிக்­கின்­றேன்.

கேள்வி: – இலங்­கை­யில் அதி­லும் குறிப்­பாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் வாழும் பெண்­க­ளுக்­கும் நோர்­வே­யில் வசிக்­கும் பெண்­க­ளுக்­கும் உள்ள வசதி வாய்ப்­புக்­கள் நிறை­யவே வேறு­ப­டும் நிலை­யில் எமது நாட்­டுப் பெண்­க­ளின் திற­மை­களை வெளிக்­கொ­ணர என்ன நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள முடி­யும் எனக் கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: நோர்வே ஓர் அழ­கான நாடு­தான் அதில் சந்­தே­கம் இல்லை. ஆனால் நோர்­வே­யில் வறுமை இல்லை எனக் கூறி­விட முடி­யாது. ஆனால் வறு­மையை நோர்வே திறம்­ப­டக் கையா­ளு­கின்­றது. இங்­குள்ள பெண்­கள் சாதிப்­ப­தற்கு பெரும் தடை வறு­மையே.

கேள்வி: – வடக்கு – கிழக்­கில் தற்­போது போருக்­குப் பின்­னர் உள்ள சூழ­லில் பெண்­கள் எதிர்­நோக்­கும் பல சவால்­கள், பிரச்­சி­னை­களை அறிந்­தி­ருப்­பீர்­கள். அந்த பிரச்­சி­னை­க­ளுக்கு என்ன கார­ணம் எனக் கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: – தற்­போது வடக்கு கிழக்­கில் போருக்­குப் பின்­னர் உள்ள முக்­கிய பிரச்­சினை வறுமை. இந்த வறு­மையை இல்­லாது செய்ய உரிய வழி­வ­கை­க­ளைக் கண்­டு­பி­டிக்க வேண்­டும். இல்­லா­து­வி­டில் இது உருப்­பெற்று குற்­ற­மா­ கக்­கூ­டிய வாய்ப்­பைப் பெறும்.

கேள்வி: – இலங்­கை­யில் இடம்­பெற்ற போரின் கார­ண­மாக அனைத்­தும் சிதை­வ­டைந்த நிலை­யில் தமிழ் மக்­கள் அதிக நெருக்­க­டி­யை­யும் குறிப்­பாக பெண்­கள் அதிக அழுத்­தத்­தை­யும் எதிர்­நோக்­கும் நிலை­யில் இவர்­க­ளுக்கு என்ன செய்ய முடி­யும் என எதிர்­பார்க்­கின்­றீர்­கள்? என்ன உதவி செய்ய எண்­ணு­கின்­றீர்­கள் ?

பதில்: -உட­ன­டி­யாக என்­னால் எது­வும் செய்ய முடி­யாது. அதே­நே­ரம் இங்­குள்ள பெண்­க­ளின் மனோ­தி­டத்­தி­லும் சந்­தே­கம் கிடை­யாது. ஏனெ­னில் போரில் ஆண்­க­ளுக்கு நிக­ராக ஆயு­தம் தூக்­கிப் போர் புரிந்த பெண்­கள் இவர்­கள். அத­னால் எத­னை­யும் சாதிக்­கும் மனோ­ப­லம் உண்டு. இவை அனைத்­தை­யும் செய்து சாதித்த பெண்­க­ளின் தற்­போ­தைய அர­சி­யல் பலம்­போ­தாது. அதா­வது தனியே பங்­க­ளிப்பு அன்றி தலை­மைத்­து­வத்­திற்­கும் வர­வேண்­டும். அதற்கு உட­ன­டி­யா­கவே எனது அனு­ப­வப் பகிர்­வை­யும் வழி­காட்­ட­லை­யும் வழங்க முடி­யும்.

இலங்­கைப் பெண்­க­ளும்
நோர்­வேப் பெண்­க­ளும்

கேள்வி: பெண்­கள் குறித்­தான அணு­கு­முறை இலங்­கை­யி­லும் நோர்­வே­யி­லும் வேறு­ப­டு­கின்­ற­னவா?

பதில்: – நிச்­ச­ய­மாக வேறு­ப­டு­கின்­றன. நோர்­வே­யில் இளை­யோர் என்றே பார்ப்­பார்­கள். ஆனால் இங்கு ஆண்­கள், பெண்­கள் எனப் பார்க்­கின்­ற­னர். இலங்­கை­யில் ஒரு குழந்தை பிறந்­தால் அதனை வளர்ப்­பது முதல் கல்வி, உணவு வரை­யில் தாயின் கடமை என்றே பாரப்­ப­டுத்­தப்­பட்­டும். ஆனால் நோர்­வே­யில் அவ்­வாறு கிடை­யாது. அதற்கு அந்த நாட்­டின் சட்­ட­மும் இட­ம­ளிக்­காது. உதா­ர­ண­மாக ஒரு பெண் குழந்­தை­யைப் பிர­ச­வித்­தால் பெண்­ணுக்கு 7 மாத விடு­முறை உண்டு. அதன் பின்பு ஆணுக்கு 4 மாத விடு­முறை உண்டு. அதா­வது இது­தான் சம உரி­மை­யா­க­வும் இருக்­கும். ஆணுக்கு உள்ள உரி­மையை பெண்­ணுக்கு வழங்க வேண்­டும். அதே­போல் பெண்­ணுக்கு உள்ள உரி­மையை ஆணுக்­கும் வழங்க வேண்­டும். அத­னால் அங்கே சமத்­து­வம் அதி­க­மா­கக் காணப்­ப­டும்.

கேள்வி -: எமது பிர­தே­சத்­தின் அபி­வி­ருத்தி மற்­றும் பெண்­க­ளின் அபி­வி­ருத்­திக்கு உங்­கள் அனு­ப­வப் பகிர்வு மூலம் எதனை மேற்­கொள்ள வேண்­டும் எனக் கரு­து­கின்­றீர்­கள்?

பதில்: – அர­சி­யல் முதல் உள்­ளூ­ராட்சி வரை­யில் இளை­யோர் மற்­றும் பெண்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வம் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும். அதே நேரம் மக்­க­ளுக்­கும் ஆளும் அர­சுக்­கு­மான நெருக்­கம் மிகக் குறு­கி­ய­தாக இருத்­தல் வேண்­டும். மக்­க­ளால் தெரி­விக்­கப்­ப­டும் கருத்­துக்­கள் உட­னுக்­கு­டன் செவி சாய்க்­கப்­பட வேண்­டும். இவை நோர்­வே­யில் அதி­க­மாக உள்­ளன என என்­னால் திட­மா­கக் கூற முடி­யும். இவை அனைத்­தும் இலங்­கை­யில் இருக்­கின்­றதா?

https://newuthayan.com/story/17/போரைத்-தொடர்ந்து-வடக்குக்-கிழக்கை-வாட்டும்-வறுமை.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மோகனா said:

 

 அந்த நிருபர் கடைசியில் சொல்கிறார்......

கூடுதலாக வெளிநாட்டு அரசியல்வாதிகள் தங்களால் முடியாவிட்டால் இராஜினமா செய்து விட்டு போய்விடுவார்கள்.ஆனால் எங்களுடைய அரசியல்வாதிகள் அப்படியில்லை.

இவர் யாரை சாடுகின்றார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ இனி இந்த மக்களுக்காக பட்டினி கிடந்தாலும் ...கிடப்பா..

Link to comment
Share on other sites

 

புலிகள் பேச்சுவார்த்தையில் பெண்கள் பங்கேற்க விடவில்லை என சொல்லி இருந்தார்.

49561013_2292125877730709_38065866463762

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் நோர்வேயில் பல பல்லின கலாச்சாரங்களின் மத்தியில் சிறப்பாக வளர்ந்தாக கூறுகின்றார்.

அது நோர்வே.

இனவாத சிறிலங்காவை பற்றி இவர் இன்னும் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

விடுதலைப்புலிகளை மாதிரி வேறெந்த இயக்கமோ அமைப்புகளோ பெண்களை முன்னிலைப்படுத்தியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒஸ்லோவில் ஒரு பிரதி மேயராக இருப்பவரால் ஈழத்தில் அப்படி என்ன செய்திட முடியும் ?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.